Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜாவின் இனிய கானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள இசை ரசிகர்களே.. இளையராஜாவின் இசை கேட்டு வளர்ந்த என்னைப்போன்ற உள்ளங்களுக்காக இந்த இணைப்பைத் தொடங்குகிறேன். அவரின் இசையில் வெளி வந்த பாடல்கள் பல நூறு. ஒவ்வொன்றும் தேனாறு. நேரடியாகப் பாடலை இணைக்கும் போது, பெரும்பாலும் படத்தில் கவனம் சிதறி விடுவதால் ஒரு மேடைப்பாடலை இணைக்கிறேன். பாடல்களை இணைப்பதோடு, அதிலுள்ள சிறப்பம்சங்களை அலசும் ஒரு வாய்ப்பாக இத்திரியைப் பயன்படுத்துவோம். முதலில்,

  • Replies 1.1k
  • Views 247.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!

இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்.

அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார். :-)

கல்யாணியைப் பற்றி கல்யாணி ராகத்தில்.

இளையராஜாவுடன், சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி உடன் பாடுகிறார்கள்!

இந்து மதம் தழைக்க வந்த இரு பெரும் பேராசிரியர்கள் -

ஜகத் குருக்கள் - ஆச்சாரியர்கள் ஸ்ரீ ராமானுசர், ஆதி சங்கரர்

- இருவரின் அவதார நாளும் இன்று தான்! சித்திரைத் திருவாதிரை நன்னாள்! (Apr 22, 2007)

இப்படி, பிறந்த நாளே ஒன்றாகி, சைவமும் வைணவமும் ஒன்றாகத் தழைப்பது எவ்வளவு இனிய காட்சி!

ஆதிசங்கரர் எழுதிய செளந்தர்ய லஹரி தோத்திரத்தின் முதல் சுலோகத்துடன் பாடல் துவங்குகிறது!

(சிவ சக்த்யா யுக்தோ

யதி பவதி சக்த ப்ரபவிதும்

நசே தேவம் தேவோ ந கலு

குசல ஸ்பந்தி துமபி

அதஸ் த்வாம் ஆராத்யாம்

ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி

பிரணந்தும் ஸ்தோதும் வா

கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்

சடை வார் குழலும் விடை வாகனமும்

கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே

நின்ற நாயகியே இட பாகத்திலே

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்

ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்

அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்

தொழும்பூங் கழலே மலை மாமகளே

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

அலைமாமகள் நீ கலைமாமகள் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த

லிங்க ரூபிணியே மூகாம்பிகையே

பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்

பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத்காரணி நீ பரிபூரணி நீ

ஒவ்வொரு கச்சேரியிலும், ராஜா

ஜனனி ஜனனி என்று பாடித் தான் துவக்குகிறார்!

இதோ, அவர் கச்சேரி ஒன்றிலிருந்து!

அப்பாவும், மகனும் சேர்ந்து பாடுகிறார்கள்.

http://ammanpaattu.blogspot.com/2007/04/blog-post_22.html

  • கருத்துக்கள உறவுகள்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லா லாலா லாலலா லா லாலா லாலலா

லாலாலலா லாலாலலா

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்

திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்

ஒரு முறையேனும் ஹா ஹா

திருமுகம் காணும் ஹெ ஹெ

வரம் தரம் வேண்டும் ஹோ ஹோ

எனக்கது போதும் ஹெ

எனைச்சேர ஆஆஆஆஆஆஆஆஆஆ

எனைச்சேர எதிர்பார்த்தேன்

முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

லலலலாலலா லலலலாலலா

லலலலலலலலலலலலலலலல லலலலா லலலலா

லால லால லால லா

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போதும்

நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்

இடையினிலாடும் ஹா ஹா

உடையென நானும் ஹெ ஹெ

இணை பிரியாமல் ஹோ ஹோ

துணை வர வேண்டும்.. ஹெ..

உனக்காக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

உனக்காக பனிக் காற்றை

தினம் தூது போக வேண்டினேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வென்ன்ன்ன்னிலா உன்னைத்தானே வானம் தேடுதே

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_8868.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!

இளையராஜாவின் மாஸ்டர்பீஸ் என்று இதைச் சொல்லலாமா?

தாய் மூகாம்பிகை திரைப்படத்தில், கவிஞர் வாலி எழுதிய அருமையான பாடல்.

