Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காஸா மக்கள் முகங்கொடுத்துவரும் துயரங்கள் தொடர்பில் மதத்தலைவர்களிடம் பாலஸ்தீன தூதுவர் கண்ணீர்மல்க எடுத்துரைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 OCT, 2023 | 06:58 PM
image

(நா.தனுஜா)

பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்று கூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்து வரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அந்நாடுகளில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி அந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டையும், அவர்களுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தி இலங்கையிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அரசியல் தலைவர்கள் பலரும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று திங்கட்கிழமை (23) சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்களும், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட்டை கூட்டாகச் சந்தித்து, பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பலஸ்தீன தூதுவருடன் நேற்றைய தினம் பி.ப 2.00 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் ரொட்ரிகோ இத்தமல்கொட, மிலாகிரிய சென் போல்ஸ் ஆலய அருட்தந்தை ஆன்ட்ரூ, மருதானை சி.எஸ்.ஆர் நடுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் மற்றும் அருட்சகோதரி ரசிகா உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும், மௌலவி பிருதௌஸ் உள்ளிட்ட இஸ்லாமிய மற்றும் பௌத்த மதகுருமாரும், லக்ஷ்மன் குணசேகர, ஹனா இப்ராஹிம், ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், மரிஸா டி சில்வா உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பின்போது பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லா செயிட் மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் கண்ணீர் மல்க காஸாவின் தற்போதைய நிலைவரம் குறித்து விபரித்தார். இஸ்ரேலுக்கு உதவுவதற்கு முன்வந்த பலஸ்தீனம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டு வருவதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதே போன்று தற்போது இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துவரும் நிலையில், அதனைச் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தூதுவர், மிகமோசமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைப் பிரஜைகளின் உயிரை அச்சுறுத்தலில் தள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போது மேற்குலக நாடுகள் செயற்படும் விதம் குறித்து விளக்கமளித்த அவர், மிகவும் தனித்துவம் வாய்ந்த பலஸ்தீன சமூகத்தின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தும் இப்போது அழிக்கப்பட்டுவருவதாகவும், இது 'இனப்படுகொலை' எனவும் சுட்டிக்காட்டினார்.

அவற்றை செவிமடுத்த மதத்தலைவர்கள், இஸ்ரேலின் செயற்பாட்டைக் கண்டித்ததுடன் மூன்று தசாப்தகால சிவில் யுத்தத்துக்கு முகங்கொடுத்த நாடு என்ற ரீதியில் அதன் தாக்கங்களை தாம் நன்கறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

https://www.virakesari.lk/article/167602

  • கருத்துக்கள உறவுகள்

பலஸ்தீனியர்களையும், எங்கள் மக்களது அழிவுகளையும் நாம்  ஒப்பிட்டபோது  உங்களுக்கு அழுகை வந்ததா?

இல்லையே, 

கோபம்தானே உங்களுக்கு வந்தது? 

உங்களுக்கு வந்தால் இரத்தம், எங்களுக்கு வந்தால் தக்காளிச் சட்னியா? 

☹️

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினப் படுகொலைக்கு இஸ்ரேல் உதவியது. பாலஸ்தீனம் அதற்குப் பாரட்டியது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

தமிழினப் படுகொலைக்கு இஸ்ரேல் உதவியது. பாலஸ்தீனம் அதற்குப் பாரட்டியது.

பாராட்டியது மட்டுமல்ல கூப்பிட்டு அவார்டும் கொடுத்து, ரோட்டிற்கு பெயர் வைத்தும் புளங்காகிதமடைந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

பாராட்டியது மட்டுமல்ல கூப்பிட்டு அவார்டும் கொடுத்து, ரோட்டிற்கு பெயர் வைத்தும் புளங்காகிதமடைந்தது 

இப்போது அழுது என்ன பயன். இந்த பாலஸ்தீன அரசிடம்தான் நிர்வாகம் இருந்தது. பயங்கரவாதிகளிடம் காஸாவை கொடுத்து விட்டு இப்போது இஸ்ரவேலை குற்றம் சாட்டுகிறார்கள். இவர்கள் சரியாக இருந்திருந்தால் இப்படி எல்லாம் நடக்க சந்தர்ப்பமே இல்லை. 

