Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ)  பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை 

 

....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு...

இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்  காதலர் தினத்திற்காக  வாசுகி  மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வழமை போல லெட்டாக வரவேண்டாம்" என  சிணுங்கலுடன் சொன்னாள்.

திரு வேலை பளுகாரணமாக  "ஒம் " என   சொல்லி தனது குரளை எப்படி எழுதி முடிப்பது என ஆராச்சியில் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தார் .இரு வரிகளில் ஏழு சொற்களில் எல்லாவற்றையும் அழகிய இலக்கிய இலக்கண தமிழில் எழுதுவது  இலகுவான காரியமல்ல என்பது நீங்கள் அறிந்ததே.....தனது நிழலை பார்த்தார், மறைந்து விட்டது வீடு செல்லும் நேரம் என நினைத்து எழுதி கொண்டிருந்த ஒலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் தூக்கி கொண்டு வீடு சென்றார்.

வழமையாக வாசலில் வந்து வரவேற்கும் வாசுகியோ வந்து வரவேற்கவில்லை அதை திரு பெரிதாக கண்டு கொள்ளவில்லை ,வாசுகியோ அவரது கையில் இருப்பது திருநெல்வேலி அல்வா ஆகா இருக்குமோ என ஆசையுடன் எட்டி பார்த்தாள் ,புரிந்து கொண்டாள் கிழவன் வழமை போல ஒலைகளை சுருட்டி கொண்டு வந்திருக்கிறது ..இந்த ஒலைகளினால் என்ன பயன் என மனதில நினைத்தவாறு கையில் இருந்த அகப்பையை தரையில் வீசினாள்..

 

அன்று ஐயன் திரு 1108 ஆவது குரளை எழுதி கொண்டிருந்தார் .

அதுதான்

"வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை

போழப் படா அ....."

வீடு போகும் வரை இதை எப்படி முடிப்பது என தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்து வீடு சென்றும் எழுத முடியாமல் தவித்த வண்ணமிருக்கையில் திரு ,வாசுகியின் அகப்பை  சத்ததை கேட்டு ஒடிச் சென்று முயக்கினான் (கட்டி தழுவினார்)

ஏற்கனவே திரு மீது மிகவும் கடுப்புடன் இருந்த வாசுகி தள்ளி போங்கள் என கூறி விலகிச்சென்றாள்.

உடனே வள்ளுவனுக்கு தனது 1108 ஆவது குரலின் இறுதிச் சொல் உதிக்கவே ஒடிச்சென்று "முயக்கு" என அந்த குரளை எழுதி முடித்து விட்டு மீண்டும் வாசுகியிடம் வந்தார்.

வாசுகியோ அவரை பார்க்காமல் வேறு திசையை பார்த்தவாறு இருந்தாள்.திருவுக்கு புரிந்து விட்டது மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றாள் ,இருந்தாலும் என் வரவுக்காகவும் என்னை மகிழ்ச்சி படுத்தவும் மல்லிகை பூ அழங்காரத்துடன் இன்னும் இருக்கின்றாள் ....திரு ஏற்கனவே எழுதிய 1108 குரளினால் உணர்ச்சி பிழம்பாக இருந்தார் ...வாசுகியின் அருகே சென்று  கண்ணே ஏன் இந்த ஊடல் என மிகவும் தாழ்மையாக கெஞ்சி குலாவி கேட்க ,

"உங்களுக்கு காலையில் என்ன கூறி வழி அனுப்பினேன் "

சிறுது நேரம் யோசித்த திரு

"மாலையில் சற்று விரைவாக வருமாறு"

"ஏன் வரவில்லை"

"வேலைப்பளு கண்ணே"

"இன்று என்ன நாள் என தெரியுமா"

"தெரியவில்லையே தேனே"

"காதலர் தினம் ,பக்கத்துவீட்டில் அவர்கள் இருவரும்  காலையில் இருந்து கொண்டாடுகிறார்கள்,அவளது கணவன் அல்வா வாங்கி கொடுத்ததாக எனக்கு கொண்டு வந்து தந்தாள் .."

"அவன் அல்வா தான் கொடுத்தான் நான் உனக்காக குரளே எழுதியுள்ளேன் அந்த குரளின் இறுதி சொல்லும் உன்னை கண்டதும் உதித்தது  மலரே"

"எங்கே வாசியுங்கள்"

திரு  உணர்ந்து கொண்டார் தப்பு செய்து விட்டேன் ..உடனே அவளின் அருகில் சென்று அவரது 1108 குரளை வாசித்தார் .

வாசுகி தன்னிலை மறந்தாள் ,திருவும் தன்னிலை மறந்தார் .இருவரும் உச்சத்துக்கு சென்று பிரிந்தனர்.

