Jump to content

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

https://www.facebook.com/SooriyanFMSriLanka/videos/1464846094416796/?mibextid=rS40aB7S9Ucbxw6v

ஏன்னா நாங்க வெளிநாடு👆🏼🤣

#லண்டன் #அஜினமோட்டோ

இதில் இவர்கள் சொல்வதை ஏற்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 364
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. இலங்கைப் பயணகட்டுரை    ஹீத்துரோவில் விமானம் ஏறும் போது ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இலங்கையும் புதிதில்லை, விமானப

goshan_che

பாகம் II   ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான  இடைவெளி போதாமையால், ம

Thumpalayan

எல்லார்ட வரவேற்புக்கும் நன்றி. ஒவொருநாளும் யாழப் பாக்காட்டிக்கு எனக்கு பத்தியப்படாது. எழுதத்தான் பஞ்சி, அதைவிட அநேகமான புலம்பெயர் உறவுகள் அடுத்த கட்டத்துக்கு நகர விரும்பாமையும் (moving on) ஒருவகை விரக

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

இதில் இவர்கள் சொல்வதை ஏற்கிறீர்களா?

பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது.

அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான்.

உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. 

இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_6831.jpeg.845fffcc1e2b27aa198b32cb8527966b.jpeg

 
நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பொதுப்படையாக எல்லாரும் என சொல்ல முடியாது.

அத்துடன் போத்தல் தண்ணீர் என்பது அங்கேயும் அநேகர் செய்வதுதான்.

உரக்க கத்தும் சிறுபான்மை என கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி, பலர் மரியாதையாக நடந்தாலும், சில அஜினமோட்டோ கேசுகள் அங்கே போய் இப்படிதான் நடக்கிறன. 

இவர்கள் நடத்தையால் எல்லார் மீதும் இப்படி ஒரு விம்பம் விழுகிறது.

20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? 

ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

20 இலட்சம் மாத சம்பளம் U.K. இல் என்றால் அண்ணளவாக வருடம் £ 95,000. இந்த வருமானம் பெறுவோர் எவ்வளவு? 

 

பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்?

அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை.

எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே?

(நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣).

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

பிகு

இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன்.

இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி.

இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

large.IMG_6831.jpeg.845fffcc1e2b27aa198b32cb8527966b.jpeg

 
நீங்கள் சொன்ன இந்த கொற்றலை இன்று காய்ந்த சோமாலியாவில் திறந்து விட்டனராம். மிகவும் அழகு என்று எல்லோரும் புகழ்கின்றனர்.

 

வெறும் தென்னம் ஈக்குக்களால் கட்டி வைத்துள்ளார்கள் மொக்கு சிங்களவர்+ஹிந்தியர் 🤣.

கொசுறு

இதில் 50 மாடி பெரிய கட்டிடம் முழுக்க அப்பார்மெண்டாம் என செய்தியில் வாசித்தேன். 

இதன் அருகில் உள்ள சங்கிரில்லா + கோல்பேஸ் 1  தொகுதி பற்றி எழுதினேன் அல்லவா? அங்கே ஒரு studio flat £350K போகிறது. இது தோராயமாக இலண்டன் புறநகர் (suburb) zone 4/5 இல் ஒரு ஸ்ருடியோவின் விலைக்கு நிகராக வருகிறது.

எனது யூனிவர்சல் கிரெடிட் (சோசல்) மிஞ்சும் காசில் ஒன்றை வாங்கி விட யோசிக்கிறேன்🤣🤣🤣.

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, goshan_che said:

பத்து இலட்சம் சம்பளம் அதில் பத்தாயிரம்தான் தருவோம் என்றல்லவா வருகிறது வீடியோவில்?

அதுவும் மாசத்துக்கா வருடத்துக்கா என்று சொல்லவில்லை.

எனது கணக்கில் மாச சம்பளம் என எடுத்தால் £30K வருகிறது? இது யூகேயின் median salary க்கு கிட்டத்தானே?

(நான் கணக்கில் வீக் என்பதால் எனக்கே குழப்பமாய் உள்ளது🤣).

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

பிகு

இந்த வீடியோவும், அண்மைகாலமாக யாழில் ஊர் புதினம் பகுதியில் வெளிவரும் செய்திகளும், பின்னூட்டகளும், புலத்தமிழருக்கும், புலம்பெயர் தமிழரில் உரக்க கத்தும் சிறுபான்மைக்கும் உள்ள இடைவெளி பெரிதாகி வருவதையே காட்டுகிறது என நான் நினைக்கிறேன்.

