Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்று புதிய சாதனை 190 புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி மாணவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்று புதிய சாதனை 190 புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி மாணவன்

[23 - September - 2007] [Font Size - A - A - A]

-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெறப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறை- ஹொரண தக்சிலா கல்லூரி மாணவன் சாகி பசுரு வீரக்கோன் என்ற மாணவனே 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதேநேரம் கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழவரன் தமிழ் மொழி மூலத்தில் பரீட்சைக்குத் தோற்றி அகில இலங்கை ரீதியாக 190 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சிங்கள மொழி மூலத்தில் பரீட்சைக்குத் தோற்றிய இரு மாணவர்கள் முறையே 196 புள்ளிகளைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.

ஹன்வெல்ல ஜோன் பொஸ்கோ, காலி வத்துகெதர பாடசாலை மாணவர்களே இவ்வாறு இரண்டாமிடத்தை அகில இலங்கை ரீதியாக பெற்றுள்ளதுடன் திவுலப்பிட்டிய, ஹொரகஸ்முல்ல பாடசாலை மாணவன் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளார்.

இதேவேளை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோக பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

பரீட்சை முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளை இன்று ஞாயிற்றுக்கிழமை பரீட்சைகள் திணைக்களத்தில் அதிபர்கள் பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கும் இன்றே பரீட்சை முடிவுகள் தபாலில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இம்முறை பரீட்சைக்கு நாடு பூராகவுமிருந்து 2 இலட்சத்து 93 ஆயிரத்து 937 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்களில் 70 ஆயிரத்து 209 மாணவர்கள் தமிழ்மொழியில் பரீட்சைக்கு தோற்றியதும் குறிப்பிடத்தக்கது.

http://www.thinakkural.com/news/2007/9/23/...s_page36684.htm

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு வீச்சு பீதிக்கு மத்தியில் குப்பி விளக்கில் கற்று சாதனை படைத்த மாணவன் ஈழமாறன்

*பொறியியலாளராவது சிறுவனின் இலட்சியம்

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

மோசமான பொருளாதாரத் தடைக்கும் தொடர்ந்து இடம்பெறும் விமானக் குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும் தனியார் டியூசன் வகுப்புக்குச் செல்லாமலும் குப்பி விளக்கில் கற்றும் பொறியியலாளராக வரவேண்டுமென இலட்சியக் கனவினையும் சுமந்தவாறு ஐந்தாம்தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தமிழ்மொழியில் தோற்றி அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்துள்ளார் திருமாறன் ஈழமாறன்.

கிளிநொச்சியிலிருந்து நேற்று திங்கட்கிழமை தொலைபேசி மூலமாக தினக்குரலுடன் அந்தச் சிறுவன் உரையாடினார்.

புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியாகியது. இதனடிப்படையில் கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் ஈழமாறன் 190 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு;

"இப்பரீட்சையில் எனக்கு கூடிய புள்ளிகள் கிடைத்தமை குறித்து முதலில் அப்பா கூறினார். நான் மிகுந்த சந்தோஷம் அடைந்தேன். எந்தவொரு டியூசனுக்கும் நான் செல்லவில்லை. எனது இச்சாதனைக்கு பெற்றோர், ஆசிரியர் மற்றும் அதிபரே காரணம்.

விமானத் தாக்குதலுக்கு மத்தியிலேயே பரீட்சைக்கு தோற்றினேன். பாடசாலையில் கல்வி கற்கும் சமயம் விமானத்தாக்குதல் நடைபெற்றால் பங்கருக்குள் ஒளிந்து கொள்வோம்.

எனது எதிர்கால இலட்சியம் பொறியியலாளராக வரவேண்டுமென்பதேயாகும்" என்றார்.

கல்லூரி அதிபர்

மாணவனின் இச்சாதனை குறித்து திரேசா கல்லூரி பாடசாலை அதிபர் திருமதி தனபாலசிங்கம் கூறுகையில்;

"எங்கள் பாடசாலையில் 715 மாணவர்கள் கற்கின்றனர். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். போதிய தளபாடங்களும் கற்றல் உபகரணங்களும் எம்மிடமில்லை. விஞ்ஞான ஆய்வுகூடம், நூல் நிலையங்களும் எங்கள் பாடசாலையில் இல்லை. சாதனை படைத்த ஈழமாறன்கூட மண் நிலத்தில், கொட்டில் வகுப்பிலேயே பயின்றார்.

கிளிநொச்சி - திருநகரில் வசிக்கும் இவர்களது குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர். அப்பா பலசரக்குக்கடையொன்றில் வேலை பார்க்கிறார். அம்மா வீட்டிலுள்ளார். மற்றுமொரு தம்பி எமது கல்லூரியில் கல்வி பயில்கிறார்.

ஈழமாறனின் வகுப்பாசிரியிர் திருமதி கரோலின் நிஷாந்தன் ஆவார். "கல்லூரியில் மாலை 5 மணிவரை நாம் வகுப்புகளை நடத்தினோம். மிகக்குறைந்த வளங்களுடன் நாம் மாணவர்களுக்கு கற்பித்தோம். விமானத் தாக்குதலிருந்து உயிர்த்தப்ப பாடசாலையில் பங்கர் அமைத்துள்ளோம்.