அதை இசைஞானி தன் "கரகர"ப்ரியா குரலில், உள்ளம் உருகப் பாடுகிறார். :-)

:unsure::(

மிகவும் அற்புதமான பாடல்.. எனக்கு இளையராஜாவின் பாடல்களில் வரும் இடையீட்டு இசைதான் மிகவும் பிடிக்கும்.. ஒரு ராகத்தை எடுத்து அதை விட்டு சில இடங்களில் வெளியேறி மீண்டும் அதை ராகத்தில் சேர்க்கும் அழகே அழகு.

இங்கே இன்னுமொரு மேடைப் பாடல்..

  • கருத்துக்கள உறவுகள்

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வரும் வழியில் பனி மழையில்

பருவ நிலா தினம் நனையும்

முகிலெடுத்து முகம் துடைத்து

விடியும் வரை நடை பழகும்

வான வீதியில் மேக ஊர்வலம்

காணும் போதிலே ஆறுதல் தரும்

பருவ மகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே

உலாப் போகும் மேகம் கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

முகிலினங்கள் அலைகிறதே

முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால்

அழுதிடுமோ அது மழையோ

நீல வானிலே வெள்ளி ஓடைகள்

போடுகின்றதே என்ன ஜாடைகள்

விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

இளைய நிலா பொழிகிறதே

இதயம் வரை நனைகிறதே

உலாப் போகும் மேகம்

கனாக் காணுமே

விழாக் காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_3206.html

  • கருத்துக்கள உறவுகள்

படம்:அரங்கேற்ற வேளை

பாடியவர்:K.J. ஜேசுதாஸ்

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்

சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு

மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்

ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்

கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட

பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_1423.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி இளையராஜாவின் மெட்டுக்களில் உள்ள மெய்சிலிர்க்க வைக்கும் சுரக் கோர்ப்பு உத்திகள். பெரும்பாலான ராஜாவின் பாடல்களின் ஆரம்பம் சாதாரணமானதாகவே இருக்கும். அதாவது பல்லவி அமைப்பு. இது எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மெட்டமைப்பிலிருந்து மாறுபட்டது. எம்.எஸ்.வி. அவர்களின் மெட்டமைப்பு பல்லவியிலேயே மனதை ஈர்க்கச் செய்யும். உதாரணமாக,

(பல்லவி)

விழியே.. கதையெழுது..

கண்ணீரில்.. எழுதாதே..

இதைக் கேட்கும்போதே மெய்சிலிர்க்கும்.

ஆனால் இளையராஜா மேற்சொன்னதுபோல சாதாரணமாகவே ஒரு பாடலை ஆரம்பிப்பார். அதாவது பல்லவி சாதாரணமாக இருக்கும். பின்னர் பல்லவி முடிந்ததும் வரும் இடயீட்டு இசையில் தனது கவனத்தைச் செலுத்தி பாடலுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார். பின்பு வருவது சரணம். அதில் பலவிதமான வித்தியாசமான அதே சமயம் இனிமையான சுர வரிசைகளை இனிய சந்தத்தில் குழைத்து மெய்சில்லிடச் செய்துவிடுவார். இது போதாதென்று, இரண்டாவது இடையீட்டு இசையில் ஒரு இசைப்பிரவாகத்தையே ஏற்படுத்திவிடுவார்.

இப்போது ராஜாவின் ஒரு புகழ்பெற்ற இனிய பாடலைக் கவனிப்போம். இப்பாடலின் ஒரு சரணத்தை இங்கே தருகிறேன். அதில் பச்சை நிறத்தில் உள்ள வரிகளின் சுர வரிசை மற்றும் அதன் சந்தக்கட்டு மெய்சிலிர்க்க வைப்பவை.. அதாவது என்னுடைய பார்வையில். இப்போது பாடல்.

பாடல்: தாழம்பூவே.. வாசம் வீசு..

படம்: கை கொடுக்கும் கை

(சரணம்)

நடந்தால் காய்ஞ்ச நிலம் செழிக்கும்..

சிரிச்சால் கோயில்மணி நடிக்கும்.. கண்ட கண்ணுபடும்

பேசும் போது தாயைப் பார்த்தேன்..

தோளில் தூங்கும் பிள்ளை ஆனேன்..

நெஞ்சத்திலே... ஏ..ஏ..ஏ..ஏ..

