Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிந்திய செய்தி:

கீரிமலை கேணி பகுதியை தொல் பொருள் திணைக்களம் கையகப்படுத்த முனைவதை தடுக்குமாறு, ஆறுமுகம் திருமுருகன் ஜனாதிபதி ரணிலுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

நீங்கள் தானே, சில நாட்கள் முன்னர் திண்ணையில், நாம் ஊகிக்க மட்டுமே முடியும். எதுவுமே புரியவில்லை என்று ஏத்துக்கொண்டீர்கள். 😁

ஆக, இலங்கை அரசியல் வாரத்துக்கு, வாரம் மாறுகிறது. இதில் 6 மாத கதை எங்க அய்யா? 🤪

நாம் ஒன்றை நினைக்க, வேறு ஒன்று அல்லவா நடக்கிறது. 🤦‍♂️

ஊகிக்க கடினமாய் உள்ளது என கூறியது - இலங்கையில் மேற்கு தனியே இறங்கி உள்ளதா அல்லது இந்தியாவையும் கூட்டு சேர்ந்தா? என்பதைதான். இது வெளிப்படையாக தெரியாத நாம் ஊகிக்க வேண்டிய விடயம். அதை ஊகிக்க கடினமாய் உள்ளது என்றேன்.

ஆனால் இந்துதுவா-சிங்கள பெளத்த சித்தாந்தங்கள் நெருங்கிய உறவில் உள்ளன என்பதும், சீனாவின் இலங்கை கொள்கைக்கும் -இலங்கையின் தமிழர் நிலத்தில் பெளத்தம் நாட்டும் கொள்கைக்கும் அதிக தொடர்பில்லை என்பதும், காரண காரியங்களை வைத்து ஊகிக்க முடியுமானது.

அதேபோல் - இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை கடந்த 6 மாதத்தில் அப்படியேதான் இருக்கிறது.

ஆகவே உங்கள் 180 டிகிரி நிலைபாட்டு மாற்றம் ஒரு புதிராகவே இருக்கிறது.

15 minutes ago, Nathamuni said:

இன்று இருப்பதிலும் பார்க்க அதிகமாக இருந்திருப்போம். குறிப்பாக, தீவுப்பகுதி இன்று உள்ளதை போலல்லாமல், மக்களால் நிரம்பி காணித்துண்டே இல்லாமல் இருந்திருக்கும்.

தமிழனை சிறுபான்மையாக்கி, இடத்தினை பறிக்கவே சிங்களவன் முனைந்தான். 

தமிழன் இலங்கை தீவில் எப்போதும் சிறுபான்மைதான்.

சிங்களவர் முயற்சித்தது - அந்த சதவீதத்தை மேலும் குறைக்க.

ஆனால் சீமான் சொன்னதாக நீங்கள் சொன்னது இதை அல்ல.

6 hours ago, Nathamuni said:

கடந்த வாரம் நடந்த சீமான் சர்ச்சையின் போது, சீமானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையா என்று.

சிறப்பான பதில் ஒன்றை வழங்கி இருந்தார்: சாத்திரி ஒப்பந்தத்தின் படி, 15 லட்ச்சத்தினை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களை சிறுபான்மை என்று சொல்ல முடியாதே

சீமானுக்கு எமது பிரச்சனையின் அடியும் தெரியாது, நுனியும் தெரியாது என்பதற்கு இந்த பதில் இன்னொரு சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

ஊகிக்க கடினமாய் உள்ளது என கூறியது - இலங்கையில் மேற்கு தனியே இறங்கி உள்ளதா அல்லது இந்தியாவையும் கூட்டு சேர்ந்தா? என்பதைதான். இது வெளிப்படையாக தெரியாத நாம் ஊகிக்க வேண்டிய விடயம். அதை ஊகிக்க கடினமாய் உள்ளது என்றேன்.

ஆனால் இந்துதுவா-சிங்கள பெளத்த சித்தாந்தங்கள் நெருங்கிய உறவில் உள்ளன என்பதும், சீனாவின் இலங்கை கொள்கைக்கும் -இலங்கையின் தமிழர் நிலத்தில் பெளத்தம் நாட்டும் கொள்கைக்கும் அதிக தொடர்பில்லை என்பதும், காரண காரியங்களை வைத்து ஊகிக்க முடியுமானது.

அதேபோல் - இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை கடந்த 6 மாதத்தில் அப்படியேதான் இருக்கிறது.