இது நல்ல விசயம் அல்ல. ஆனால் புலம்பெயர் தமிழரின் உரக்க கத்தும் குழுவின் ஊர் யதார்த்தபுரிவின்மையே இந்த இடைவெளிக்கு மிக பெரிய காரணி.

இதை கண்டு வந்து சொல்பவர்கள் மீதே காண்டாவதில் ஒரு பயனுமில்லை.

“பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “

என்றே வருகிறது….

வெளிநாட்டில் இருபது இலட்சம் ரூபா வருடாந்த சம்பளம் பெற்று என்ன செய்யலாம்?

U.K. இல் £ 5000

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
33 minutes ago, MEERA said:

ஏன் அவைக்கு கொடுக்க வேண்டும்?

அது எல்லாருக்குமானதல்ல. 

கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர்.

அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள்.

எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள்.

பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன்.

17 minutes ago, goshan_che said:

ஆனால் இங்கே எண்ணிக்கை பொருட்டல்ல. 

பத்தாயிரம்/பத்து இலட்சம் எனும் ratio தான் பொருள் என நினைக்கிறேன்.

👆🏼👇

 

6 minutes ago, MEERA said:

“பத்து இலட்சம் ரூபா, பதினைந்து இலட்சம் ரூபா, இருபது இலட்சம் ரூபா சம்பளம் எடுப்பம் “

என்றே வருகிறது….

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 minutes ago, goshan_che said:

அது எல்லாருக்குமானதல்ல. 

கொடுக்க வேண்டிய இடத்தில் பலர் இருக்கிறார்கள். அங்கே இருப்பவர்கள் தியாகத்தில் இங்கே வந்து சேர்ந்தோர்.

அங்கே அக்கா வயதான பெற்றாரை பார்கிறார் என்ற தைரியத்தில் இங்கே மனைவியுடன் டூர் போவபர்கள்.

எனக்கு தெரியும் ஒரு வயோதிப தம்பதி - பிள்ளைகள் இருவரையும் ஐரோப்பா அனுப்பி விட்டு இன்றும் உடல் உழைப்பில் வாழ்கிறார்கள்.

பலர் அனுப்பும் பணம் - தாம் அங்கே நின்று செய்ய தவறிய கடமைகளுக்கான விலை. இந்த கொமெண்டை நான் இந்த சூழமைவில்தான் பார்க்கிறேன்.

அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

அப்போ அங்கே இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?

அறுதி பெரும்பான்மையானோர் செய்கிறார்கள்.

இல்லாவிடில் நாட்டில் கோவில்களும், தேவாலங்களும் வயோதிபர்களால் நிரம்பி வழியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். 

எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா

மாத சம்பளம் பெறுகிறார்கள்? 

வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உங்களுக்கு எனது கேள்வி புரியவில்லை என்று நினைக்கின்றேன். 

எத்தனை பேர் புலம் பெயர் தேசங்களில் பத்து இலட்சம் ரூபா

மாத சம்பளம் பெறுகிறார்கள்? 

வயோதிபர்களை பார்ப்பது தான் கடமையா?

பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா?

இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான்.

London living wage மணிக்கு £13.15.

கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780

ஒரு வருடம்= 780x52= £40560

ஒரு மாசம் = 3380.

 

———

பின்னே? பெற்றாரை பார்க்காமல் வேறு என்ன கடமை இருக்க முடியும்?

ஆனால் அங்கே எம் சொத்தை பாதுகாப்பது முதல் பல கடமைகளையும் நாம் outsource பண்ணி விட்டுத்தான் இருக்கிறோம்.

ஒருவனோ, ஒருத்தியோ தன் வீட்டில், நகரில் இருந்து செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் இன்னொருவர் தலையில்தானே கட்டி உள்ளார்கள் புலம்பெயர்ந்தோர்.

அதைத்தான் அந்த வீடியோவில் சொல்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
6 minutes ago, goshan_che said:

பத்து இலட்சத்தை 400 ஆல் வகித்த £2500. சரிதானா?

இது யூகே புலம்பெயர் தமிழ் சமூகத்தில் நிச்சயம் எடுக்கும் சம்பளம்தான்.

London living wage மணிக்கு £13.15.

