Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய உயர்ஸ்தானிகர் பாக்லே வடக்கிற்கு மூன்று நாள் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 NOV, 2023 | 08:17 PM
image

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே புதன்கிழமை மூன்று நாள் விஜயமாக வடக்கு மகாணத்திற்குச் செல்லவுள்ளார்.

இந்த விஜயத்தின் முதன் நாளான நாளையதினம் மதவாச்சியில் பாடசாலைகளுக்கான உதவித்திட்டங்களை கையளிக்கவுள்ளதோடு, அதனையடுத்து மன்னார் பியர் பகுதிக்கும், பின்னர் திருக்கேதீச்வரர் ஆலயத்துக்கும் செல்லவுள்ளார்.

தொடர்ந்து முதன்நாளின் இறுதி நிகழ்வாக இரவு நேர விருந்துபசாரத்துடன் வடக்கு மாகாண அரசியல்தரப்பினரைச் சந்தித்து உரையாடவுள்ளார்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் நாளான 30ஆம் மற்றும் முதலாம் திகதிகளில் நயினாதீவுக்குக்கான விஜயமொன்றை அவர் மேற்கொள்ளவுள்ளதோடு நயினை நாகபூசனி அம்மன் ஆலயத்துக்கும், நாகவகாரைக்கும் விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

தொடர்ந்து , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நூறு பேருக்கான புலமைப்பரிசில்களை கையளிக்கும் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதோடு, தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு உதவிப்பொருட்களையும் கையளிக்கவுள்ளார்.

இதனைவிடவும், மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, டிசம்பர் மாதத்துடன் உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கைக்கான கடமைகளை பூர்த்தி செய்யவுள்ளதோடு அதனையடுத்து அவர் அவுஸ்ரேலியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றுள்ளார்.இந்நிலையில், உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயின் வடக்கிற்கான இந்த விஜயமானது பரியாவிடையளிப்பதாகவும், தனது காலத்தில் கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்களுக்கு நன்றிகளை செலுத்தும் முகமாகவும் இடம்பெறவுள்ளது.

முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சானது, பெல்ஜியத்தில் தூதுவராக கடமையாற்றி வரும் சந்தோஷ் ஜாவை இலங்கைக்கான தனது நாட்டின் புதிய உயர்ஸ்தானிகராக பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/170408

  • கருத்துக்கள உறவுகள்

துவாரகாவை...அறிமுகம் செய்தவர்...நோட்டம் பார்க்க வந்திருப்பார்..

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, alvayan said:

துவாரகாவை...அறிமுகம் செய்தவர்...நோட்டம் பார்க்க வந்திருப்பார்..

நான் நினைக்கிறன் இந்தியாவின் 3௦ ஆவது மாநிலமாய் இலங்கையின் வடகிழக்கு இனைக்கபட்டுள்ளது என்று கனவு கண்டு விட்டு இங்கு வந்து இருப்பார் .😃

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, alvayan said:

துவாரகாவை...அறிமுகம் செய்தவர்...நோட்டம் பார்க்க வந்திருப்பார்..

1 hour ago, பெருமாள் said:

நான் நினைக்கிறன் இந்தியாவின் 3௦ ஆவது மாநிலமாய் இலங்கையின் வடகிழக்கு இனைக்கபட்டுள்ளது என்று கனவு கண்டு விட்டு இங்கு வந்து இருப்பார் .😃

 சீனா இந்தியா போன்ற விலாங்கு மீன்  நாடுகளால்  அழிந்து கொண்டிருப்பது ஈழத்தமிழினம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சீனா காரன் வேட்டியோட போய் கும்பிட்ட நயினாதீவுக்கு சிங்கன் கெளம்பீட்டார்.

இந்தியா எங்களுக்கு செய்த முதுகில குத்தின வேலையளால, சீனக்காரனை  நிணைச்சு பீதீல இருக்கவேண்டியது தான்.

