Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்முவாகிய நான் திரைவிமர்சனம்!!

Featured Replies

  • தொடங்கியவர்

:rolleyes: கண்ணை பொத்தினியளா? அட நீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் உந்தப்படம் வந்தாலும் நாம கண்னைப் பொத்துற அளவில் இருக்காது என்று நினைக்கிறேன். அப்படியான காட்சிகள் கட் செய்திருப்பார்கள் என நினைக்கிறேன். :o

ஆமாம் கண்ணை பொத்தினேன் அக்கா!!அட இங்கேயே கட் பண்ணவில்லை எங்கே என்று கட் பண்ணுவார்கள் :P அப்ப அங்கே சொல்லவா வேண்டும் நிலா அக்கா!!எதற்கும் கண்ணை மூடிகொள்ளுங்கோ!! :P

  • தொடங்கியவர்

ஓ அப்படியா? ஆனால் நானும் அப்படித்தான் செய்வேன். ஆனால் தெரியாதோ சில நேரத்தில் சிலர் திட்டும்போது கவலையாக இருக்கும். அதுதான் :rolleyes: அதுசரி அம்முவாகிய நான் பார்த்திபனோடு எந்த நடிகை நடிச்சிருக்கினம்?

ஓ நீங்களும் அப்படியா யாரும் திட்டினா கவலை எல்லாம் பட கூடாது நிலா அக்கா!!அம்முவாக நடித்தது புதும நாயகி பாரதி!! :o

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி அம்முவை நாடி ஆண்கள் செல்வதாலே தானே விபசாரம் தோற்றுவிக்கபடுகிறது !!ஆண்கள் அந்த இடங்களை தவித்தால் விபசார நிலையம் தான் வருமா!!அம்மு மாதிரி குழந்தைகள் விற்கபடுமா தாத்தா??

உங்களின் தர்க்கம் புரிகிறது.ஆனால் தர்க்கிப்பதன் மூலம் நாம் எந்தப் பக்கத்தையும் இதில் நியாயப்படுத்த முனையக் கூடாது. ஆண் வருகிறான் என்பதற்காக விபச்சாரத்துக்கு தயாராகும் பெண்களையும் நாங்கள் நியாயப்படுத்தக் கூடாது. பெண் வருகிறாள் என்பதற்காக அவளை நாடும் விபச்சாரி ஆண்களையும் நியாயப்படுத்தக் கூடாது. விபச்சாரம் ஒழிக்கப்படுவது என்பது.. இவ்விவகாரத்தில் ஈடுபடும்..இரு தரப்பும்.. தமது பங்களிப்பை இதில் இழந்து சாதாரண சமூக வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். இன்றேல் களையெடுக்கப்பட வேண்டும். இதுதான் எமது தெளிவான நிலைப்பாடு. விபச்சாரம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அது ஒரு சமூகத்தைச் சீரழிக்கும் தொற்று நோயாக பரவி வியாபித்துள்ளது. மனித சமூகத்தை சிறுகச் சிறுக சீரழித்துக் கொண்டிருக்கிறது. விபச்சாரத்துக்கு புதுமொழியிடல்.. புது அந்தஸ்திடல்.. புது உரிமையிடல்.. இவை அவசியமில்லை.

பொதுமன்னிப்பளித்து விபச்சாரிகள் ( அது ஆணாகட்டும் பெண்ணாகட்டும்) சாதாண வாழ்வுக்குத் திரும்ப அழைக்கப்பட வேண்டும். அதற்கு செவி சாய்க்காதவர்களை கொடுங்கரம் கொண்டு களையெடுக்க வேண்டும். சந்தர்ப்பம் சூழ்நிலையை சாட்டுச் சொல்லிச் சொல்லியே பலர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அது சாட்டு. உண்மையில் அதை விட்டு வெளியே வர பல வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் குறிப்பாக பெண்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. மாறாக.. விபச்சாரத்தைப் பயன்படுத்தி.. பணம் பார்க்க விளைகின்றனர் அல்லது தமது திறமையால் சாதிக்க முயலாது உடலை போகப் பொருளாக்கி தாம் நினைத்ததை சாதிக்க விளைகின்றனர். இவர்களின் இந்த சிந்தனைப் போக்கு தவறான வழியறியாத ஆண்களையும் தவறான வழிக்கு அழைக்கிறது.தவறான வழியில் உள்ள ஆண்கள் மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டுகிறது.. அல்லது அதற்கான சூழலை அமைத்துக் கொடுக்கிறது. அது அவர்கள் தொடர்ந்து தங்கள் தவறைத் தொடர வாய்ப்பளிக்கிறது மட்டுமன்றி தவறில் இருந்து திருந்தி வெளிவர உள்ள வாய்ப்பைத் தடுக்கிறது. :P

