Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான செய்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கும், சதர மகா தேவாலயத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, காசோலை மூலம் 1 கோடியே 32 இலட்சத்து 99ஆயிரத்து 10 ரூபாவை (1,32,99,010 ) செலுத்துமாறு உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான செய்தி | Sri Dalada Maligawa Electricity Bill Payment

 

இந்த மதிப்பீட்டை மின்சார வாரிய தலைமை பொறியாளர் எச். எஸ். பண்டாரவின் கையொப்பத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே உட்பட சதர மகா தேவாலய பஸ்நாயக்க நிலமேகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 21 முதல் 31 வரை ஊர்வலம் வீதி உலா இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீ தலதா மாளிகை வளாகம், சதர தேவாலம், பெரஹர வீதி மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்காக பொருத்தப்பட வேண்டிய மின் விளக்கு வேலைகள் மற்றும் பிற மின் வேலைகளுக்கு இந்த செலவு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கு அனுப்பியுள்ள காட்டமான செய்தி | Sri Dalada Maligawa Electricity Bill Payment

 

இதன்படி, ஸ்ரீ தலதா மாளிகை ரூ.34,12,479, நாதர் கோயில் ரூ.11,22,145, விஷ்ணு கோயில் ரூ.13,68,385, கதிர்காமம் கோயில் ரூ.11,02,705 மற்றும் பத்தினி கோயில் ரூ.11,02,705 செலுத்த வேண்டும் என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும், கண்டி நகரில் ஊர்வலம் பயணிக்கும் அனைத்து வீதிகளிலும் மின்விளக்குகளை ஒளிரச் செய்வதற்கு மின்சார சபைக்கு 44,41,273 ரூபாவும், ஜெனரேட்டருக்கு 7,49,215 ரூபாவும் செலவாகும் என வாரியம் தயாரித்த மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டி எசல பெரஹெர ஊர்வலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்சார வாரியம் மொத்தம் ரூ.1,32,99,010 செலவிட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

 

https://tamilwin.com/article/sri-dalada-maligawa-electricity-bill-payment-1689464777

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

இலங்கையின் மிக முக்கிய அரச விழாக்களில் ஒன்றாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கண்டி எசல பெரஹெரவிற்கு மின்சாரம் தேவைப்படுமாயின் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு இலங்கை மின்சார சபை தலதா மாளிகைக்கும், சதர மகா தேவாலயத்திற்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

முடிந்தால் மின்சாரத்தைத் துண்டித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

முடிந்தால் மின்சாரத்தைத் துண்டித்துப் பாருங்கள்.

நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை. காஞ்சனா விஜயசேகர கொஞ்சம் கடுமையான ஆள். ரணில் அவருக்கு முழு அதிகாரமும் கொடுத்திருக்கிறார்.

இந்த வருடம் போஸோனுக்கும் இப்படி அவர் செய்தார். காவிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடைசியில் காவிகள் பிச்சை எடுத்துதான் போசொன் நடத்தி முடித்தார்கள். எரிபொருள் வழங்குவதட்கும் ஒரு முறையான  திடத்தை கொண்டு வந்து கியூவில் நிட்பதை இவர் நிறுத்தினார்.

தலதா மாளிகை ஒன்றும் பிச்சை எடுப்பவர்கள் இல்லை. நிறைய வருமானம் உண்டு. எனவே காஞ்சனா இதில் விட்டுக்கொடுப்பார் என்று சொல்ல முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Cruso said:

நீங்கள் நினைக்கிற மாதிரியில்லை. காஞ்சனா விஜயசேகர கொஞ்சம் கடுமையான ஆள். ரணில் அவருக்கு முழு அதிகாரமும் கொடுத்திருக்கிறார்.

இந்த வருடம் போஸோனுக்கும் இப்படி அவர் செய்தார். காவிகளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. கடைசியில் காவிகள் பிச்சை எடுத்துதான் போசொன் நடத்தி முடித்தார்கள். எரிபொருள் வழங்குவதட்கும் ஒரு முறையான  திடத்தை கொண்டு வந்து கியூவில் நிட்பதை இவர் நிறுத்தினார்.

