Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேதங்களை மறந்து ஒன்றிணைந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் : அமைச்சர் மனுஷ!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு மனுஷ நாணாயக்காரவிற்கு அழைப்பு

பேதங்களை மறந்து ஒன்றிணைந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் : அமைச்சர் மனுஷ!

இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“க்லோகல் பெயார் 2023′ கண்காட்சியின் முதலாவது வேலைத்திட்டத்தை நாங்கள் யாழில் ஆரம்பிக்கின்றோம்.
வடக்கு தெற்கு நாங்கள் அனைவரும் ஒரே நாடு.

ஒரே இனம். இதில் எந்தவித இன வேறுபாடோ மத வேறுபாடோ, கட்சி வேறுபாடோ இந்த புதிய அரசாங்கத்தின் பயணத்தில் இல்லை எனும் செய்தியை வழங்குவதற்காகவே நாங்கள் இந்த முதல் வேலைத்திட்டத்தை வடக்கில் ஆரம்பித்துள்ளோம்.

கட்சி, ஜாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து எங்களுடன் இணையுமாறு வடக்கிலுள்ளவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

வடக்கில் இருந்து கொழும்பிற்கு சென்று செய்ய வேண்டிய பல்வேறு தொழில் சார்ந்த வேலைகளை இந்த க்லோகல் வேலைத்திட்டத்தினுடாக செய்துக் கொள்ள முடியும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டு கற்கைகள் மற்றும் தொழில்பயிற்சிகள் உள்ளிட்ட சர்வதேசத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெறுவதற்கு இந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் ஆகவே இந்த இரண்டு நாள் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வடக்கிலுள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” என அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1339452

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்

இதை தெற்கில் தெரிவிக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

பேதங்களை மறந்து ஒன்றிணைந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் : அமைச்சர் மனுஷ!

இதை வீரசேகராவின் காதுகளிலும் போட்டு வையுங்க மனுசா?

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

இதை வீரசேகராவின் காதுகளிலும் போட்டு வையுங்க மனுசா?

 

13 hours ago, nunavilan said:

இதை தெற்கில் தெரிவிக்க மாட்டார்.

எனது நேரம்  மிச்சம்! சரத் வீரசேகரவின் கருத்தை தெற்கில் ஆதரிப்பார், வடக்கில் தெரியாததுபோல் நடிப்பார். இதல்லாம் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கிற வேலை. எங்கள்  நிலம், உரிமை, தொழில், சுதந்திரம்   யாவற்றையும்பறித்துக்கொண்டு வாய் கூசாமல் எப்படி இவர்களால் இப்படி கதைக்கவும் அழைக்கவும் முடிகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nunavilan said:

இதை தெற்கில் தெரிவிக்க மாட்டார்.

வட கிழக்கிட்கு போகும் எப்படியான சிங்கள இனவாத அரசியல்வாதியாக இருந்தாலும் அப்படியான கருத்தை சொல்ல வேண்டி இருக்கிறது. தெட்க்கு போனால் வடக்கில் என்ன பேசினோம் என்பதை வசதியாக மறந்து விடுவார்கள்.  

இவர்களது இந்த இரட்டை வேடம்தான் நாடடை இப்படியான வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு வந்தது. இஸ்ரவேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளைப்போல பலம் வாய்ந்த , பொருளாதார உச்சத்தில் இருக்க வேண்டிய நாடடை நாசமாக்கி விடடார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

மனுஷ நாணயக்கார ( ர் )

அமைச்சராகும் முன்பே பெயர் மாற்றம் செய்து வருகிறார்களா ? இயற்பெயரே இதுதானா.. 

அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர் போல இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அமைச்சராகும் முன்பே பெயர் மாற்றம் செய்து வருகிறார்களா ? இயற்பெயரே இதுதானா.. 

அரிச்சந்திரன் வீட்டுக்கு எதிர்வீட்டில் குடியிருப்பவர் போல இருக்கு..

அப்படிதான். மனுஷ(ன்) நாணயக்கார(ன்). 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.