Jump to content

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது! - சித்தார்த்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழரசுக்கட்சி உடைந்துவிட்டது!

adminJanuary 29, 2024
sitharthan.jpg?fit=650%2C433&ssl=1

இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்   தெரிவித்துள்ளார்.

நேற்று (28.01.24) யாழில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கமாக செயற்பட மாட்டார்கள். தம்மை  பொறுத்த வரையில் தாம்  இணையப்போவதில்லை அது வேறு விடயம், ஆனால் மற்றைய கட்சிகள் இணைய வாய்ப்புக்கள் இருக்கலாம்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது என சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.
 

https://globaltamilnews.net/2024/200207/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் தமிழரசுக்கட்சி வீட்டுச் சின்னத்தை விட்டுக் கொடுக்கலாம் – சித்தார்த்தன் யோசனை

Published By: VISHNU  29 JAN, 2024 | 12:37 PM

image

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும் என தெரிவித்த புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம் என்றார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இரண்டு மூன்று பிளவாக உடைந்து இருக்கிறது என்றும் அவர்கள் ஒற்றுமையாகிய பின்னரே கூட்டமைப்பு ஒற்றுமை பற்றி பார்க்கலாம் என்றார்.

கந்தரோடையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவர் இன்னும் பதவியேற்கவில்லை. அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் தேசிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சிகள் இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் எடுக்கும் முடிவை மற்றொரு குழு எதிர்க்கும். ஆகவே தமிழ் அரசுக் கட்சி ஒற்றுமையாக வேண்டும். அதன் பின்னரே ஏனைய தமிழ் தேசிய கட்சிகளின் ஒற்றுமை பற்றி பார்க்கலாம்.

கடந்த காலத்தில் சம்பந்தனின் தலைமையின் கீழ் நாம் இணைந்திருந்தாலும் பல கசப்பான சம்பவங்கள் இடம்பெற்றன. இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்பட்ட வேண்டும் என வலியுறுத்தினோம். இதனால் சிலர் கூட்டமைப்பை விட்டுச் சென்றனர்.

இப்போது கூட்டமைப்பு மீண்டும் ஒற்றுமையாக வேண்டுமானால் அது பதிவு செய்யப்பட்ட கட்சியாக வேண்டும். 

பொதுவான சின்னம் இருக்கலாம். அது வீடாகவும் இருக்கலாம். தமிழ் அரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு விட்டுக்கொடுக்கலாம். 

இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டாலே கூட்டமைப்பு அர்த்தபுஷ்டியானதாக இருக்கும். 

நான் மட்டுமல்ல ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள பங்காளிக் கட்சித் தலைவர்களும் இதே நிலைப்பாட்டிலேயே இருக்கிறோம். என்றார்.

https://www.virakesari.lk/article/175046

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஓநாய் ஏன் கண்ணீர் விடுகிறது??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

இந்த ஓநாய் ஏன் கண்ணீர் விடுகிறது??

அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையைதான் கூறி இருக்கிறார்.

நான் பேசி பழகிய அரசியல்வாதிகளில் உண்மையாகவே சித்தார்த்தன் ஒரு நேர்மையான நம்பகத்தன்மை உள்ள அரசிஅயல்வாதி என்று சொல்லுவேன். மற்றவர்களை போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவராக தெரியவில்லை.

இங்குள்ள அநேகமான தமிழ் அரசியல் வாதிகள் சுயநல வாதிகள். படம், பதவி, பணத்துக்காக எதையுமே செய்வார்கள். எனவே ஒருவருடைய கட்சியில் சிலர் செய்த தவறுக்காக இவரை இப்படி சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Cruso said:

அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை.

இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர். சிலர் தான் கொலை கொள்ளைகள் செய்யும் கெட்டவர்கள் அவர்களை இந்த நல்லவவரால்   கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவர் தொடர்ந்தும் அங்கே இருந்தார்

Edited by விளங்க நினைப்பவன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2024 at 14:07, விசுகு said:

இந்த ஓநாய் ஏன் கண்ணீர் விடுகிறது??

அவர் கண்ணீர் விடவில்லை   தமிழரசு கட்சி  இரண்டு மூன்று பகுதிகளாக. உடைந்து விட்டது என்று சந்தோசமடைகிறார்.  

