Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கசூரினா கடற்கரையில் போதையில் குழப்பம்; 06 புலம்பெயர் நாட்டவர்கள் விளக்கமறியலில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

26 AUG, 2023 | 01:01 PM
image
 

மது போதையில் குழப்பம் விளைவித்த 06 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று  பொழுதை கழித்துள்ளனர். 

அதன் போது , அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என , கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர். 

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடிய பிரஜைகள் எனவும் , ஒருவர் லண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

https://www.virakesari.lk/article/163230

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ! இவர்களை என்னத்தை சொல்ல? இப்பதானே காரைநகரில் திருவிழாவுக்கு வந்தவர்களை கொலைசெய்தார்கள், அதுக்குள்ள இவர்கள் வேற வலியப் போய் மாட்டியிருக்கிறார்கள்.    

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

ஐயோ ஐயோ! இவர்களை என்னத்தை சொல்ல? இப்பதானே காரைநகரில் திருவிழாவுக்கு வந்தவர்களை கொலைசெய்தார்கள், அதுக்குள்ள இவர்கள் வேற வலியப் போய் மாட்டியிருக்கிறார்கள்.    

காரைநகரா? நெடுந்தீவா?!

  • கருத்துக்கள உறவுகள்

குற்றச்செயல் என்று வரும்போது மட்டும் புலம்பெயர் தமிழர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

தாம் வாழும் நாடுகளில் மது போதையில் குழப்பம் விளைவிக்கவோ அடுத்தவருக்கு இடையூறு விளைவிக்கவும் சுதந்திரம் இல்லாததால்  அதை அங்கு செய்ய விளைந்துள்ளர்கள் என று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஏராளன் said:

காரைநகரா? நெடுந்தீவா?!

தீவு என்றவுடன் எந்த தீவு என்பதில் குழப்பம். வெளிநாட்டுக்காரர் ஏன் தீவுகளில் இப்படி? முன்பு புங்குடுதீவு... இப்படி தீவுகளாகவே தொடர்கிறது. வெளிநாடுகளுக்கும் தீவுகளுக்கும் அப்படி என்ன ஒரு தொடர்பு சர்ச்சை?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

வெளிநாட்டுக்காரர் ஏன் தீவுகளில் இப்படி?

இலங்கை ஒரு தீவு

  • கருத்துக்கள உறவுகள்

காரைநகர் கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

காரைநகர் கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்தவர்கள் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 06 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று நேற்று முன்தினம் பொழுதைக் கழித்துள்ளனர்.

அதன்போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்புப் பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து , கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 06 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

இதனையடுத்து மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , 06 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடிய பிரஜைகள் எனவும், ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

https://athavannews.com/2023/1346727

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளின் படி தாங்கள் மோதிரத்தைத் தொலைத்துவிட்டு பொலிசாரிடம் வாக்குவாதப்படலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

மது போதையில் குழப்பம்

என்று சொல்லப்படுகிறது. மதுபோதைதானே என்று சந்தர்ப்பத்தை பயன்படுத்தக்கூடிய சந்தற்பங்களுமுண்டு., வெளிநாட்டுக்காரர் வேற. கனடா பிரதமரின் இலங்கை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும்  சௌகரியமின்மையை ஏற்படுத்தக்கூடியது இக்குற்றச்சாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2023 at 15:29, விசுகு said:

குற்றச்செயல் என்று வரும்போது மட்டும் புலம்பெயர் தமிழர்கள்????

வந்தாலும் சும்மா இருப்பதில்லை சில நடந்த சம்பவங்கள் தெரியவில்லை போல முந்தய நாள் சுடுதண்ணிய ஊற்றிய வரைக்கும் சம்பவங்கள் நடக்கிறது 

தனது சூட்டை குறைக்க ....... பெண்ணுக்கு காட்டிய போது பெண்ணின்  தாயாரால் சுடுதண்ணி ஊற்றப்பட்டது செய்தியாக வந்திருக்கு . அதுமட்டும் அல்ல தப்பிக்க எதுவும் செய்ய முனகிறார்கள் நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மையும் 

அவரும் வெளியில இருந்து வந்தவர்தான் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.