நெஞ்சத்திலே ஊஞ்சல் கட்டி ஆரிரரோ பாடவோ..

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

தனிக்காட்டு ராஜா படத்தில் ரஜினியும் ஸ்ரீதேவியும் நடித்திருக்கிறார்கள் என்பதும் அதில் (வழக்கம்போல) பாலுவும் ஜானகியும் தேன்சிந்தும் குரல்களோடு பாடியிருக்கிறார்கள் என்பதும் தமிழ்கூறும் நல்லுலகு அறிந்ததே! ஆதலால் அதிகம் அறுக்காமல் அமைதியாக அந்தப் பாடலை (எத்தனை 'அ'!) இங்கே பதிவு செய்கிறேன்.

சரணம் முடிகையில் ஒருவர் கீழிருந்து மேல் ஸ்தாயிக்கு தன்னானன்னானன்னானன்னான

என்று பாட இன்னொருவர் கூடவே மேல் ஸ்தாயியிலிருந்து கீழே அதைப் பாடுவது கேட்பதற்குச் சுகமாக இருக்கும். ராஜாவின் மெட்டு அல்லவா? வாலியின் வரிகள் இனிமை! .

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஓ ஓ

நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஹோய் ஹோய்

நீங்காத ஆசை

நீர் வேண்டும் பூமியில் தானனன பாயும் நதியே னனனன

நீங்காமல் தோள்களில் னனனன சாயும் ரதியே லலலல

பூலோகம் தெய்வீகம்

பூலோகம் மறைய மறைய

தெய்வீகம் தெரியத் தெரிய

வைபோகம்தான்...

தன்னானன்னானன்னானன்னான

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஓ ஓ

நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

கோபாலன் சாய்வதோ னனனன கோதை மடியில் னனனன

பூபாணம் பாய்வதோ னனனன பூவை மனதில் னனனன

பூங்காற்றும்

சூடேற்றும்

பூங்காற்றும் தவழத் தவழ

சூடேற்றும் தழுவத் தழுவ

ஏகாந்தம்தான்...

தன்னானன்னானன்னானன்னான

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

காதோடுதான் நீ பாடும் ஓசை

நீங்காத ஆசை ஓ ஓ

நீங்காத ஆசை

சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே

சந்தோஷப் பாட்டே வாவா

http://www.youtube.com/watch?v=HIkIMK3FcHU

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரணம் முடிகையில் ஒருவர் கீழிருந்து மேல் ஸ்தாயிக்கு தன்னானன்னானன்னானன்னான

என்று பாட இன்னொருவர் கூடவே மேல் ஸ்தாயியிலிருந்து கீழே அதைப் பாடுவது கேட்பதற்குச் சுகமாக இருக்கும். ராஜாவின் மெட்டு அல்லவா? வாலியின் வரிகள் இனிமை! .

இது counterpoint அமைப்பைச் சேர்ந்தது. இரு வேறு மெட்டுக்களில் இருவர் ஒரே நேரத்தில் பாடும் இசை முறை இதுவாகும். ஒரு மெட்டை விட்டுவிட்டு மற்றதை மட்டும் பாடினால் அது வேறுமாதிரியாக இருக்கும்.

கீழே இணைக்கப்பட்டுள்ள "பூ மாலையே" என்ற இனிய பாடலின் சரணத்தில் இளையராஜாவும் எஸ்.ஜானகியும் ஒரே நேரத்தில் பாடுவார்கள். இதுவும் counterpoint வகையைச் சேர்ந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளசுவின் பாடல்கள் கேட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன்.டிஸ்கோ ஹிந்தி பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்த எம்மவரை கிராமியப்பக்கம் திருப்பிய பெருமை இசைஞானியையே சாரும்.இவருடைய இசையை வைத்தே இன்றைய ஒருசில வானொலிகளும், தொலைக்காட்சிகளும் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கின்றன. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

'காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்'...ஏனோ இப்பாடல் எப்பொழுது கேட்டாலும் மனதில் ஒரு வித மகிழ்ச்சியும், தவிப்பும் ஏற்படுகிறது. உண்மையில் எனக்கு இப்பாடல் மிகவும் பிடிக்கும்...ரஜினி சார் ரொம்ப சிம்பிளாக இருப்பார்... அவரின் இயல்பான நடிப்பும் இப்பாடலில் எனக்கு மிகவும் பிடிக்கும். இப்பாடலை யார் கேட்டாலும் காதலிக்க வேண்டும் என தோணும்..எஸ்.பி.பி சாரும் அவ்வளவு அருமையாக பாடியிருப்பார்.ப்பா..என்ன ஒரு குரல்வளம்..இசையும் தான்...

