Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை இராணுவமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து செயற்கை கை, கால்கள் தயாரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
08 MAY, 2024 | 12:05 PM
image

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவம் ராகம ரணவிரு செவன இராணுவ புனர்வாழ்வு மையம் செயற்கை கை, கால் தயாரிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. 

இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பிணைப்பை அடையாளப்படுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக தியாகம் செய்தவர்களுக்கு அல்லது இயலாமை காரணமாக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சியையும் எடுத்துக்காட்டுகிறது.

செயற்கை கால்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற 8 இந்தியர்களின் வள பங்களிப்போடு கடந்த 3ஆம் திகதி தொடங்கிய இந்த பயிலரங்கம் எதிர்வரும் 23ஆம் திகதி நிறைவடையும். 

375 இராணுவ வீரர்களுக்கும், கடற்படை விமானப்படை, மற்றும் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த 75 பேருக்கும் செயற்கை கை, கால்கள் விநியோகிக்கப்படவுள்ளன. 

மேலும், 200 பொதுமக்களுக்கும் செயற்கை கை கால்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பயிலரங்கின்போது 04 இராணுவ உறுப்பினர்களுக்கு செயற்கை கை, கால்கள் அடையாளமாக வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.  

unnamed__2_.jpg

unnamed__1_.jpg

unnamed__3_.jpg

unnamed.jpg

unnamed__4_.jpg

unnamed__6_.jpg

unnamed__5_.jpg

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ராகம ரணவிரு செவன நிலையத்தின் தளபதி மற்றும் இராணுவ உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 https://www.virakesari.lk/article/182954

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.