Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் வெற்றி - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்துமூலம் உத்தரவாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மேன்முறையீட்டு நீதிமன்ற ஷண்முகா ஹபாயா வழக்கு: பாடசாலைகளில்  ஹபாயா ஆடை அணியத் தடையில்லை என பிரதிவாதிகள் எழுத்து மூலம் ஏற்பு.

 

ஷண்முகா ஹபாயா விவகாரத்தில் ஆசிரியை பஹ்மிதா றமீஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த (Writ) வழக்கு (07.11.2023) முடிவிற்கு வந்தது.

தனது கலாச்சார ஆடையோடு பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என ஆசிரியை பஹ்மிதா அவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் Writ வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதேநேரம் தனது அரச கடமையைப் பொறுப்பேற்கச் சென்ற வேளை அதனைத் தடுத்தமைக்கு எதிராக ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் லிங்கேஸ்வரி ரவிராஜனுக்கு எதிராக குற்றவியல் வழக்கொன்றை திருகோணமலை நீதவான் நீதிமன்றிலும் தாக்கல் செய்திருந்தார்.

பாடசாலை அதிபர் சமூகம் ஷண்முகா இந்து மகளிர் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து வரத் தடையில்லை என்ற உத்தரவாதத்தைத் தந்ததைத் தொடர்ந்து அதிபருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சமரச அடிப்படையில் முடிவிற்கு வந்ததிருந்தது. எனினும் நீதவான் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதம் அப்பாடசாலையினை மாத்திரமே கட்டுப்படுத்தும்.

 

ஆனால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பிரதிவாதிகளான கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், ஷண்முகா அதிபர், திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர், அரசைப் பிரதி நிதித்துவப்படுத்திய சட்டமா அதிபர் திணைக்களம் என்பன பாடசாலைகளில் ஹபாயா அணிந்து செல்வதில் எந்தத் தடையும் இல்லை என உத்தரவாத்தினை எழுத்து மூலம் தந்ததை அடுத்து இவ்வழக்கு முடிவிற்கு வந்தது.

 

இந்த முடிவின் மூலம் இலங்கையில் இருக்கும் எப்பாடசாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஹபாயா அணிந்து செல்வதற்கு தடையில்லை என்பது குறிப்பிடத்தக்க வெற்றியாகும். 

 

சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொறேயா, குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றாஸி முஹம்மத் மற்றும் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் ஆகியோர் இன்று ஆஜராகி இருந்தனர்.

 

குரல்கள் இயக்கம் (Voices Movement) பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாகஆரம்பம் முதல் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.jaffnamuslim.com/2023/11/blog-post_500.html

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கு நாடுகளில் மூடி செல்வதட்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. சில எழுதலாம் சில எழுத முடியாது. இவர்கள் மூடிக்கொண்டு செல்வதட்கு ஏதாவது காரணம் உண்டோ? யாராவது தெரிந்தால் பகிரவும். 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Cruso said:

மத்திய கிழக்கு நாடுகளில் மூடி செல்வதட்கு ஆயிரம் காரணங்கள் உண்டு. சில எழுதலாம் சில எழுத முடியாது. இவர்கள் மூடிக்கொண்டு செல்வதட்கு ஏதாவது காரணம் உண்டோ? யாராவது தெரிந்தால் பகிரவும். 

ஜயர்மார் வேட்டி கட்டுவதும், பாதிரியார்கள் வெள்ளை அங்கி அணிவதும், பிக்குகள் காவி அணிவதும், எப்படி அவர் அவர்கள் சுதந்திரமோ, அதே மாதிரி உடை அணிவது அவர் அவர்கள் விருப்பமே, அதில் தலையிட நாம் யார்

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கெல்லாம் சண்டை போட்டுப் பிரயோசனம் இல்லை. மாணவர்கள் இப்படியான சபைக்குதவாத உடையணிந்து வரும் ஆசிரியர்களைப் புறக்கணித்தால் பிரச்சனை அது தன்பாட்டிலேயே தீர்ந்து போகும்,. 

😏

அதுசரி, 

கொழும்பான் எப்போது பார்த்தாலும் இடக்கு மடக்கான விடயங்களையே இங்கே  இணைக்கிறாரே என்ன விடயம்? 

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Cruso said:

 இவர்கள் மூடிக்கொண்டு செல்வதட்கு ஏதாவது காரணம் உண்டோ? யாராவது தெரிந்தால் பகிரவும். 