எனக்கு பிடித்த வரிகள்:

நேற்று போல் இன்று இல்லை..இன்று போல் நாளை இல்லை.

அன்பிலே வாழும் நெஞ்சில்..ஆயிரம் பாடலே

ஒன்று தான் எண்ணம் என்றால்..உறவு தான் ராகமே..

எண்ணம் யாவும் சொல்லவா..

என்னை நான் தேடி தேடி உன்னிடம் கண்டு கொண்டேன்

பாடல்: காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்

படம்: தம்பிக்கு எந்த ஊரு

பாடியவர்: எஸ். பி. பாலசுப்புரமணியம்

காதலின் தீபம் ஒன்று...

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கம் என்ன

காதல் வாழ்க!

நேற்று போல் இன்று இல்லை

இன்று போல் நாளை இல்லை

அன்பிலே வாழும் நெஞ்சில்

ஆயிரம் பாடலே

ஒன்றுதான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே

எண்ணம் யாவும் சொல்லவா!

(காதலின் தீபம் ஒன்று...)

என்னை நான் தேடி தேடி

உன்னிடம் கண்டுக் கொண்டேன்

பொன்னிலே பூவை அள்ளும்

புன்னகை மின்னுதே

கண்ணிலே காந்தம் வைத்த

கவிதையை பாடுதே

அன்பே இன்பம் சொல்ல வா!

(காதலின் தீபம் ஒன்று...)

  • கருத்துக்கள உறவுகள்

மெளனராகம் (1986) படம் மதுரை சுகப்ரியா தியேட்டரில் 250 நாட்கள் ஓடியது என்று நினைக்கிறேன். படம் வெளியிடப்பட்ட போது ஓரிரு வாரங்கள் கூட்டமில்லாதிருந்து பின்பு பிரபலமாகி மக்கள் புற்றீசலாய் வந்து பார்க்கத் தொடங்கி பின்பு நன்றாக ஓடி எல்லாருக்கும் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது.

எல்லாருக்கும் காதல் நிறைவேறிவிடுவதில்லை - உண்மையான காதலாய் இருந்தாலும். சில நேரங்களில் தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில் காதலித்தவரை மணம் செய்து கொள்ள முடியாமல் போய் விடலாம். "மனசுல ஒருத்தரை நெனச்சுட்டு படுக்கையில் இன்னொருத்தரோடு என்னால இருக்க முடியாது" என்று உணர்வுப் பூர்வமான வசனங்கள் பேசி கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்வை நரகமாக்கிக் கொள்பவர்கள் எத்தனையோ பேர். திருமணம் என்று ஒன்று நடைபெற்றதும் நல்ல கணவன் மனைவியாய் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பு செலுத்தி பழையனவற்றை மறந்து வாழ்க்கையை நல்லபடியாய் நடத்திச் செல்வது மிகவும் சிலர்.

நிம்மதியான வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல். 'நம் துணைவரிடம் இல்லாதது எது' என்று பட்டியல் போட ஆரம்பித்தால் பிறகு நிம்மதி காணாமல் போய்விடும். One thing is always better than the other - என்பது உலக நியதி. ஆக எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்திக்கொண்டு ஏமாற்றங்களைச் சந்திக்காமல், ஏறத்தாழ்வுகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்லுதல் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம். "கிட்டாதாயின் வெட்டென மற" என்று எதற்கோ சொல்லி வைத்திருப்பதை இதற்குப் பொருத்திக் கொள்கிறேன்.

