Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன் அது குறித்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் - மல்கம் ரஞ்சித்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

28 AUG, 2023 | 09:57 AM
image
 

இலங்கைக்கும்  இந்தியாவிற்கும் இடையில் பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அதுகுறித்து சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளிற்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து மக்களின்  கருத்தினை அறிவதற்கு சர்வஜனவாக்கெடுப்பைநடத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களிற்காக நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கள் நாட்டின் பகுதிகளை பல நாடுகளிற்கும் சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர்  நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கின்றனர் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம்கட்டப்போகின்றனர். இந்தியாவின் கருத்திற்கு அமைய கடந்தகாலங்களில் நாங்கள் சில விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம், அவை அனைத்தும் முட்டாள்தளமான கதைகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் நாடு எப்போதும் சுதந்திரமான நாடாக காணப்பட்டுள்ளது, நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமைகள் இல்லை, இந்த நாட்டின் மன்னர்கள் இந்தியாவுடன் பொருளாதார விடயங்களைகையாண்டுள்ளனர்.  ஆனால் நாங்கள் எவருக்கும் அடிமையாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் நிலைமை குறித்து நாங்கள் கவலையடைகின்றோம். சுதந்திரத்தை பெற்ற நாங்கள் தற்போது அதனை இழக்கப்போகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/163320

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

இந்தியாவின் கருத்திற்கு அமைய கடந்தகாலங்களில் நாங்கள் சில விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம்,

கிடப்பில் கிடந்தது இழுபறிப்படும் பதின்மூன்றைச்சொல்கிறாரோ இவர்?

18 hours ago, ஏராளன் said:

ஆனால் நாங்கள் எவருக்கும் அடிமையாகவில்லை

ஆனால், எங்களுக்கு கீழே அடிமைகள் இருக்க வேண்டும், அந்த அடிமைகளை யாரும் உரிமை கோரவோ, தத்தெடுக்கவோ, முன்னேறவோ விடமாட்டோம். உலகத்தை ஏமாற்ற, வசதிகளை அனுபவிக்க அணிவது வெள்ளை அங்கி. பேசுவது காவிவெறுப்பு! 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

எங்கள் நாடு எப்போதும் சுதந்திரமான நாடாக காணப்பட்டுள்ளது, நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமைகள் இல்லை, இந்த நாட்டின் மன்னர்கள் இந்தியாவுடன் பொருளாதார விடயங்களைகையாண்டுள்ளனர்.  ஆனால் நாங்கள் எவருக்கும் அடிமையாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் நிலைமை குறித்து நாங்கள் கவலையடைகின்றோம்.

ஆனால் நாங்கள் பொருண்மிய நெருக்கடியின்போது எந்தக் கருத்தும் தெரிவிக்காது இந்தியா தந்த உதவிகளை கழுகுகள் போல் கொத்திக்கொண்டோம் என்றும் கூறியிருந்தால் உங்கள் மதிப்பு இன்னும் உயர்ந்திருக்கும். மொத்தத்தில் சிங்களம் அது எந்த மதமாயினும் ஒற்றை முகமாகவும், தமிழினமோ பல்வேறு மதங்களாகிப் பன்முகமாகி உதிரிகளாகி நிற்கிறது. பட்டறிவை விடுவோம். சிங்களத்தைப் பார்த்தாவது திருந்தாதிருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு சிங்களப் பேரினவாதி. தமிழர்கள் மீதான இன அடக்குமுறை மற்றும் இன அழிப்பை கூட நியாயப்படுத்தக் கூடிய கொடிய ஜந்து. இன்றுவரை தமிழர்கள் மீதான இனக்கலவரங்கள்.. அடக்குமுறைகள்.. இன அழிப்பை கண்டிக்காத.. ஏன் கண்டுகொள்ளாத ஒரு போலிக் கிறிஸ்தவ மத அடையாளம் தரித்த கொடிய பேரினவாதி தான் இவர். இவரிடம் இருந்து வேறு எதனை தான் எதிர்பார்க்க முடியும்.

சொறீலங்காவுக்கும்.. - ஹிந்தியாவுக்கும் பாலம் அமைவதால்.. தமிழர்களுக்கு அரசியல் உரிமையோ.. தாயக சுதந்திரமோ கிடைச்சிடும் என்றில்லை. ஆனால்.. தமிழர் பகுதிகளை சிங்களம் சார்ந்திருக்க வேண்டி வருமோ என்ற பயத்தில் தான் இந்த உளறல். 

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு சில பிரச்சினை இருக்கின்றது. இவர் ஒரு கத்தோலிக்க சிங்கள தீவிரவாதி. இவர் ஒரு மதத்தலைவராக இருந்தாலும் சிங்கள இனத்தில் மிகவும் தீவிர பற்றுள்ளவராகியால் சில வேளைகளில் தான் ஒரு மத தலைவர் என்பதை மறந்து அரசியல் பேச தொடக்கி விடுவார்.

வடக்கு கிழக்கு கத்தோலிக்க மத தலைவர்களும் , மக்களும் இவரை மதிப்பதில்லை என்று இவருக்கு தமிழர்கள்மீது வெறுப்பும் இருக்கின்றது. மேலும் வடக்கு கிழக்கிட்கு தனி மீசாம் கேட்பதும் அவருக்கு ஒரு பிரச்சினை.