கிழமைக்கு 60 மணி வேலை எனில் (5x12 hour shift) = 13x60= £780

ஒரு வருடம்= 780x52= £40560

ஒரு மாசம் = 3380.

 


இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா?


மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை… 

Edited by MEERA
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, MEERA said:


இப்பவும் உங்களால் 60 மணித்தியாலங்கள் வேலை செய்ய முடியுமா?


மேலும் சிறீலங்காவில் Gross ஐ சொல்லும் பழக்கமில்லை… 

தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே.

இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்.

நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை.

———-

Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣

Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. 

இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

தகமைகளை வளர்த்து கொண்ட ஒருவர் 37 மணி நேரம் செய்து பெறும் சம்பளத்தை தகுந்த தகுதிகளை அடைய முடியாத ஒருவர் 60 மணி நேர உழைப்பில் அடையவேண்டி இருப்பது இயல்பே.

இப்பவும் 60 மணத்தியாலம் வேலை செய்துதான் என் தேவையான வரவை அடைய முடியும் என்றால் நிச்சயம் செய்வேன்.

நீங்கள் வாரம் 60 மணத்தியாலம் வேலை செய்யும் 60+ வயது ஆட்களை காண்பதில்லையா? செக்கூரிட்டி வேலை செய்யும் அரைவாசி பேர் இப்படித்தானே?  அங்கே எல்லாம் ஒரு ஷிப்ட் 12 தான். 48 அல்லது 60 தான் வழமை.

———-

Gross ஆ take-home ஆ என அந்த வீடியோவிலும் சொல்லவில்லை என நானும் egg இல் hair புடுங்க விரும்பவில்லை.🤣

Take-home ஆகவே இருப்பினும் gross 3380 எனில் take-home  2022/2023 யில் 2700. 20023/2024 இல் 2750. 

இப்படி பார்த்தாலும் வீடியோவின் 10 இலட்ச கணக்கு சரிதான்.

உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை.

அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

உங்களைப் போல் egg இல் hair புடுங்க எனக்கு நேரமில்லை.

அடிப்படை சம்பளத்தை உதராணமாக எழுதியது தாங்கள்.

 

அடிப்படை சம்பளமே அந்த வீடியோவில் சொல்லப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிற்சேர்க்கை III

வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா 

அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது.

—————
இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம்.

அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்..

முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”.

இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார்.

அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள்.

ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில்,

ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும். 

அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம்.

இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள்.

இதில் நன்மை என்னவென்றால் -

இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும்.

எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன்.

இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள். 

ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன்.

டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது.

எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன்.

கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார்.

என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே?

ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன்.

உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர்.

40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣.

கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன்.

அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன்.

கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது.

———————-

ஆவலோடு காத்திருங்கள்!

பிற்சேர்க்கை IV

வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கொசுறு

@தமிழ் சிறி இன்னொரு திரியில் ரஸ்யர்கள் இலங்கையில் வியாபாரம் செய்வது பற்றி சிலாகித்து இருந்தார்.

அதை பற்றி இந்த திரியில் முன்னரும் எழுதி இருந்தேன். இப்படியான இடங்களுக்கு நான் போகவில்லை, ஆனால் தென்னிலங்கையில் கீழே படத்தில் இருப்பது போலான அறிவிப்புகளை கன இடங்களில் கண்டேன்.

மும்மொழி கொள்கையை ஒருவழியாக அமல்படுத்திய கண்கொள்ளா காட்சி🤣👇.

large.IMG_7419.jpeg.58a217d25d8b815747b4532bcde3bcb9.jpeg

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஆனால் ஒரு சம்பவம் நடந்தது. நானும் என் நண்பர் குழாமும் மாத்தறையில் ஒரு கடலோர ரிசார்ட்டில் போய் அமர எத்தனித்த போது - மன்னிக்க வேண்டும், இங்கே கிச்சனில் பழுது, உணவுகள் இல்லை, இன்னும் ஏதோ நொண்டி சாட்டுகள் கூறி மிக தன்மையாக எம்மை வேறு இடம் பார்க்க சொல்லி கேட்டுக்கொண்டார்கள். கேட்டு கொண்டவர்கள் உள்ளூர்வாசிகள். என் குழுவில் மூவினத்தவரும் இருந்தோம்.

அந்த இடம் முழுவதும் வெள்ளையர்களாகவே இருந்தது. மருத்துக்கும் ஒரு சுதேசியையும் காணவில்லை.

