Jump to content

God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு.

ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது:

1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர்.

2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர்.

3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு.

4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.     

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அன்பு Justin  க்கு 

"ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன்."

உங்கள் வாதத்தை பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை ??

ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு என ஒரு கருத்தும், வரைவிலக்கணமும் , அடிப்படை சொல்லும் [வேர் சொல்லும்] உண்டு . இப்படித்தான் சொல்லை ஏற்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நான் வாதாடுகிறேன். மற்றும் படி "நீங்க வேற, நாங்க வேற" என்று இல்லை. 

marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.
 
அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், 

ஆண் ஆணுடன் சேருவது அல்லது பெண் பெண்ணுடன் சேருவது மற்றும் ஆண் பெண்ணுடன் சேருவது எல்லாம் ஒன்றா ??

வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியாதா ?

அதனாலதான்  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்கிறேன், மற்றும் படி அவர்களை தாழ்த்தி அல்லது உயர்த்தி காட்டிட அல்ல 

ஆண் பெண் சேர்தலில் ஒரு 'பிள்ளை' பிறக்கிறது அல்லது 'பிள்ளை' பிறக்க பொதுவாக வாய்ப்பு உண்டு 

அந்த பிள்ளையை , பிள்ளை என்று மட்டும் கூப்பிடுவதில்லை, அவர்களின் உடல் அமைப்பை வைத்து பொதுவாக ஆண் / மகன் அல்லது பெண் / மகள் என்று வேறு வேறு சொற்களில் கூறுகிறோம் , மற்றும் படி பிள்ளையை  நீங்க வேற, நாங்க வேற" என்று அல்ல. 

ஏன் ஆண் , பெண் என்று கூறுகிறோம் ? பொதுவாக மனிதன் என்றே கூறலாமே ??


எல்லாத்துக்கும் காரணம் சொல்லுக்கு என்று கருத்தும் அதிகமாக வேர்ச் சொல்லும் உண்டு, 

அப்படித்தான் மனித கூட்டும் ??

வேலைக்கு போகிறவர்கள் எல்லோரும் ஊழியர் அல்லது பணியாளர் என்று கூப்பிடலாம் ??

ஏன் நாம் ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர் என்று வேறு வேறாக கூப்பிடுகிறோம் ??

என என்றால் அங்கு அந்த ஊழியர்களின் தொழில் அமைப்பில் வேறுபாடு இருப்பதால் 


அப்படியே இதுவும். சிந்தித்தால் இலகுவான ஒன்று !!

 

இறுதியாக, இரண்டாயிரம் / இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் மட்டும் அல்ல , ஒரு அடிப்படை கருத்தையும் கொண்ட மணம், திருமணம் போன்ற சொற்களை, அதன் உள்பொருளை விளங்காமல் கதைப்பது என்னவென்று புரியவில்லை. 

அந்த திருமணம் என்ற சொல்லின் விளைவாகத்  தான் கணவன் , மனைவி என்ற சொற்களே பிறந்தன , சில கருத்துக்களுடன் , அது மட்டும் அல்ல, அம்மா , அப்பா என்ற சொல்கூட, அதே போல 

ஆனால் அவைகள் எதையும் வழங்காத கூட்டுக்கும் அதே பெயர் ??

அப்படி என்றால், 

அது என்ன 

இலங்கைத் தமிழர், இலங்கை சிங்களவர் ?

எல்லாம் இலங்கையர் என்றால் 

justin கூட தன் பெயரை முழுதாக கூறி இருந்து இருப்பாரே ??

ஆனால், உண்மையில் என்ன அங்கு நடந்து இருக்கும் ??

ஏன் இந்து வேறு வேறு ?? 

நன்றி 

 

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

அன்பு Justin  க்கு 

"ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன்."

உங்கள் வாதத்தை பார்த்து நான் சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை ??

ஒவ்வொரு சொல்லுக்கும் அதற்கு என ஒரு கருத்தும், வரைவிலக்கணமும் , அடிப்படை சொல்லும் [வேர் சொல்லும்] உண்டு . இப்படித்தான் சொல்லை ஏற்படுத்துகிறார்கள். அந்த அடிப்படையில் தான் நான் வாதாடுகிறேன். மற்றும் படி "நீங்க வேற, நாங்க வேற" என்று இல்லை. 

marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும்  திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை  உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony  = matri  + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு  [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும்.
 
அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், 

ஆண் ஆணுடன் சேருவது அல்லது பெண் பெண்ணுடன் சேருவது மற்றும் ஆண் பெண்ணுடன் சேருவது எல்லாம் ஒன்றா ??

வித்தியாசம் இருப்பது உங்களுக்கு தெரியாதா ?

அதனாலதான்  "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்கிறேன், மற்றும் படி அவர்களை தாழ்த்தி அல்லது உயர்த்தி காட்டிட அல்ல 

ஆண் பெண் சேர்தலில் ஒரு 'பிள்ளை' பிறக்கிறது அல்லது 'பிள்ளை' பிறக்க பொதுவாக வாய்ப்பு உண்டு 

அந்த பிள்ளையை , பிள்ளை என்று மட்டும் கூப்பிடுவதில்லை, அவர்களின் உடல் அமைப்பை வைத்து பொதுவாக ஆண் / மகன் அல்லது பெண் / மகள் என்று வேறு வேறு சொற்களில் கூறுகிறோம் , மற்றும் படி பிள்ளையை  நீங்க வேற, நாங்க வேற" என்று அல்ல. 

ஏன் ஆண் , பெண் என்று கூறுகிறோம் ? பொதுவாக மனிதன் என்றே கூறலாமே ??


எல்லாத்துக்கும் காரணம் சொல்லுக்கு என்று கருத்தும் அதிகமாக வேர்ச் சொல்லும் உண்டு, 

அப்படித்தான் மனித கூட்டும் ??

வேலைக்கு போகிறவர்கள் எல்லோரும் ஊழியர் அல்லது பணியாளர் என்று கூப்பிடலாம் ??

ஏன் நாம் ஆசிரியர், மருத்துவர், பொறியியலாளர் என்று வேறு வேறாக கூப்பிடுகிறோம் ??

என என்றால் அங்கு அந்த ஊழியர்களின் தொழில் அமைப்பில் வேறுபாடு இருப்பதால் 


அப்படியே இதுவும். சிந்தித்தால் இலகுவான ஒன்று !!

நன்றி 

 

மிக்க மரியாதையோடு உங்களுடைய இந்த வியாக்கியானத்துடன் முரண்படுகிறேன்.

1. முதல் பிரச்சினை: கிரேக்கத்தில் உருவாகி, ஆங்கிலத்தில் இருக்கிற matrimony தான் தமிழில் இருக்கிற "திருமணம்" என்ற முடிவுக்கு நீங்கள் வர என்ன காரணம்? பாரம்பரியமான திருமணம் பற்றிய உங்கள் பார்வை தான் காரணம். "திருமணம்" என்பது ஒரு புனிதத்தின் முன்னொட்டான "திரு" சேர்ந்து இருவரின் இணைவைக் குறிக்கிறது என்பது தான் என் புரிதல். எனவே, தமிழில் கிரேக்கத்தின் Matri சொற்பிறப்பு (etymology) இணைய வேண்டிய தேவை இல்லை என்பது என் கருத்து.

2. உங்கள் வாதம் "ஆதியில் உருவான சொற்பிறப்பையொட்டியே பிற்காலத்திலும் ஒரு சொல் பயன்படுத்தப் பட வேண்டுமென்பதாக" இருக்கிறது. "திருமணம்"  போன்ற சமூகக் கட்டமைப்பு (social construct) விடயங்களுக்கு இவ்வளவு இறுக்கமான கட்டுப் பாடு அவசியமில்லை, சாத்தியமும் இல்லை.

ஒரு உதாரணம் மானிடவியலில்/வரலாற்றில் பார்ப்போம்: அடிமையைக் குறிக்கும் slave என்ற சொல்  கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது. ஐரோப்பா முழுவதும் இந்த சிலாவ் மக்கள் அடிமைகளாக நோர்ஸ்க் கடலோடிகளாலும், முஸ்லிம்களாலும் விற்கப் பட்ட காலத்தில் சிலாவ் என்பதில் இருந்து சிலேவ் என்ற சொல் வந்திருக்கிறது. இது நடந்தது கி. பி 1000 இற்கு முன்.

தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது.

slavery ஒரு social construct . திருமணம் ஒரு social construct . இது போன்ற சமூகக் கட்டமைப்பு சார் பதங்களை நாம் அவை உருவான காலத்து வேர்ச்சொல் சார்ந்தே பாவிக்க வேண்டுமென்பது மொழியியலாளர்கள் கூட ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு Justin  க்கு 

"தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது."

slave க்கு என்று ஒரு அடிப்படை கருத்து அன்றில் இருந்து இன்றுவரை   மாறவில்லை 

ஆமாம், அதன் அடிப்படை கருத்து 

a person who is the property of and wholly subject to another and forced to provide unpaid labor. a person entirely under the domination of some influence or person: She was a slave to her own ambition.

அது தொடக்கத்தில் கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் அது அப்படியான செயலில் உள்வாங்கப்பட்ட எல்லோருக்கும் நீட்டியதும் உண்மை  , ஏன் என்றால் அங்கே, 

அதே நடவடிக்கை, அதே மாதிரியான சூழ்நிலை, அதே மாதிரியான மக்கள், 

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அங்கு முக்கியம் இல்லை  

கொஞ்சம் உற்றுப்  பாருங்கள், வேறு வேறு தெரிகிறதா, அடிப்படை கருத்தில்  ??  

திருமணம் என்ற சொல் சங்க காலத்தில், தமிழகத்தில் தோன்றியது , ஆனால் அது நீடிக்கப்பட்டு அதே கருத்துள்ள சடங்குக்கு , மக்கள் எங்கே பிறந்தார்கள் , எங்கே வாழ்கிறார்கள் என்பதை தாண்டி / தவிர்த்து பாவிக்கப் பட்டன , கருத்தை மாற்றாமல் 

 இறுதியாக, இரண்டாயிரம் / இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் மட்டும் அல்ல , ஒரு அடிப்படை கருத்தையும் கொண்ட மணம், திருமணம் போன்ற சொற்களை, அதன் உள்பொருளை விளங்காமல் கதைப்பது என்னவென்று புரியவில்லை. 

அந்த திருமணம் என்ற சொல்லின் விளைவாகத்  தான் கணவன் , மனைவி என்ற சொற்களே பிறந்தன , சில கருத்துக்களுடன் , அது மட்டும் அல்ல, அம்மா , அப்பா என்ற சொல்கூட, அதே போல 

ஆனால் அவைகள் எதையும் வழங்காத கூட்டுக்கும் அதே பெயர் ??

அப்படி என்றால், 

அது என்ன 

இலங்கைத் தமிழர், இலங்கை சிங்களவர் ?

எல்லாம் இலங்கையர் என்றால் 

justin கூட தன் பெயரை முழுதாக கூறி இருந்து இருப்பாரே ??

ஆனால், உண்மையில் என்ன அங்கு நடந்து இருக்கும் ??

ஏன் இந்து வேறு வேறு ?? 

நன்றி  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
27 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

அன்பு Justin  க்கு 

"தற்போது சகல இனத்தில் இருந்தும் வந்த அடிமைகளை slave என்று தான் அழைக்கிறோம். ஆபிரிக்காவில் இருந்து ஸ்பானியர்கள் அமெரிக்காவிற்கு கடத்தி வந்தவர்களை "நீ slave அல்ல, வேறு பெயரைப் பாவிக்க வேண்டும்" என்று யாரும் கட்டுப் பாடு விதிக்க முடியாது."

slave க்கு என்று ஒரு அடிப்படை கருத்து அன்றில் இருந்து இன்றுவரை   மாறவில்லை 

ஆமாம், அதன் அடிப்படை கருத்து 

a person who is the property of and wholly subject to another and forced to provide unpaid labor. a person entirely under the domination of some influence or person: She was a slave to her own ambition.

அது தொடக்கத்தில் கிழக்கு ஐரோப்பிய மக்களினமான Slav இல் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் அது அப்படியான செயலில் உள்வாங்கப்பட்ட எல்லோருக்கும் நீட்டியதும் உண்மை  , ஏன் என்றால் அங்கே, 

அதே நடவடிக்கை, அதே மாதிரியான சூழ்நிலை, அதே மாதிரியான மக்கள், 

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது மற்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது அங்கு முக்கியம் இல்லை  

கொஞ்சம் உற்றுப்  பாருங்கள், வேறு வேறு தெரிகிறதா, அடிப்படை கருத்தில்  ??  