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, August 30, 2007

அம்முவாகிய நான் - திரைவிமர்சனம்

ஒரு வில்லங்கமான கதையை கையில் எடுத்துக் கொண்டு எப்படி அதை வித்தியாசமாக, அழகாக கொடுக்க முடியும் என்பதை பத்மா மகன் அம்முவாகிய மகன் மூலமாக விளக்கியுள்ளார்.

பல்லவன் என்ற படத்தை இயக்கியவர்தான் பத்மா மகன். முதல் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைத் தரவில்லை. இருந்தாலும் சோர்ந்து விடாத பத்மா மகன், தனது காலத்துக்காக காத்திருந்தார். இப்போது அம்முவாகிய நான் மூலம் தனது முத்திரையைப் பதித்துள்ளார் - அழுத்தமாக.

அரங்கேற்றம், தப்புத்தாளங்கள் என கே.பாலச்சந்தர் போன பாதையில்தான் பத்மா மகனும் போயுள்ளார். ஒரு கமர்ஷியல் செக்ஸ் ஒர்க்கரின் கதைதான் அம்முவாகிய நான்.

புதுச்சேரியில் கதை ஆரம்பிக்கிறது. கெளரிசங்கர் (பார்த்திபன்) ஒரு எழுத்தாளர். பெண்களுக்கு எதிரான அநீதிகளை தனது பேனாவால் சுட்டெரிப்பவர். விபச்சாரப் பெண்களின் கண்ணீர்க் கதையை எழுத்தில் வடிப்பதற்காக ராணி மடத்திற்கு (விபச்சார விடுதியின் பெயர்) வருகிறார் கெளரி சங்கர்.

அங்குதான் அம்முவை (பாரதி) சந்திக்கிறார் கெளரி சங்கர். ராணி மடத்தில் வளர்ந்த, வயசுக்கு வந்த பின்னர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அனாதைப் பெண்தான் அம்மு.

அம்முவைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரது அழகு கெளரி சங்கரை திணறடித்து விடுகிறது. அம்முவின் அழகும், வெகுளித்னமும் அவருக்குப் பிடித்துப் போய் விடுகிறது. கதைக்காக வந்தவரின் இதயத்தில் அம்மு மீது காதல் பிறக்கிறது. அம்முவை தனது வாழ்க்கைத் துணைவியாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

ஆனால் அம்முவுக்கு அதில் இஷ்டம் இல்லை. இப்படியே இருந்து விடுகிறேன் என்கிறார். "தினசரி ஒரே முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது ரொம்ப போர். இங்கிருந்தால் புதுப் புது நபர்களுடன் பழக்கம் கிடைக்கும், அந்த இனிய அனுபவமே போதும்" என்று காரணமும் கூறுகிறார்.

ஆனால் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் கெளரி சங்கர், அம்மு மீது கொண்ட பரிவை ஆழமாக்குகிறார். இது அம்முவின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. விபச்சாரத்திலிருந்து சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு அம்முவை மெல்ல மெல்ல இட்டுச் செல்கிறார்.

இப்படி ஒரு பக்கம் அம்முவை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டே மறுபக்கம், அம்முவாகிய நான் என்ற நூலையும் எழுதி முடிக்கிறார். தேசிய விருதுக்கும் அனுப்பி வைக்கிறார்.

