Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1990 இல், வடக்கிலிருந்து புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றிய அதே சிந்தனையில் இன்றும் அரச அதிகாரிகள் செயற்படுவது வெட்கக்கேடானது ; ரிஷா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? - ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’

– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

வடக்கிலிருந்து புலம்பெயர நேரிட்ட முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகாண முறையான வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த  வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது,

 

“வடக்கிலிருந்து புலம்பெயரச் செய்யப்பட்ட முஸ்லிம்களின் சவால்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை. 33 வருடங்கள் கடந்தும் முறையான வேலைத்திட்டங்கள் வகுக்கப்படவும் இல்லை. மீளக்குடியேறும் இம்மக்களின் முயற்சிகளை அங்குள்ள அரச அதிகாரிகளும் ஒரு சில அரசியல்வாதிகளும் தடுத்து நிறுத்தவே முயற்சிக்கின்றனர்.

 

மன்னார் மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்காளர் இடாப்பிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. அரச அதிகாரிகளின் இத்தகைய செயல்கள் அப்பட்டமான இனச்சுத்திகரிப்பாகும். 1990 இல், வடக்கிலிருந்து புலிகள் இதே பாணியில்தான் முஸ்லிம்களை வெளியேற்றினர். இன்னும், இதே சிந்தனையில் அரச அதிகாரிகள் செயற்படுவது வெட்கக்கேடானது.

 

நான் அமைச்சராக இருந்தவேளை, முப்பதாயிரம் தமிழர்களை மீளக்குடியேற்றினேன். ஆனால், முஸ்லிம்களை குடியேற்ற வடக்கிலுள்ள அதிகாரிகள் விரும்பவில்லை. எனினும், அரபு நாடுகளின் உதவிகளைப் பெற்று பலத்த சவால்களுக்கு மத்தியிலேதான், ஏழாயிரம் வீடுகளை நிர்மாணித்து முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.

முல்லைத்தீவில் முஸ்லிம்களை குடியேற்ற காணிகளை துப்புரவு செய்தபோது, எங்களது முயற்சிகளுக்கு குறுக்காக நின்ற சிலர், எங்களை கொன்றுவிட்டுத்தான் முஸ்லிம்களை குடியேற்ற வேண்டும் என்றனர். எங்களிடம் அதிகாரம் இல்லாத நிலையில், முஸ்லிம்களின் காணிகளை இலஞ்சம் பெற்று வேறு பலருக்கு விற்கும் நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன. 

எனவே, எஞ்சியுள்ள வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியேற்ற முறையான வேலைத்திட்டத்தை கோருகின்றேன். இவ்வாறான வேலைத்திட்டத்தை முன்னெடுப்போருக்கே எதிர்வரும் தேர்தலில் எமது ஆதரவு.

 

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஜெனீவாவில்  வழங்கப்பட்ட உறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். இவர்கள் மீள்குடியேறும் வரை எதிர்கொள்ளும் தொழில்ரீதியான சவால்களை தீர்ப்பதற்கும்  நடவடிக்ககைள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.

 

https://www.madawalaenews.com/2023/11/i_21.html

  • கருத்துக்கள உறவுகள்

வந்திட்டாரு....கள்ளக்காணி பிடிக்க...

  • கருத்துக்கள உறவுகள்

காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றியது நீங்கள் தானே ரிஸாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றியது நீங்கள் தானே ரிஸாட்டு.

தானே மன்னாரில் 2000 ஏக்கர், கிழக்கில் 3000 ஏக்கர் பிடித்து வைசிருக்கிறார் ..அதில் இந்த பிரச்சினையை தீர்க்கலாமே

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கத்தைப்பற்றி இவர்கள் கதைக்கலாமோ? 

சொந்தப் பெண்பிள்ளைகளது முகத்தையே  கறுப்புத் துணியால் மூடும் இவர்கள் அரச அதிகாரிகளைப்பார்த்து வெட்கக்கேடானது எனக் கூறலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, alvayan said:

தானே மன்னாரில் 2000 ஏக்கர், கிழக்கில் 3000 ஏக்கர் பிடித்து வைசிருக்கிறார் ..அதில் இந்த பிரச்சினையை தீர்க்கலாமே

தீர்ப்பதட்கு அங்கு ஒன்றும் இல்லை. அங்கு இருந்த  முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே அங்கு முஸ்லீம் மக்களை குடியேற்றி இருக்கிறார். காத்தான்குடியில் இருந்து வந்து நிறைய குடியேறி இருக்கிறார்கள். அதாவது வன்னியில்  தனது அதிகாரத்தை தக்க வைப்பதட்காக இன்னும் நிறைய முஸ்லிம்களை குடியேற்ற  முயட்சிக்கிறார்.

அரபு நாடுகளின் பணம் தாராளமாக கிடைப்பதால் அவருக்கும் லாபம், முஸ்லீம் மக்களுக்கும் லாபம். இப்போது பயங்கரவாத பட்டியலில் இருந்து இவரது நிறுவனங்களும் நீக்கப்பட்டுள்ளதால் பணம் மீண்டும் கொட்டிட தொடங்கி விட்ட்து. தேர்தல் வருவதால் இப்படியான கதைகளை கிளப்பி விட்டு ஒட்டு வாங்குவதுதான் நோக்கம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.