மத்திய கிழக்கில் பாலைவன புழுதி காற்றிலிருந்து தங்களை பாதுகத்து கொள்வதற்காக பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தலைமயிர் தலை முகம் உடல் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு திரிந்தனர். பின்பு அதை முஸ்லிம் மதவாதிகள் பெண்களை ஒடுக்குவதற்காக பெண்கள் மட்டுமே மூடிக்கொண்டு திரிவது கட்டயாயம்  மதத்தின் உத்தரவு ஆக்கிவிட்டனர். அதை இலங்கை இந்தியாவில் உள்ளவர்கள் கடுமையாக கடைபிடிக்கிறார்கள். ஆனால் அங்கே முஸ்லிம் ஆண்கள் நாகரிகமான உடை அணிவார்களாம், முதலில் பார்ப்பவர்கள் அவர் தமிளோ அல்லது சிங்கலவரோ என்று தான் நினைப்பார்களாம். பின்பு அவர் காதலி அல்லது மனைவியை மூடி வைத்திருப்பதை காணும் போது தான் தெரியவரும் அவர் ஒரு முஸ்லிம் என்பது. இந்தியாவில் முஸ்லிம் மயமாக்கலுக்காக கல்லூரிகளில் யூனிபோமுக்கு பதிலாக ஹிஜாப் அணிந்து வரவேண்டும் என்கின்றனர்
மதகுருமார்கள் அணிகிறார்களே பாதிரியார்கள் வெள்ளை அங்கி அணிவதையும் அய்யர் வேட்டி அணிவதையும் பிக்குகள் காவி அணிவதையும் பார்த்து ஆகவே முஸ்லிம் பெண்களும் கட்டாயம் ஹிஜாப் அணிய தான் வேண்டும் என்று யாருமே குழம்பி கொள்ள வேண்டியது இல்லை. சண்முகா இந்து கல்லூரிக்கு பாடம்சொல்லிதர வந்த அவர் ஒரு ரீச்சர்.முஸ்லிம் மதம் போதிக்க வந்த மதகுரு அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் நான் எதிபார்த்தது....திருகோணமலையிலை எங்கடை ஒற்றுமை இன்மையால் வெற்றி கிடைத்திட்டுது...ஒரு சிங்கள ஏரியாவில் வாலாட்டுங்கோ பார்ப்பம்...ஜனாசா எரிப்புக்கு எவ்வளவு துள்ளு துள்ளினியள்..   ஏன்ன கண்டியள்... உங்கடை வழ்க்குப் பேசவே சுமன்திரந்தான் வேணும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மத்திய கிழக்கில் பாலைவன புழுதி காற்றிலிருந்து தங்களை பாதுகத்து கொள்வதற்காக பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தலைமயிர் தலை முகம் உடல் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு திரிந்தனர். பின்பு அதை முஸ்லிம் மதவாதிகள் பெண்களை ஒடுக்குவதற்காக பெண்கள் மட்டுமே மூடிக்கொண்டு திரிவது கட்டயாயம்  மதத்தின் உத்தரவு ஆக்கிவிட்டனர். அதை இலங்கை இந்தியாவில் உள்ளவர்கள் கடுமையாக கடைபிடிக்கிறார்கள். ஆனால் அங்கே முஸ்லிம் ஆண்கள் நாகரிகமான உடை அணிவார்களாம், முதலில் பார்ப்பவர்கள் அவர் தமிளோ அல்லது சிங்கலவரோ என்று தான் நினைப்பார்களாம். பின்பு அவர் காதலி அல்லது மனைவியை மூடி வைத்திருப்பதை காணும் போது தான் தெரியவரும் அவர் ஒரு முஸ்லிம் என்பது. இந்தியாவில் முஸ்லிம் மயமாக்கலுக்காக கல்லூரிகளில் யூனிபோமுக்கு பதிலாக ஹிஜாப் அணிந்து வரவேண்டும் என்கின்றனர்
மதகுருமார்கள் அணிகிறார்களே பாதிரியார்கள் வெள்ளை அங்கி அணிவதையும் அய்யர் வேட்டி அணிவதையும் பிக்குகள் காவி அணிவதையும் பார்த்து ஆகவே முஸ்லிம் பெண்களும் கட்டாயம் ஹிஜாப் அணிய தான் வேண்டும் என்று யாருமே குழம்பி கொள்ள வேண்டியது இல்லை. சண்முகா இந்து கல்லூரிக்கு பாடம்சொல்லிதர வந்த அவர் ஒரு ரீச்சர்.முஸ்லிம் மதம் போதிக்க வந்த மதகுரு அல்ல.

 

ஒரு 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் சாரி உடுத்தி முக்காடு போடுவார்கள். இப்போது மத தீவிரவாதம், வஹாபிகள் ஆதிக்கம், பணம் என்பவைதான் இதட்கு முக்கிய காரணம்.

மத்திய கிழக்கு நாடுகளில் அவர்கள் உடம்பு முழுவதும் மூடுவதட்கு இன்னுமோர் முக்கியகாரணமும் உண்டு. அங்கு ஒவ்வொருத்தனுக்கும் மூன்று அல்லது நான்கு மனைவிகள். இன்னும்வேலைக்காரிகள் வேறு. இலங்கை, இந்திய  பெண்கள் இல்லை. தாய்லாந்து, நேபாளம், இந்தோனேசிய போன்ற நாடுகளில் இருந்து வருபவர்கள் . இதனால் அங்கு குடும்ப பிரச்சினைகள், அவர்களால் எல்லா பெண்களையும் சமாளிக்க முடியாது . எனவே அங்கு எல்லாவற்றையும் மூடிக்கொண்டு விரும்பிய இடத்துக்கு போவதட்கு நல்ல வசதி.

நீங்கள் மேலே கூறிய காரணங்களுடன் இதுவும் முக்கியமான ஒன்று. இதையெல்லாம் விளங்காமல் இங்குள்ளவர்கள் எல்லாவற்றையும் மூடிக்கொண்டு திரியுதுகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.