கொல்லையில இருக்கிற சுண்டக்காய் நாட்டுக்கு, புலிகளை அழித்து கொடுத்தாச்சு, எங்களது காலடியில் கம்மென்று இருக்கும் என்று அலட்சியமாக இருந்ததால் தெற்கில சீனாவும் பூந்திட்டுது. மாலைதீவு கதையும் காலி.

கிழக்கை பிடிக்க செந்தில்.... வடக்கைப் பிடிக்க சார்ஸ் அம்மா...

சீனா, இந்தியா: சபாஸ் சரியான போட்டி.

 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2023 at 02:44, பெருமாள் said:

நான் நினைக்கிறன் இந்தியாவின் 3௦ ஆவது மாநிலமாய் இலங்கையின் வடகிழக்கு இனைக்கபட்டுள்ளது என்று கனவு கண்டு விட்டு இங்கு வந்து இருப்பார் .😃

இந்தியா அப்படித்தானே நினைக்குது. அங்கு தமிழ்நாட்டுக்கு குடைச்சல் கொடுப்பது போல, இங்கு தமிழன் என்ற காரணத்துக்காக பிரச்சினைகளை தீர்க்காமல் இருக்குது.

பாக்ளே ஐயாவின் காலம் முடிந்து போகப்போகிறார். அதுதான் எல்லோரிடமிருந்து பிரியாவிடை பெற்றுக்கொள்ள சென்றிருக்கிறார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் நயினாதீவுக்கு விஜயம்

Published By: DIGITAL DESK 3    30 NOV, 2023 | 02:24 PM

image

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை (30) யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும் நாக விகாரை ஆகியவற்றில் வழிபாடு செய்துள்ளார். 

அதன்போது, உயர்ஸ்தானிகருக்கு மலர் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி அமோக வரவேற்பு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து நாக விகாரை விகாராதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் நயினாதீவில் மீள் புதுப்பிக்கதக்க மின் உற்பத்தி திட்டங்களை அமுல் செய்வது குறித்தும் அதன் அவசியம் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார். 

received_2255613121296077.jpeg

received_1018205266074339.jpeg

https://www.virakesari.lk/article/170646

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி

01 DEC, 2023 | 02:58 PM
image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள நிதியுதவிச் செயற்றிட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த நிதியுதவித் திட்டத்தை இன்று வெள்ளிக்கிழமை (01) ஆரம்பித்து வைத்தார். 

1Q9A8493.jpg

இத்திட்டத்துக்கான முதற்கட்ட நிதி ரூபா மூன்று மில்லியன் இன்று காலை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் மாணவர் பிரதிநிதிகளிடம்  கையளிக்கப்பட்டது. அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் கலாச்சார உறவுகளுக்கான பேரவையின் உயர்கல்விப் புலமைப்பரிசில் (ஐ.சி.சி.ஆர்) பெற்று இந்தியாவில் உயர்கல்வி பெறச் செல்லும் இந்து கற்கைகள் பீட விரிவுரையாளர்கள் இருவருக்கான அனுமதிக் கடிதமும் வழங்கி வைக்கப்பட்டது.  

1Q9A8463.jpg

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணம் இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், கொழும்பிலுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், பல்கலைக்கழகப் பதிவாளர், நிதியாளர், பீடாதிபதிகள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

1Q9A8471.jpg

பொருளாதார நிலையில் சவாலுக்குட்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேரின் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் மாதாந்தம் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

1Q9A8539.jpg

கடந்த மே மாதம் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வுக்கு இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக வந்திருந்த இராஜாங்க அமைச்சர் கலாநிதி எல். முருகன் அறிவித்த படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு விசேட நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்திருந்தது.

1Q9A8551.jpg

இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் சகல பீடங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்பட்ட ஒவ்வொரு மாணவனுக்கும் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/170725

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் சீனாவின் நகர்வுகளை தடுப்பதட்கான முன் முயட்சிகளை எடுக்கிறார். எப்படியோ கஷடப்படும் மக்களுக்கு சில உதவிகளாவது கிடைக்கின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.