எனவே இப்படியாக பாதை அமைத்து தமிழ் நாட்டு மக்களுடன் தொடர்பு ஏட்படுத்துவதும் அவர் விரும்பவில்லை. தமிழர்களுடனான வெறுப்பு இவரை இப்படி எல்லாம் பேச வைக்கின்றது. அவரது கருத்துக்கள் எல்லாம் இயலாமையின் வெளிப்பாடே ஒழிய வேறொன்றுமில்லை.

வடக்கு கிழக்கில் நான்கு பிஷப் மார் இருக்கிறார்கள். எனவே இவர்கள் வாதிக்கனுடன் பேசி விரைவாக வடக்கு கிழக்கை தனி மீசாமாக மற்ற வேண்டும். இந்திய இணைப்புக்கு சர்வஜன வாக்கெடுக்கும்போது , வடக்கு கிழக்கை தனி மீசாமாக மாற்றுவதட்கும் வடக்கு கிழக்கில் ஒரு வாக்கெடுப்பை நடத்தலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதலில் இவரின் இரட்டை வேடம்  தெரிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/8/2023 at 14:30, nochchi said:

மொத்தத்தில் சிங்களம் அது எந்த மதமாயினும் ஒற்றை முகமாகவும், தமிழினமோ பல்வேறு மதங்களாகிப் பன்முகமாகி உதிரிகளாகி நிற்கிறது. பட்டறிவை விடுவோம். சிங்களத்தைப் பார்த்தாவது திருந்தாதிருக்கின்றோம்.

சிங்களம் எங்களை பிரித்தாள்வதற்கு எம்மை உதிரிகளாக்கும், தன்னை ஒருமைப்படுத்திக்கொள்ளும். மொத்தத்தில் ஐக்கியமில்லாதது தமிழன், அதனை சிங்களம் பயன்படுத்திக்கொள்கிறது. தன்னினம் முன்னேற விடாது அதே நேரம் மற்றைய இனத்தை தாங்கிப் பிடித்து உயர்த்தும், அதுக்கு நிஞாயமும் சொல்லும் . 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

சிங்களம் எங்களை பிரித்தாள்வதற்கு எம்மை உதிரிகளாக்கும், தன்னை ஒருமைப்படுத்திக்கொள்ளும். மொத்தத்தில் ஐக்கியமில்லாதது தமிழன், அதனை சிங்களம் பயன்படுத்திக்கொள்கிறது. தன்னினம் முன்னேற விடாது அதே நேரம் மற்றைய இனத்தை தாங்கிப் பிடித்து உயர்த்தும், அதுக்கு நிஞாயமும் சொல்லும் . 

தமிழினம் எங்காவது தனது கடந்துபாதையையும், அதன்வழியே தமிழினத்தின் நிலம் சுருங்கிச் செல்வதையும், இனம் அழிவடைவதையும் இன்றுவரை எந்தவொரு அரசியல்வாதியாவது சரியான புள்ளிவிபரங்களோடு ஒப்பிட்டு அறிவுசார் தளத்தில் உரையடியுள்ளார்களா? மக்களிடையே கருத்தியலாக முன்வைத்துள்ளார்களா? தமிழீழம் என்ற என்னக் கருவின் தோற்றுவாய்க்கான கரணியங்களை விளக்கி அறிவாசார் அல்லது புலமைசார் தளமொன்றை உருவாக்கி அதனை எந்தக்கட்சியும் சாராது மக்கள்சார்ந்து செயற்பட வைத்துள்ளார்களா? ஆனால், சிங்களம் இதனை உலக அளவில் முன்னெடுக்கிறது. நாம் ஐ.நாவின் வெளியே பெரும் தொகையில் நின்று ஆர்ப்பாட்டம் செய்ய, அவர்களோ ஐந்து பேரோடு போய் எமக்கு ஆப்படித்தவிட்டுப் போகிறார்கள். உலகின் முதன்மைச் சக்திகளின் நாடுகளில் தமது தூதுவர்களூடாகவும், சாதாரண முகவர்களூடாகவும் அவர்களது கொள்கைகளை அடிக்கடி பரப்புரைசெய்கிறார்கள். ஆனால் நாமோ தமிழரில்லாத நாடுண்டா(?) என்று நகருக்கொரு கோவிலுமாய், (சில இடங்களில் இரண்டு.. மூன்றென..) நான்கு கழங்களுமாய் கெத்துக் வினாவோடு செத்துமடிகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nochchi said:

சிங்களம் இதனை உலக அளவில் முன்னெடுக்கிறது.

அதற்கு நாமும் கைகொடுத்து ஊக்குவிக்கிறோம். நமது பிரச்சனை தீர வேண்டுமென்றால்; வேறுபாடுகளை களைந்து நாம் ஒன்றுபடவேண்டும், சிங்கள மக்கள் உண்மையை உணரவேண்டும். அவர்கள் வெகு விரைவில் உணர்வார்கள். ஆனால் ஒன்று சேர்வோம் என்பது முயற்கொம்பே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.