கண்ணே நீ இன்று என் மீது கோபம் கொண்டாய்,அதன் காரணத்தை உணர்ந்தேன் நீயும் உணர்ந்தாய் முடிவில் கூடினோம், காதல் தினம் அல்வா கொடுப்பதோ பூக்கள் கொடுப்பதோ அல்ல என சிரித்தபடி தனது மீசையும் ,தாடியையும் தடவினார்.

"மலரே,எனக்கு இன்று இன்னோரு குரளும் எழுத கை துடிக்கின்றது"

"எழுதுங்கள் நாதா"

"ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்

கூடியோர் பெற்ற பயன்"

"அருமை நாதா"

வாசுகியை தன் வசம் மயக்கிய   மகிழ்ச்சியில்  

"பூவே ,எனது இந்த அதிகாரத்தை எழுதி முடிக்க இன்னுமொரு குரள் தேவை படுகிறது"

"எழுதுங்கோ பிரபு"

" அதற்கும் உன் ஒத்துழைப்பு வேண்டும் இளவ்ரசியே"

" இன்று இவை போதும் நாதா ,நாளை மிகுதி குரளை எழுதுவோம் "

என கூறி திருவின் வயிற்றில் செல்லமாக குத்திவிட்டு சென்றாள்

 

..

  • கருத்துக்கள உறவுகள்

என்ன புத்தன் ஒரு சம்பையின் , சிவப்பு ரோஜாக்கள் ( அப்போதும் ஏதாவது இருந்திருக்கும்) என காதலர் தினத்தை கொண்டாட குறளை வைத்து காதலர் தினம் கொண்டாடிய திருவுக்கு .................🙂

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளுவன் குறளில் வாசுகியும்  மயங்க 

முயங்கி எழுந்தனன் முனியும்.....!

நல்லதோர் கிறுக்கல்......நன்றி புத்ஸ் ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் தப்பி விட்டார்..😀

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, யாயினி said:

சிட்னி முருகன் தப்பி விட்டார்..😀

இப்போ ஒரு Break கொடுத்திருக்கு .😄

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

காதல் தினம் அல்வா கொடுப்பதோ பூக்கள் கொடுப்பதோ அல்ல என சிரித்தபடி தனது மீசையும் ,தாடியையும் தடவினார்.

இப்படிப்பட்ட வள்ளுவனுக்கு  உலகில் பல நாடுகளில் சிலைகள் வைத்து வணக்குவது   தேவை தானா??  அருமையான பதிவு  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, nunavilan said:

என்ன புத்தன் ஒரு சம்பையின் , சிவப்பு ரோஜாக்கள் ( அப்போதும் ஏதாவது இருந்திருக்கும்) என காதலர் தினத்தை கொண்டாட குறளை வைத்து காதலர் தினம் கொண்டாடிய திருவுக்கு .................🙂

செவ்வரத்தை பூ  கொடுத்திருப்பார்...நன்றி Nuna

20 hours ago, suvy said:

வள்ளுவன் குறளில் வாசுகியும்  மயங்க 

முயங்கி எழுந்தனன் முனியும்.....!

நல்லதோர் கிறுக்கல்......நன்றி புத்ஸ் ......!   😂

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி Suvy

20 hours ago, யாயினி said:

சிட்னி முருகன் தப்பி விட்டார்..😀

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி யாயினி கொஞ்ச நாளைக்கு முருகனுக்கு லீவு கொடுத்து வள்ளுவரை வம்புக்கு இழுக்கிற பிளான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kandiah57 said:

இப்படிப்பட்ட வள்ளுவனுக்கு  உலகில் பல நாடுகளில் சிலைகள் வைத்து வணக்குவது   தேவை தானா??  அருமையான பதிவு  

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி Kandiah   

கருணை தான் கடவுள் என சொன்ன புத்தனையே கடவுளாக்கி அவன் பெயரில் உலகில் எவ்வளவோ அட்டகாசம்...
சில்லறை அதிகமானால் 
சிலை வைப்பார்கள் 
அம் மனிதர்கள் சொன்ன போதனைகளை
சின்னதனமாக நினைப்பார்கள்
 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் காதலர் தினத்தை யார் தொடக்கியிருப்பார்கள் எ
ன்று.

இப்ப தான் தெரியுது

திரு.திரு தான் தொடக்கியிருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

இவ்வளவு நாளும் காதலர் தினத்தை யார் தொடக்கியிருப்பார்கள் எ
ன்று.

இப்ப தான் தெரியுது

திரு.திரு தான் தொடக்கியிருக்கிறார்.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி ...சங்க காலத்திலயே இருக்கு என்று சொன்ன நம்பவ மாட்டினம் நம்ம ஆட்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.