Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு; தூதருக்கு இந்திய அரசு சம்மன்

 
postcard-1-5.jpg?fit=960%2C540&ssl=1

ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

 

ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு வேலை விசாவில் சென்ற அகமதாபாத்தைச் சேர்ந்த பாவேஷ் மற்றும் அவரது மனைவி தாரா அவரது பெண் குழந்தை அரிஹாவின் பிறப்புறுப்பில் காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இதன் பிறகு அரிஹாவை ஜெர்மன் நிர்வாகம் வளர்ப்பு இல்லத்திற்கு அனுப்பியது. செப்டம்பர் 2021 முதல், அரிஹாவின் பெற்றோர் குழந்தையின் காவலுக்காக சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ங்கள்

இந்த தம்பதி தங்கள் மகளை தங்களிடம் திருப்பித் தருமாறு 20 மாதங்களாக ஜெர்மனி அரசிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். மருத்துவர்கள் அரிஹாவுக்கு சிகிச்சை அளித்த போது, குழந்தையின் டயப்பரில் இரத்தம் இருப்பதைக் கண்டார்கள். இதையடுத்து நிர்வாகம் சிறுமியை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தது. அன்றிலிருந்து அரிஹா வளர்ப்பு இல்லத்திலிருந்து வருகிறார்.

இது குறித்து குழந்தையின் தாய் தாரா கூறுகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில், அரிஹா வளர்ப்பு இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் நிறைவடையும். ஜெர்மன் அரசாங்கத்தின் விதிகளின்படி, ஒரு குழந்தை வளர்ப்பு இல்லத்தில் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தால், அந்தக் குழந்தை பெற்றோரிடம் திரும்பப் பெறப்படாது என கூறியதோடு பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

முன்னதாக நவம்பர் 2022 இல், அரிஹாவின் தாய் தாரா ஷா தனது மகளின் காவலைப் பெறுவதற்காகக் குஜராத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெளியே தர்ணாவில் அமர்ந்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டையும் தாரா ஷா கோரியிருந்தார்.

மேலும் அரிஹாவின் தாய் தாரா கூறுகையில், தனது மகள் தற்போது கிறிஸ்தவ குடும்பத்தில் இருப்பதாகவும், அவள் இப்போது ஜெர்மன் பேச ஆரம்பித்துவிட்டார். வழக்கு விசாரணைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதுவரை மகள் அரிஹா தன் காவலில் இருக்க வேண்டும். அல்லது தங்கள் உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தாரா கூறுகிறார்.

இந்திய தூதரை வரவழைத்தது இந்திய சிறுமி அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அரிஹா வழக்கு தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னலெனா பியர்போக்கிடம் கவலை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, ‘அரிஹா விவகாரம் தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மானுக்கு அரசு சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. குழந்தையை பெற்றோரிடம் விரைவில் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது. இந்தியாவின் வருத்தத்தை அந்நாட்டு தூதரிடம் தெளிவாக எடுத்துரைத்தோம். குழந்தையின் இந்திய கலாசார உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். மொழி, மத, கலாச்சாரம், சமூக சூழலில் இந்திய குழந்தை வாழ்வது முக்கியமானது. இந்த விவகாரத்தில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. குழந்தை அரிஹாவை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வர அனைத்து உதவிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்’ என்றார்.

https://news7tamil.live/german-government-snatches-7-month-old-baby-girl-from-indian-parents-government-of-india-summons-german-ambassador.html

  • கருத்துக்கள உறவுகள்

தவறேதும் இல்லாமல் பெற்றோர்களிடம் இருந்து குழந்தையை யேர்மனியில் பிரிக்க மாட்டார்கள். பிழை பெற்றோரிடம் இருப்பதால்தான் இந்த நிலை வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்தியச் சட்டங்கள் போல் அல்ல யேர்மனியச் சட்டங்கள். எந்த ஒரு நாட்டுக்குப் போனாலும் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்பட வேண்டியவர்கள் என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 வெளிநாடுகளில் குழந்தைகள் மீது  அரசாங்கம் மிகவும் தனிப்பட்ட் அக்கறை  எடுத்துக் கொள்கிறது . பாடசாலைகளில்   கூட சிறு காயம் இருப்பின் ஆசிரியர் எப்படி வந்ததென்று  வினவி சந்தேகமிருப்பின் மேலிடத்துக்கு அறிவிக்க படும். 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் கூட அரசு சார்ந்த சிறுவர் நல, கண்கானிப்பு நிலையங்களில் எத்தனையோ தவறுகள் நடந்துள்ளன. 

உதாரணத்திற்கு இங்கே Tasmaniaவில் சிறுவர் நன்நடத்தை மற்றும் அவர்களை பாராமரிக்கும் அரசு சார்ந்த நிலையம் ஒன்றில் நடைபெற்று வந்த பாலியல் வன்புணர்வு, பாலியல் சித்திரவதைகள் தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. 

குழந்தைகளைத் தாயிடம் இருந்து பிரித்து தவறான/abusiveன தந்தையிடமோ அல்லது foster careலோ விடப்படுகின்றனர். சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நல்ல சூழ்நிலைகளில் வளர்வார்கள் ஆனால் பெரும்பாலோனருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இருப்பதில்லை. 

இந்த சம்பவத்தில்/செய்தியில் கூட சரியான தகவல் இல்லை 

1- //மனைவி தாரா அவரது பெண் குழந்தை அரிஹாவின் பிறப்புறுப்பில் காயம் இருந்ததைத் தொடர்ந்து, அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். // 

2- // மேலும் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.//

மேலே இரண்டு கூற்றுகளுமே தவறான, ஒன்றுக்கொன்று முரணான தகவல்களைத் கூறுகின்றன. இதனை வைத்து பெற்றோரை குறை கூறமுடியுமா? தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர், இந்தியா திரும்ப நோர்வே, ஓஸலோ விமான நிலையத்தில் காத்திருந்த இந்திய குடும்பத்தில், தாய், மகனுக்கு கையால் உணவூட்டினார், அது தவறு என்று குழந்தையை பறித்துக் கொண்டணர்.

அங்கும் இந்திய அரசே தலையிட்டு, கையால் உண்ணுதல் இந்திய கலாச்சாரம் மேலும் அவர்கள் இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்தனர் என வாதாடி குழந்தையை மீட்டது.

இந்த சிறுவர் நலஅமைப்புகள் பல விடயங்களில் அலட்சியமாகவும், சில விடயங்களில் அநியாயத்துக்கு கவனமாகவும் இருப்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

யூன் மாதம் இது சம்பந்தமான பிபிசியின் செய்தி யாழில் இணைக்கப்பட்டிருந்தது

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.