Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவியை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தி காணொளியை இணையத்தளத்தில் பதிவிட்ட இரு மாணவர்கள் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 DEC, 2023 | 01:40 PM
image
 

பாடசாலை மாணவியுடன் காதல்  தொடர்பை ஏற்படுத்தி அவரை  பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி அதனை  காணொளிகளாக எடுத்து  இணையத்தளத்தில் பதிவிட்ட  இரு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் கண்டி பிரதேசத்திலுள்ள பாடசாலை  ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய  மாணவியாவார்.

இவர் தனது காதலனுடன் கண்டி பிரதேசத்திலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தபோது காதலனால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதுடன் காதலன் இதனை காணொளியாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் காணொளிகளை மாணவியின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைத்து அச்சுறுத்தி மீண்டும் விடுதிக்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்தச்  சம்பவத்தை தனது முன்னால் காதலனிடம் குறித்த மாணவி தெரிவித்ததையடுத்து காணொளிகளை தனக்கு அனுப்புமாறு முன்னாள் காதலன் கூறியுள்ளார்.

மாணவி காணொளிகளை முன்னாள்  காதலனுக்கு அனுப்பிய நிலையில் அவர் அதனை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய்  பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/172058

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா உடான்சர், நாலு நியாயம் பிளக்கவேணும் வாருங்கோ. @goshan_che

இதிலை, பெட்டையிலையும் பிழை இருக்குதெண்டுறன். 

படிக்க அனுப்பினால், விடுதிக்கு போயிருக்கிறா.

போனது மட்டுமல்ல, வந்த விடியோவை, முன்னாள் காதலனுக்கு அனுப்பி வைத்திருக்குது. ஆக, காதலர் இரண்டு உடன் தான், விடுதிக்கு போயிருக்கிறா.

தலைக்கு மேலே விசயம் போனவுடன் தாயிடம் சொல்லி இருக்கிறா போலை இருக்குது.

ஆக, இது சின்ன பிள்ளை ஆக இருந்தாலும், பிஞ்சில முத்தின கேசு என்பதால், எனக்கு கோவம் அந்த பிள்ளை மேல வருவது, சரியா, தவறா?

பெடியளும் அதே வயசு எண்டால், சட்டம் கொஞ்சம் திக்கு முக்காடும். ஆனால் இரண்டாவது காதலன், விடியோவை அனுப்பி, பிளாக் மெயில் செய்திருக்கிறார். அவருக்கு சிக்கல் தான். 

ஆக நாடு எங்கே போகிறது என்று சொல்ல போவதில்லை. ஒருவர் இப்படி, காதலியை தள்ளிக்கொண்டு kks விடுதிக்கு ஒன்றுக்கு போனார். ரிசப்ஷனில் இருந்தவர் ரூம் கொடுக்க, பின்னால் வந்த மேனேஜர், பேசி துரத்தி விட்டாராம். அந்த மேனேஜர் இப்ப லண்டனில் உள்ளார், எனக்கு தெரிந்தவர்.

இவர் சொன்ன கதை நடந்தது, 80 களில் என்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரிலையும் பிழை. ஆனால் சட்டப்படி காதலன் 2 ரேப்பில் மாட்ட சான்சிருக்கு. இங்கிலாந்து சட்டம் போல் இலங்கை சட்டமும் அப்டேட் ஆகி இருப்பின் - ரிவெஞ் போர்ன் சட்டம் காதலன் 1 ஐயும் துரத்தலாம்.

2 hours ago, Nathamuni said:

எங்கப்பா உடான்சர், நாலு நியாயம் பிளக்கவேணும் வாருங்கோ. @goshan_che

இதிலை, பெட்டையிலையும் பிழை இருக்குதெண்டுறன். 

படிக்க அனுப்பினால், விடுதிக்கு போயிருக்கிறா.

போனது மட்டுமல்ல, வந்த விடியோவை, முன்னாள் காதலனுக்கு அனுப்பி வைத்திருக்குது. ஆக, காதலர் இரண்டு உடன் தான், விடுதிக்கு போயிருக்கிறா.

தலைக்கு மேலே விசயம் போனவுடன் தாயிடம் சொல்லி இருக்கிறா போலை இருக்குது.

