Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பஞ்சமர் அல்ல, எனது பார்வையில் அது ஒரு வெஞ்சமர்...!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Pangchamar.jpg

பஞ்சமர் அல்ல, எனது பார்வையில் அது ஒரு வெஞ்சமர்...! 


பஞ்சமர் அல்ல, அது ஒரு வெஞ்சமர் என்றே சொல்லலாம். சில பகுதிகளை வாசிக்கும்போது தமிழினமா இப்படி என்று எண்ணவைக்கிறது. வன்னியில் வாழ்ந்தமையினாலும், யாழிலே ஒருசில மாதங்களே  கழித்ததாலும் இவைபற்றிப் பெரிய அளவில் அறியாதநிலை. ஒடுக்குமுறைகள் குறித்த விடயங்களைக் கேள்விப்பட்டாலும், அவை இந்தப் படைப்பினுள் வருவதுபோன்று கடுமையானதகாவோ கொடுமையானதாகவோ  அறியும் வாய்ப்பிருக்கவில்லை. அது ஒருவேளை ஆயுதப்போராட்டம் தொடங்கியதன் விளைவாக அவை அமுங்கியதாகவும் இருக்கலாம். இங்கே மறைந்த எழுத்தாளர் டானியல் அவர்கள் தொடர்பான திரியிலே சில யாழ்க் கள உறவுகளின் விழித்தலை நான் இப்படித்தான் புரிந்துகொள்ள விளைகின்றேன். அதாவது, ஆயுதப்போராட்ட காலத்தில் அமுங்கியிருந்த வித்துகள் முளைவிடத் தொடங்கியிருப்பதன் பாதிப்பாகவும், இவை நீடித்து நிலைத்துவிடக்கூடாது என்ற அக்கறையின்பாற்பட்டதாகவுமே அவர்களது பார்வை இருக்கலாம்.  
 "பஞ்சமர்,, நாவலை வாசித்த அனுபவத்தில் பின்வரும் விடயங்களை நாவல்வாயிலாகப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் தொடர்கின்றேன்.
  கமக்காரன் என்ற சொல்லாடலை 40ஆண்களுக்கு முன்பும், அவை கமக்காரர் என்று கூறுவதைக் கேட்டுள்ளேன். அதற்குள் இன்னார் என்பது சூட்சுமமாக மறைந்துள்ளதைக் காணலாம். 62ஆம் பக்கத்திலே உள்ள சிறாப்பர் வீட்டுக்காரிய  (இறுதி ஊர்வல) விவரணம் எமதினத்தினுள் சாதியின் பெயரால் நடாத்தப்பட்ட பல சிறுமைகளைச் சுட்டி நிற்கிறது. மனிதஇனம் தனக்குள்ளான ஏற்றத் தாழ்வுகளை நகர்த்திச்செல்லவும் தொடர்ந்து பேணவும் முறையென்றும் சடங்கென்றும் அவற்றைத் தொடர்ந்து தக்கவைக்க எடுக்கும் கடும் பிரயத்தனங்களையும் "பஞ்சமர்,, பதிவு செய்துள்ளது. 
அன்னத்தைக் காதலித்ததற்காக தமது சொந்து மகனான செல்லதம்பியையே  கொன்ற கமக்காரத் தம்பதி. பாடசாலையை, கள்ளுக்கொட்டிலைக் கொழுத்திய உயர்ந்தவர்கள் சிறிசேனா, கற்கண்டன், கார்த்திகேசு, இரத்தினம், குமரேசன், குமாரவேலன் எனத் தொடர்கொலைகளை செய்துவிட்டு எப்படி சட்டத்திலிருந்த தப்பினர். அப்படியாயின் காவல்துறை, சட்டத்துறையென்பனவும் பக்கச்சார்பாகவே நடந்துள்ளது.  மீனவரிலிருந்து வந்த மருத்துவரை ஏற்காமை.....பள்ளிக்கூடச் சரஸ்வதி பூசையிலே அதிபர் நடந்துகொண்டவிதம்...கிணற்றைக் குப்பைகளால் நிரப்பியது என... (அண்மையில் தமிழகத்திலே மனிதக் கழிவுகளைக் கிணற்றிலே போட்டதற்கு ஒப்பானது.) எவளவு கீழ்மையான சிந்தனைக்குள் இந்த உயர்சாதி மனிதர்கள்(ளா). 162மற்றும்163ஆம் பக்கங்களில் வருகின்ற கொலைப்பட்டியல் விவரிப்பானது சிங்களத்தின் இனவாத முகத்துக்கும், தமிழரிடையே ஊ(ன்)றிப்போயுள்ள சாதிவாத முகத்திற்கும் பெரும் வேற்றுமையைக் காட்டவில்லை.165ஆம் பக்கத்திலே உள்ள முதற்பந்தி சம்பந்தரையா மற்றும் சுமந்திரன் போன்றோரை நினைவுபடுத்துகிறது. 
ஐயண்ணனெனும் பாத்திரத்தின் ஊடாக சாதிகளிடையேயான எழுச்சியையும்  ஒற்றுமையையும் கட்டமைத்து அதனூடாக மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் "பஞ்சமர்,, கதாபாத்திரங்களை நகர்த்தியுள்ளார். 1972ஆம் ஆண்டு, வெளியாகி அரைநூற்றாண்டுகளைக் கடந்துவிட்டபோதும் கதையின் காட்சிகள் இன்னும் உலவுமாயின் தமிழினமே வெட்கித் தலைகுனியவேண்டிய விடயமாகும். அதுமட்டுமன்றிப் பட்டறிவிலிருந்து கற்றுத்தெளியாது தொடர்ந்தும் எமக்காக குழிகளை நாமே வெட்டிக்கொண்டிருப்பதாகவே கொள்ளமுடியும்.

