Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் இஸ்ரேலுக்கு விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   19 OCT, 2023 | 03:02 PM

image

பிரித்தானிய  பிரதமர் ரிஷி சுனக் இன்று வியாழக்கிழமை (19) இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த 7 ஆம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், இரு பகுதிகளிலும் தொடர்ந்து யுத்தம் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேச்சு வார்த்தை நடத்த அங்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக் சென்றுள்ளார்.

குறித்த சந்திபின் போது, இஸ்ரேலிலும் பாலஸ்தீனப் பகுதியிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கலை தெரிவிப்பதோடு, மோதல் அதிகரிப்பதற்கு எதிராக எச்சரிப்பார் என்று இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

"அனைத்திற்கும் மேலாக, இஸ்ரேலிய மக்களுடன் எனது ஒற்றுமையை வெளிப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். நீங்கள் சொல்லொணா,  பயங்கரவாதச் செயலுக்கு ஆளாகியுள்ளீர்கள். உங்களுடன் பிரித்தானியாவும் நானும்  நிற்கின்றோம் என்பதை வலியுறுத்துகிறேன் " என சுனக் டெல் அவிவ் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

சுனக் இஸ்ரேலுக்கு சென்ற பிறகு பிராந்திய தலைநகரங்களுக்குச் செல்லவிருந்தார்.

காசா பகுதியில் வைத்தியசாலை மீதான தாக்குதலில் பாலஸ்தீனியர்களின் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியமை இந்த பிராந்தியத்திலும் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள்  ஆபத்தான மோதல்களைத் தவிர்ப்பதற்கு ஒன்றுபடுவதற்கான  ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணமாக இருக்க வேண்டும். பிரிட்டன் "இந்த முயற்சியில் முன்னணியில் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

எகிப்தில் இருந்து காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், காஸாவில் சிக்கியுள்ள பிரித்தானிய பிரஜைகள் வெளியேறுவதற்கும் வழி வகுக்கவும் வலியுறுத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் மீதான தாக்குதலில் இருந்து குறைந்தது ஏழு பிரித்தானிய பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் குறைந்தது ஒன்பது பேர் இன்னும் காணவில்லை என்று சுனக்கின் செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை தெரிவித்த்துள்ளார்.

சுனாக்கின் வருகையுடன், கடந்த வாரம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்த பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் கிளெவர்லி, அடுத்த மூன்று நாட்களில் எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்குச் சென்று மோதலைப் பற்றி கலந்துரையாடி அமைதியான தீர்வைப் பெறுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/167270

  • கருத்துக்கள உறவுகள்

சோ பைடனோ, ரிசி சுனாக் எவருமே காசாவிற்குப் பயணிக்கவில்லை என்பது மட்டுமல்ல, உயிரிழந்த பொதுமக்களுக்கு சிறிய அனுதாபத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

இஸ்ரேலிற்கான பயணமூடாக அவர்கள் தெரிவிக்கும் செய்தி என்ன? 

லெபனானின் ஹிஸ்புல்லாவிற்கும், ஈரானுக்குமான எச்சரிக்கையா? 

உலக அரசியல் என்பது நாடுகளின் நலன்கள் மட்டுமே.

இந்த அடிப்படையில் எரிக் சொல்ஹெய்ம் கூறிய "விடுதலைப் புலிகளுக்கு உலக அரசியல் தெரியாது " என்பதை ஊன்று கவனிக்க வேண்டும். 

நீதி, நியாயம், அறம், ம....ர், மண்ணாங்கட்டி எல்லாமே எங்களை நாங்கள் ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காகக் கூறுவதுதானா? 

☹️

5 minutes ago, Kapithan said:

சோ பைடனோ, ரிசி சுனாக் எவருமே காசாவிற்குப் பயணிக்கவில்லை என்பது மட்டுமல்ல, உயிரிழந்த பொதுமக்களுக்கு சிறிய அனுதாபத்தைக் கூடத் தெரிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

 

 

☹️

மேற்குலகின் இரட்டை வேடம் என்பது ஒரு காரணமாயினும், இவ் இரு நாடுகள் உட்பட பல நாடுகளால் பயங்கரவாதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் ஆளும் நாட்டுக்கு இவர்கள் செல்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

மேற்குலகின் இரட்டை வேடம் என்பது ஒரு காரணமாயினும், இவ் இரு நாடுகள் உட்பட பல நாடுகளால் பயங்கரவாதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாத இயக்கமான ஹமாஸ் ஆளும் நாட்டுக்கு இவர்கள் செல்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?

