Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸில் தமிழ் இளைஞர் படுகொலை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாரிஸில் தமிழ் இளைஞர் படுகொலை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

[03 - October - 2007]

பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது;

கடந்த மாதம் 6 ஆம் திகதி பாரிஸின் புறநகர் பகுதியில் சென்ற்டெனிஸ் கால்வாயில் சில பைகளில் பொதி செய்து போடப்பட்டிருந்த ஒருவரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து, பிரான்ஸ் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் கைவிரல் அடையாளப் பதிவின் மூலமாக கொல்லப்பட்டவர் 29 வயதுடைய இலங்கை அகதி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் விசேட பொலிஸார் ஈடுபட்டனர்.

கொல்லப்பட்டவர் தொடர்பாக எவரிடமிருந்தும் காணாமல்போனதாக முறைப்பாடுகள் செய்யப்படாத நிலையில் அவர் வசித்ததாக கூறப்படும் வீட்டிற்கு பொலிஸார் சென்று சோதனையிட்டபோது அங்கு சில தடயங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன், மின்சாரத்தில் இயக்கப்படும் வாள் ஒன்று வாங்கப்பட்டதற்கான பற்றுச்சீட்டும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளின்போது அந்த வாள் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தி வாங்கப்பட்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதன் பின் நடந்த விசாரணைகளின்போதே அதிர்ச்சியான விடயங்கள் வெளிவந்தன.

இறந்துபோன அந்த இளைஞனுக்கும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 46 வயதுடைய தமிழ் பெண்ணுக்கும் தொடர்புகள் இருந்துள்ளன. இந்த இருவரும் இணைந்து வாழ்ந்து வருகையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்சினையொன்றின் காரணமாக செப்டெம்பர் 3 ஆம் திகதி மாத்திரை கொடுத்து அந்த இளைஞன் கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட அந்த இளைஞனின் உடலை அப்புறப்படுத்த முடியாத குறித்த பெண் பிரான்ஸின் துளூஸ் நகரில் தங்கியிருந்த தனது மகனது உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து, பாரிஸ் வந்த தனது மகனுடன் இணைந்து இருவருமாக கொலை செய்யப்பட்ட இளைஞனின் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சிறு சிறு பொதிகளாக கட்டி சென்ற் டெனிஸ் கால்வாயில் வீசியுள்ளனர்.

இதன் பின்னர் இருவரும் பாரிஸிலிருந்த வீட்டை கைவிட்டுவிட்டு துளூஸ் பகுதியில் தலைமறைவாகியிருந்த வேளையில் கடந்த சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அப்பெண் இளைஞனின் கொடுமை காரணமாகவே அவரை பழி தீர்க்க விரும்பியதாக பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

http://www.thinakkural.com/news/2007/10/3/...s_page37623.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலை பற்றிய முழு விபரங்கள் இவைதான் கொலைசெய்த பெண்மணிக்கு (வயது 46)முன்னரும் சில இளைஞர்களுடன் தொடர்பு இருந்ததால் அவர் கணவன் அவரை விட்டு பிரிந்து சொன்று விட்டார். (மகன் 22 வயது)இவர் துலூஸ் என்கிற நகர பகுதியில் தங்கியிரந்து படித்து வந்தார். இறந்து போன நபரும் (வயது 29) அந்த பெணமணிக்கும் காதலாகி கசிந்து ஒரு வீட்டிலேயோ வாழ்ந்து வந்தனர். ஆனால் அந்த இளைஞனிற்கு ஊரில் அவர் பெற்றோர் திருமணம் பேசி திரமணம் செய்து வைப்பதற்காக ஒரு பெண்ணை வேறொரு நாட்டிற்கு அழைத்து வந்தும் விட்டனர். இந்த நிலையில் 29 வயது இளைஞன் தன்னுடைய 46 வயது காதலியிடம் தான் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் அதற்றாக தான்விரைவில் பறப்பட இருப்பதாகவும் செய்தியை சொன்னதும் இருவருக்கும் பிரச்சனைகள் நடந்திருக்கின்றது.