திருமணம் என்ற சொல் சங்க காலத்தில், தமிழகத்தில் தோன்றியது , ஆனால் அது நீடிக்கப்பட்டு அதே கருத்துள்ள சடங்குக்கு , மக்கள் எங்கே பிறந்தார்கள் , எங்கே வாழ்கிறார்கள் என்பதை தாண்டி / தவிர்த்து பாவிக்கப் பட்டன , கருத்தை மாற்றாமல் 

 இறுதியாக, இரண்டாயிரம் / இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கத்தில் மட்டும் அல்ல , ஒரு அடிப்படை கருத்தையும் கொண்ட மணம், திருமணம் போன்ற சொற்களை, அதன் உள்பொருளை விளங்காமல் கதைப்பது என்னவென்று புரியவில்லை. 

அந்த திருமணம் என்ற சொல்லின் விளைவாகத்  தான் கணவன் , மனைவி என்ற சொற்களே பிறந்தன , சில கருத்துக்களுடன் , அது மட்டும் அல்ல, அம்மா , அப்பா என்ற சொல்கூட, அதே போல 

ஆனால் அவைகள் எதையும் வழங்காத கூட்டுக்கும் அதே பெயர் ??

அப்படி என்றால், 

அது என்ன 

இலங்கைத் தமிழர், இலங்கை சிங்களவர் ?

எல்லாம் இலங்கையர் என்றால் 

justin கூட தன் பெயரை முழுதாக கூறி இருந்து இருப்பாரே ??

ஆனால், உண்மையில் என்ன அங்கு நடந்து இருக்கும் ??

ஏன் இந்து வேறு வேறு ?? 

நன்றி  

மீண்டும் மன்னிக்க வேண்டும்: உள்பொருளை விளங்காமல் திருமணம் என்ற சொல்லின் அர்த்தத்தை குறுக்கிக் கொள்வது நீங்கள் தான் என கருதுகிறேன்.

நீலக்கண், வெள்ளைத் தோல் சிலாவ் மக்களில் இருந்து வந்தோரை அழைத்த சிலேவ் சொல், பின்னர் நீலக்கண், வெள்ளைத் தோல் இல்லாத ஆனால், அதே நிலையில், சமூக அந்தஸ்தில் இருந்த ஏனையோரையும் குறிக்கப் பயன்பட்டது எப்படி?

சமூகத்தில், உலக வரலாற்றில் ஏற்பட்ட மாற்றம்.

மேலும், சங்க காலத்தில் உருவான திருமணம் புனிதம் குறித்து மட்டுமே குறிக்க, நீங்கள் கிரேக்கத்தின் "தாய்மை" என்ற அர்த்தத்தை எங்கேயிருந்து தமிழ் சொல்லான திருமணத்தில் இணைத்தீர்கள்? இதைத் தான் சொன்னேன், திருமணம் என்றால் தாய்மை, பிள்ளை பெறுதல் என்ற பாரம்பரியமான பார்வையின் பால் உருவான கருத்தே உங்கள் வாதத்தின் அடிப்படை.

ஒரு பேச்சுக்கு, உங்கள் பாரம்பரிய திருமணம் என்பதன் குறுகத் தறித்த அர்த்தத்தை எடுத்துக் கொண்டால் கூட, அதை இன்றைய ஆண்-பெண் இணைகளுக்கு முழுவதுமாக பிரயோகிக்க இயலுமா?

தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின்  அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே?

Edited by Justin
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அன்பு Justin  க்கு 

சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.
 

கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது என்பதில் ஐயம் இல்லை

ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு பொது இயல்பு மாறவில்லை,

ஆக நீங்கள் இன்றைய வசதியை பொறுத்து அதை தங்கள்  விருப்பம் படி சரிபண்ணுகிறீர்கள்  . அவ்வளவுதான். ஆனால் அடிப்படை மாறவில்லை ?? 

அது கூட புரியவில்லை என்றால், நான் இனி எழுதுவத்துக்கு ஒன்றும் இல்லை

தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? 


இதற்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு ?? 

அது அவர்களின் உடலின் சில குறைபாடுகளால், அல்லது அவர்களின் தனிப்பட்ட எண்ணங்களால்  அதை இன்னும் அல்லது இன்றைய விஞ்ஞானத்தால் சரிபண்ண முடியாத சூழலில், அப்படியான ஒன்றுக்கு போகிறார்கள் . அவ்வளவு தான் 

சிந்திக்க தெரிந்தால், அது புரியும். குழப்பத் தேவை இல்லை ??

பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின்  அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே?

ஆமாம், அது தெரிவு, இயற்கை அல்ல??

தெரிவு அறிவியல் வளர்ச்சியுடனும், நவீனமாக்களுடனும் வளரும் ஒன்று!!

