Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3  21 FEB, 2024 | 09:28 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொண்டதை போன்று எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இந்தியர்கள் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள். ஜனாதிபதியின் தேசியத்துக்கு எதிரான செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு பொதுஜன பெரமுனவினர் வெட்கமில்லாமல் இருக்கிறார்கள். பிரதமர் தினேஷ் குணவர்தன பூனை போல் செயற்படுகிறார். அமைச்சரவை உறுப்பினர்கள் முட்டாள்களை போல் உள்ளார்கள் என   தேசிய சுதந்திர முன்னணியின்   தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல்   வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்ற அமர்வில்  பிணைப் பொறுப்பாக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் சட்டமூலம், நம்பிக்கைப் பொறுப்பு பற்றுச்சீட்டுக்கள் (திருத்தச் ) சட்டமூலம் உள்ளிட்ட ஏழு சட்டமூலங்கள் இரண்டாம் வாசிப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.இவ்விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து  மீள்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஆளும் தரப்பினர் குறிப்பிடுவது உண்மையல்ல,நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பதிலாக நெருக்கடிகளை தீவிரப்படுத்தி என்றும் விடுப்படாத  நடவடிக்கைகள் மாத்திரமே தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். ஆகவே மறுசீரமைப்பு  தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.

அமைச்சர் ஹரின் பிரனாந்து  அண்மையில் இந்தியாவுக்கு சென்று 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஹரின் பிரனாந்து  இந்தியாவில் ஆற்றிய உரையை  ஊடகங்கள்திரிபுப்படுத்தியுள்ளதாகவும்,செம்மைப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிடுகிறார்.அமைச்சர் ஹரின் பிரனாந்து குறிப்பிட்ட கருத்தை எவரும் திரிபுப்படுத்தவில்லை.

தேசியத்துக்கு எதிரான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது ராஜபக்ஷர்கள் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.பொரலுகொட சிங்கம் என்று குறிப்பிடப்படும் பிரதமர் தினேஷ் குணவர்தன தற்போது பூனை போல் அமைதியாக உள்ளார்.

டெலிகொம் நிறுவனம்,மின்சார சபை மன்னாரில் உள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவா பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள். இலங்கையில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றை இந்தியாவுக்கு வழங்குவதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிடுகிறார்.அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை எதிர்வரும் மார்ச்  மாதம் கைச்சாத்திட அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் இலங்கையின் சகல தொழிற்றுறைகளிலும் ஈடுப்பட இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.எட்கா ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை ஆளும் தரப்பின் எத்தனை உறுப்பினர்கள் அறிவார்கள்.வழங்குதை சாப்பிட்டு விட்டு இருப்பதை மாத்திரமே பிரதான செயற்பாடாக கொண்டுள்ளார்கள்.

200 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய தமிழர்களை வெள்ளையர்கள் இலங்கையில் தங்க வைப்பதற்காக  மலையக பகுதிகளுக்கு அழைத்து வரவில்லை.தொழிலுக்காகவே அழைத்து வரப்பட்டார்கள்.  பிற்பட்ட காலத்தில் சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தத்தின் ஊடாக மலையக தமிழர்கள் பலர் நாடு கடத்தப்பட்டார்கள்.சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் சரியானது என்று குறிப்பிடும் தரப்பினர்கள் இன்று எட்கா ஒப்பந்தத்துக்கு சார்பாக செயற்படுகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் 200 ஆண்டுகளுக்கு முன்னர் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டவர்கள் இலங்கையில் நிரந்தரமாக தங்கியதை போன்று இந்தியர்களும் இலங்கையில் நிரந்தரமாக குடி கொள்வார்கள்.இந்தியர்கள் வெற்றிலை கடை கூட இலங்கையில் வைப்பார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நன்கு அறிவார். அதனால் தான் எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியதாகவே அவர் 'இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி ' என்று குறிப்பிட்டுள்ளார். வழங்குவதை சாப்பிட்டு விட்டு,அமைதியாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாட்டை அறிய மாட்டார்கள்.பாராளுமன்றத்தில் கையுயர்த்துவதற்காகவே  பொதுஜன பெரமுனவை ஜனாதிபதி பயன்படுத்திக் கொள்கிறார்.