ஆகவே உங்கள் 180 டிகிரி நிலைபாட்டு மாற்றம் ஒரு புதிராகவே இருக்கிறது.

180 டிகிரி மாறுதல் அல்லவே.

இன்று மோடியின் அழுத்தத்தினால் தான் ரணில் 13 குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள்.

இதனை 6 மாதம் முன்னர் நான் சொன்னபோது, அன்றைய நிலையில் சரியாக இருந்தது. இன்று ரணில் டெல்லிக்கு போக ஒரு வருடம் எடுத்த காரணத்தின் பின்னால், டெல்லி அவரை விரும்பி இருக்க வில்லை என்ற செய்தி உறுதியான பின்னர், எனது பார்வை மாறி உள்ளது. அதாவது, அமெரிக்க, சீன, இரும்பு பிடிக்குள் இலங்கை.

இந்திய நிலை, வடிவேலுவின் நானும் ரௌடிதான் கதை போலவே தெரிகிறது. 

***

வெளியே போக வேணும். பிறகு தொடர்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Nathamuni said:

180 டிகிரி மாறுதல் அல்லவே.

இன்று மோடியின் அழுத்தத்தினால் தான் ரணில் 13 குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள்.

இதனை 6 மாதம் முன்னர் நான் சொன்னபோது, அன்றைய நிலையில் சரியாக இருந்தது. இன்று ரணில் டெல்லிக்கு போக ஒரு வருடம் எடுத்த காரணத்தின் பின்னால், டெல்லி அவரை விரும்பி இருக்க வில்லை என்ற செய்தி உறுதியான பின்னர், எனது பார்வை மாறி உள்ளது. அதாவது, அமெரிக்க, சீன, இரும்பு பிடிக்குள் இலங்கை.

இந்திய நிலை, வடிவேலுவின் நானும் ரௌடிதான் கதை போலவே தெரிகிறது. 

***

வெளியே போக வேணும். பிறகு தொடர்வோம்.

ம்ம்ம்…

இதைத்தான் ஊகிக்க கடினம் என்றேன்.

நாங்கள் எல்லாரும் பத்திரிகை செய்தி, கேள்விபடும் கொசிப்பை வைத்து ஒவ்வொன்றை நினைக்கிறோம். பிறகு ஆறு மாதத்தில் அதை மாற்றுகிறோம்.

சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 15:41, தமிழ் சிறி said:

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக்கறுப்பாட்டை வைச்சு தமிழரை வளைச்சுப்பிடிக்க சிங்களம் இதுக்கு மணிகட்டி வேடிக்கை காட்டுது. கடற்தொழில் அமைச்சர், கடற்தொழிலாளர் பிரச்சனை தவிர மற்றெல்லா  பிரச்சனைக்குள்ளும் மூக்கை நுழைச்சு, கருத்து சொல்லுவார், அறிக்கை விடுவார். அதென்ன.... இதே கருத்துக்களை மற்றைய தமிழ் அரசியற் தலைவர்கள் வைக்கும்போது பாராமுகமாக இருக்கும் சிங்களம் இவருக்கு செவிசாய்க்குதாம். ஆனால் தமிழர் பிரச்சினை இன்னும் அதே இடத்திற்தான் நிக்கிறது ஏதும் மாறவில்லையே? காட்சி நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கதைதான் புரியவில்லை!

On 10/8/2023 at 01:58, Justin said:

இந்த இந்து அமைப்புகளின் பிரமுகர்களிடம், பௌத்த குருமார் "வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் கிறிஸ்தவ மதமாற்றிகளாக மாறி, புதிய ஆலயங்கள் கட்டுகிறார்கள்" எனக் கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும் இந்த RSS, VHP அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதையே உறுதி செய்கிறார்களாம். எனவே இதைத் தடுக்க, "நாம் விகாரைகளையும், புத்த சின்னங்களையும் வைத்து இந்தியாவுக்கு நெருக்கமான பௌத்த மதத்தை காக்கிறோம்" என்கிறார்களாம்.  