அதனால் ஆத்திரமடைந்த பெண்மணி தன்காதலனிற்கு சாப்பாட்டில் விசம் வைத்து கொலை செய்து விட்டு வேறொரு நகரத்தில் வசித்த வந்த மகனை அழைத்து அவரின் உதவியுடன் ஒரு மரம்வெட்டும் மின்சார வாள் ஒன்றை வாங்கி துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய சூட்கேசில் போட்டு பாரிஸ்நகரை ஊடறுத்து பாயும் செயின் நதியினுள் வீசியிருக்கின்றனர்.அனால் இவர்களது கெட்ட காலம் அந்த சூட்கேஸ் ஆற்றில் மிதந்து செல்லவே அதை கவனித்த ஒரு ஆபிரிக்க நாட்டு காரர் அதை இழுத்து வந்து பணம் ஏதும் மிதந்து வருகிறதா என திறந்த பாத்திருக்கிறார். அது பணம் அல்ல பிணம் என்று தெரிந்ததும் காவல் துறைக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து துண்டாய் இருந்த கையின் விரல் அடையாளங்களை எடுத்து பரிசோதித்ததில் அவர் இலங்கையை செர்ந்த தமிழ் அகதிஎன்று விபரமும் விலாசமும் கிடைக்கவே அந்த விலாசத்திற்கு சென்று கதவை தட்டியிரக்கிறார்கள்

. திறக்கவில்லை உடைத்து உள்ளே போன போது அவசரமாய் துப்பரவு செய்ததில் மிச்சமிருந்த இரத்த சிதறல்களை எடுத்து பரிகோதித்ததில் இறந்தவரது இத்தம்தான் என்று உறுதி செய்த கொண்ட காவல்துறையினர். வேகமாக செயல்பட்டு அந்த வீட்டிற்கு வந்து போன தொலைபேசி இலக்கங்களையெல்லாம் விசாரித்து சில நாட்களிலேயே வேறொரு நகரத்தில் வைத்து தாயையும் மகனையும் கைது செய்து விட்டனர். ஆரம்ப விசாரணைகளிலேயே தானே கொலை செய்ததாக அந்த அம்மணி ஒத்து கொண்டுள்ளார்.ஆனால் இன்னமும் விசாரணைகள் முடியவில்லை. அது முடிந்தால் தான் அவர் எப்படியான விசம் கொடுத்தார் அது அவருக்கு எப்படி கிடைத்தது. அல்லது சாதாரணமாக ஏதாவது மயக்க குளிசையை கொடுத்து மயக்கத்தில் வெட்டி கொன்றனரா என்கிற விடையும் அதே நேரம் அவர்களிற்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பது சத்தியமா எனக்கு தெரியாது தெரிய வந்ததும் சொல்லுறன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடூரம்

:unsure::(:D :D
  • கருத்துக்கள உறவுகள்

கொடூரம்

விசம் வைச்சு கொலை செய்துமுடியத்தானே துண்டு துண்டா வெட்டினவங்க? அதால கொடூரம் இல்லை எண்டு நினைக்கிறன்.. :unsure::( அட இதற்கும் எனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லையப்பா... ஏதோ வாயிலை வந்ததை சொன்னன்... :D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாளால் வெட்டி பங்கு போடுமளவுக்கு.சா,மனித நாகரீகம் எங்கு நோக்கி செல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு காலமும் வெள்ளைக்காரனும் அடுத்தவனும் தான் இப்படிக் கொடுமைகள் செய்ய நாங்க படிச்சம். இப்ப நம்ம ஆக்களே.. எவ்வளவு விரைவா இதுகள எங்களுக்கு செய்தே காட்டுராங்க...??! அதுவும் பெண்கள் செம ஸ்பீட்...! பட்டில இருந்து அவிழ்த்துவிட்டதுகள் கணக்கா.. இருக்கு..! :unsure::(

இதே போல இந்தியாவில் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவத்துறை மாணவர் ஒருவர் சக மாணவர் ஒருவாரை கொலைசெய்தார். மருத்துவத்துறை மாணவர் என்பதால் வெட்ட அவர் பாவித்த ஆயுதம் வேறு.

*********

Edited by harikalan

அடடா அடடா.....

இந்த நவீன யுகத்தில எங்கட சனம் எப்படி முன்னேறுதுகள் என்று பாருங்கோ..........நல்ல முன்னேற்றந்தான் :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கொலைக்கும் நவீன உலகத்துக்கும் என்ன சம்மந்தம்?? 100 வருசத்துக்கு முன்னாடி இப்படியான ஈனமற்ற கொலைகள் நடக்காத மாதிரி இருக்கு நீங்கள் சொல்லுறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இலங்கையிலும் நடந்தேறி இருக்கு. இதையொத்து தான் கோகிலாம்பாள் கொலைவழக்கு நடந்தாய் அறிந்தேன் அண்மையில் .

என்ன கொடுமையப்பா? இது எங்கே போய் முடியப்போகுதோ?

(தமிழன் என்ற ஒரு இனம் உண்டுஅதற்கு தனியே ஒரு குணம் உண்டுஅதை தப்பாய் புரிந்ததால்வந்த விளைவுகள்)

Edited by marumakan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழன் என்ற ஒரு இனம் உண்டுஅதற்கு தனியே ஒரு குணம்

அது என்ன குணமுங்கோ???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.