என்ன நடக்கிறது என்பது விளங்கினாலும், பிரச்சனை வேண்டாம், மிகவும் தன்மையாக கேட்கிறார்கள் வெளியேறுவோம் என்பதே எம் குழுவில் அநேகரின் எண்ணமாக இருந்தது.

இங்கிலாந்தில் இதுவே எமக்கு நடந்தால் “சேறாடி” இருப்போம் என நாம் சிலர் சொன்னபோது, உள்ளூர்வாசிகள் நடந்து கொள்ளும் முறை, வாடிக்கையாளருக்கு அசெளகரியங்களை தருவதால் - வியாபார நிறுவனமாக அவர்களில் தாம் அதிகம் பிழை காணவில்லை என்றனர் - இலங்கை வாசிகள்.

கடல்கரை வழியாக நடந்து வந்து அடுத்ததாக இருந்த இன்னொரு இடத்தில் கேட்ட போது மிக வரவேற்புடன் எம்மை உள்ளே எடுத்தார்கள்.

தென்னிலங்கை கடற்கரை நகர்களில் சில இடங்களில் இப்படியான ஒரு அறிவிக்கபடாத அப்பாதயிட் நடை முறை இருப்பதாகவே தெரிகிறது.

இதே போல் வெள்ளையருக்கு மட்டும் என ஒரு பார்ட்டி ஏற்பாடாகி, சர்ச்சை ஆகி நிறுத்தப்பட்டது.

செய்தி இணைப்பு கீழே.

https://www.bbc.co.uk/news/world-asia-68421131.amp

 

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் இறுதி அல்லது 2025 தொடக்கத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருகின்றதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த வருடம் இறுதி அல்லது 2025 தொடக்கத்தில் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து இலங்கை அரசு ஆலோசித்து வருகின்றதாம்.

இது ஒரு நல்ல நகர்வாக எனக்குப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது ஒரு நல்ல நகர்வாக எனக்குப்படவில்லை.

ஏற்றுகொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 14:56, Thumpalayan said:

அரச வேலை இல்லாதவர்கள் சாப்பாட்டுக்கடை, ஹைஏஸ் வான்/ஆட்டோ, பான்சி கடை/சூப்பர் மார்க்கட் என்ற வட்டத்தை விட்டு வெளியில் வர கஷ்டப்படுகிறார்கள்

உண்மைதான்.. என்ன காரணம் என்று விளங்கவில்லை. 

புதிது புதிகாக சாப்பாட்டுக் கடைகள்.. வெளியில் சாப்பிடுவது இப்பொழுது ஒரு trend ஆகிவிட்டது. 

யாழ்ப்பாண townல் புதிதாக Domino’s திறந்துவிட்டார்கள்(போன வருட ஆரம்பத்தில் இது இருக்கவில்லை). பழைய நினைவுகளில் ஊர் சாப்பாட்டை எதிர்பார்த்துப் போனால் ஏமாற்றம்தான். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 11/4/2024 at 20:27, goshan_che said:

ஊரில் உள்ள விடயங்களை விதந்து பேசினாலும், இள, மத்திய வயது குடும்பங்கள் ஊர் மீளுவதை, குறிப்பாக பிள்ளைகளுடன் போவதை மோசமான முடிவு என்றே இன்னும் கருதுகிறேன். ஊர் போய் வந்த பின் இந்த கணிப்பு மேலும் இறுகியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் போய் வாழ்வது சரியானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அங்கே உள்ளவர்கள் பிள்ளைகளுடன் வாழவில்லையா எனக்கேட்டால் அங்கே உள்ளவர்கள்(நான் பார்த்த அளவில்)கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வெளியேற தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

 

Edited by P.S.பிரபா
எழுத்துப்பிழை
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, P.S.பிரபா said:

என்னைப் பொறுத்தவரை பிள்ளைகளுடன் போய் வாழ்வது சரியானதல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அங்கே உள்ளவர்கள் பிள்ளைகளுடன் வாழவில்லையா எனக்கேட்டால் அங்கே உள்ளவர்கள்(நான் பார்த்த அளவில்)கூட சந்தர்ப்பம் கிடைத்தால் வெளியேற தயங்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன். 

 

ஓம்…..

நான் சிறுவயதில் வாசித்ததில் என் மனதில் பதிந்தவற்றில் ஒன்று மஹாத்மா காந்தியின் மூத்த மகன் அவரை பற்றி கூறியது.