மெளனராகம் இம்மாதிரியான வாழ்க்கைச் சிக்கலை அழகாக, அதிகம் சத்தம் போடாமல் மெளனமாகக் காட்டி, அந்தச் சிக்கல் எப்படி விடுபடுகிறது என்பதையும் அழகாகக் காட்டியிருக்கிறது. கார்த்திக்கின் 'மிஸ்டர் சந்திரமெளலி'யை ரசிக்காதவர்களே இருக்கமுடியாது. சிலகாட்சிகள் வந்தாலும் எல்லாரது உள்ளத்தையும் கொள்ளை கொண்ட பாத்திரம் கார்த்திக்கினுடையது. ரேவதி அழகாக, பாந்தமாகச் செய்திருக்கிறார். மூன்றாவது கையாக மைக்கைப் பிடித்துக்கொண்டு நிரந்தரப் புன்னகையுடன் வலம்வந்த மோகனிடமிருந்து புன்னகையையும், மைக்கையும் பிடுங்கிக்கொண்டு நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். அமைதியான அன்பு நிறைந்த கணவன் என்பதற்கு பாந்தமான நடிப்பை அலட்டிக்கொள்ளாமல் தந்திருப்பார் மோகன். அவர் இந்தப் படத்தில் புன்னகைத்ததே அபூர்வமான காட்சிகளில் மட்டும்.

கடைசிவரை காதலைச் சொல்லாமலே பிரிந்துவிடுவார்களோ என்று விவாகரத்து பத்திரம் வரை கொண்டு சென்று நம்மை நகம் கடிக்க வைத்து பிறகு சுபமாக முடித்திருப்பார் மணிரத்னம். ஹீரோ என்பதால் சோப்ளாங்கியாக ஒரு ஆக் ஷனும் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதாலோ என்னவோ கடைசியில் மோகனை ரயிலைத் துரத்திப் பிடிக்கச் செய்திருப்பார்.

ரேவதி சோகமாக வந்தாலும் திருமணமாகி மோகனை ஏற்காமல் இருந்தாலும் நடுநடுவே சுவாரஸ்யமான காட்சிகள் உண்டு. அந்தச் சர்தார்ஜிக்கு ரேவதி தமிழ் கற்றுக்கொடுக்கும் காட்சியைச் சொல்கிறேன். "போடா டேய்" என்று அவர் வி.கே.ராமசாமியை "வாழ்த்துவது" நல்ல நகைச்சுவையான காட்சி.

"நீங்க தொட்டா மேல கம்பளிப் பூச்சி ஊர்ற மாரி இருக்கு" என்ற சுருக்கென்ற வசனங்களும் உண்டு.

இம்மாதிரி மெதுவடை.. ஸாரி.. மெதுவகைப் படங்களைப் பார்க்க ரசிகர்களை இருக்கைகளோடு அழுத்தி வைத்திருப்பது கச்சிதமான திரைக்கதையும் சுவாரஸ்யமான காட்சியமைப்புகளும். முதுகெலும்பாக இசை. இசைஞானி முதுகெலும்பைத் தந்திருக்கிறார்.

மனம் ஒத்து வாழாத வாழ்க்கை நிலையை விவரிக்கும் இந்த மெளனப் பாடல் (யாரும் வாயசைக்க மாட்டார்கள்) பாலுவின் குரலில் உன்னதமாக ஒலிக்கிறது. உச்ச ஸ்தாயியில் ஆரம்ப ஆலாபனையை பாலு துவக்கும் விதமே அலாதி.

மாஸ்ட்ரோவின் இன்னிசை நிகழ்ச்சியை சில மாதங்களுக்கு முன்பு ஜெயா டிவியில் காட்டினார்கள். அந்த ஒளிக்கோப்பை போனவாரம் பார்த்தேன். பாலு இந்தப் பாடலை அட்டகாசமாகப் பாடியிருப்பார். இளையராஜாவைப் பார்த்து "கண்ணா... என் கண்ணா.." என்று மாற்றிப் பாடி ரசிக்க வைத்தார். துல்லியமான அந்தக் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

கேட்கையிலேயே மனதில் பலவித எண்ண அலைகளை எழுப்பும் பாடல் இது.

ஆ....ஆ....ஆ.....ஆ..ஹா..

ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ..