அண்மையில் தாய்லாந்து நாட்டுடன் சுதந்திர ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவில்லை.முட்டாள்தனமான அமைச்சரவை உறுப்பினர்கள்  ஒப்பந்தத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளார்கள். எட்கா ஒப்பந்தத்துக்கும் இவர்கள் ஆதரவு  வழங்குவார்கள்.

நாட்டின் இறையாண்மையை பிற நாட்டில் காட்டிக் கொடுத்துள்ள அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராக பேசுவதற்கும், அவரை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றுவதற்கும் எவருக்கும் தற்றுணிவு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வெட்கம் என்பதொன்று கிடையாது. 69 இலட்ச மக்களாணைக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ராஜபக்ஷர்கள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்.

எட்கா ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் ஒரு அரச அதிகாரி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சிவில் தரப்பினர் இந்த ஒப்பந்தம் குறித்து  ஜனாதிபதி அலுவலகத்துக்கு சென்று அவரிடம் கேள்வி கேட்ட போது 'எதனையும் குறிப்பிட முடியாது' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எட்கா ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் ஒரு அணி செயல்படுகிறது ஆனால் இலங்கை சார்பில் ஒரு நபர் மாத்திரமே செயற்படுகிறார். ஆகவே எட்கா ஒப்பந்தத்துக்கு ஆதரவு வழங்கும் தரப்பினர்  தேச துரோகிகளாக கருதப்படுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/176922

  • கருத்துக்கள உறவுகள்

விமல் இப்போதும் சிகப்பு நிறச் சட்டை அணிகிறாரா? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

விமல் இப்போதும் சிகப்பு நிறச் சட்டை அணிகிறாரா? 

அதை கழட்டி இப்போது வெள்ளையும்  சொள்ளையுமாகத்தான் திரிகிறார். ஆனாலும் இந்த ஒப்பந்தம் என்னவென்று சரியாக வெளிப்படுத்தப்பட வில்லை. அப்படி இருக்குமாக இருந்தால் அவர் சொலவதில் உண்மையில்லாமலும் இல்லை. நிச்சயமாக மலையாளிகள் இங்கு வந்து குடியேறுவார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்கா ஒப்பந்தம் இந்தியர்களுக்கு சாதகமாக அமையும் - சரத் வீரசேகர

21 FEB, 2024 | 05:20 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

நாட்டின் முக்கிய கேந்திர மையங்களான துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு நேரடி தாக்கங்களை ஏற்படுத்தும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியாவுக்கு சாதகமாக செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (21) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு தற்போது சற்று மீண்டுள்ளது  என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகள் வெற்றிப் பெற்றுள்ளது என்பதையும், மக்களுக்கு பெரும் தடையாக இருந்த போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்ததையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு சாதகமான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் ரூபாவை இலங்கையில் பாவிப்பதற்கும், இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக அடையாளப்படுத்துவதற்கும் எடுக்கும் செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லை. கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம்.

நாட்டின் முக்கிய கேந்திர மையங்களாக உள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களை இந்திய  நிறுவனங்களுக்கு வழங்குவதால் நாட்டின் தேசிய பாதிப்பு நேரடியான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் என்பதை வெளிப்படையாக குறிப்பிட வேண்டும்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திட விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இந்தியாவில் 44 இலட்சம் பேர் தொழில் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.

அதேபோல்   2 இலட்சம் வைத்தியர்களும், 15 இலட்சம் பொறியியலாளர்களும் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு இவர்களுக்கு இலங்கையின் தொழிற்றுறைகளை  வழங்கினால் இலங்கையின் இளைஞர் யுவதிகளின் நிலை என்னவாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின்  நிபந்தனைக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. ஆகவே மாற்றீடு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

பிரிக்ஸ் அமைப்புடன் ஒன்றிணைவது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு  கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தான் பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது என்றார்.

https://www.virakesari.lk/article/176952

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

அவ்வாறாயின் இந்த நாட்டின் என்ன மிகுதியாகும்.பாராளுமன்றத்தையும் இந்தியாவுக்கு வழங்கலாமே?

நீங்களாகவே 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுத்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்லது...அவர்கள் எடுத்தால் பிறகு நீங்கள் ஹிந்தி படம் பார்த்து பைலா அடிக்கும் நில வரலாம்..

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

. நிச்சயமாக மலையாளிகள் இங்கு வந்து குடியேறுவார்கள். 

