Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய பிரதமரின் தமிழ் இனப்படுகொலை என்ற கூற்றை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு ஜூலை: பொறுப்புக்கூறலின் அவசியத்தை வலியுறுத்தினார் ஜஸ்டின் ட்ரூடோ

கனேடிய பிரதமரின் தமிழ் இனப்படுகொலை என்ற கூற்றை நிராகரித்தது இலங்கை அரசாங்கம்

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் என்ற கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கூற்றினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

23ஆம் திகதி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் பற்றி அறிக்கை வெளியிட்டிருப்பார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

மேலும் இது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கு உகந்ததல்ல எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேநேரம் இலங்கையில் ஸ்திரத்தன்மை, முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ வேண்டும் என வெளிவிவகார அமைச்சு கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

https://athavannews.com/2023/1341661

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலையை எப்படி சொல்ல வேண்டும் என சிறிலங்கா எதிர்பார்க்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

இது தன்னை திருத்த்திக் கொள்ளாமல், மற்றவர்களை குறை கூறி தன்னை தனிமைப் படுத்திக்கொள்வதோடு தனது சுய ரூபத்தை தானாகவே வெளிக்காட்டுது. ஒரு கட்டத்தில் ஒத்துக்கொள்ளும் பாருங்கோ. 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nunavilan said:

இனப்படுகொலையை எப்படி சொல்ல வேண்டும் என சிறிலங்கா எதிர்பார்க்கிறது?

தமிழர்கள் படுகொலை என்று.     அல்லது பயங்கரவாதிகளின் படுகொலை     ...மேலும் இலங்கை அரசாங்கம் படுகொலைகள். நடந்துள்ளதை   மறுத்து உள்ளதா?? இல்லையே ??  இது ஒரு முன்னேற்றம்        ஆனால் இனப்படுகொலையென்பதை மறுக்கிறது    

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகரவின் கருத்துக்களை கவனியுங்கள், அவர் தன்னையறியால் உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார். கனடா தூதுவரை கண்டித்து கருத்து கூறப்போய், உண்மையை உளறிவிட்டார். ஆனால் அதை புரிந்து கொண்டாரோ தெரியவில்லை? 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் அறிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவாது - வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

(எம்.மனோசித்ரா)

கனடாவின் அறிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவுவதாக அமையாது. கனடா போன்ற நாடுகள் தமது மேலாதிக்க கொள்கைகளால் இலங்கை போன்ற நாடுகளின் உள்ளக விவகாரங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு தமக்கு உரிமை காணப்படுவதாக எண்ணுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எந்தவொரு நாட்டுக்கும் ஏதேனுமொரு விடயம் தொடர்பில் அறிக்கை விடுவதற்கான உரிமை காணப்படுகிறது. கறுப்பு ஜூலை என்பது இலங்கை வரலாற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்தில் பெருமையடையக் கூடிய விடயமல்ல. அது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

எவ்வாறிருப்பினும் இதனை சில நாடுகள் அவற்றின் உள்ளக அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன. கனடா இது தொடர்பில் மாத்திரமின்றி , பல விடயங்கள் தொடர்பில் இதற்கு முன்னரும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

கனடா போன்ற சில நாடுகள், தற்போதும் அவற்றின் மேலாதிக்கத்தை இலங்கை போன்ற நாடுகள் மீது செலுத்துவதற்கான உரிமை தமக்கு இருப்பதாகக் கருதுகின்றன. எனவே தான் அவ்வாறான எண்ணங்களின் அடிப்படையில் வெளியிடப்படும் கருத்துக்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு நிராகரித்து அறிக்கைகளை வெளியிடுகிறது.

அது தவிர பேச்சுவார்த்தைகள் மூலம் இவ்வாறான விடயங்கள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாகக் குறிப்பிடுகின்றோம். இவ்வாறான நாடுகள் பொறுப்புடன் செயற்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. காரணம் அவற்றால் வெளியிடப்படும் அறிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கத்துக்கு உதவும் காரணிகளாக அமையாது.

