Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை!

யாழில் யானைகளுக்குத் தடை : அரசாங்க அதிபர் விசேட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆலய உற்சவங்களின் போது வேறுமாவட்டங்களில் இருந்து யானைகள் வரவழைக்கப்பட்டு அவற்றை எந்த விதமான பாதுகாப்பு நடைமுறைகளும் இன்றி ஆலய சடங்குகளிலும் மற்றும் ஊர்வலங்களிலும் ஈடுபடுத்துகின்றனர்.

இதன்போது உரிய பாதுகாப்பு நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாமல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் இவ்வாறு யானைகளை பயன்படுத்தவது சட்டவிரோதமானதும் பொதுமக்களுக்கு எதிர்பாராதவிதமான ஆபத்துகளை விளைவிக்க கூடியதாகும் என அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களப் பணிப்பாளரின் அறிவுறுத்தலின்படி இவ்வாறு யானைகளை பயன்படுத்தவதற்கான அனுமதி வனவிலங்குகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் யானைகளை கையாள்வதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அதற்கான ஆளணி ஆகியவை பேராதனை கால்நடை வைத்திய பீடத்தில் மட்டுமே உள்ளதுடன் மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் தொழில் பரப்பினுள் அவற்றுக்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இவ்வாறு உரிய அனுமதி பெறப்படாமலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாது யானைகளை உற்சவங்களில் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உற்சவங்களை நடாத்துவோரை கேட்டுக்கொள்வதாக அரசாங்க அதிபர் ஆ,சிவபாலசுந்தரன் அறிவிப்பினை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2023/1341095

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு வரவேற்க தக்க நடவடிக்கை. வருமுன் காப்பதே நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் பல மாநிலங்களில் ஆலய விழாக்களில் யானைகளை பயன்படுத்தி, அந்த யானைகளால் பாகனும் பொதுமக்களும் அடித்து கொல்லப்பட்ட பல சம்பவங்களை காணொளி மூலம் பாத்துள்ளேன். பக்தி வேண்டும், அதுக்காக ஆபத்தான முறைகளில் செலுத்தி விட்டு, பிறகு சாமியை குற்றம் சொல்லக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு முன் உதாரணமானதும் மிகவும் அவசியமானதுமானதுமான   நடவடிக்கை.

இந்தத் தடை யாழ் மாவட்டத்துக்கு மட்டும் தான் என்று இல்லாமல் முற்று முழு இலங்கையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வனவிலங்குகள் எதையும் எச்சந்தர்ப்பத்திலும் மக்கள் வாழ்விடங்களில் அனுமதித்தல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மக்களின் வாழ்விடங்களிலும், சமய திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், ஊர்வலங்கள் உட்பட அனைத்திலும் ஆபத்தான விலங்குகளை பயன்படுத்துவதைத் தடைசெய்ய வேண்டும்.

இதுபோன்ற விலங்குகள் காடுகளிலும் மிருகக்காட்சிச் சாலைகளில் மட்டும் இருக்கவேண்டுமேயன்றி மக்களின் வாழ்விடங்களில் இருப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. யானைகள் கால்நடை என்ற பிரிவுக்குள் வகைப்படுத்தக்கூடிய மிருகங்கள் அல்ல.

யானைகளை வைத்து அவற்றின் அசாதாரண உடல்பலம் காரணமாக இழுவை, பாரம் தூக்குதல் போன்ற கடினமான வேலைகளை செய்யப் பழகிக்கொண்ட மனிதன்  நாளடைவில் தனது வாழ்விடங்களிலும் அவற்றை கொண்டுவந்து வைத்து காட்சிப் பொருளாக்கிவிட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.