இதனது இணைப்பைத் திண்ணையிலே தந்து நாவலைப் படிக்கத்தூண்டிய கள உறவான ஏராளன் அவர்களுக்கு நட்பார்ந்த அன்பும் நன்றியும் உரித்தாகுக. 

"சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்ல பாவம்,, என்று சொல்லப் பாரதியும் இன்றில்லை. "பஞ்சமர்,, நாவல்குறித்து எழுத்தியதன் நோக்கம் படிக்காதவர்கள் படிப்பதன் ஊடாக எமதினத்துள் படிந்துபோயுள்ள மறுபக்கத்தை அறிந்துகொள்வதும், இதனை படித்தவர்கள் மீள்வாசிக்குட்படுத்தும்போது இன்னும் எமதினம் திருந்தவில்லையே என்ற விழிப்புநிலை ஏற்படலாம் என்பதே. இது ஒரு நாவலென்பதைக்கடந்து உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் உண்மைத் தொடர்போன்றுள்ளது.  


அன்பார்ந்த நன்றியுடன்
நொச்சி 
 

 

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் என்ற கள உறவு என்றே நினைக்கிறேன், அவர் குறிப்பிட்டு எழுதுவார் தமிழின (விடுதலைப்போரின்) வீழ்ச்சியின்  முதன்மைக் காரணமாக சாதியமே உள்ளதாக. உள்ளுக்குள் பிளவுபட்ட இனம் வெற்றி பெறுவது கடினமே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இன்னுமொருவன் என்ற கள உறவு என்றே நினைக்கிறேன், அவர் குறிப்பிட்டு எழுதுவார் தமிழின (விடுதலைப்போரின்) வீழ்ச்சியின்  முதன்மைக் காரணமாக சாதியமே உள்ளதாக. உள்ளுக்குள் பிளவுபட்ட இனம் வெற்றி பெறுவது கடினமே!

அதனைக் கூர்மைபடுத்தி வீரியமாக்கும் சக்திகளை இனங்காண்பதும் அவர்களோடு இணங்கிப்போகாதிருப்பதும் இன்றைய தேவை என்பதைத் தமிழினம் உணராதிருப்பின் பெரும் வரலாற்றுத் தவறைச் செய்தோராவோம். 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியதை வாசித்தபோது எனக்கும் இப்புத்தகத்தை வாசித்தது ஞாபகம் வருகிறது. கமக்காரர் என்பது ஒரு சாதிய அடையாளம் தான் ஆனால் அத்தொழில் அருகிவந்தாலும் அல்லது செய்யாமல் விலகினாலும் அச்சாதிய அடையாளத்தை பாதுகாக்கின்றனர் அல்லது விட்டு வெளியேறவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2023 at 00:17, ஏராளன் said:

இன்னுமொருவன் என்ற கள உறவு என்றே நினைக்கிறேன், அவர் குறிப்பிட்டு எழுதுவார் தமிழின (விடுதலைப்போரின்) வீழ்ச்சியின்  முதன்மைக் காரணமாக சாதியமே உள்ளதாக. உள்ளுக்குள் பிளவுபட்ட இனம் வெற்றி பெறுவது கடினமே!

சாதியம் ஓழியும் வரை தமிழ் இனத்திற்கு விடிவில்லை👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

சாதியம் ஓழியும் வரை தமிழ் இனத்திற்கு விடிவில்லை👍

இன்னும் இரண்டு தலைமுறைகளைக் கடக்க வேண்டும். அப்போது தமிழருக்கான நிலமிருக்குமா அல்லது தமிழரே இருப்பார்களா? என்பதே விடைகான முடியாத வினா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

சாதியம் ஓழியும் வரை தமிழ் இனத்திற்கு விடிவில்லை👍

 

5 hours ago, nochchi said:

இன்னும் இரண்டு தலைமுறைகளைக் கடக்க வேண்டும். அப்போது தமிழருக்கான நிலமிருக்குமா அல்லது தமிழரே இருப்பார்களா? என்பதே விடைகான முடியாத வினா? 

நிலமற்ற ஏழைமக்களுக்கு நிலம் வாங்க வழியில்லை. ஆனால் ஆக்கிரமிப்பால் ஒவ்வொரு நாளும் நிலம் பறிபோகின்றது.
தாயகம் வரவிரும்பாதோர், பெரும் நிலப்பரப்புகளுக்கு சொந்தமானோர் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

 

நிலமற்ற ஏழைமக்களுக்கு நிலம் வாங்க வழியில்லை. ஆனால் ஆக்கிரமிப்பால் ஒவ்வொரு நாளும் நிலம் பறிபோகின்றது.
தாயகம் வரவிரும்பாதோர், பெரும் நிலப்பரப்புகளுக்கு சொந்தமானோர் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கலாம்.

யாழிலேயே யாரோவோரு உறவு காணி பகிர்ந்தளித்ததைப் பற்றி எழுதியிருந்தார். ஆனால் தமிழரிடம் உள்ள தாராளமனப்பான்மையான தனது மூக்கைப் பற்றிக் கவலைப்படாத போக்கினூடாக அப்படியான சிந்தனையை எதிர்பார்க்க முடியுமா? ஏன் அரச காணிகளை நிலமில்லாத தமிழருக்குப் பகிர்ந்தளிகக்கூடாது. அரசியல்வாதிகள் ஏன் அது பற்றிச் சிந்திக்கவில்லை.     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.