Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி

Published By: DIGITAL DESK 7   17 MAY, 2024 | 11:15 AM

image
 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.

இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/183751

  • கருத்துக்கள உறவுகள்

அரை குறையாக உள்ளதை திறப்பதில்  வல்லவர்...தேர்தல் அவசரம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, ஏராளன் said:

இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்டி முடிக்காமல் இருக்கிற கட்டிடத்தை எந்த பக்கத்தாலை திறந்து  வைக்கிறார்?

அதுக்கு ஏன் இரண்டு அங்கை நிண்டு மினைக்கிடுறாராம்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் வடக்கு விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் 

19 MAY, 2024 | 02:37 PM
image
 

ஜனாதிபதியின் வடக்கு மாகாண விஜயம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (19) நடைபெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

பாதுகாப்பு பிரிவினர், பொலிஸார், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.

ஜனாதிபதியால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள், திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள், பாதுகாப்பு நடைமுறைகள், நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

download__1_.jpg

https://www.virakesari.lk/article/183954

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2024 at 09:00, ஏராளன் said:

இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர்

 

On 17/5/2024 at 20:02, alvayan said:

அரை குறையாக உள்ளதை திறப்பதில்  வல்லவர்...தேர்தல் அவசரம்..

 

On 17/5/2024 at 23:26, குமாரசாமி said:

கட்டி முடிக்காமல் இருக்கிற கட்டிடத்தை எந்த பக்கத்தாலை திறந்து  வைக்கிறார்?

அதுக்கு ஏன் இரண்டு அங்கை நிண்டு மினைக்கிடுறாராம்?

ஜனாதிபதியால்… மூன்று தியேட்டர்களும் திறந்து வைக்கப்பட இருப்பது… சினிமா ரசிகர்களுக்கு பால் வார்த்த மாதிரி ஒரு இனிப்பான  செய்தி. 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

 

 

ஜனாதிபதியால்… மூன்று தியேட்டர்களும் திறந்து வைக்கப்பட இருப்பது… சினிமா ரசிகர்களுக்கு பால் வார்த்த மாதிரி ஒரு இனிப்பான  செய்தி. 😂

டக்கி ஏற்கனவே ஒரு திய்யேட்டரில் குடி இருக்காரே..அப்ப அவருக்கு மேலதிகம்மாக ஒன்றா ?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/5/2024 at 09:00, ஏராளன் said:

நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

large.IMG_6501.jpeg.313b092a17b7b43e59e5

  • கருத்துக்கள உறவுகள்

சிலவருடங்களுக்கு முன்னர் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஏற்கனவே  திறக்கப்பட்டு உபயோகிக்கப்பட்டுக் கொண்டு இருந்த கட்டட தொகுதி ஒன்றிற்கு மீண்டும் திறப்பு விழா நடத்தினார்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 400 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கவுள்ள ஜனாதிபதி

Published By: DIGITAL DESK 7

20 MAY, 2024 | 12:30 PM
image
 

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கவுள்ளார்.

யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது. 

நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

https://www.virakesari.lk/article/184025

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்படவுள்ளது

400 பேர்களதும் அவர்கள் குடும்ப ஆட்களின் வாக்கும் ரெடி.

வேற என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். பல்கலையில் 46 வருடங்களுக்குப் பின் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சிக் கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு  

24 MAY, 2024 | 12:53 PM
image

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களுக்குப் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது கட்டடமான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (24) முற்பகல் திறந்துவைத்தார். 

இந்த கட்டடம் 942 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

https://www.virakesari.lk/article/184372

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.