10 hours ago, ஏராளன் said:
23 OCT, 2023 | 06:58 PM
image

(நா.தனுஜா)

பலஸ்தீன மக்களுடனான தமது ஆதரவை வெளிப்படுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை (22)கொழும்பிலுள்ள பலஸ்தீன தூதரகத்தில் ஒன்று கூடிய பல்மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட், காஸா மக்கள் முகங்கொடுத்து வரும் துயரங்கள் குறித்து அவர்களிடம் கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

ஹமாஸ் அமைப்பினால் கடந்த 7 ஆம் திகதி தென் இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தீவிரமடைந்துள்ள இஸ்ரேல் - ஹமாஸ் மோதலின் நீட்சியாக கடந்த சில வாரங்களாக காஸாவில் இஸ்ரேலிய படையினர் நடத்திவரும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பெருமளவானோர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற மேற்குலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வரும் நிலையில், அந்நாடுகளில் பெருந்திரளான மக்கள் ஒன்று கூடி அந்த அரசாங்கங்களுக்கு எதிராகவும், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களாக பலஸ்தீன மக்களுடனான ஒருமைப்பாட்டையும், அவர்களுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தி இலங்கையிலும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன் அரசியல் தலைவர்கள் பலரும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று திங்கட்கிழமை (23) சகல மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்களும், ஊடகவியலாளர்கள், மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா செயிட்டை கூட்டாகச் சந்தித்து, பலஸ்தீன மக்களுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பலஸ்தீன தூதுவருடன் நேற்றைய தினம் பி.ப 2.00 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் கொழும்பு ஆயர் ரொட்ரிகோ இத்தமல்கொட, மிலாகிரிய சென் போல்ஸ் ஆலய அருட்தந்தை ஆன்ட்ரூ, மருதானை சி.எஸ்.ஆர் நடுநிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் மற்றும் அருட்சகோதரி ரசிகா உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும், மௌலவி பிருதௌஸ் உள்ளிட்ட இஸ்லாமிய மற்றும் பௌத்த மதகுருமாரும், லக்ஷ்மன் குணசேகர, ஹனா இப்ராஹிம், ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், மரிஸா டி சில்வா உள்ளிட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இச்சந்திப்பின்போது பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லா செயிட் மிகுந்த உணர்ச்சிப்பெருக்குடன் கண்ணீர் மல்க காஸாவின் தற்போதைய நிலைவரம் குறித்து விபரித்தார். இஸ்ரேலுக்கு உதவுவதற்கு முன்வந்த பலஸ்தீனம் தற்போது முற்றாக அழிக்கப்பட்டு வருவதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் உணவு, நீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியத்தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதே போன்று தற்போது இலங்கை தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பிவைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துவரும் நிலையில், அதனைச் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்ட தூதுவர், மிகமோசமான யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தற்போதைய சூழ்நிலையில் இலங்கைப் பிரஜைகளின் உயிரை அச்சுறுத்தலில் தள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் தற்போது மேற்குலக நாடுகள் செயற்படும் விதம் குறித்து விளக்கமளித்த அவர், மிகவும் தனித்துவம் வாய்ந்த பலஸ்தீன சமூகத்தின் கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்ட அனைத்தும் இப்போது அழிக்கப்பட்டுவருவதாகவும், இது 'இனப்படுகொலை' எனவும் சுட்டிக்காட்டினார்.

அவற்றை செவிமடுத்த மதத்தலைவர்கள், இஸ்ரேலின் செயற்பாட்டைக் கண்டித்ததுடன் மூன்று தசாப்தகால சிவில் யுத்தத்துக்கு முகங்கொடுத்த நாடு என்ற ரீதியில் அதன் தாக்கங்களை தாம் நன்கறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

https://www.virakesari.lk/article/167602

மத தலைவர்கள்? யார் அந்த மத தலைவர்கள்? இலங்கையில் வெட்டி புடுங்காததையா இப்போது பாலஸ்தீனத்தில் செய்யப்போகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

மத தலைவர்கள்? யார் அந்த மத தலைவர்கள்? இலங்கையில் வெட்டி புடுங்காததையா இப்போது பாலஸ்தீனத்தில் செய்யப்போகிறார்கள். 

அருமையாக சொன்னீர்கள். எல்லாம் துவேசம் பிடித்த சுயநல கூட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.