ஆக, இது சின்ன பிள்ளை ஆக இருந்தாலும், பிஞ்சில முத்தின கேசு என்பதால், எனக்கு கோவம் அந்த பிள்ளை மேல வருவது, சரியா, தவறா?

பெடியளும் அதே வயசு எண்டால், சட்டம் கொஞ்சம் திக்கு முக்காடும். ஆனால் இரண்டாவது காதலன், விடியோவை அனுப்பி, பிளாக் மெயில் செய்திருக்கிறார். அவருக்கு சிக்கல் தான். 

ஆக நாடு எங்கே போகிறது என்று சொல்ல போவதில்லை. ஒருவர் இப்படி, காதலியை தள்ளிக்கொண்டு kks விடுதிக்கு ஒன்றுக்கு போனார். ரிசப்ஷனில் இருந்தவர் ரூம் கொடுக்க, பின்னால் வந்த மேனேஜர், பேசி துரத்தி விட்டாராம். அந்த மேனேஜர் இப்ப லண்டனில் உள்ளார், எனக்கு தெரிந்தவர்.

இவர் சொன்ன கதை நடந்தது, 80 களில் என்கிறார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எல்லாரிலையும் பிழை. ஆனால் சட்டப்படி காதலன் 2 ரேப்பில் மாட்ட சான்சிருக்கு. இங்கிலாந்து சட்டம் போல் இலங்கை சட்டமும் அப்டேட் ஆகி இருப்பின் - ரிவெஞ் போர்ன் சட்டம் காதலன் 1 ஐயும் துரத்தலாம்.

 

முதல் காதலன் கடுப்பில பதிவு ஏத்தி இருக்கிறார். ஆக பெட்டை முழு மக்கு என்று தெரியுது.

இரண்டு பெடியளும், உள்ளுக்கு போனதும் சரிதான். 

தலைப்பும் பிழை. 

பாலியல் துஸ்பிரயோகம் என்பது தவறு.

சேர்ந்தே போயிருக்கிறார்கள், விடுதிக்கு - படிக்கப் போகவில்லை அங்கு.

சேர்ந்து போனவர் தவறு வீடியோ எடுத்தது. அதை அனுப்பி பிளாக் மெயில் பண்ணியது உண்மையானால், பாலியல் துன்புறுத்தல்.

ஆனால், முதல் காதலனுக்கு அனுப்பியதே தவறு.

நோக்கம் என்ன? பீலா விடவா என்ற கேள்வி வந்தால், பதில்...

ஆம் அவர் கடுப்பில் வெளீல விட, தாய்க்கு தெரிய வந்ததா?

தல சுத்துது !!

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான கொழுப்பு பிடிச்ச சம்பவங்களில் ஈடுபடுபவர்களை அப்படியே அழிய விட்டு விட வேண்டும். இதேமாதிரியான விடயங்களை சமூக நீதி செய்திக்குள் உள்ளடக்கப்படாது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
    • பயங்கரவாதிகள் எனும் சொறப்தத்தை முதன்முதலாகப் பாவித்த அரசு சிறிமாவினது. 1971 ஆம் ஆண்டு தெற்கில் அரசுக்கெதிராகக் கிளர்ச்சிசெய்த சிங்களை இளைஞர்களை அன்று பயங்கரவாதிகள் என்று அரசு அழைத்தது. பின்னர் வடக்கில் அரசுக்கெதிராகப் போராடிய இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என்று அரசுகள் அழைத்தன. 2009 இற்குப் பின்னர் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகள் என்று அழைக்கின்றனர். ஆரம்பத்தில் வர்க்கவேறுபாட்டினால் உருவாக்கப்பட்ட ஆளும் பிரபுக்களால் உருவாக்கப்பட்ட அரசிற்கும் மக்களுக்குமிடையிலான போராட்டத்தை இனவாதமாகவும், மதவாதமாகவும் திசைதிருப்ப அரசுகளால் முடிந்தது.  தமிழ் மக்கள் தமது மரணித்த உறவுகளை காடுகளுக்குள்ச் சென்று, ஒளித்து மறைத்து நினைவுகூரவில்லை. மாறாக வெளிப்படையாகப் பொதுவெளியில், ஒரு சமூகமாக வந்து நினைவுகூர்கிறார்கள். இதனை நாம் மறுப்பது நியாயமில்லை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.