செல்ல வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் பொதுமக்களின் இழப்பிற்கு அனுதாபமாவது தெரிவிக்கலாமல்லவா? 

அறம் ? ☹️

2 minutes ago, Kapithan said:

 

அறம் ? ☹️

அப்படி ஒன்று இவ்வுலகில் இருந்தால், நானும் நீங்களும் சுதந்திர தமிழ் ஈழத்தில் இருந்து உரையாடிக்கொண்டு இருந்திருப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

அப்படி ஒன்று இவ்வுலகில் இருந்தால், நானும் நீங்களும் சுதந்திர தமிழ் ஈழத்தில் இருந்து உரையாடிக்கொண்டு இருந்திருப்போம்

உண்மைதான் 😥

அதனால்தான் தற்போது நான்  உலகின் எந்தவொரு அழிவையிட்டும் கவலைப்படுவதில்லை, அக்கறை கொள்வதில்லை.

Edited by Kapithan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் வெற்றிபெறவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் - இஸ்ரேலிய பிரதமரிடம் ரிசி சுனாக்

19 OCT, 2023 | 04:46 PM
image

இஸ்ரேல் வெற்றிபெறவேண்டும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவிடம் பிரிட்டிஸ் பிரதமர் ரிசி சுனாக் தெரிவித்துள்ளார்

இஸ்ரேலிற்கான விஜயத்தின் போது இஸ்ரேலிய பிரதமரை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் இருள்மயமான தருணங்களில் நான் உங்களுடன் இங்கே நிற்பது குறித்து பெருமிதம் கொள்கின்றேன் என ரிசிசுனாக் தெரிவித்துள்ளார்.

நாங்கள் உங்களிற்கு ஆதரவாகயிருப்போம் நாங்கள் உங்கள் மக்களிற்கு ஆதரவாகயிருப்போம் நீங்கள் வெற்றிபெறவேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/167297

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று பைடன் இன்று ரிசி சுனாக் என்று வல்லரசுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு அடுத்தடுத்து போன காரணம் என்ன?நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் நீங்கள் பாலஸ்தீனத்தை அழித்து சுடுகாடாக்குங்கள் என்றுதான பொருள். உண்மையில் இவர்கள் என்ன செய்ய வேண்டும். யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் பொதுவான நிலையில் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் இரண்டு தரப்பும் அந்தத்தீர்வை மானசீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுவே சரியான முறை அதை விட்டு ஒருபக்க சார்பாக நின்று கொண்டு ஹமாஸ் செய்யும் பயங்கரவாத  செயல்களுக்காக ஒட்டு மொத்த பாஸ்தீனர்களையும் எதற்குத் தண்டிக்க வேண்டும்.இஸ் ரேலும் அறம் மீறிய  பயங்கரவாத தாக்குதல்களைச் செய்கிறது என்பதை ஏன் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.வைத்தியசாலையில் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது பழியைப் போடுகிறார்கள். அதற்கு மேற்கு ஊடகங்களும் ஒத்துதுகின்றன. பிபிசி கொஞ்சம் நடுநிலத்தன்மையோடு நடந்து கொள்வதைக் கூட மற்றைய ஊடகங்கள் கேள்விகேட்கின்றன. முள்ளிவாய்க்காலில் எம்மினம் அழியும் போது இந்த நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்

25ஆம் புலிகேசியின் நிலைமையை எண்ணினால்தான் பாவமாய் இருக்கு 
காமாஸ் ஒரு மாதம் தாக்கு பிடித்தால் 
உலகம் புலிகேசியை மறந்தே விடும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் செய்த கொலைகளை பார்க்கும்போது எவருமே பலஸ்தீன (ஹமாஸ்) மக்களுக்காக அனுதாப பட மாடடார்கள். உயிரோடு எரிக்கும் காட்சியை பார்த்தபோது ISIS பயங்கரவாதிகளின் செயலைவிட மிக கோரமாக இருந்தது. எனவே மேட்குலக நாடுகளின் உதவி பயங்கரவாதிகளை அழிக்கும்வரை இஸ்ரேலுக்கு கிடைக்கும். கிடைக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Maruthankerny said:

25ஆம் புலிகேசியின் நிலைமையை எண்ணினால்தான் பாவமாய் இருக்கு 
காமாஸ் ஒரு மாதம் தாக்கு பிடித்தால் 
உலகம் புலிகேசியை மறந்தே விடும். 