காந்தி தென்னாபிரிகாவில் ஒரு ஆச்சிரமம் அமைத்து அதில் பண்ணை செய்து ஒரு வகையான அடிப்படை வாழ்வை தன் குடும்பம், சகாக்கள் சகிதம் மேற்கொண்டுள்ளார்.

இதை அவரின் மூத்த மகன் தன் மீது திணிக்கப்பட்ட வன்முறை. தன் வாழ்வின் சூறையாட்டம் என்கிறார்.

என்னை பொறுத்தவரை ஒரு 18 வயதுக்கு கீழானவரை, அவரின் பிறப்புரிமையுள்ள, வளர்ந்த நாட்டில் இருந்து - இன்னொரு வளரும் நாட்டுக்கு இட்டு போவதை - அடிப்படை மனித உரிமை மீறல் என்றே சொல்வேன்.

ஆகவே இதை ஒரு போதும் ஆதரிக்கபோவதில்லை.

 

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கிரிக்கட்டில் ஏன் பழைய பந்தில் விளையாடுகிறார்கள்? பந்து பிய்ந்து போனால் ஒரு (Bond Bag)பொண்ட் பாக்குடன் ஓடிவருவார்கள். அதற்குள்ளும் புதிய பந்து இருக்காது.எல்லாமே ஓட்டை உடைசலாக இருக்கும். 6 ஒட்டங்கள் எடுத்து வெளியே போன பந்தையும் தேடி எடுத்து தான் விளையாடுகிறார்கள். Baseball இல் புதிய புதிய பந்துகள்.வெளிய போன பந்தை யார் எடுக்கிறார்களோ அவருக்கே பந்து. இப்படி கிரிக்கட்டில் இல்லாதது விசனமாக உள்ளது. அமெரிக்காவில் போட்டிகள் நடக்கும்போது கிரிக்கட் போட்டியை முதன்முதலாக பார்வையிடுபவர் கையில் பந்து போனால் திரும்ப கொடுப்பாரா?
    • "மன்னிப்பு" [சமாதானம் நிலவ, மன்னிப்பு கேட்பது அவசியம்]      "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' "   "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! "   [எனது ஒரு பாடலில் இருந்து எட்டு வரிகள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]     மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது.   மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகு முறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம்.   எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும்.   நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும்.   மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம்.   மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ?   எனவே தான் உண்மையை கண்டறிந்து, கொடூரத்தின் வெளிப்பாட்டை அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் இன்றைய நிலையை ''குஞ்சுகளைக் கண்டால் சொல்லுங்கோ....'' என்ற சிறு கதை மூலம் தீபம் ஆசிரியர், திரு செ. மனுவேந்தன் வெளிப்படுத்துகிறார் [http://www.ttamil.com/2021/07/blog-post_05.html].     பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம் அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும்.   எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும்.   இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?.   எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது.   “இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King]   ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல. முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள்.   "மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது. அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது.   உதாரணமாக,   'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43)   இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில்   "உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார்.   "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது.   [For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க.   "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று." [குறள் 152]   தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள்.   அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக் கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று. மன்னிப்பு கேட்காதவரிடம் நாம் அமைதியாக சகித்துக்கொண்டு செல்வது சிறப்பாகும். மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். ஆனால் இவற்றைவிடவும் அத்தவறுகளையும் குற்றங்களையும் அறவே மறந்துவிடுவது என்பது சகித்துக்கொள்வதை காட்டிலும் மன்னித்தலை காட்டிலும் மிக மிக சிறந்தது என்று திருவள்ளுவர் வாதாடுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,  அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஐ.பி.எல். ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதிசெய்ய சன்ரைசர்ஸுக்கு ஒரு புள்ளியே தேவை 16 MAY, 2024 | 06:45 PM     (நெவில் அன்தனி) பாரத தேசத்தில் நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் வாய்ப்பை உறுதி செய்வதற்கு ஒரே ஒரு புள்ளி தேவைப்படும் பெட் கமின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இன்று இரவு தனது 13ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸை எதிர்த்தாடவுள்ளது. இன்றைய போட்டி ஒருவேளை மழையினால் கழுவப்பட்டால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு புளளியைப்  பெற்று 15 புள்ளிகளுடன் ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழைந்துவிடும். அல்லது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும்.   எவ்வாறாயினும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு இன்னும் ஒரு போட்டி பஞ்சாப் கிங்ஸுடன் மீதம் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தனது சொந்த மைதானத்தில் இன்றைய போட்டியை எதிர்கொள்வதால் அவ்வணிக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும் என கருதப்படுகிறது. அதேவேளை, கொல்கத்தாவுடனான போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டதால் ப்ளே ஓவ் வாய்ப்பை முதலாவது அணியாக இழந்த குஜராத் டைட்டன்ஸ், தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் விடை பெற எதிர்பார்க்கிறது. இந்த இரண்டு அணிகளும் முதல் சுற்றில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி சந்தித்துக்கொண்ட போது குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்களால் மிகவும் இலகுவாக வெற்றிபெற்றிருந்தது. இரண்டு அணிகளையும் ஒப்பிடும்போது ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்றே கூறத் தோன்றுகிறது. ஆனால், இன்றைய போட்டியில் எந்த அணி தவறுகள் இழைக்காமல் மிகவும் திறமையாக விளையாடுகிறதோ அந்த அணிக்கே வெற்றி கிடைக்கும். எவ்வாறாயினும் இந்தப் போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு தீர்மானம் மிக்க போட்டியாக அமைவதால் அவ்வணி வெற்றிபெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்பது உறுதி. https://www.virakesari.lk/article/183728 மழையால மச் நடக்காது போல, அப்ப சன்ரைசர்ஸ் பிளேஓவ் உறுதி!
    • பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தேநீர். இந்தத் தேநீருக்குத்தான் இன்ஸ்டாவில் எத்தனை ரீல்ஸ், எத்தனை பாடல்கள், எத்தனை ரசிகர்கள். உடல் நடுங்கும் குளிரில் தொடங்கி கொளுத்தும் வெயில் வரை தேநீருக்காக ஏங்கும் மக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள், சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வெளியிட்டுள்ள ஒரு வழிகாட்டுதல் அறிக்கையில் அடங்கியுள்ளன. ஏனெனில், காலை எழுந்தவுடன் தேநீர், காலை உணவுக்குப் பிறகொரு தேநீர், மதிய உணவுக்குப் பிறகொரு தேநீர், மாலை ஒரு தேநீர், இரவொரு தேநீர், தூக்கம் வரவில்லையெனில் நள்ளிரவில் தேநீர். இப்படியாக தேநீர் என்பது பலருக்கும் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்ட பழக்கம். ஆனால், அது எவ்வளவு ஆரோக்கியமானது? இந்தியர்களுக்கான உணவுமுறை குறித்த வழிகாட்டுதல் அறிக்கை அதை விளக்கமாகப் பட்டியலிட்டுள்ளது. ஐசிஎம்ஆரின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹேமலதா, உறுப்பினர் செயலாளர் டாக்டர் உதய்குமார் மற்றும் அந்நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் சுப்பாராவ் எம் கவரவரப்பு, டாக்டர் கே.வி,ராதாகிருஷ்ணா, டாக்டர் அகமது இப்ராஹிம் உட்பட 13 விஞ்ஞானிகள் அடங்கிய கமிட்டி இந்த வழிகாட்டுதல் அறிக்கையைத் தயாரித்துள்ளது. இந்த வழிகாட்டுதல் அறிக்கை, தேநீர், காபி ஆகியவற்றைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்களையும் அதீதமாகக் குடிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் அறிவுறுத்துவதாகக் கூறுகிறார் இந்த வழிகாட்டுதல் அறிக்கையை உருவாக்கிய கமிட்டியை சேர்ந்த ஒரு விஞ்ஞானி. தேநீர், காபியை எப்படிப் பருகவேண்டும், அவற்றின் மூலம் கிடைக்கும் பலன்கள் என்னவென்று விரிவாகத் தெரிந்துகொள்ள ஐசிஎம்ஆரின் வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானியிடம் பிபிசி தமிழ் பேசியது.   சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் தேநீர், காபி குடிக்கக்கூடாது – ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES தேநீர், காபி இரண்டிலுமே டன்னின் (Tannin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. "உணவிலிருந்து இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டங்களை உடல் கிரகித்துக்கொள்ளும் செயல்முறையில் இந்த வேதிப்பொருள் குறிக்கிடும்." ஆகையால், உணவு உண்பதற்கு ஒரு மணிநேரம் முன்னரும் பின்னரும் தேநீர், காபி ஆகியவற்றை அருந்தக்கூடாது என்கிறது ஐசிஎம்ஆரின் இந்திய உணவுமுறை குறித்த வழிகாட்டுதல் அறிக்கை. நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் இரும்பு போன்ற நுண்ணூட்டப் பொருட்களை உடல் கிரகித்துக் கொள்ளும் செயல்முறையில் இந்த டன்னின் என்ற வேதிப்பொருள் இடையூறை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதைத் தவிர்க்க நாம் இப்படிப் பின்பற்றுவது சரியாக இருக்கும் என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய இந்த வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானி. மேலும், வெறும் வயிற்றில் இதைப் பருகுவது சரியா என்ற கேள்விக்கு, அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லிவிட முடியாது என்றும் உணவுக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கொள்வதில் மட்டும் கவனம் தேவை என்றும் கூறினார். அவரது கூற்றுப்படி, இத்தகைய பழக்கத்தை நீண்டகாலமாக வாடிக்கையாகக் கொண்டிருக்கும் மக்களிடையே இதனால் அச்சுறுத்தக்கூடிய வகையிலான பாதிப்பு எதுவும் ஏற்படாது. ஆனால், உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பு வரையிலோ அல்லது உணவுக்குப் பிறகு ஒரு மணிநேரம் வரையிலோ தேநீர், காபி அருந்தும்போது, அந்த உணவில் இருந்து நமக்குக் கிடைக்கும் நுண்ணூட்டங்கள் உடலுக்குக் கிடைக்காமல் போய்விடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், “நுண்ணூட்டச் சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்ட உடனேயே டீ, காபி குடித்தால், அந்த நுண்ணூட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருளை எடுத்துக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில், அதன்மூலம் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை டீ, காபியில் இருக்கும் டன்னின் என்ற வேதிப்பொருள் உடலுக்குக் கிடைக்காமல் தடுத்துவிடும்.”   தேநீரில் பால் சேர்த்துக் குடித்தால் என்ன பிரச்னை? பட மூலாதாரம்,GETTY IMAGES ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, கருப்புத் தேநீர், பச்சைத் தேநீர் என எதுவாக இருப்பினும், அதில் கேஃபீன் இருப்பது போலவே தியோப்ரொமைன், தியோஃபில்லின் போன்ற வேதிப்பொருட்கள் உள்ளன. இவை உடலின் ரத்தக் குழாய்களைத் தளர்த்துவதோடு, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. அதுமட்டுமின்றி, “தேநீரில் இருக்கக்கூடிய ஃபிளவனாய்டுகள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற பாலிபினால்கள் இதய நோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகவும்" ஐசிஎம்ஆர் அறிக்கை வலியுறுத்துகிறது. ஆனால், இதற்கு தேநீர் குடிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்யக்கூடாது. அதாவது, தேநீரில் பால் சேர்த்துப் பருகக்கூடாது. அதோடு, தேநீரை மிதமான அளவில் மட்டுமே பருகவேண்டும். அப்படிச் செய்தால், ஐசிஎம்ஆர் அறிக்கைப்படி இந்தப் பலன்களை அவற்றிலிருந்து பெற முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES பால் என்பது மிகவும் அத்தியாவசியமான ஓர் ஊட்டச்சத்து உணவு எனச் சொல்லப்படும்போது அதை ஏன் தேநீர், காபியில் சேர்த்துக் குடிக்கக்கூடாது என்று ஐசிஎம்ஆரின் இந்த வழிகாட்டுதல் அறிக்கை குழுவைச் சேர்ந்த விஞ்ஞானியிடம் கேட்டபோது "பால் நிச்சயமாக நமது உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றுதான்" எனக் குறிப்பிட்டார். ஆனால், “அதை தேநீருடன் சேர்த்துக் குடிக்கும்போது, தேநீரின் நன்மைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.” அதாவது, பாலை தனியாகப் பருகுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. இருப்பினும், தேநீருடன் சேர்க்கும்போது, “அதில் அதிகளவில் பால் மட்டுமே இருக்கும். தேநீரின் தனித்துவமான அளவு என்பது குறைந்துவிடும். ஆகையால், அதன்மூலம் கிடைக்கும் பலன்களை முழுதாகப் பெற முடியாது,” என்று விளக்குகிறார். கருப்புத் தேநீர், பச்சைத் தேநீர் என எதுவாக இருப்பினும் பாலின்றிக் குடிப்பதே நல்லது என்று கூறும் அவர், அதற்காக பாலே குடிக்கக்கூடாது என்றில்லை எனவும் கூறுகிறார். “ஒரு நாளைக்கு பால் அல்லது பால் சார்ந்த பொருட்கள் என ஏதாவதொரு வகையில் 300 மி.