Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண உணவகத்தில் ஒரு கிளாஸ் வெந்நீர் 100 ரூபாய்க்கு விற்பனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ww.jpg

உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்ட உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்,

“இதுபோன்ற ஒன்றைச் சம்பவமே நமக்குத் தெரியும். வெந்நீரோ, குளிர்ந்த நீரோ, இப்படி ஒரு கிளாஸ் தண்ணீருக்குக் கட்டணம் வசூலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இது மிகப் பெரிய அநீதி.. இது போன்ற செயல்கள் இனி நடக்காமல் தடுக்கும் வகையில் உரிய தரப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து கவலை கொள்கிறோம், அத்துடன், நுகர்வோர் அதிகாரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கிளாஸ் தண்ணீருக்கு பணம் வசூலிக்க நுகர்வோர் சட்டத்தில் இடமில்லை.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள சைவ உணவகம் ஒன்றிலேயே இவ்வாறு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் சுடு நீருக்கு இவ்வளவு விலையை வசூலிக்க நேரிடுகிறது என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://thinakkural.lk/article/284972

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

உணவகம் ஒன்றில் ஒரு கிளாஸ் வெந்நீருக்கு 100 ரூபாய் வசூலித்த சம்பவம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடைக்காரருக்கும் சுடுதண்ணீர் வைக்க செலவு வரும் தானே?

ஒவ்வொருதரும் பெரிய சுடுதண்ணீர் போத்தலுடன் வந்து நின்றால் கடைக்காரரின் நிலை என்னாகும்?

ஒவ்வொருவரும் சுடு தண்ணீர் இலவசமாக வாங்கி கொண்டுபோய் தேயிலையை போட்டு மாவையும் போட்டு இலவசமாக தேநீர் குடிப்பார்களே?

  • கருத்துக்கள உறவுகள்

தென்னம் காணிகளில் உள்ள தென்னம் மட்டை இலவசமாக கொடுத்தாலும் சனம் வாங்குவதில்லையாமே ? எல்லாரும் அடுப்பூதும் புனல் மறந்து கனகாலமாம் காஸ் ல் சமைக்க பழகினவையாம் பிறகு சுடுதன்னிக்கு விலை வரும்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பெருமாள் said:

தென்னம் காணிகளில் உள்ள தென்னம் மட்டை இலவசமாக கொடுத்தாலும் சனம் வாங்குவதில்லையாமே ? எல்லாரும் அடுப்பூதும் புனல் மறந்து கனகாலமாம் காஸ் ல் சமைக்க பழகினவையாம் பிறகு சுடுதன்னிக்கு விலை வரும்தானே ?

பெருமாள் அடுப்பு ஊதிஊதியே நம்மவர்களுக்கு மூச்சு பிரச்சனைகள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

பெருமாள் அடுப்பு ஊதிஊதியே நம்மவர்களுக்கு மூச்சு பிரச்சனைகள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள்.

அட இப்படியும் ஒரு பிரச்சனை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

கடைக்காரருக்கும் சுடுதண்ணீர் வைக்க செலவு வரும் தானே?

ஒவ்வொருதரும் பெரிய சுடுதண்ணீர் போத்தலுடன் வந்து நின்றால் கடைக்காரரின் நிலை என்னாகும்?

ஒவ்வொருவரும் சுடு தண்ணீர் இலவசமாக வாங்கி கொண்டுபோய் தேயிலையை போட்டு மாவையும் போட்டு இலவசமாக தேநீர் குடிப்பார்களே?

ஐயா பெரியவரே!
றோட்டிலை நிண்டவன்  கிண்டவன் உருண்டவன் எண்டு வந்து சுடு தண்ணி கேக்கேல்லை கண்டியளோ. உளுந்து வடையும் மசாலா ரீ அது இது எண்டு எக்கச்சக்கமாய் பில் கட்டுறவன் தான் சுடுதண்ணி கேட்டிருக்கிறான்...🤣

சேவீஸ் சார்ஜ் வேறை சேர்த்து கட்டோணுமாம்...🙃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஐயா பெரியவரே!
றோட்டிலை நிண்டவன்  கிண்டவன் உருண்டவன் எண்டு வந்து சுடு தண்ணி கேக்கேல்லை கண்டியளோ. உளுந்து வடையும் மசாலா ரீ அது இது எண்டு எக்கச்சக்கமாய் பில் கட்டுறவன் தான் சுடுதண்ணி கேட்டிருக்கிறான்...🤣

சேவீஸ் சார்ஜ் வேறை சேர்த்து கட்டோணுமாம்...🙃

100 *12 = 1200 ரூபா என்றால் 12 தடவைக்கு பணம் கட்டி இருக்கிறார்.

எனவே கடைக்காரரின் நிலையில் இருந்தும் யோசிக்க வேண்டுமே?

  • கருத்துக்கள உறவுகள்

12 பேர் தோசையும் (வடையும் ப்ரோட்டவும்) சாப்பிட்டு இருக்கிறார்கள் 
எல்லோரும் டீ கோப்பி யும் 3 தண்ணீர் போத்தலும் வாங்கி இருக்கிறார்கள் 

ஏன் 12 சுடுதண்ணி என்று எனக்கு புரியவில்லை?
நீங்கள் யாரவது உணவகம் சென்று சுடுநீர் வாங்கி குடித்து இருக்கிறீர்களா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

12 பேர் தோசையும் (வடையும் ப்ரோட்டவும்) சாப்பிட்டு இருக்கிறார்கள் 
எல்லோரும் டீ கோப்பி யும் 3 தண்ணீர் போத்தலும் வாங்கி இருக்கிறார்கள் 

ஏன் 12 சுடுதண்ணி என்று எனக்கு புரியவில்லை?
நீங்கள் யாரவது உணவகம் சென்று சுடுநீர் வாங்கி குடித்து இருக்கிறீர்களா? 

அண்ணை மழைக்காலம் எல்லோருக்கும் தொண்டை கட்டி இருக்குமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Maruthankerny said:

12 பேர் தோசையும் (வடையும் ப்ரோட்டவும்) சாப்பிட்டு இருக்கிறார்கள் 
எல்லோரும் டீ கோப்பி யும் 3 தண்ணீர் போத்தலும் வாங்கி இருக்கிறார்கள் 

ஏன் 12 சுடுதண்ணி என்று எனக்கு புரியவில்லை?
நீங்கள் யாரவது உணவகம் சென்று சுடுநீர் வாங்கி குடித்து இருக்கிறீர்களா? 

3 hours ago, ஏராளன் said:

அண்ணை மழைக்காலம் எல்லோருக்கும் தொண்டை கட்டி இருக்குமோ?

எண்ணைச்சாப்பாடு சாப்பிட்டால் கடைசியிலை சுடுதண்ணி குடிக்கிறது நல்லதாம்.

அதுக்காக ஆதாரம்,சாட்சி எல்லாம் என்னட்டை கேட்கப்படாது. சொல்லக்கேள்விப்பட்டன் அவ்வளவுதான்smiley_Kaffee.gif 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எண்ணைச்சாப்பாடு சாப்பிட்டால் கடைசியிலை சுடுதண்ணி குடிக்கிறது நல்லதாம்.

நோ நோ நோ நெவர்.

எண்ணெய்ச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தால் எண்ணெய் மேலே வந்து செமிபாட்டில் குளறுபடி செய்யும் என்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.