அவ்வளவு தான். அதற்கும் திருமணம் என்ற சொல்லுக்கும், செயலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள் ??

உங்கள் கருத்தை நீங்கள் எப்படியும் சொல்லலாம். அது உங்கள் சுதந்திரம் . அவ்வளவுதான் !!

ஆனால் அதில் அடிப்படை இருக்கவேண்டுமே ??

நன்றி 

Edited by kandiah Thillaivinayagalingam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

அன்பு Justin  க்கு 

சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள்.
 

கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது என்பதில் ஐயம் இல்லை

ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு பொது இயல்பு மாறவில்லை,

ஆக நீங்கள் இன்றைய வசதியை பொறுத்து அதை தங்கள்  விருப்பம் படி சரிபண்ணுகிறீர்கள்  . அவ்வளவுதான். ஆனால் அடிப்படை மாறவில்லை ?? 

அது கூட புரியவில்லை என்றால், நான் இனி எழுதுவத்துக்கு ஒன்றும் இல்லை

தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? 


இதற்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு ?? 

அது அவர்களின் உடலின் சில குறைபாடுகளால், அல்லது அவர்களின் தனிப்பட்ட எண்ணங்களால்  அதை இன்னும் அல்லது இன்றைய விஞ்ஞானத்தால் சரிபண்ண முடியாத சூழலில், அப்படியான ஒன்றுக்கு போகிறார்கள் . அவ்வளவு தான் 

சிந்திக்க தெரிந்தால், அது புரியும். குழப்பத் தேவை இல்லை ??

பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின்  அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே?

ஆமாம், அது தெரிவு, இயற்கை அல்ல??

தெரிவு அறிவியல் வளர்ச்சியுடனும், நவீனமாக்களுடனும் வளரும் ஒன்று!!

அவ்வளவு தான். அதற்கும் திருமணம் என்ற சொல்லுக்கும், செயலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள் ??

உங்கள் கருத்தை நீங்கள் எப்படியும் சொல்லலாம். அது உங்கள் சுதந்திரம் . அவ்வளவுதான் !!

ஆனால் அதில் அடிப்படை இருக்கவேண்டுமே ??

நன்றி 

 திருமணத்துடன் "தாய்மையை, பிள்ளைப்பேற்றை முடிச்சுப் போட்டு விவாதிப்பது எங்கள் இருவரில் யார்😂?

உங்கள் ஒரிஜினல் வாதமான  "திருமணத்தின் ஆதிப் பெயரின் அடிப்படையை மாற்றக் கூடாது, திருமணத்தின் ஆதிப் பெயரின் அடிப்படை "Matri" என்பது உங்களுக்கே மறந்து போய் விட்டதா? அதில் இருந்தல்லவா இந்தக் கேள்விகளெல்லாம் என்னிடமிருந்து வந்தன?

சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள். நீங்கள் உங்கள் எண்ணத்தின் அடிப்படையில் அவர்களுள் ஒருவராக இல்லா விட்டாலும், சொற்பிறப்பியல், மனித வரலாறு, முன்னேற்றம் என்பன பற்றிய உங்கள் ஒற்றைப் படையான புரிதலால் இந்தப் பழமை வாதிகளுக்கு ideological aid ஆக  இருக்கிறீர்கள் என அஞ்சுகிறேன்.

இதில் எனக்குப் புரிதல் குறைபாடு, குழப்பம் இருப்பதாக நான் கருதவில்லை. திருமணத்தின் அடிப்படை அர்ப்பணிப்பும் காதலும் என்று சிம்பிளாக வரைவிலக்கணம் இருக்கும் போது வேர்ச்சொல் ஆய்வெல்லாம் அவசியமில்லை.  Love is Love!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்து ஒரு பிள்ளையை தத்து எடுக்க முடியும் என்றால் மேஜர் ஆன அன்றே(18 வயசான உடன்) ஒரு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையை தத்து எடுக்க எல்லா உரிமையும் இருக்குத்தானே..?  ஆணும் ஆணும்/ பெண்ணும் தத்தெடுத்தால் என்ன ஆண்/பெண் தனிய தத்தெடுத்தால் என்ன..? நாய் பூனை ஆடு மாட்டை யாரும் தத்தெடுப்பதுபோல் இதையும் ஏன் அனுமதிக்கவில்லை..?😳

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு Justin  க்கு 

அன்பு அன்புக்கே 
அதில் குழப்பம் இல்லை 

அண்ணன் தங்கை, 
அம்மா மகன் 

இப்படி எங்கும் அன்பு அன்புக்கே 
அது உலகலாவியது 

அதனால்த்தான்

அன்பே கடவுள் என்றான் பண்டைய தமிழன் 

அதில் எவருக்குமே ஆட்சேபனை இல்லை 

ஆனால் அதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு ?