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர். சிலர் தான் கொலை கொள்ளைகள் செய்யும் கெட்டவர்கள் அவர்களை இந்த நல்லவவரால்   கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது என்று நீங்கள் சொல்கிறீர்கள்.அவர் தொடர்ந்தும் அங்கே இருந்தார்

சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம். இவர்கள் எல்லாம் செய்யாத கொலை குற்றங்களா? இன்று எப்படி இருக்கிறார்கள்.

அதே கட்சியில் இருந்து கொண்டுவெள்ளையும் சொள்ளையுமாக உடுத்திக்கொண்டு அரசியல் செய்கிறோம், மக்கள் சேவை செய்கிறோம் எண்டு திரியவில்லையா ?

நான் இவரை  ஒரேயடியாக நல்லவர் என்றோ சிறந்தவர் என்றோ கூறவில்லை. இந்த வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிற அரசியல் (?) வாதிகளுடன் ஒப்பிட்டுதான் கூறி இருந்தேன்.  

2 hours ago, Kandiah57 said:

அவர் கண்ணீர் விடவில்லை   தமிழரசு கட்சி  இரண்டு மூன்று பகுதிகளாக. உடைந்து விட்டது என்று சந்தோசமடைகிறார்.  

இரண்டாய் உடைந்தால் என்ன மூன்றாய் உடைந்தால் என்ன? இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம். இவர்கள் எல்லாம் செய்யாத கொலை குற்றங்களா? இன்று எப்படி இருக்கிறார்கள்.

அதே கட்சியில் இருந்து கொண்டுவெள்ளையும் சொள்ளையுமாக உடுத்திக்கொண்டு அரசியல் செய்கிறோம், மக்கள் சேவை செய்கிறோம் எண்டு திரியவில்லையா ?

நான் இவரை  ஒரேயடியாக நல்லவர் என்றோ சிறந்தவர் என்றோ கூறவில்லை. இந்த வெள்ளையும் சொள்ளையுமாக திரிகிற அரசியல் (?) வாதிகளுடன் ஒப்பிட்டுதான் கூறி இருந்தேன்.  

இரண்டாய் உடைந்தால் என்ன மூன்றாய் உடைந்தால் என்ன? இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை. 

சம்பந்தன் சுமா செய்த நாச வேலைகளை   விட  இது பரவாயில்லை . ஒரு வித்தியாசம் ஒன்று ஆயுத கொலை , மற்றது யனநாயக கொலை . விளைவு ஒன்றுதான்.  இன்று தேசியம் பெரும் குழப்பத்தில் உள்ளது . 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 29/1/2024 at 20:12, Cruso said:

அப்படி சொல்ல வேண்டாம். அவரது இயக்கத்தில் உள்ள சிலரை அவரால் கட்டு படுத்த முடியாமல் போனது உண்மை. அதட்கு அவரும் பொறுப்பு கூற வேண்டும். இருந்தாலும் அவர் மேலே கூறியதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. உண்மையைதான் கூறி இருக்கிறார்.

நான் பேசி பழகிய அரசியல்வாதிகளில் உண்மையாகவே சித்தார்த்தன் ஒரு நேர்மையான நம்பகத்தன்மை உள்ள அரசிஅயல்வாதி என்று சொல்லுவேன். மற்றவர்களை போல உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவராக தெரியவில்லை.

இங்குள்ள அநேகமான தமிழ் அரசியல் வாதிகள் சுயநல வாதிகள். படம், பதவி, பணத்துக்காக எதையுமே செய்வார்கள். எனவே ஒருவருடைய கட்சியில் சிலர் செய்த தவறுக்காக இவரை இப்படி சொல்வதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. 

 

ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் போது பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.

 

1 hour ago, தமிழன்பன் said:

சம்பந்தன் சுமா செய்த நாச வேலைகளை   விட  இது பரவாயில்லை . ஒரு வித்தியாசம் ஒன்று ஆயுத கொலை , மற்றது யனநாயக கொலை . விளைவு ஒன்றுதான்.  இன்று தேசியம் பெரும் குழப்பத்தில் உள்ளது . 

Edited by நன்னிச் சோழன்
கூடுதல் பற்றியம் சேர்ப்பு
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நன்னிச் சோழன் said:

 

ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.

 

அவர்களுக்கு நான் வெள்ளை அடிக்கவில்லை.
இரண்டு தரப்பும் செய்ததன் விளைவு கடைசியில் போராடடம் அழிக்கப்பட்டு தேசியமும் 

கதி கலங்கிவிட்டது . விளைவை மட்டும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது.

7 hours ago, Cruso said:

சுரேஷ், செல்வம் அடைக்கலம், கோவிந்தம், வினோ, சிவசக்தி இன்னும் நிறைய பெயர்கள் எழுதலாம்.

சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️

7 hours ago, Cruso said:

இவர்கள் கட்சி ஆரம்பித்து மக்கள் எதாவது பலனை கண்டார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? இனியும் ஏதாவது செய்வார்கள் என்று சொல்ல முடியுமா? என்னை பொறுத்த வரைக்கும் நாம் பின்னோக்கி சென்றோமே ஒழிய முன்னோக்கி செல்லவில்லை. 

நூறு வீதம் உண்மை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

ஆயுத பயங்கர கொலைகளை செய்தவர்களை அரசியல் செய்பவர்களுடன் ஒப்பிட்டு ஆயுத பயங்கரவாதத்தை இது பரவாயில்லை என்ற வெள்ளை அடிக்கும் முயற்ச்சி அபாயகரமானது.

சுரேஷ் மண்டையில் போட்டு தமிழர்களை கொன்றவர் தானே ☹️

நூறு வீதம் உண்மை

உண்மை வரலாற்றை நேர்மையுடன் பார்ககும் ஒருவருக்கு இங்கு எல்லோருமே   அவரவர் தத்தமது விசுவாசிகளுக்கு வெள்ளை அடிப்பதும் அடுத்தவர் மீது சேறுவாரி தூற்றி தனது விசுவாசிகளின் தவறுகளை/ அக்கிரமங்களை  மூடி மறைப்பது தெரியவரும்.  அது தான் தமிழர் அரசியல். அதன் விளைவை அனுபவித்தவர்களும் கடும் இழப்பை சந்தித்தவர்களும் இனி அனுபவிக்கப் போகின்றவர்களும்  தமிழர்கள் தான். 

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நன்னிச் சோழன் said:

 

ரண்டுபேரும் தேசத்திற்கு துரோகமிழைத்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் போது பார்த்து பக்குவமாய் அடியுங்கோ. பெயின்ற் கீழ ஊத்திடக் கூடாது.

 

இங்கு எந்த அரசியல்  வாதியோ , இயக்கங்களோ மக்களுக்கு நன்மை செய்ததாகவோ அல்லது முன்னோக்கி நகர்த்தியதாகவோ இல்லை.

எல்லோருமே தமிழ் மக்களை பின்னோக்கி கொண்டு சென்று தங்களை முன்னோக்கி வளர்த்து கொண்டவர்கள்தான்.

யாருக்குமே வெள்ளயடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவன் திருந்த கூடாது அல்லது நல்லவனாக மாற கூடாது என்பது உங்கள் கொள்கையாக இருந்தால் பிரச்சினை இல்லை. இப்போது உள்ள நிலைமையில் அப்படி எழுதினேன். நிலைமை அப்படிதான்  இருக்கின்றது. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இவர்கள் செயலால் தமிழினத்திக்கு நடந்த நீண்டதூர விளைவை பார்க்கவேண்டும் .மற்ற 
ஆயுத இயக்கங்கள் மக்களை கொன்றார்கள். அது மிகப்பெரிய கொடுமையான செயல்தான். ஆனால் இவர்களை எல்லாம் தலைவர் மன்னித்து ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தவர் . உண்மையில் அது மிகப்பெரிய நீண்ட தூர ஆக்கபூர்வமான செயல். ஆனால் எல்லாம் புரிந்தும் உருவாக்கப்படட கூட்டமைப்பை உடைத்து துண்டு துண்டாகிய சாம் மற்றும் சுமா மட்டும் என்ன , இது சாதரணமான விடயமா ? எவ்வளவு பெரிய கேவலமான விடயம் . எங்கள் ஆயுத போராட்ட்த்தை இந்தியா அழித்தமாதிரி . இவர்கள் ரணிலுடன் சேர்ந்து அழித்த கயவர்கள் . அதனால் தான் இரண்டு பேரையும் ஒரே தராசில் போட்டு பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 30/1/2024 at 22:34, விளங்க நினைப்பவன் said:

இந்த இயக்கத்தை பற்றி பயங்கரமான கதைகள் பலர் சொல்லிவிட்டனர்.

குருசோ,  இப்போது சித்தார்த்தன் அவர் இயக்கம் பற்றி ஜஸ்ரின் அண்ணா சொல்லியுள்ளார் பாருங்கள்.
----------------------------------------👇
சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂?

புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎!

சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விளங்க நினைப்பவன் said:

குருசோ,  இப்போது சித்தார்த்தன் அவர் இயக்கம் பற்றி ஜஸ்ரின் அண்ணா சொல்லியுள்ளார் பாருங்கள்.
----------------------------------------👇
சித்தார்த்தன் பா. உவை எப்படி மறப்பது😂?

புளொட்டின் வவுனியா பிசினஸ் பொறுப்பு மாணிக்கதாசும் , சின்ன தாஸ் (அல்லது அலவாங்கு தாஸ்) என்ற அடியாளும். இவர்கள் சேர்க்கும் கப்பக் காசின் பங்கை வாங்க சித்தார்த்தன் கொழும்பிலிருந்து இராணுவ உலங்கு வானூர்தியில் யோசப் முகாமிற்கு வருவார், முகாமை விட்டு வெளியே வரார். வாகனத் தொடரணியாக தாஸ் அணி யோசப் முகாமுக்கு வந்து சித்தார்த்தனிடம் பங்கைக் கொடுத்து விட்டு திரும்பிப் போகும். இந்தச் சடங்கு ஓரிரு மாதங்களுக்கொருமுறை நடக்கும்! இரு தாஸ்களையும் புலிகள் கொன்ற பின்னர், ஊத்தை பவான் உள்ளூர் புளொட் தலைவரானார், அதன் பின்னர் சித்தார்த்தன் கை நனைப்பது கொஞ்சம் குறைந்தது. புலிகள் இல்லாமல் போன பின்னர் வவுனியா வந்து வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்டு, தேர்தலில் வென்று இப்போது "என் வேட்டி வெள்ளை" எனத் திரிகிறார்😎!

சம்பந்தரிடம் அரசியல் சார்ந்து முறைப்பாடுகள் இருக்கலாம் . ஆனால், அவர் நிதி ரீதியில் ஊழல்கள் செய்ததாக சிங்களவர்களே சொல்ல மாட்டார்கள். நம் ஆட்கள் தான் காழ்ப்புணர்வினால் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.

 

உவர் Just in அவிச்சு விடுவதை எல்லாம் நம்புகிறீர்களா? 
 

வவுனியா புகையிரத நிலைய வீதியில் பண்டாரிக்குளம் ஒழுங்கைக்கு அருகில் புளட்டின் அரசியல் பிரிவின் முகாம் இருந்தது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் அங்கு சித்தர் பொது மக்களை சந்திப்பார் .

அலவாங்கு தாசின் முழுக் கட்டுப்பாட்டில் வவுனியா புளட். கோவில் குளம் பகுதியில் இராணுவ முகாம்.

 

மேலும் உலங்கு வானூர்தியில் முழு இராணுவ பாதுகாப்புடன் ஜோசப் முகாமிற்கு வருவது மாணிக்க தாஸ். அந்த நேரத்தில் வவுனியாவே கதிகலங்கும்  பாதுகாப்பு கெடுபிடிகளால்.