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

தாமரை மேலே நீர்த்துளி போல்

தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன

நண்பர்கள் போலே வாழ்வதற்கு

மாலையும் மேளமும் தேவையென்ன

சொந்தங்களே இல்லாமல்

பந்த பாசம் கொள்ளாமல்

பூவே உன் வாழ்க்கைதான் என்ன

சொல்..சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

மேடையைப் போலே வாழ்க்கையல்ல

நாடகம் ஆனதும் விலகிச் செல்ல

ஓடையைப் போலே உறவுமல்ல

பாதைகள் மாறியே பயணம் செல்ல

விண்ணோடுதான் உலாவும்

வெள்ளி வண்ண நிலாவும்

என்னோடு நீ வந்தால் என்ன

வா..வா

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு வட்ட நிலவோ

கண்ணே என் கண்ணே

பூபாளமே கூடாதெனும் வானம் உண்டோ சொல்

மன்றம் வந்த தென்றலுக்கு மன்றம் வர நெஞ்சமில்லையோ

அன்பே என் அன்பே

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • கருத்துக்கள உறவுகள்

படம் : ராஜபார்வை

இசை : இளையராஜா

வரிகள் : வைரமுத்து

குரல் : S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

----------------------------------------------------------

ஆ:

அந்தி மழை பொழிகிறது,

ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!

இந்திரன் தோட்டத்து முந்திரியே!

மன்மத நாட்டுக்கு மந்திரியே!

(அந்தி)

பெ:

தேனில் வண்டு மூழ்கும்போது,....

தேனில் வண்டு மூழ்கும்போது,

பாவம் என்று வந்தாள் மாது!

நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!

தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!

ஆ:

தனிமையிலே, வெறுமையிலே,

எத்தனை நாளடி இள மயிலே?

கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!

இமைகளும் சுமையடி இளமையிலே!

(அந்தி)

ஆ:

தேகம் யாவும் தீயின் தாகம்!

தாகம் தீர நீ தான் மேகம்!

கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?

தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!

பெ:

நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,

தாவணி விசிறிகள் வீசுகிறேன்!

மன்மத அம்புகள் தைத்த இடங்களில்

சந்தனமாய் எனை பூசுகிறேன்!

(அந்தி)

பெ:

சிப்பியில் தப்பிய நித்திலமே,

ரகசிய ராத்திரி புத்தகமே!

(அந்தி)

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட யுனிக் பாடகர் (இன்று வரை) ஜென்சியால் பாடப்பட்ட பாடல் இது.

என் வானிலே ஒரே வெண்ணிலா

காதல் மேகங்கள் கவிதைத் தாரகை

ஊர்வலம்...

(என் வானிலே)

நீரோடை போலவே என் பெண்மை

நீராட வந்ததே என் மென்மை

சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே

வார்த்தைகள் தேவையா...ஆஆஆஆ

(என் வானிலே)

நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்

நான் பாடும் கீதங்களுன் வண்ணம்

இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே

வெல்லங்கள் ஒன்றல்லவோ

(என் வானிலெ)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடல் இசைஞானியால் இசை அமைக்கப்பட்டு கே ஜே ஜேசுதாஸால் பாடப்பட்டது.படம் மௌனம் சம்மதம்.பாடல்கள் வாலி.

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

]]

தென்பாண்டிக் கூடலா

தேவாரப் பாடலா

தீராத ஊடலா

தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா

என்னாளும் கூடலா

பேரின்பம் நெய்யிலா

நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்

வா வா நிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

]]

உன் தேகம் தேக்கிலா

தேன் உந்தன் வாக்கிலா

உன் பார்வை தூண்டிலா

நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா -

நீ பேசும் பேச்சிலா.

என் ஜீவன் என்னிலா

உன் பார்வை தன்னிலா

தேனூறும் ??

உன் சொல்லிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

]]

தேயாத வெண்ணிலா

உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா

[[

கல்யாண தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே நல்ல பாடல்கள்.

வெள்ளைப்புறா ஒன்று அப்படி என்று ஒரு பாட்டு இருக்குதானே? அதை கேட்கனும் போல இருக்கு.

இனிமை இளமை

இணைப்புக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

முதல் எழுது தாய் மொழியில் தலை எழுது யார் மொழியில்

என் வாழ்கை வான் வெளியில்

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

பாத சுவடு தேடி தேடி கால்கள் ஒய்ந்து பொனதே

நாளும் அழுது தீர்ததாலே கண்கள் எழை ஆனதே

தலைவிதி என்னும் வார்தை இன்று கவலைக்கு மருந்தானதே

பேதங்கள் வாழும் வரை சோகங்கள் காதல் கதை

கார்கால மலர்கலும் என்னோடு தள்ளாட

(வெள்ளை)

நீயும் நானும் சேர்ந்த போது கோடை மார்கழி

பிரிந்த பின்பு பூவும் கூட சுடுவதென்ன காதலி

துடுப்பிழந்தும் காதல் ஓடம் திசை மாறுண்டது பைங்கிளி

போகும் வழி நூறானதே கண்ணீரினால் சாறானதே

இல்லத உறவுக்கு நான் செய்யும் அபிகேஷெகம்

(வெள்ளை)

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: குயிலே.. கவிக்குயிலே..

