Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்கும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (01) இடம்பெற்ற ஆயுர்வேத சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக நான் பேசவில்லை. இருப்பினும் உண்மையை மற்றும் யதார்த்தம் பற்றி அவதானம் செலுத்த வேண்டும்.

 கூரகல விகாரை விவகாரத்தை தொடர்புப்படுத்தி ஞானசார தேரர் குறிப்பிட்ட கருத்துக்கு எதிராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள்  ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்தார்கள். அந்த வழக்குக்கு அமையவே ஞானசார தேரருக்கு நான்காண்டு கால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கூரகல விகாரை 2000 ஆண்டுகால பழமை வாய்ந்தது. இந்த விகாரையை  அண்மித்த பகுதியில் இருந்த  பௌத்த தொல்பொருள் மரபுரிமைகளை முஸ்லிம் அடிப்படைவாதிகள்   ஆசிட் திரவம் ஊற்றி அழித்து, அடையாளங்களை சிதைத்து கட்டிடங்களை அமைத்துள்ளார்கள். இதற்கு எதிராகவே ஞானசார தேரர் குரல் கொடுத்தார்.

பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் போது பௌத்தர்களின் மனம் வேதனையடையாதா? கூரகல விகாரையின் தொல்பொருள் மரபுரிமைகள் அழிக்கபபட்டுள்ளதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரரே  ஆரம்பத்தில் குறிப்பிட்டார். ஆனால் அதனை எவரும் கவனத்திற் கொள்ளவில்லை.விளைவு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தோற்றுவித்தது.

சுதேச முஸ்லிம்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் தோற்றம் பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி ஞானசார தேரர் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையாகியுள்ளன. பௌத்த அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம்,இஸ்லாமிய அடிப்படைவாதம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை  வழங்கப்பட்டுள்ளமை பௌத்தர்களுக்கு மனவேதனையளிக்குமாக இருந்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஆகவே அவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.

இலங்கையர்கள் என்ற அடிப்படையில்  அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்து அனைவரும் விட்டுக் கொடுப்புடன் செயற்படும் தேவை தற்போது காணப்படுகிறது என்பதை அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - அனுப பஸ்குவல் வலியுறுத்தல் | Virakesari.lk

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஞானசாரருக்கு நாளை விடுதலை இல்லை!

Published By: DIGITAL DESK 5

12 APR, 2024 | 08:55 PM
image
 

புத்தாண்டையொட்டி  நாளைய தினம் (13)  விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படும் கைதிகளின் பட்டியலில், கடூழியச்  சிறைத் தண்டனை அனுபவிக்கும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் பெயர் இல்லையென தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, அரச மன்னிப்பின் கீழ் அவரை விடுவிக்க முடியாது என சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/181038

  • கருத்துக்கள உறவுகள்
On 1/4/2024 at 09:55, பிழம்பு said:

பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் போது பௌத்தர்களின் மனம் வேதனையடையாதா?

உண்மைதான்! மனம் வேதனை அடையும்தான். ஆனால் அப்படியான மனம் மற்ற இனங்களுக்கும் இருக்குமில்ல.அவங்கட மனங்களும் வேதன அடையுமில்ல, அதையும் நினைச்சுப் பார்கணுமில்ல. சரி சரி, இந்த புத்தாண்டு லிஸ்ற் இல்லாட்டி என்ன , அடுத்த வெசாக் லிஸ்ற், பொசன் லிஸ்ற், இல்லாட்டி ஒரு ஸ்பெசல் லிஸ்ற் வராமலா போகும். அவர் வெளியில் வந்திருவார். அவர் வருவாரே ! வெளியில் வருவாரே !

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் வெளியே வந்து விடுவார்  என நம்பலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.