காலனித்துவ காலத்தில் பல மலையாளிகள் குடியெறி இன்று அவர்கள் சிறிலங்கா பிரஜைகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்கின்றனர்...இந்து மலையாளிகள் தமிழ் மொழி பேசி இந்துக்களாக மாறி உள்ளனர்..முஸ்லீம் மலையாளிகள்  இஸ்லாமியர்கள் என்ற அடையாலத்துடன் வாழ்கின்றனர்,கிறிஸ்தவர்கள் ஆங்கிலம் பேசி தம்மை சிங்கள மேட்டுக்குடியினருடன் இரண்டர கலந்து சிஙள்வராக மாறிவிட்டனர்....பொருளாதாரத்தில் பின்னடைந்த ,கல்வி அறிவு குறைந்த மலையாளிகள் நீர் கொழும்பு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு இன்று தீவிர சிங்கள தேசிய பற்றாளர்களாக வாழ்கின்றனர் ...

சிறிலங்கா காலணித்து காலத்தில் மிகவும் செல்வ செழிப்புடன் இருந்துள்ளது ..இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது...எனவே இந்தியாவிலிருந்து சிலர் தொழில் மற்றும் வியாபரம் செய்ய வந்து குடியுரிமை பெற்று விட்டனர்...

இதில் பகிடி என்னவென்றால் சிங்களவர்கள் நினைப்பது போல தமிழர்கள் தான் குடியேற்ற வாசிகள் என்று...ஆனால் அவர்களுடன் நின்று சிங்கள தேசியம் பேசும் பலர் 
இந்தியாவிலிருந்து வந்த மக்கள் கூட்டமும் அடங்கும் என்பதையும் மறந்து விட்டனர்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

எட்கா ஒப்பந்தம்

எட்கா ஒப்பந்தம் என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

எட்கா ஒப்பந்தம் என்றால் என்ன?

Economic and Technology Cooperation Agreement

 
 

The Economic and Technology Co-operation Agreement (ETCA) is a proposed diplomatic arrangement that seeks to add to the existing free trade agreement between the Republic of Indiaand the Republic of Sri Lanka, primarily in relation to trade-in services and the service sector; it seeks to emulate a proto freedom-of-movementsystem and a single market.[1]

220px-Indian_Prime_Minister_Narendra_Modi_and_Sri_Lankan_President_Maithripala_Sirisena.jpg Indian Prime Minister Narendra Modi and Sri Lankan President Maithripala Sirisena

The proposal is championed by supporters as a method to introduce low-cost goods for low-income people in Sri Lanka and increase sales of high-end goods to India, while also making Sri Lanka more attractive for FDI.[2] But many lobby groups have become concerned that India would flood Sri Lanka with cheaper labor, with the IT industry in particular worried about the influx of cheaper Indian tech workers.[3] The high unemployment rate of India has been pointed out by many nationalist groups.[4] Sri Lanka expresses its gratitude to India for preventing a potential catastrophe and preserving peace.[5]

The proposed agreement's impact has been estimated to be an increase of $500 billion to the common economy.[6] It has been likened to the economic union undertaken between the North-East Asian countries of Taiwan and People's Republic of China called the Economic Cooperation Framework Agreement, and both agreements share issues with the island nation's people worrying about being undercut by cheaper laborers from the mainland.[7]

 

https://en.m.wikipedia.org/wiki/Economic_and_Technology_Cooperation_Agreement

 

Resurgence of Sri Lanka-India Economic Ties: 12th Round of ETCA Negotiations Paves the Way for Prosperity

 November 02, 2023
  • facebook sharing button
    twitter sharing button
    pinterest sharing button
    email sharing button
    sms sharing button
    sharethis sharing button
 
Resurgence of Sri Lanka-India Economic Ties: 12th Round of ETCA Negotiations Paves the Way for Prosperity
 

In a significant development that marks a milestone in Sri Lanka’s economic and technological journey, the 12th Round of Economic and Technology Cooperation Agreement (ETCA) negotiations between Sri Lanka and India took place from the 30th of October to the 1st of November 2023 in Colombo.

Sri Lanka’s vision has always been to integrate with the largest economies in Asia and East Asia, emphasizing export diversification while maintaining and nurturing existing major export markets. The ultimate goal is to connect with key players through the global value chain to boost the country’s economy and improve the living standards of its people.