 பல மாதங்களுக்கு முன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையில் பௌத்தமத வளர்ச்சிக்கு இந்தியா பண உதவியும் ஆலோசனைகளும் வழங்கியதாக. சிவசேனா முகவர் சச்சியர் கூட தேவாலயம் கட்டவந்த கிறிஸ்தவர்ளை அடித்து விரட்டி விட்டோம் என்று வீராப்பு பேசுவதும், தேவையில்லாமல் அவர்களை சீண்டி சம்பந்தமில்லாமல் கருத்து சொல்வதும் அறிக்கை விடுவதும் அவர்களுடன் சன்னதம் ஆடுவதும் கரிச்சு கொட்டுவதுமாக இருக்கிறார். சும்மா வந்த அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களையும் வைத்துப்பார்த்தால் உண்மை போலவே உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என ரணில் நினைத்திருந்தால் சரத் வீர சேகர போன்ற இனவாதம் கக்குவோரையும், சட்ட வரைபை கொழுத்திய பிக்குகளையும் உடனடியாக கைது செய்திருப்பார்.ஆனால் அவரோ இப்படியான குழப்பங்களை உருவாக்கி தான் தப்பிக்கவே முயற்சிக்கிறார். அரக்கலயா தொடங்கி இன்றுவரை பல ஆர்ப்பாட்ட்ங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கு ம் அவருக்கு இதொன்றும் கஷ்ரமான விடயமல்ல. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கனும். விட்டிட்டு.. கோட்டில போய் கோட் போட்டு பேசி கிழிப்பம்.. வெல்லுவம் என்ற போலிப் பேச்சுப் பேசும்.. அப்புக்காத்துமாற்ற கதையை நம்பி.. இப்ப காலம் கடந்து ஞானம் பெறுவதே தமிழர்களின் பிழைப்பாப் போச்சு. வெள்ளம் வரும் முன் அணைகட்டி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2023 at 12:40, Nathamuni said:

உங்கள் விரக்தி புரிகிறது. ஆனால் ரணில், அதிகார பகிர்வுக்கு வில்லன் (வில்லர்கள்) யார் என்று தெளிவாக்க முயல்வதாகவே நான் பார்க்கிறேன்.

13A யினை அமுல் படுத்தப்போவதாக சொல்லி இன்று பாரளுமன்றில் சொன்னபோது, ரிச்சர்ட் நெப்யூ என்ற அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி, இன்னோருவருடன் கொழும்பில் இருக்கிறார்.

இந்த வில்லர்கள் வெளியே தெரியப்போகிறார்கள் என்று பதறும் விசயம் தெரிந்த, பீரிஸ், இது (13A யினை அமுல் படுத்துவது) பாராளுமன்றம் வர தேவையில்லாத, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ரணில் வேலை என்று சொல்கிறார். 

பாராளுமன்றில் சமர்ப்பித்தது ரணிலின் நரி மூளை என்று சிலர் சொன்னாலும், அதன் பின்னால் வெளிநாடுகள் உள்ளன என்பதே யதார்த்தம். வில்லர்கள் வெளியே தெரிந்தால், அவர்களை கையாள்வதும் எப்படி என்று தெரிய வரும்.

மொட்டுகள், இறுதியாக, மொட்டைகளை அவிழ்த்து, தெருவுக்கு விடலாம். அது எமக்கு நன்மையாகவே முடியும். 

ஆகவே, அமைதியாக இருந்து, நம்ம தமிழ் சிறியர் வழக்கமாக சொல்வது போல, 'நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்போம்'.   

இப்படி இந்தியா 83 இல் இருந்தும் உன்னிப்பாக அவதானித்தும் சீனா உள்ளே வந்திட்டுதே

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

இப்படி இந்தியா 83 இல் இருந்தும் உன்னிப்பாக அவதானித்தும் சீனா உள்ளே வந்திட்டுதே

எங்கே உன்னிப்பாக கவனித்தார்கள். பெரியண்ணன் என்ற எண்ணத்தில் எங்களை மீறி ஒன்றும் நடக்காதென்று எண்ணத்தில் இருந்தார்கள். சீனாக்காரன் பின் கதவால் உள்ளே புகுந்து எல்லாவற்றையும் கைப்பற்றி விடடான். இனி அம்பாந்தோடடயில் இருந்து நூறு வருடத்துக்கு அவனை அசைக்க முடியாது. இனி ஏதாவது வட கிழக்கில் கிடைத்தால் சின்ன சின்ன திட்ட்ங்களை நிறைவேற்றுவதுதான் அவர்களுக்கு இருக்கும் தெரிவு. துறைமுக நகர திடடமும் சீனாவின் கைகளுக்கு போய் விட்ட்து. இதெல்லாம் சவுத் பிளாக் என அழைக்கப்படும் மலபாரிகளைக்கொண்ட ஆலோசனை குழுவினால் வந்த அழிவுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.