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 33வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த கனடிய அணிக்கும் இந்திய அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன. முடிவு:  முடிவில்லை! இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது!    ------ 34வது போட்டி மழை காரணமாக அணிக்கு 10 ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வேகமாக அடித்தாடி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நமீபியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 84 ஓட்டங்களையே பெறமுடிந்தது. முடிவு:  இங்கிலாந்து அணி DLS முறையில் 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன.   34வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை!): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 54 2 ரசோதரன் 54 3 கோஷான் சே 54 4 ஈழப்பிரியன் 52 5 சுவி 52 6 நந்தன் 52 7 தமிழ் சிறி 48 8 ஏராளன் 48 9 கிருபன் 48 10 கந்தப்பு 48 11 வாத்தியார் 48 12 எப்போதும் தமிழன் 48 13 நீர்வேலியான் 48 14 வீரப் பையன்26 46 15 நிலாமதி 46 16 குமாரசாமி 46 17 தியா 46 18 வாதவூரான் 46 19 அஹஸ்தியன் 46 20 கல்யாணி 46 21 புலவர் 44 22 P.S.பிரபா 44 23 நுணாவிலான் 44
    • வணக்கம்! இங்கே நாம் எல்லோரும் கருத்துதான் எழுதுகின்றோம். இன்ன படிப்பு படித்து அதற்குரிய அறிவை இங்கு பகிர்கின்றோம் எனவும் எழுதவில்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை இங்கே எழுதுகின்றார்கள். அல்லது தங்கள் அறிவிற்கேற்ப எழுதுகின்றார்கள். அவ்வளவுதான். அடுத்தவருக்கு அடிப்படை அறிவில்லை என்பதை தீர்மானிக்க உங்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை என நினைக்கின்றேன். இது நான் விட்ட பிழைகளின் அனுபவம்.
    • டொக்டர்,எஞ்சினியர் கலாச்சாரம் உள்ள நாட்டில் எதையும் எதிர்பார்க்க முடியாது. மத செறிவூட்டல் போல் இலங்கை இந்திய நாடுகளில் உள்ள பிள்ளைகளை டொக்டர் இஞ்சினியர் என்ற மடப்பள்ளி சிந்தனை ஊட்டல்களை தூக்கியெறிய வேண்டும். பிள்ளைகளை சுய சிந்தினையில் வளர்க்காமல் நீ டொக்டருக்கு படி...நீ எஞ்சியருக்கு படி என்ற மூளைச்சலவைகளால் நாடும் முன்னேறவில்லை. மக்களும் முன்னேறவில்லை. மாறாக அறப்படித்தவர்களே தற்கொலை உதாரணங்களாக மாறிவிட்டார்கள்
    • இங்கே பலருக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த அடிப்படை அறிவே இல்லையென்பது அவர்கள் இங்கு எழுதும் கருத்துக்களில் அவ்வப்போது தெரிகிறது. முதலாவதாக, இலங்கையின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பது இலங்கையின் தமிழரின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் எப்போதாவது ஒரு கோரிக்கையாக, அபிலாஷையாக இருந்திருக்கிறதா? இல்லை. அப்படியிருக்க ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் ஒருவர் நிற்பது தோல்வியைத்தான் தரும் என்று ஆளாளுக்கு கட்டியம் கூறுவது ஏன்? அப்படியானால் உங்களைப்பொறுத்தவரை தமிழருக்கு இருக்கும் பிரச்சினையெல்லாம் தம்மில் ஒருவரை ஜனாதிபதியாக்குவதுதான் என்று  நீங்கள் நம்புவது போலல்லவா இருக்கிறது? ஆகவே, முதலில் இந்த மாயையில் இருந்து வெளியே வாருங்கள். இலங்கை என்பது சிங்கள பெளத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு. ஆகவே சிறுபான்மையினமான தமிழரில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாவது மிகவும் கடிணமானது, அது தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளில் ஒன்றும் அல்ல. இந்தத் தெளிவு இருந்தால் பொதுவேட்பாளர் குறித்த உங்களின் சர்ச்சைகளில் 50 வீதம் தெளிவாகி விடும். 
    • 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானித்தினை 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் ஆணையாக முன்வைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றது. தமிழ் மக்களின் "ஆணை" என்று பேசும்போது, அது 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவே தொடர்ச்சியாகப் பேசப்பட்டு வருகிறது. இந்த மக்கள் ஆணையின் அடிப்படையிலேயே தனிநாடு, சுயநிர்ணய உரிமை, இறைமை, பூர்வீக தாயகம் ஆகிய விடயங்களை முன்வைத்து அரசியல் ரீதியிலும், ஆயுத ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, இந்த ஆணை என்பது எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஆகவே, பொதுவேட்பாளர் இந்த ஆணையினைத்தான் மீளவும் புதுப்பித்து ‍ நினைவுபடுத்த தேர்தலில் நிட்கிறார் என்றால் அது எவ்வாறு தவறாக இருக்க முடியும்?  சுமந்திரன் கூறும் "எமக்கு மட்டுமே தந்த ஆணை" என்பதற்கும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை என்பதற்கும் இடையில் வேறுபாடு இருக்கிறதா? இல்லையென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை சுமந்திரன் ஏன் எதிர்க்க வேண்டும்? நீங்கள் செய்யவேண்டியதை, ஆனால் செய்ய மறுப்பதை சிவில் சமூகம் செய்கிறது, அவ்வளவுதான். ஆனால், பிரச்சினை அதுவல்ல. சுமந்திரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆணை ரணிலை ஜனாதிபதியாக்குவது. அது மக்களால் அவருக்கு வழங்கப்பட்ட ஆணை அல்ல. அது, ரணிலால் "தமிழரசுக் கட்சிக்கு இடப்பட்ட ஆணை". ஆகவே, அதனை அவரும், அவரது கட்சியினர் மட்டுமே செய்யமுடியும். வேறு எவரும் அதில் பங்கு கேட்க முடியாது. அது தமிழ் மக்களாக இருந்தாலென்ன, சிவில் சமூக அமைப்புக்களாக இருந்தாலென்ன.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.