கனடா போன்ற நாடுகள் இவ்விடயத்தில் தலையிடுவதாயின், இலங்கையின் இனப்பிரச்சினை , நல்லிணக்கம் என்பவற்றுக்கு தீர்வினை வழங்க முற்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் கனடாவின் செயற்பாடுகள் அவ்வாறு எந்த இலக்கையும் கொண்டதாக இல்லை என்பது கவலைக்குரியதாகும் என்றார்.

கனடாவின் அறிக்கைகள் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த உதவாது - வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

கனடா போன்ற நாடுகள் இவ்விடயத்தில் தலையிடுவதாயின், இலங்கையின் இனப்பிரச்சினை , நல்லிணக்கம் என்பவற்றுக்கு தீர்வினை வழங்க முற்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ள முடியும்.

ஏற்றுக்கொண்ட மாதிரித்தான். குரங்கின் கைபூமாலையாய் நல்லிணக்கம் படுகிற பாடு.  கருத்து சொல்வதையே நிராகரிக்கிறார்கள் தீர்வை ஏற்றுக்கொள்வார்களாம். எத்தனை நாடுகள் போய் வந்தார்கள் தீர்வு தேடி கண்டுபிடிக்க முடிந்ததா அவர்களால்? வெண்ணெயை கையில வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடியலைவோருக்கு எங்கேயும் கிடைக்காது.

5 hours ago, பிழம்பு said:

எவ்வாறிருப்பினும் இதனை சில நாடுகள் அவற்றின் உள்ளக அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றன.

நாடுகளை இழுத்து விட்டதே தாங்கள்தானே!

5 hours ago, பிழம்பு said:

கறுப்பு ஜூலை என்பது இலங்கை வரலாற்றும் எந்தவொரு சந்தர்ப்பத்தில் பெருமையடையக் கூடிய விடயமல்ல. அது நாம் வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

நான் சொல்லேலை...... மற்றவர்களை கண்டிக்கிறோம் என்று தங்கள் வாயாலேயே எல்லாவறையும் உளறிவிடுகிறார்கள். "மூடருக்கு புத்தி சொன்னால் கேடு வரும்." என்பதை உணர்ந்த நாடுகள், இவர்களோடு வரிஞ்சு கட்டிக்கொண்டு நிக்காமல் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க, அவர்களுக்கு ஆதரவாய் இருக்க முற்படுகிறார்கள். இவர்களுக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது, அதை யாராலும் மாற்ற முடியாது. அவர்களை பாராட்ட வேண்டுமாம் என அடம் பிடிக்கிறார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு கண்டன அறிக்கை விடாமல் இருந்தால்தான் அது ஒரு செய்தியாக இருந்திருக்கும். கனடா பிரதமர் அப்படி கூறியவுடன் இந்த அறிக்கை எதிர்பார்த்ததுதான்.

அலி சபரி அவர்கள் இப்படி அறிக்கை விடாமல் இருந்திருந்தால் வீட்டுக்கு போக வேண்டி வந்திருக்கும். எனவே அவரும் தனது கடமையை ஒழுங்காக செய்கிறார். தமிழர் விரோத அறிக்கை என்றால் அதை உடனடியாக செய்வார். 

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Cruso said:

அலி சபரி அவர்கள் இப்படி அறிக்கை விடாமல் இருந்திருந்தால் வீட்டுக்கு போக வேண்டி வந்திருக்கும்.

வீடு கொழுத்திகிற ராசாவுக்கு கொள்ளி கொடுக்கிற மந்திரிமாரே முக்கியம். தாங்களும் அழிந்து மற்றவர்களையும் அழித்து இன்பம் காணும் முட்டாள்கள்!

31 minutes ago, Cruso said:

ம்..... தனது கடமையை ஒழுங்காக செய்கிறார். தமிழர் விரோத அறிக்கை என்றால் அதை உடனடியாக செய்வார். 

பாராட்டுக்கள் அவருக்கு! அவருக்கு அதொன்றும் புதிதில்லையே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.