இங்கே நீங்கள் செலன்ஸ்கியை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன்.

மிக குரூரமான கொலைகளை செய்த ஹமாசை, தனது செயல்களால் பலஸ்தீன மக்களை ஆபத்தில் தள்ளிய ஹமாசை, இஸ்லாமிக் ஜிகாதை நீங்கள் ஒரு போதும் இப்படி விமர்சித்ததில்லை.

ஏன் நெத்தன்யாகுவை கூட.

ஆனால் தன் நாட்டின் சுய உரிமைக்காக மேற்கோடு சேர்ந்து ரஸ்யவை எதிர்த்த செலன்ஸ்கி மீது மட்டும் வன்மம்.

ஏன்?

நீங்கள் வெறுக்கும் (அதே சமயம் வாழும், சுரண்டும்) மேற்கின் சமனான எதிரி என நீங்கள் விம்பம் கட்டி வைத்திருந்த புட்லரின் பர்னிச்சரை சுக்கல் சுக்கலாக உடைத்துவிட்டார் என்பதாலா?🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புலவர் said:

நேற்று பைடன் இன்று ரிசி சுனாக் என்று வல்லரசுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு அடுத்தடுத்து போன காரணம் என்ன?நாங்கள் உங்களுடன் நிற்கிறோம் நீங்கள் பாலஸ்தீனத்தை அழித்து சுடுகாடாக்குங்கள் என்றுதான பொருள். உண்மையில் இவர்கள் என்ன செய்ய வேண்டும். யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் பொதுவான நிலையில் இரண்டு தேசங்கள் என்ற அடிப்படையில் தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் இரண்டு தரப்பும் அந்தத்தீர்வை மானசீகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் இதுவே சரியான முறை அதை விட்டு ஒருபக்க சார்பாக நின்று கொண்டு ஹமாஸ் செய்யும் பயங்கரவாத  செயல்களுக்காக ஒட்டு மொத்த பாஸ்தீனர்களையும் எதற்குத் தண்டிக்க வேண்டும்.இஸ் ரேலும் அறம் மீறிய  பயங்கரவாத தாக்குதல்களைச் செய்கிறது என்பதை ஏன் திட்டமிட்டு மறைக்கிறார்கள்.வைத்தியசாலையில் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது பழியைப் போடுகிறார்கள். அதற்கு மேற்கு ஊடகங்களும் ஒத்துதுகின்றன. பிபிசி கொஞ்சம் நடுநிலத்தன்மையோடு நடந்து கொள்வதைக் கூட மற்றைய ஊடகங்கள் கேள்விகேட்கின்றன. முள்ளிவாய்க்காலில் எம்மினம் அழியும் போது இந்த நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்களா? 

நான் யாழில் எப்போதும் எழுதியதுதான்.

சர்வதேச சட்டம், அரசியல் என்பது நாடுகள் தம் நலனுக்கு ஏற்ப அமைப்பதே. இதில் பலமே வெல்லும்.

உள்ளூர் அரசியலில் எதிர்பார்க்கும் நீதி, நேர்மை, நியாயம் இதை எல்லாம் சர்வதேச வெளியில் எதிர்பார்ப்பது மடமை.

ஒன்றில் வல்லானாக இருக்க வேண்டும். அல்லது வல்லானின் அல்லக்கையாகவாவது இருக்க வேண்டும்.

இஸ்ரேலுக்கு ஒன்று எண்டதும்…பைடனே ஓடுகிறார் (பைடன் -ஆடு, ரிசி வெறும் பிழுக்கை - ஆட்டுக்கு பின்னால் வந்தே தீரும்🤣).

பலஸ்தீனுக்கு ஆபத்து என்றதும் கொலையில் கூட இறங்கி விட்டார்கள் உலக முஸ்லிம்கள்.

நமக்கு? இத்தனைக்கும் பிறகும் இன்றும் ஏன் என்று கேட்க ஒரு நாதியில்லை.

இஸ்ரேலை போல இல்லாவிடினும், 26ம் புலிகேசியாகவாவது எப்படி வருவது என நாம் யோசிக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.