Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN   04 FEB, 2024 | 09:58 AM

image

ஈழம் அழிந்ததற்கு திமுகவை மட்டும் குறை கூறுகிறார்கள், ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னையில் சர்.பி.டி. தியாகராயர் மண்டபத்தில் நடைபெற்ற ஈழம் குறித்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசியதாவது:

ஈழத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு காரணம் கருணாநிதி மற்றும் திமுக தான் என்று கூறினால் அது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் பயன் தரலாம் ,ஆனால் ஈழத்தமிழர்களுக்கு எப்போதும் பயன் தராது.

ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் கருணாநிதியை மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை.

இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டம் கூட நடைபெறவில்லை. உலக நாடுகள் ஈழத் தமிழர்களை பயங்கரவாதிகள் என திரும்ப திரும்ப குறை கூறியுள்ளனர். ஈழத் தமிழர்களை மிகப் பெரிய ஆயுதக் குழுக்களாக மாற்றியது காங்கிரஸ்தான். இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் பேசினார்.

https://www.virakesari.lk/article/175495

  • கருத்துக்கள உறவுகள்

திருமால் வளவன் தன் சுயத்தை இப்படி தான் இழந்து வருகிறார். 

திமுக பொறுப்பில் இருந்தது. ஆனால் அதன் தலைவர் படம் காட்டி ஏமாற்றினார் அந்த வலி எமக்கு மட்டுமே புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

ஈழம் அழிந்ததற்கு தமிழ்நாட்டில் உள்ளவர்கள் திமுகவையும் கருணாநிதியை மட்டுமே குறை கூறினார்கள். ஆனால் உலக அளவில் ஈழத்தை அழிக்க செய்யப்பட்ட அரசியலைப் பற்றி யாரும் பேசவில்லை

கருணாநிதியை  மட்டுமல்ல உலகில் யாரை எல்லாம் இதற்காக குற்றம் சாட்ட முடியுமோ அவர்களை எல்லாம் இழுத்து குற்றம் சாட்டுவார்கள். அப்படிக்குற்றம் சாட்டும் போது மற்றய விரல்கள் தம்மை குற்றம் சாட்டுவதை மறந்துவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

கருணாநிதியை  மட்டுமல்ல உலகில் யாரை எல்லாம் இதற்காக குற்றம் சாட்ட முடியுமோ அவர்களை எல்லாம் இழுத்து குற்றம் சாட்டுவார்கள். அப்படிக்குற்றம் சாட்டும் போது மற்றய விரல்கள் தம்மை குற்றம் சாட்டுவதை மறந்துவிடுவார்கள். 

இப்படியே மாற்றி மாற்றி எழுதுங்கள்.

விரல்களை பற்றி நான் சொன்னால் உங்களுக்கு அவை புரிவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இப்படியே மாற்றி மாற்றி எழுதுங்கள்.

விரல்களை பற்றி நான் சொன்னால் உங்களுக்கு அவை புரிவதில்லை?

நீங்கள் சொன்னதைத் தான் கூறினேன். இதை எனக்கு கற்பித்த ஆசிரியரான உங்களுக்கு நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் குத்தி முறிந்தாலும் இனி திமுக குடும்ப அரசியலை தமிழக மக்கள் ரசிக்கபோவது கிடையாது அதற்கு சேலம் இளைஜர்அணி மாநாடு சாட்சி 2௦௦9கர்மா விடாது துரத்தும் மற்றைய ராகுல் காந்தி ஆட்களே இல்லாத இடத்தை நோக்கி கையை அசைகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் திருமா. 

அவர் தூக்கிப்பிடித்த அரசியல் பொய்த்துப் போவது அவருக்கு புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும் அதை அப்பட்டமாக தனது சாதி மக்களிடம் கூற முடியாது தவிக்கிறார்.  அதனால் பழியை எங்காவது   போட்டுத்தானே ஆக வேண்டும். 

அதிமுக, திமுக  வரிசையில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பலமிழந்து போவது கண்கூடாகத் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2024 at 18:21, island said:

கருணாநிதியை  மட்டுமல்ல உலகில் யாரை எல்லாம் இதற்காக குற்றம் சாட்ட முடியுமோ அவர்களை எல்லாம் இழுத்து குற்றம் சாட்டுவார்கள். அப்படிக்குற்றம் சாட்டும் போது மற்றய விரல்கள் தம்மை குற்றம் சாட்டுவதை மறந்துவிடுவார்கள். 

சார்வாள் 
ஈழம் அழிந்ததற்கு எவருமே காரணமில்லாமல் இருக்கலாம். ஆனால் யார் யார் ஈழத்தமிழருக்கு ஆதரவில்லாதவர்கள் என்பதை சொல்லிக்கொண்டேயிருக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டல்லவா.
அவர்களது வாயில் ஈழம் வந்தால் எங்களது வாயில் அவர்களது வண்டவாளங்கள் வரும் அதை தவிர்க்க முடியாது   

On 4/2/2024 at 20:21, Kapithan said:

பாவம் திருமா. 

அவர் தூக்கிப்பிடித்த அரசியல் பொய்த்துப் போவது அவருக்கு புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும் அதை அப்பட்டமாக தனது சாதி மக்களிடம் கூற முடியாது தவிக்கிறார்.  அதனால் பழியை எங்காவது   போட்டுத்தானே ஆக வேண்டும். 

அண்ணன் திருமா 
2 சீட்டு மட்டன் குருமாவாகி பலகாலம், மணிப்பூருக்கு பாய்ந்து பாய்ந்து தவிலடிக்கும் சமூகநீதி போராளி 
தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகனாலும் மருமகளாலும் சொல்லெண்ணா கொடுமைகளை அனுபவித்த 
பட்டியல் இனப்பெண் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. வழமை போல  அந்தப்பெண் கூறிய அத்தனைக்குற்றச்சாட்டையும் போலியானவை என்று தி.மு.க கைவரிசையை காட்டி அப்படியே அமுக்கிவிட்டது   

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.