அங்கு ஒரு வில்லங்கம். விருதுக் குழுத் தலைவரான மகாதேவன், அம்முவை ருசிக்க நினைக்கிறார். அம்முவை அணுகுகிறார். நீ எனக்கு வேண்டும். அப்படி நீ சம்மதித்தால், கெளரி சங்கர் நூலுக்கே விருது என்கிறார்.

இதுகுறித்து கெளரி சங்கருக்குத் தெரிவிக்காமல் யோசித்துப் பார்க்கிறார். பின்னர் மகாதேவனின் அழைப்பை ஏற்கிறார். அதன்படி மகாதேவனிடமும் செல்கிறார். படுக்கை வரை செல்லும் அவருக்கு அதற்கு மேல் போக முடியவில்லை. காரணம், கெளரிசங்கர், நீ தான் என் மனைவி என்று கூறியதால்.

அடுத்து என்ன நடக்கிறது, அம்மு என்ன ஆகிறார், கெளரி சங்கருக்கு அவர் கிடைத்தாரா என்பதுதான் படத்தின் மீதக் கதை.

மிக அழகான, நேர்த்தியான நடிப்பைக் கொட்டியிருக்கிறார் பார்த்திபன். கொடுத்த ரோலை உள் வாங்கிக் கொண்டு அழகாக வெளிக் கொண்டு வரும் கலையில் பார்த்திபனுக்கு நிகர் பார்த்திபன்தான்.

இப்படத்தில் (முதல் முறையாக?) பேச்சைக் குறைத்திருக்கிறார் பார்த்திபன். பாடி லாங்குவேஜிலும், நடிப்பிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார

Edited by வலைஞன்
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது!

  • தொடங்கியவர்

உங்களின் தர்க்கம் புரிகிறது.ஆனால் தர்க்கிப்பதன் மூலம் நாம் எந்தப் பக்கத்தையும் இதில் நியாயப்படுத்த முனையக் கூடாது. ஆண் வருகிறான் என்பதற்காக விபச்சாரத்துக்கு தயாராகும் பெண்களையும் நாங்கள் நியாயப்படுத்தக் கூடாது. பெண் வருகிறாள் என்பதற்காக அவளை நாடும் விபச்சாரி ஆண்களையும் நியாயப்படுத்தக் கூடாது. விபச்சாரம் ஒழிக்கப்படுவது என்பது.. இவ்விவகாரத்தில் ஈடுபடும்..இரு தரப்பும்.. தமது பங்களிப்பை இதில் இழந்து சாதாரண சமூக வாழ்வுக்குத் திரும்ப வேண்டும். இன்றேல் களையெடுக்கப்பட வேண்டும். இதுதான் எமது தெளிவான நிலைப்பாடு. விபச்சாரம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும். அது ஒரு சமூகத்தைச் சீரழிக்கும் தொற்று நோயாக பரவி வியாபித்துள்ளது. மனித சமூகத்தை சிறுகச் சிறுக சீரழித்துக் கொண்டிருக்கிறது. விபச்சாரத்துக்கு புதுமொழியிடல்.. புது அந்தஸ்திடல்.. புது உரிமையிடல்.. இவை அவசியமில்லை.

பொதுமன்னிப்பளித்து விபச்சாரிகள் ( அது ஆணாகட்டும் பெண்ணாகட்டும்) சாதாண வாழ்வுக்குத் திரும்ப அழைக்கப்பட வேண்டும். அதற்கு செவி சாய்க்காதவர்களை கொடுங்கரம் கொண்டு களையெடுக்க வேண்டும். சந்தர்ப்பம் சூழ்நிலையை சாட்டுச் சொல்லிச் சொல்லியே பலர் விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். அது சாட்டு. உண்மையில் அதை விட்டு வெளியே வர பல வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஆனால் குறிப்பாக பெண்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. மாறாக.. விபச்சாரத்தைப் பயன்படுத்தி.. பணம் பார்க்க விளைகின்றனர் அல்லது தமது திறமையால் சாதிக்க முயலாது உடலை போகப் பொருளாக்கி தாம் நினைத்ததை சாதிக்க விளைகின்றனர். இவர்களின் இந்த சிந்தனைப் போக்கு தவறான வழியறியாத ஆண்களையும் தவறான வழிக்கு அழைக்கிறது.தவறான வழியில் உள்ள ஆண்கள் மேலும் மேலும் தவறு செய்யத் தூண்டுகிறது.. அல்லது அதற்கான சூழலை அமைத்துக் கொடுக்கிறது. அது அவர்கள் தொடர்ந்து தங்கள் தவறைத் தொடர வாய்ப்பளிக்கிறது மட்டுமன்றி தவறில் இருந்து திருந்தி வெளிவர உள்ள வாய்ப்பைத் தடுக்கிறது. :P

