Jump to content

ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாலி said:

ஏன் இந்த தேர்தல் நடக்குது?

அதுவா 🤣   அவருக்கு புதினுக்கு ரஷ்யாவிலும் தேர்தல் தான் நடத்துகிறேன், அதில் சென்ற தேர்தலில் 77 வீதம்  மக்கள் ஆதரவு இம் முறை 87 வீதம் மக்கள் ஆதரவு  தனது 100வது வயதில் நடைபெறுகின்ற தேர்தலில் 100 வீதம் ரஷ்ய மக்களின் ஆதரவை புதின் பெற்று கொண்டார் என்று உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பது அவரது ஆசை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

உலகில் போர் மூலம் அதிக அகதிகளை உருவாக்கிய பெருமை.. ஒபாமாவை சாரும்.. அவருக்கு உலக சமாதான நோபல் பரிசு.

அரபு வசந்தம் என கூறி நிம்மதியாக வாழ்ந்த மத்திய தரைக்கடல் சமூகங்களையும், வட ஆபிரிக்க சமூகங்களையும் நிர்க்கதியாக்கிய புகழும் பெருமையும் அவரையே சாரும்.

10 hours ago, nedukkalapoovan said:

உலகில் பேரழிவு ஆயுதம்.. அணு குண்டு வீசிய நாடு அமெரிக்கா. அதற்கு சனநாயக வேசம்.

கேட்டுக் கேள்வியில்லாமல் ஏனைய நாடுகள் மீது அணு குண்டையும் விமானத்தாக்குதல்களையும்  மேற்கொண்டவர்களுக்கு ஜனநாயவாதிகள் பட்டங்களும் நோபல் பரிசுகளும் சமர்ப்பணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாலி said:

ஏன் இந்த தேர்தல் நடக்குது?

ஏனைய நாடுகளில் நடைபெறுவது போல் ரஸ்யாவிலும் தேர்தல் நடக்கிறது. ரஸ்யா ஒன்றும் செய்வாய் கிரகத்தில் இல்லையே???

33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அதுவா 🤣   அவருக்கு புதினுக்கு ரஷ்யாவிலும் தேர்தல் தான் நடத்துகிறேன், அதில் சென்ற தேர்தலில் 77 வீதம்  மக்கள் ஆதரவு இம் முறை 87 வீதம் மக்கள் ஆதரவு  தனது 100வது வயதில் நடைபெறுகின்ற தேர்தலில் 100 வீதம் ரஷ்ய மக்களின் ஆதரவை புதின் பெற்று கொண்டார் என்று உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பது அவரது ஆசை

புட்டினின் 100 ஆவது வயதுக்கு இன்னும் 29 வருடங்கள் உள்ளது. சில வேளை உக்ரேனில் ஒரு தேர்தலை வைக்கலாம்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

உக்ரைன் ரஷ்சியாவின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத வரலாற்று உண்மை தெரியாதவர்களோடு ரஷ்சியா.. புட்டின் மட்டுமல்ல.. யாராலும் எந்த உண்மையான மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. உதாரணத்துக்கு சொறீலங்காவில் தமிழர் தாயக இருப்பை மறுப்பவர்களுக்கு ஒப்பானது.

இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் கிந்திய  ஊடுருவலை புரிந்து கொள்ள முடியாதவர்கள் உக்ரேன்/ரஷ்ய அரசியலை நன்கு புரிந்துள்ளார்களாம். நன்றி விசுவாசிகளாம்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kandiah57 said:

குறிப்பு,....நான் கேட்ட கேள்வி,...............க்கு,     பதில் எங்கே,. எங்கே,.... ???????????????????? 

நான் பதில் சொல்லி விட்டேன். 🤣

எங்கே உங்கள் பதில்....? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

05e1c22_5943985-01-06-664x375.jpg

ரஷ்ய ஜனாதிபதி தேர்தல் : அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதியான விளாடிமிர் புடின்.

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புடின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார்.

ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று முடிவடைந்தது.

உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் 87.8 சதவீத வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இதன்மூலம் 71 வயதான புதின், அடுத்த 6 ஆண்டுக்கு ரஷியாவின் ஜனாதிபதியாக நீடிப்பார்.

அதன்மூலம் ரஷ்யாவை அதிக வருடங்கள் ஆண்டவர் என்ற பெருமையையும் விளாடிமிர் புட்டின் தனதாக்கிக்கொள்கின்றார்.

உக்ரைனுக்கு எதிராக இரண்டு வருடங்களாக தொடரும் யுத்தம், எதிர்க்கட்சி தலைவர் நவால்னியின் மரணம் போன்ற சம்பவங்கள், இந்த தேர்தலில் புட்டினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் மக்கள் திரண்டு வந்து விளாடிமிர் புட்டின் ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில், அவர் அபார வெற்றியுடன் மீண்டும் ஜனாதிபதி பதிவியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக மற்றும் நியாயமாக நடைபெறவில்லை என அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது.

