Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி

மன்னார் – அடம்பன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மன்னார் – அடம்பன் –  முல்லிகந்தல் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்களில் பயணித்தவர்கள் மீது, இனந்தெரியாதவர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலையாளிகள், இறந்தவர்கள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
 

http://www.samakalam.com/மன்னாரில்-துப்பாக்கிச்-ச/

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் தான் தொடர்ந்தது இப்போது வடக்கிலும் ஆரம்பித்துவிட்டது போல

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

தென்னிலங்கையில் தான் தொடர்ந்தது இப்போது வடக்கிலும் ஆரம்பித்துவிட்டது போல

குழு மோதலா அல்லது அரசியல் காரணங்கள் ஏதும்?
அடுத்த கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரால் ஒரு  பாரிய போராட்டம் நடைபெற உள்ளதாம்.அதனை முன்னின்று நடாத்தும் இளைஞர்களா இவர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

குழு மோதலா அல்லது அரசியல் காரணங்கள் ஏதும்?
அடுத்த கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரால் ஒரு  பாரிய போராட்டம் நடைபெற உள்ளதாம்.அதனை முன்னின்று நடாத்தும் இளைஞர்களா இவர்கள்?

சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு சகோதரர்கள் அந்த பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட்னர். அதன் எதிரொலிதான் இதுவென்று கூறப்படுகின்றது. விசாரணையின் பின்னர்தான் சரியான தகவல் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் துப்பாக்கி சூட்டுக்கான காரணம் வெளியானது!

mannar-shooting.jpg

இரண்டு தரப்பினருக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய முறுகல் காரணமாகவே மன்னார் – முள்ளிக்கண்டல் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு நேற்று காலை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் – நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரும், மாந்தை மேற்கு சன்னார் கிராமத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவருமே கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவர் கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://thinakkural.lk/article/270225

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் யார்? இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து வந்தது? இதை வைத்தே சிங்களம் ஒரு கதை எழுதப்போகுது....

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் - அடம்பன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிப்பு

Published By: DIGITAL DESK 3

26 AUG, 2023 | 11:02 AM
image
 

மன்னார் அடம்பன் முள்ளிக்கண்டல் பகுதியில் வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில்  உயிரிழந்த இரண்டு குடும்பஸ்தர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரிகைகள் சனிக்கிழமை (26) இடம் பெற உள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஜேசுதாசன் அருந்தவராஜா (வயது-42) 3 பிள்ளைகளின் தந்தை  மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்த கணபதி காளிமுத்து (வயது-56) 5 பிள்ளைகளின் தந்தை ஆகிய இரு குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  தெரியவந்துள்ளது.

குறித்த இருவரும்  வியாழக்கிழமை (24) காலை மோட்டார் சைக்கிலில் வயலுக்குச் சென்ற போது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளதோடு, குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதேவேளை, கடந்த வருடம் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நொச்சி குளத்தைச் சேர்ந்த   ஜேசுதாசன் அருந்தவராஜா என்ற குடும்பஸ்தரும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

மேலும், ஜேசுதாசன் அருந்தவராஜாவின் வயலில் வேலை செய்யச் சென்ற சன்னார் கிராமத்தைச் சேர்ந்த கணபதி காளிமுத்து என்பவரும் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற இரு சகோதரர்களின் இரட்டை கொலைக்கு பழிக்கு பழி வாங்கும்  நோக்குடன் இச்சம்பவம் இடம் பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த இரட்டை கொலை தொடர்பாக அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/163223

  • கருத்துக்கள உறவுகள்
On 24/8/2023 at 15:22, nunavilan said:

குழு மோதலா அல்லது அரசியல் காரணங்கள் ஏதும்?
அடுத்த கிழமை காணாமல் ஆக்கப்பட்டோரால் ஒரு  பாரிய போராட்டம் நடைபெற உள்ளதாம்.அதனை முன்னின்று நடாத்தும் இளைஞர்களா இவர்கள்?

பல தனிப்பட்ட காரணங்களால்தான் பல துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடக்கிறது இலங்கையில்  இதே போல தென் இலங்கையில்  தொடர்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.