சரி தாத்தா உங்கள் கருத்துகளை ஏற்று கொள்கிறேன் நீங்கள் குறிபிட்டு இருந்தீர்கள் பொதுமன்னிப்பு வழங்கி இவர்களை சாதாரண வாழ்கைக்கு திருப்பி வரசெய்ய வேண்டும் என்று,சரி எமது சமூகத்தை எடுப்போம் இவ்வாறு திருந்தி வாழ வருபவர்களை எமது சமூகம் ஏற்று கொள்ளுமா :lol: !!ஏளன பேச்சுகளை அள்ளி வீசுவதை எமது சமூகம் நிறுத்துமா!!எமது சமூகத்தில் உள்ளவர்கள் அவர்களிற்கு வாழ்கை கொடுக்க முனைவார்களா!!இதற்கு தங்களின் பதில் என்ன!!சமூகம் அங்கிகரித்தால் அவர்கள் திருந்தி வாழ்வார்கள் ஆனால் இவர்களின் ஏளன பார்வையும் ஏளன பேச்சும் அவர்களை இன்னும் செய்ய தூண்டுகிறது!! :)

சரி இவர்களின் சிந்தனை போக்கும் ஆண்களை தவறான வழிக்கு இட்டு செல்கிறது என்றா ஒரு காலத்தில் மனிதயுகம் ஆடையின்றி இருந்ததை அறிவீர்கள் :lol: அப்போது இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறவில்லையே தாத்தா!!தற்போது தோற்றம் பெறுகிறது அப்படியாயின் ஏதோ குறை எங்கையோ இருக்கு அது என்னவென்று தெரியுமோ தாத்தா!! :lol:

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

ஒரு நல்லவனை கூட இந்த சமூகம் கெட்டவனாக்கிறது ஒரு கயவனை கூட இந்த சமூகம் நல்லவன் ஆக்கிறது இது தான் சமூகம்!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்போது பாலியல் சம்பந்தப்பட்ட படங்கள் பார்ப்பதில்லை.நான் கடைசியாக பார்த்த ஏ படம் அழியாத கோலங்கள் என நினக்கின்றேன்.அதுவும் லிடோ திரைப்படமாளிகையில் என நினக்கின்றேன் :icon_mrgreen:

  • தொடங்கியவர்

நான் இப்போது பாலியல் சம்பந்தப்பட்ட படங்கள் பார்ப்பதில்லை.நான் கடைசியாக பார்த்த ஏ படம் அழியாத கோலங்கள் என நினக்கின்றேன்.அதுவும் லிடோ திரைப்படமாளிகையில் என நினக்கின்றேன் :icon_mrgreen:

ஏன் தாத்தா திருந்திட்டீங்களா :wub: .............ஓ அழியாத கோலங்கள் என்று படம் வந்ததா எப்படி படம் கு.சா தாத்தா பேபிகள் பார்க்கலாமா :wub: .......அது என்ன "ஏ" பேபி மொண்டசூரியில தான் "ஏ.பி.சி" படிகிறது தாத்தா :( ........இந்த படம் நல்ல படம் தாத்தா பாருங்கோ...லிடோ திரைமாளிகை அது எங்கே இருக்கு தாத்தா..............! :( !

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.