Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மன்னாரில் காணிகளை விற்பனை செய்யாதவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

மன்னாரில் காணிகளை விற்பனை செய்யாதவர்களுக்கு கொலை அச்சுறுத்தல்!

மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது  கொலை  அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தைதானியம் சாண்ட்’ நிறுவனம் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 4000 துளைகளுக்கு மேல் இட்டு கனிய மணல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது மணல் அகழ்வுக்கான அனுமதியை கோரியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம்  இது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக இலங்கையில் சுமார் 18 திணைக்களங்களை சேர்ந்த அதிகாரிகள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கொண்ணையன் குடியிருப்பு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்நிலையில் குறித்த விடயத்தை அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஆய்வுகளுக்கு அனுமதி வழங்க மறுத்ததுடன் வீதி தடைகளையும் ஏற்படுத்தி மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது என்று கோஷம் எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து மக்களின் தொடர் எதிர்ப்பின் காரணமாக வருகை தந்த குழுவினர் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியதுடன் மன்னார் மாவட்ட செயலகத்தில் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இதே வேளை வன்னியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் குறித்த மணல் அகழ்வு மேற்கொள்ள உள்ள இலங்கைக்கான பிரதி நிதியிடம் பாரிய அளவு லஞ்சம் கோரியதாகவும், அதே நேரம் குறித்த அமைச்சரின் உறவினரான முஹமட் அம்மானி எனப்படும் நபர் ஒருவர் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து குறித்த நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் மக்கள்  ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

அத்துடன்  காணி விற்பனை செய்ய மறுப்பவர்களை ”வெள்ளை வானில் கடத்துவோம் , கொலை செய்வோம் ”என அச்சுறுத்தி காணி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அகழ்வுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதோடு, முன்னாள் அமைச்சரின் பின் புலத்தில் தற்போது மணல் அகழ்வுக்கான உயர்மட்ட அனுமதிகளை பெறுவதற்கான செயல்பாடுகள் இடம் பெறுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

https://athavannews.com/2023/1358024

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தைதானியம் சாண்ட்’ நிறுவனம் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 4000 துளைகளுக்கு மேல் இட்டு கனிய மணல் ஆய்வுகளை மேற்கொண்டு தற்போது மணல் அகழ்வுக்கான அனுமதியை கோரியுள்ளது.

மூழ்கப் போகும் கப்பலில் இருந்து அகப்பட்டதை சுருட்டத் தொடங்கிவிட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

குரூசோ மேடைக்கு அழைக்கப்படுகிறார்.🙂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

குரூசோ மேடைக்கு அழைக்கப்படுகிறார்.🙂

அவர் இஸ்ரேலில் ரொம்பவும் பிசியாக நிற்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஈழப்பிரியன் said:

மூழ்கப் போகும் கப்பலில் இருந்து அகப்பட்டதை சுருட்டத் தொடங்கிவிட்டார்களா?

இதைதான் சொல்வது மோட்டு சிங்களவர் என்று தானும் வாழாமல் பிறரையும் வாழவிடாது தீவை நசாமாக்குபவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இதே வேளை வன்னியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் குறித்த மணல் அகழ்வு மேற்கொள்ள உள்ள இலங்கைக்கான பிரதி நிதியிடம் பாரிய அளவு லஞ்சம் கோரியதாகவும், அதே நேரம் குறித்த அமைச்சரின் உறவினரான முஹமட் அம்மானி எனப்படும் நபர் ஒருவர் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து குறித்த நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் மக்கள்  ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

 

வந்திட்டாரு நம்ம ஆளூ.... சத்தம் போடாமல் பூனையாய் இருந்தவர்...தமிழர் பகுதி என்றவுடன் வந்திட்டர்....அவரு சாத்தர்தானே..

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

குரூசோ மேடைக்கு அழைக்கப்படுகிறார்.🙂

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மௌனம் காத்து வருவதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அங்கு மலைபோல இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் என்ன ஒரு எலும்பு துண்டை போடடாள் எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இவர்களுக்காக வக்காலத்து வாங்கவும் இங்கு சிலர் இருக்கிறார்கள்.

இவர்களுடன் சில குருமாருக்கும் எதாவது கொடுத்தால் அவர்களும் அடங்கி விடுவார்கள். என்ன செய்வது மக்கள்தான் போராட வேண்டி இருக்கிறது. மக்களின் வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கிறது.

முஸ்லிம்கள் எப்படி வியாபாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள். எல்லாம் லஞ்சமும் ஊழலும்தான். அப்படிதான் இங்கும். கேடடால் சொர்க்கத்துக்கு போவதாக சொல்லுவார்கள். முன்னர் மக்பூல் அரச அதிபராக இருந்த பொது அரச காணிகள் எல்லாம் முஸ்லிகளின் கைகளுக்கு போனது. கடைசியாக மஃபூளுக்கு மண்டையில் போடடார்கள்.

இந்த கையாலாகாத கடப்புளி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கும் வரைக்கும் அங்கு மக்கள் இப்படியான வேதனைகளை அபூபவிக்கத்தான் வேண்டி வரும். இருந்தாலும் என்ன மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான். 

1 hour ago, alvayan said:

இதே வேளை வன்னியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ஒருவர் குறித்த மணல் அகழ்வு மேற்கொள்ள உள்ள இலங்கைக்கான பிரதி நிதியிடம் பாரிய அளவு லஞ்சம் கோரியதாகவும், அதே நேரம் குறித்த அமைச்சரின் உறவினரான முஹமட் அம்மானி எனப்படும் நபர் ஒருவர் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து குறித்த நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதாகவும் மக்கள்  ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தனர்.

 

வந்திட்டாரு நம்ம ஆளூ.... சத்தம் போடாமல் பூனையாய் இருந்தவர்...தமிழர் பகுதி என்றவுடன் வந்திட்டர்....அவரு சாத்தர்தானே..

முன்னாள் அமைச்சரும் , தற்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் என்று இருக்கிறது. சத்தார் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் இல்லையே? 

ரிசார்ட் பதியுதீன் பெரிதாக ஈடுபட சந்தர்ப்பமில்லை. இருந்தாலும் பணத்துக்காக எதுவும் செய்யும் கூடடம். 

12 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் இஸ்ரேலில் ரொம்பவும் பிசியாக நிற்கிறார்.

எனக்கு 24 மணி நேரமும் இங்கு மெனக்கெட முடியாது பிரியன். இருந்தாலும் ஈழத்து செய்திகளைப்பார்த்துவிட்டுதான் இஸ்ரேல் செய்திகளுக்கு போவேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.