The discussions during this round of negotiations hold immense promise. The visit of the President of Sri Lanka to New Delhi on the 29th of July 2023 set the stage for a renewed commitment to the ETCA, which had been on hold since 2018. Both the Heads of States, representing Sri Lanka and India, agreed to comprehensively enhance bilateral trade and investments, especially in new and priority areas.

A delegation of 19 Indian officials, led by Shri Anant Swarup, Chief Negotiator and the Joint Secretary of the Department of Commerce, Ministry of Commerce and Industry of India, visited Sri Lanka. They engaged in extensive discussions on this comprehensive Agreement.

Representing Sri Lanka in these crucial negotiations was the National Trade Negotiating Committee (NTNC), headed by Mr. K.J. Weerasinghe, the Chief Negotiator from the Presidential Secretariat. The Sri Lankan Negotiation Team included representatives from the Ministry of Foreign Affairs, Ministry of Trade, Commerce and Food Security, Ministry of Industries, Department of Trade & Investment Policy, Attorney General’s Department, Department of Commerce, Department of Agriculture, Central Bank of Sri Lanka and Board of Investment, among others.

The discussions during the 12th Round covered a wide range of topics, including Goods, Services, Rules of Origin, Trade remedies, Customs Procedures and Trade Facilitation, Technical Barriers to Trade, Sanitary and Phytosanitary Measures and Legal and Institutional Affairs. Additionally, a special session was dedicated to addressing implementation-related issues of the existing India-Sri Lanka Free Trade Agreement (ISFTA).

This resumption of ETCA negotiations represents a significant step towards strengthening the economic partnership between Sri Lanka and India. It underlines the commitment of both nations to foster collaboration in various sectors, ultimately benefiting their economies and the well-being of their citizens. As the talks progress, it is anticipated that this agreement will open up new avenues for trade and investment, bringing prosperity to both nations in the ever-evolving global landscape.

https://www.news.lk/news/political-current-affairs/item/35844-resurgence-of-sri-lanka-india-economic-ties-12th-round-of-etca-negotiations-paves-the-way-for-prosperity

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

காலனித்துவ காலத்தில் பல மலையாளிகள் குடியெறி இன்று அவர்கள் சிறிலங்கா பிரஜைகளாக பரம்பரை பரம்பரையாக வாழ்கின்றனர்...இந்து மலையாளிகள் தமிழ் மொழி பேசி இந்துக்களாக மாறி உள்ளனர்..முஸ்லீம் மலையாளிகள்  இஸ்லாமியர்கள் என்ற அடையாலத்துடன் வாழ்கின்றனர்,கிறிஸ்தவர்கள் ஆங்கிலம் பேசி தம்மை சிங்கள மேட்டுக்குடியினருடன் இரண்டர கலந்து சிஙள்வராக மாறிவிட்டனர்....பொருளாதாரத்தில் பின்னடைந்த ,கல்வி அறிவு குறைந்த மலையாளிகள் நீர் கொழும்பு பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டு இன்று தீவிர சிங்கள தேசிய பற்றாளர்களாக வாழ்கின்றனர் ...

சிறிலங்கா காலணித்து காலத்தில் மிகவும் செல்வ செழிப்புடன் இருந்துள்ளது ..இந்தியாவுடன் ஒப்பிடும் பொழுது...எனவே இந்தியாவிலிருந்து சிலர் தொழில் மற்றும் வியாபரம் செய்ய வந்து குடியுரிமை பெற்று விட்டனர்...

இதில் பகிடி என்னவென்றால் சிங்களவர்கள் நினைப்பது போல தமிழர்கள் தான் குடியேற்ற வாசிகள் என்று...ஆனால் அவர்களுடன் நின்று சிங்கள தேசியம் பேசும் பலர் 
இந்தியாவிலிருந்து வந்த மக்கள் கூட்டமும் அடங்கும் என்பதையும் மறந்து விட்டனர்..