எமது மாணவர்களுக்கு மேலும் வளங்கள் இருக்குமாயின் நாங்களும் நிச்சயம் சாதனை படைப்போம். பாடசாலைக்கு தேவையான வளங்களை தந்துதவுமாறு சம்பந்தப்பட்ட சகலரிடமும் கோரிக்கை விடுக்கிறோம்" என்றார்.

உதவி கல்விப் பணிப்பாளர்

இதுபற்றி கிளிநொச்சி ஆரம்பக் கல்விக் உதவிக் கல்விப் பணிப்பாளர் சிற்றம்பலம் கணேசலிங்கம் கூறும்போது;

"மிகவும் வறுமை, கணினி வசதி இல்லாத சூழ்நிலைக்கு மத்தியில் அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு,ஒழுக்கம் மிகுந்த ஆசிரியர்கள் எம்மிடமுள்ளனர்.

புலமைப் பரீட்சைக்கு முன் நாம் பல தேர்வுகளை மாணவர்களுக்காக நடத்தினோம். அது எமக்கு மிகுந்த பலனைத் தந்தது. மாணவர் பெற்றோருடனும் கலந்துரையாடல் மேற்கொண்டோம்.

எமது பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்குள் உரிய வளங்கள் இருக்குமாயின் அடுத்தமுறை பரீட்சையில் எங்கள் மாணவர்களும் 200 புள்ளிகள் பெற்று நிச்சயம் சாதனை படைப்பார்கள்.

ஆசிரியர் வழிகாட்டி நூல், பாடசாலை இலவச நூல் மற்றும் சீருடைத் துணி ஆகியன வன்னி பெருநிலப்பரப்புக்கு காலம்பிந்தியே அனுப்பப்படுகின்றன இதனால் நாம் பெரிதும் பாதிப்படைந்துள்ளோம்.

இதேவேளை. புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் சிங்களத்திலிருந்து மொழி பெயர்க்கப்படுவதால் அது தமிழ்மொழி மூல மாணவர்கள் பாதிப்படைய வழிவகுப்ப"தாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாணவனுக்கு பாராட்டு விழா

இதேசமயம் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ்மொழி மூலத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ள கிளிநொச்சி மாணவனுக்கு பாராட்டு விழா நடத்த வடமாகாண கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

வடமாகாண பிரதம செயலாளர் எஸ். ரங்கராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் கூடிய புள்ளிகளைப் பெற்ற கிளிநொச்சி திரேசா கல்லூரி மாணவன் திருமாறன் ஈழமாறன் மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்களும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.

-தினக்குரல்

190 புள்ளிகளை பெற்று தமிழ் இனத்தினால் முடியாததோன்றுமில்லை என்று பறைசாற்றி நிற்கும் திருமாறன் ஈழமாறனுக்கு வாழ்த்துக்கள்.

சாதனை படைத்த திருமாறன் ஈழமாறனுக்கு எனது பாராட்டுக்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் நானும் இதே பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தேன். பாடசாலையைச் சுற்றியிருந்த பசுமையான வயல்களும் காடுகளும் ஞாபகத்திற்கு வருகின்றன. அண்மையில் கிளிநொச்சி சென்றிருந்தபோது இப் பாடசாலைக்குச் செல்ல முடியாமல் போனது வருத்தமாக இருந்தது.

:huh: பல வருடங்களுக்கு முன் புலமைப்பரிட்சையில் சித்தியடைந்த இணையவனுக்கும் வாழ்த்துக்கள்...

2007 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் 190 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்ற கிளிநொச்சி புனித திரேசா கல்லூரியின் மாணவன் திருமாறன் இளமாறனுக்கு கிளிநொச்சி கல்வி வலய ஆரம்பப் பிரிவினர் பரிசில் வழங்கிப் பாராட்டுத் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க

சாதனை படைத்த திருமாறனுக்கு வாழ்த்துகள் :lol: மற்றும் ஒரு காலத்தில் சித்தியெய்திய நம்ம இணையவன் அண்ணாவிற்கும் வாழ்த்துகள் :P ........பேபி கூட சித்தியடைந்தது என்றா பாருங்கோ :huh: !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடத்தப்பட்ட தந்தையிடம் தனது சித்தி பற்றி தெரிவிக்கத் துடிக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய யாழ். மாணவன்.

ஜ புதன்கிழமைஇ 26 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

இராணுவத்தினரால் கடத்தப்பட்ட தனது தந்தையிடம் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தான் சித்தியடைந்த செய்தியைக் கூற வேண்டும் என்று ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் 189 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கையில் 2ம் இடத்தையும் யாழ், மாவட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுக்கொண்ட யாழ், புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் மணிவண்ணன் மதுஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://nitharsanam.com/?art=24433

கடத்தப்பட்ட தந்தையிடம் தனது சித்தி பற்றி தெரிவிக்கத் துடிக்கும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய யாழ். மாணவன்.

என்ன கொடுமை மிக விரைவில் அவரின் தந்தையார் கிடைக்க பிரார்திபோம்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.