விளாடிமிர் புட்டின் எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்தார். போராட்டங்களை நடத்த விடாமல் தடுத்தார். எனவே இந்த தேர்தல் சுதந்திரமாகவும் மற்றும் நியாயமாகவும் நடைபெறவில்லை என அமெரிக்க வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தல் நடைபெற்றபோது உக்ரைன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எல்லையோர பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்காமல் விடமாட்டோம் என விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

கேஜிபி லெப்டினன்ட் கர்னல்(KGB lieutenant colonel) ஆக இருந்த விளாடிமிர் புடின் 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1373804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2024 at 11:07, குமாரசாமி said:

வெளியேற மாட்டேன்.. ஏன் நான் வெளியேற வேண்டும்? 😂

ஆமாம் உண்மை ஏனெனில்  புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது  ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை   ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது  நான் நேரில் பார்த்து உள்ளேன்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

ஆமாம் உண்மை ஏனெனில்  புதின். ஜேர்மனியை ஒருபோதும் ஆள முடியாது  ஜேர்மனி மக்களின் வாக்குகள் ஒவ்வொன்றும் பெறுமதி மிக்கவை   ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய பயன்படுத்துவதால்,...இங்கே சுதந்திரமான வாக்குப்பதிவு நடைபெறுகிறது  நான் நேரில் பார்த்து உள்ளேன்   

அந்த சுதந்திரம்  Afd எனும் கட்சியில் வந்து நிற்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் பெருமளவு வளர்ந்து விட்டார்கள்.மேற்கு ஜேர்மனியிலும் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள்.  மக்கள் விரும்பி வாக்களித்து Afd ஐ பல இடங்களில் தங்கள் அபிமான வேட்பாளர்களை  சிறிய சிறிய அதிகார பீடங்களில் அமர்த்தியுள்ளார்கள். 

நண்பா!  சுதந்திரம் என்பது ஓரளவிற்குத்தான். அந்த சுதந்திரம் மீறினால் நாட்டையே உலுப்பி உன்னையே அழித்துவிடும். 

ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய காரணமும் இதுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

அந்த சுதந்திரம்  Afd எனும் கட்சியில் வந்து நிற்கின்றது. கிழக்கு ஜேர்மனியில் பெருமளவு வளர்ந்து விட்டார்கள்.மேற்கு ஜேர்மனியிலும் வளர்ந்து கொண்டு வருகின்றார்கள்.  மக்கள் விரும்பி வாக்களித்து Afd ஐ பல இடங்களில் தங்கள் அபிமான வேட்பாளர்களை  சிறிய சிறிய அதிகார பீடங்களில் அமர்த்தியுள்ளார்கள். 

நண்பா!  சுதந்திரம் என்பது ஓரளவிற்குத்தான். அந்த சுதந்திரம் மீறினால் நாட்டையே உலுப்பி உன்னையே அழித்துவிடும். 

ஒரு ஹிட்லர் உருவாக வேண்டிய காரணமும் இதுதான்.

இந்த Afd இன் ஆரம்பித்தவர்களில். ஒருவர் இந்தியா வம்சத்தைச் சேர்ந்தவர்,.முன்னார் pds. க்கு இருந்த ஆதரவு  இப்போ குறைந்து Afd க்கு கூடியுள்ளது  ..இது ஒரு குறிப்பிட்ட வீதத்தை விட்டு கூடப்போவதில்லை     காரணம் நாட்டை கொண்டு நடத்த முடியாது  ...அப்போ வாக்களித்த மக்கள் வெறுப்பு அடைவார்கள்  எனவே… பயப்படவேண்டாம்.  . 🤣🙏  தொடர்ந்தும். புட்டினை ஆதரியுங்கள். வாழ்கையை அனுபவித்து வாழுங்கள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
    • கட்சிக் காரருக்கு "ஜூலை 4 ஆம் திகதிக்கு முன்பாக மூடும் உத்தரவு கிடைக்கவில்லை" என்கிறார். வடமாகாண சபை தளத்தில் ஜூலை 4 ஆம் திகதிக்குரிய செய்தியில் மூடும் உத்தரவு பற்றிய செய்தி இருக்கிறது. அதையே ஒரு பத்திரிகை பிரசுரிக்கலாம். ஆணை புறாவின் காலில் கட்டி கட்சிக் காரருக்கு கிடைக்கும் வரை பொறுத்திருக்க வேண்டிய சட்டத் தேவை இல்லை. அனேகமாக இது நீதிமன்றம் போய் இழுபடும் கேஸாக தெரிகிறது. இனி கொடுக்கும் நன்கொடையில் ஒரு பகுதி சட்டத்தரணிகளிடம் போய்ச் சேருமென நினைக்கிறேன். 
    • நானும் வாட்ஸப்பில் இப்போது பார்த்தேன்..  கட்டடத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் சரவணபவான், அதைத் கேட்ட ஆறு திருமுகன் மேல் சேறு பூச உதயனில் செய்தி போட்டிருக்கின்றார் என்கின்றார்கள். ஊடக அடியாட்களின் வேலையா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.