விமலுக்கு இந்தியர்கள் என்றால் தமிழர்கள் என்ற எண்ணம். அதனால்தான் அவர் இந்திய என்று வரும்போது வீராவேசம் போடுகின்றார். நீங்கள் கூறியதுபோல் நிறைய மலையாளிகள் இங்கு சிங்களவர்களாக , தமிழர்களாக மாறி இருக்கிறார்கள். குருநாகல் எத்தனால் ஜான்சன் பெர்னாண்டோவும் ஒரு மலையாளிதான். ஆனால் நாட்டுப்பற்றுள்ள சிங்களவர்கள் போல பேசுவார். 
 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Cruso said:

குருநாகல் எத்தனால் ஜான்சன் பெர்னாண்டோவும் ஒரு மலையாளிதான். ஆனால் நாட்டுப்பற்றுள்ள சிங்களவர்கள் போல பேசுவார். 

அதில் தவறு இல்லை இலங்கை என்றால் தமிழர்  அல்லது சிங்கலவர் தான் அவர் ஜெய் ஹிந் என்றால் தான் தவறு.  இலங்கை தமிழர்கள் கனடாவில் மொன்றியலில் உள்ளோர் பிரஞ்சுகாராகவும், ரொறென்ரோவில் ஆங்கில மொழிபேசுபவர்களாகவும் வாழ்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

அதில் தவறு இல்லை இலங்கை என்றால் தமிழர்  அல்லது சிங்கலவர் தான் அவர் ஜெய் ஹிந் என்றால் தான் தவறு.  இலங்கை தமிழர்கள் கனடாவில் மொன்றியலில் உள்ளோர் பிரஞ்சுகாராகவும், ரொறென்ரோவில் ஆங்கில மொழிபேசுபவர்களாகவும் வாழ்கிறார்கள்.

அப்படி என்றால் அங்குவாழும் தமிழர்கள் வாழ்க தமிழ் ஈழம் என்று சொல்லுவதில்லையோ? அது சரிதான்  ஆங்கிலேயரும், பிரெஞ்சு காரரும் எதுக்கு வாழ்க தமிழ் ஈழம் சொல்ல வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Cruso said:

அப்படி என்றால் அங்குவாழும் தமிழர்கள் வாழ்க தமிழ் ஈழம் என்று சொல்லுவதில்லையோ? அது சரிதான்  ஆங்கிலேயரும், பிரெஞ்சு காரரும் எதுக்கு வாழ்க தமிழ் ஈழம் சொல்ல வேண்டும். 

🤣

எனக்கு தெரிந்த ஐரோப்பா வம்சாவழி ஒருவர் எனக்கு இடைகிடை தமிழில் வணக்கம் என்று சொல்வார் அது மாதிரி தான்

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்தியாவிடம் அடியும் குத்தும் வாங்கின தமிழர்களே.. ஹிந்தியாவை நட்பு நாடென்று கொண்டிருக்கினம். தற்போதைய ஜே வி பி கூட ஹிந்திய எதிர்ப்பை கைவிட்டிட்டுது. மகிந்தவின் வாலும் முன்னாள் ஜே வி பி ஆளுமான உவர் விமல்.. இன்னும் ஹிந்தியக் கடுப்பில் காலம் கழிக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

ஹிந்தியாவிடம் அடியும் குத்தும் வாங்கின தமிழர்களே.. ஹிந்தியாவை நட்பு நாடென்று கொண்டிருக்கினம். தற்போதைய ஜே வி பி கூட ஹிந்திய எதிர்ப்பை கைவிட்டிட்டுது. மகிந்தவின் வாலும் முன்னாள் ஜே வி பி ஆளுமான உவர் விமல்.. இன்னும் ஹிந்தியக் கடுப்பில் காலம் கழிக்கிறார். 

இவர் முன்னரும் இந்தியாவை காட்டி காட்டித்தான் சீனாவிடம் பணம் கறந்து கொண்டிருந்தார். அப்போது ஜேவிபி யும் இன்னும் சிலரும் இந்தியா எதிர்ப்பு கோஷங்களை போட்டுக்கொண்டிருந்தார்கள். தொழில் சங்கங்களும் எதிர்ப்பு கோசம் போடுவதில்லை.

இப்போது அநேகமாக விமல் கும்பலை தவிர மற்ற எல்லோரும் அமைதி காப்பது இவருக்கு பிரச்சினை ஆகி விட்ட்து. சீன பணம் கொடுப்பதையும் நிறுத்தி விட்ட்தாக அல்லது குறைத்து விட்ட்தாக அறிய  கிடைக்கிறது. எனவேதான் இன்னும் ஆக்ரோஷமாக இருக்கிறார். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.