தலதா மாளிகை ஒன்றும் பிச்சை எடுப்பவர்கள் இல்லை. நிறைய வருமானம் உண்டு. எனவே காஞ்சனா இதில் விட்டுக்கொடுப்பார் என்று சொல்ல முடியவில்லை. 

உங்கள் கருத்துக்கு நன்றி குரூசோ.

  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சனாவுக்கு எதிராக போராட்டம் கொடும்பாவி எரிப்பு எதுவும் நிகழாதா? பிக்குகள் வரிஞ்சு கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும்... சில விகாரைகள் பெரஹெர நடத்துவதற்கு அரசு 
பல கோடிகளில் மானியம் கொடுத்துக் கொண்டுதான் உள்ளது.
அத்துடன்... தலைமை பிக்கு பாவிக்கும் விலை உயர்ந்த  கார்கள் கூட...
அமைச்சுக்களுக்கு கொடுக்கப் பட்டவற்றை  இவர்கள் பாவிக்கின்றார்கள்.
பிக்குகளாலும்,  புத்த சமயத்தாலும்... நாடு புரையோடிப் போய்  இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

காஞ்சனாவுக்கு எதிராக போராட்டம் கொடும்பாவி எரிப்பு எதுவும் நிகழாதா? பிக்குகள் வரிஞ்சு கட்டிக்கொண்டு களத்தில் குதிக்க மாட்டார்களா?

காஞ்சனாவுக்கு எதிராக எதனை போராட்டங்கள் , ஆர்ப்பட்ட்ங்கள் பண்ணினார்கள். தொழில் சங்கங்கள் எத்தனை போராட்டம் செய்தார்கள். என்ன நடந்தது? கடைசியாக அவர்களுக்கு வேலை இழக்க வேண்டிய நிலை எட்டப்பட்ட்து. அவர்கள் எல்லோரும் மன்னிப்பு கேட்டு அடங்கிவிடடார்கள். ஒரு தொழில்சங்கமும் வாய் திறப்பதில்லை.

போசொன் நிகழ்வுக்கு என்ன நடந்தது. காவிகள் பிச்சை எடுத்து ஜெனெரேட்டர் கொண்டு வந்து மின்சாரம் வழங்கப்பட்ட்து. காஞ்சனாவிடம் இவர்களது நாடகம் எடுபடாது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ.... உந்த எடுபட்ட பிக்குகளுக்கு பின்னால ஒரு கூட்டம் குருந்தூர் மலையில கூடி கோரத்தாண்டவம் ஆடிச்சே, அவர்களுக்கெதிராக ஒரு கண்டனம் 
 தெரிவித்திருக்கலாமே அவர்? யாரென்றாலும் தனக்கு தனக்கென்றாற்த்தான் வாய் திறப்பார்கள். திறக்க வேண்டிய நேரத்தில் மூடிக்கொண்டு இருந்துவிட்டு, தனக்கென்று வந்தபின்  திறந்தால், திறந்த வாயை மூடமுடியாத நிலையும் வரலாம். அதையே அண்மைய நிகழ்வுகள் நிரூபித்திருந்தன

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Cruso said:

போசொன் நிகழ்வுக்கு என்ன நடந்தது. காவிகள் பிச்சை எடுத்து ஜெனெரேட்டர் கொண்டு வந்து மின்சாரம் வழங்கப்பட்ட்து. காஞ்சனாவிடம் இவர்களது நாடகம் எடுபடாது.

சஜித் இதை அரசியலாக்கியிருக்கிறார் கவனித்தீர்களா? இதுதான் அரசியல். பௌத்தத்தை கையிலெடுத்தால் அரசியல் இலகுவாக கிடைத்துவிடும், இந்த சாபக்கேடு மாறவேண்டும்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.