படம்: கவிக்குயில்

இசை: இளையராஜா

கிராமத்து இசையென்றாலே கிராமத்து ராஜாதான் என்று எல்லோருக்குமே தெரியும். ஏன் அப்படியென்பதற்கு ஒரு சிறிய உதாரணம் இந்தப் பாடல்.

முதலில் பாடலின் ஆரம்ப இசை. கண்ணை மூடிக்கொண்டு கேட்டீர்களேயானால், ஒரு கிராமத்தில் இருக்கும் உணர்வை சிறிது சிறிதாக மனக்கண் முன் கொண்டு வருகிறார் பாருங்கள். அது ஒரு இசைப் பிரவாகம். ஒவ்வொரு இடையீட்டு இசையும் ஒவ்வொரு முத்து.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

முதல் எழுது தாய் மொழியில் தலை எழுது யார் மொழியில்

என் வாழ்கை வான் வெளியில்

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே

பாத சுவடு தேடி தேடி கால்கள் ஒய்ந்து பொனதே

நாளும் அழுது தீர்ததாலே கண்கள் எழை ஆனதே

தலைவிதி என்னும் வார்தை இன்று கவலைக்கு மருந்தானதே

பேதங்கள் வாழும் வரை சோகங்கள் காதல் கதை

கார்கால மலர்கலும் என்னோடு தள்ளாட

(வெள்ளை)

நீயும் நானும் சேர்ந்த போது கோடை மார்கழி

பிரிந்த பின்பு பூவும் கூட சுடுவதென்ன காதலி

துடுப்பிழந்தும் காதல் ஓடம் திசை மாறுண்டது பைங்கிளி

போகும் வழி நூறானதே கண்ணீரினால் சாறானதே

இல்லத உறவுக்கு நான் செய்யும் அபிகேஷெகம்

(வெள்ளை)

பாடலுக்கு நன்றி

இளையராஜாவின் பெருமையோ பெருமை. நீங்கள் கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது.

வைரமுத்து இளையராஜாவின் இசையில் பாடல்களை எழுதும்போது பல அருமையான பாடல்கள் வந்தது. அவர்களுக்கடையில் முறுகல் வந்தபோது

நண்பர் குறிப்பிட்ட அந்தி மழை பாடல் இளையராஜவினால் விமர்சிக்கப் பட்டது.

குருடன் ஒருவன் பாடுவதாக அந்தப் பாடல் இடம் பெற்றது. இளையராஜா ஒரு

மேடையில் இந்தக் காலத்தில் சிலர் பாட்டெழுதுகிறார்கள்

அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது. குருடனுக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என்று . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன்.....................

இது இளையராஜவின் பெருமைகளில் ஒன்று

Edited by வன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குதானே

நாளை எண்ணி நான் காதிருன்தஎன் மாமன் உனக்குதானே

போவோடு ஒஅஓஅஒஅ தேனாட

தன்னோடு ஒஅஓஅஒஅ நீயாடு..ஓ..ஓ..

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க

நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓகொ…கோ….

ஆ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தாள்

மயங்கி கிறங்கி கிறங்கி உறங்க ஓகொ…கோ…

வெப்பம் படருது படருது

வெப்பம் வளருது வளருது

கொட்டும் பனியிலா பனியிலா

ஒட்டும் உறவிலே உறவிலே

ஓ..ஓ..ஒக்..ஒக்..

(மாசி)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்

படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓகோ கோ..

ஆசை ஆகா பிரமாதம் மோகக் கவிதாப் பிரவாகம்

தொடுத்து தொடுத்து முடிக்க முடிக்க ஓகொ..கோ..

கொடிதான் தவழுது தவழுது

போப்போல் சிரிக்குது சிரிக்குது

உறவும் நெருங்குது நெருங்குது

உலகம் மயங்குது உறங்குது ஒஅஒஅஒஅ…

ஓ..ஓ..ஒக்..ஒக்..