லி. பால் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அதை டீ, காபியுடன் சேர்த்துப் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது. அப்போதுதான் டீ, காபியின் நன்மைகள் கிடைக்கும்.”   ஒரு நாளைக்கு எவ்வளவு தேநீர், காபி குடிக்கலாம்? இந்த உணவுமுறை வழிகாட்டுதலின்படி, ஒருவர் நாளொன்றுக்கு சராசரியாக 300 மில்லிகிராம் அளவுக்கு மேல் கேஃபீன் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஐசிஎம்ஆர் கணக்குப்படி பார்த்தால், ஒருவர் குடிக்கும் ஒரு கப்(150மி.லி) தேநீரில் 30-65 மி.கி. கேஃபீன் உள்ளது. அதுவே ஒரு கப் காபியில் 80-120மி.கி. கேஃபீனும் இன்ஸ்டன்ட் காபியில் 50-65மி.கி. கேஃபீனும் உள்ளது. அதாவது, ஃபில்டர் காபி என்றால் தோராயமாக ஒரு தனிநபர் இரண்டு கப் குடிக்கலாம், இன்ஸ்டன்ட் காபி என்றால் மூன்று அல்லது மூன்றரை கப் வரை குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு தனிநபர் அதிகபட்சம் 300 மில்லிகிராம் வரை கேஃபீன் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், “கேஃபீனை மக்கள் காபி, டீ மூலமாக மட்டும்தான் எடுத்துக் கொள்கிறார்கள் என்று இல்லை. குளிர்பானங்களில்கூட கேஃபீன் கலக்கப்பட்ட பொருட்கள் உள்ளன." ஆகையால், "காபி, டீ ஆகிய இரண்டை மட்டுமே வைத்து இதைக் கணக்கிடக்கூடாது. பொதுவாக நாம் ஒரு நாளைக்கு உட்கொள்ளும் கேஃபீனின் அளவைக் கண்காணித்து, கட்டுக்குள் வைக்க வேண்டும்,” என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி வலியுறுத்துகிறார்.   அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் என்ன ஆகும்? பட மூலாதாரம்,GETTY IMAGES அளவுக்கு அதிகமாக காபி குடிப்பது ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் இதயத் துடிப்பில் அசாதாரண நிலையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும் என்றும் ஐசிஎம்ஆர் அறிக்கை எச்சரித்துள்ளது. அந்த அறிக்கைப்படி, அதிக அளவில் கெட்ட கொழுப்பு சேர்வது, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பது, இதய நோய் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் மத்தியில் அதிக அளவில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கணிசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், கேஃபீன் அடங்கியிருப்பதால் அதிக அளவில் தேநீர் பருகுவதையும் தவிர்க்க வேண்டியது அவசியம் என்கிறது உணவுமுறை வழிகாட்டுதல் அறிக்கை. காபியை தொடர்ந்து குடிப்பது அதை முழுவதுமாகச் சார்ந்திருக்க வேண்டும் என்ற மனநிலையை ஒருவருக்கு உருவாக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. அதுகுறித்துப் பேசிய ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் குழுவின் விஞ்ஞானி, “காபி குடிப்பது பொதுவாக ஒருவருக்கு அதை அதிகம் சார்ந்திருக்க வேண்டுமென்ற மனநிலையை உருவாக்கும். அதேவேளையில், அதிக அளவில் காபி பருகுவது மற்ற பிரச்னைகளோடும் தொடர்புபடுத்தப்படுகிறது,” என்கிறார். “எடுத்துக்காட்டாக, ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பது, இதய நோய் ஆகிய பிரச்னைகள் இருப்பவர்கள் மத்தியில் அதிகம் காபி குடித்தவர்கள் இருப்பதைக் காண முடிவதைச் சில ஆய்வுகள் காட்டுகின்றன." "அதற்காக, அதிக அளவில் காபி குடித்தாலே இந்தப் பிரச்னைகள் வந்துவிடும் என்று அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. இருப்பினும், அந்தப் பிரச்னைகள் இருப்போர் மத்தியில் காபி அதிகம் குடிப்பவர்கள் இருப்பதால், எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது,” என்று வலியுறுத்துகிறார். https://www.bbc.com/tamil/articles/cw949nyq9ppo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.