(மாசி)

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குதானே

நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குதானே

பூ வோடு ஒஅஓஅஒஅ தேனோட

தன்னோடு ஒஅஓஅஒஅ நேயாடு..ஓ..ஓ..

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க

நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓகொ…கோ….

ஆ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தாள்

மயங்கி கிறங்கி கிறங்கி உறங்க ஓகொ…கோ…

வெப்பம் படருது படருது

வெப்பம் வளருது வளருது

கொட்டும் பனியிலே பனியிலே

ஒட்டும் உறவிலே உறவிலே

ஓ..ஓ..ஒ…

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குதானே

நாளை எண்ணி நான் காதிருந்தேன் மாமன் உனக்குதானே

பூ வோடு ஒஅஓஅஒஅ தேனாட

தன்னோடு ஒஅஓஅஒஅ நேயாடு..ஓ..ஓ..

(மாசி)

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க

நெருங்க நெருங்க பொறுங்கபொறுங்க ஓகோ…கோ….

ஆ ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளித் தேன்கொள்ள வந்தாள்

மயங்கி கிறங்கி கிறங்கி உறங்க ஓகோ…கோ…

வெப்பம் படருது படருது

வெப்பம் வளருது வளருது

கொட்டும் பனியிலே பனியிலே

ஒட்டும் உறவிலே உறவிலே

ஓ..ஓ..ஒ..ஒ.

(மாசி)

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம்

படித்துப் படித்து எடுக்க எடுக்க ஓகோ கோ..

ஆசை ஆகா பிரமாதம் மோகக் கவிதாப் பிரவாகம்

தொடுதுத் தொடுத்து முடிக்க முடிக்க ஓகொ..கோ..

கொடிதான் தவழுது தவழுது

பூப்போல் சிரிக்குது சிரிக்குது

உறவும் நெருங்குது நெருங்குது

உலகம் மயங்குது உறங்குது ஒஅஒஅஒஅ…

ஓ..ஓ..ஒக்..ஒக்..

(மாசி)

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

படம்: நான் பாடும் பாடல்

பாடல்: பாடவா உன் பாடலை

பாடியவர்: ஜானகி

இசை: இசைஞானி

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் பெருமையோ பெருமை. நீங்கள் கூறும்போது நன்றாகத்தான் இருக்கிறது.

வைரமுத்து இளையராஜாவின் இசையில் பாடல்களை எழுதும்போது பல அருமையான பாடல்கள் வந்தது. அவர்களுக்கடையில் முறுகல் வந்தபோது

நண்பர் குறிப்பிட்ட அந்தி மழை பாடல் இளையராஜவினால் விமர்சிக்கப் பட்டது.

குருடன் ஒருவன் பாடுவதாக அந்தப் பாடல் இடம் பெற்றது. இளையராஜா ஒரு

மேடையில் இந்தக் காலத்தில் சிலர் பாட்டெழுதுகிறார்கள்

அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன்முகம் தெரிகிறது. குருடனுக்கு எப்படி ஐயா ஒவ்வொரு துளியிலும் முகம் தெரியும் என்று . ஆமாம் எப்படி தெரியும். அதை சொன்னவன் மூடன் என்றால். அதை ஏற்றுக்கொண்டு இசையமைத்தவன்.....................

இது இளையராஜவின் பெருமைகளில் ஒன்று

வன்னியன்,

இளையராஜா என்ற தனிமனிதனிடம் பல்வேறு குறைகள் நம் எல்லோரையும் போல் இருக்கலாம். அதற்காக அவர் இசையை வெறுக்கலாமோ?

கோழி குருடா இருந்தா நமக்கென்ன.. நமக்கு வேண்டியது கறிதானே..! :D

இதையும் கேட்டுப்பாருங்களேன்..! மறுபடியும் ஆரம்ப இசை அமர்க்களம்..

பாடல்: நல்லவர்க்கெல்லாம்

இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்

படம்: தியாகம்

பாடியவர்: T.M.சவுந்தரராஜன்

இசை: இளையராஜா

Edited by இசைக்கலைஞன்

இசைஞானியின் தனிப்பட்ட பல நடவடிக்கைகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை.

ஆனால் அவர் தமிழினத்திற்கு கிடைத்த ஒரு பெரும் சொத்து. தமிழர்களுக்கு தமிழ் இசையை கொடுத்த தாய் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.