திருமணம் இல்லாமலே அன்பு அன்புக்கு என்று யாரும் அல்லது குறிப்பிட்ட இருவரோ அல்லது பலரோ வாழலாம்??

ஒருவரும் தடுக்கப் போவதில்லை 

அது தெரியாதா??

"சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

அது முற்றிலும் சரி . அது தான் மூட நம்பிக்கைகளுக்கு வழிவிடுகிறது 

ஆனால் அதற்கும் திருமண பந்தத்தில் வாழ்வதற்கும் என்ன தொடர்பு?

திருமணம் செய்ய விரும்பாதவர்கள் தாராளமாக living  together / ஒன்றாக  இணைந்து வாழலாம் இன்றைய சமூக அம்மைப்பில்.


ஒரு தடையும் இல்லை  

"ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

இது தான் எனக்கு புரியவில்லை ??

சாப்பிடு என்றால் சுமேரிய காலத்தில் இருந்து சாப்பிடுதல். அடிப்படை கருத்து மாறவில்லை 

அது போலவே மற்ற சொற்களும். மாறியவை அந்த சொற்களின் அடிப்படை கருத்து அல்ல, ஆனால் அந்த அடிப்படை கருத்து மாறாமல் விரிவடைகின்றன என்று கூறலாம்.  

திருமணம் என்ற சொல் பலதாரமாக அல்லது கூட்டாக இருந்து , பின் ஒரு தாரமாக , ஒருவருக்கு ஒருவராக மாறியது. ஆனால் திருமணம் என்ற செயலில் மாற்றம் இல்லை.  

மற்றது நான் உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அல்லது ஐயப்பாடுகளுக்கும் கோடிட்டு மறுமொழி தந்து கொண்டே இருக்கிறேன் 

ஆனால், 


நீங்கள்   என்னுடைய ஒவ்வொரு கேள்விகளுக்கோ, ஐயப்பாடுகளுக்கோ நேரடியாக பதில் இல்லை. அது குப்பையில் போகிறது

ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு ஒன்றை சேர்த்துக்கொண்டு / சொல்லிக்கொண்டு போகிறீர்கள் 

சேர்ப்பதில் பிழை ஒன்றும் இல்லை, ஆனால் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, அதற்கு சான்றாக அல்லது மேலதிகமாக சொல்லலாம், அதுவே வாதத்தில் சரியானது . 

அது புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன் 

அல்லாவிடால்  அது விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் 

அப்படித்தான் அது இருக்கிறது 

நன்றி 

துளி/DROP:669 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2570752476333374/

துளி/DROP:670 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2584280864980535/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒரு ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் சேர்ந்து ஒரு பிள்ளையை தத்து எடுக்க முடியும் என்றால் மேஜர் ஆன அன்றே(18 வயசான உடன்) ஒரு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தையை தத்து எடுக்க எல்லா உரிமையும் இருக்குத்தானே..?  ஆணும் ஆணும்/ பெண்ணும் தத்தெடுத்தால் என்ன ஆண்/பெண் தனிய தத்தெடுத்தால் என்ன..? நாய் பூனை ஆடு மாட்டை யாரும் தத்தெடுப்பதுபோல் இதையும் ஏன் அனுமதிக்கவில்லை..?😳

தத்து எடுப்பது என்பது இலகுவான  விடயம் அல்ல. மேற்குநாடுகளில் தத்து எடுப்பதற்கு கூர்மையான ஆராய்ச்சி (vetting process) எல்லாம் உண்டு.  

வாதத்தில் வெல்லவேண்டும் என்று கருத்தாடுவது எப்போதும் வீண்வேலை. அதை குருவிகள், நெடுக்காலபோவன் காலத்தில் இருந்தே யாழில் பார்க்கின்றோம்😂

ஜனநாயக நாடுகளில் வரும் சட்டங்கள் எல்லாம் பாராளுமன்றில், அரசசபையில் நீண்ட விவாதங்களுக்கு உள்ளாகித்தான் சட்டங்கள் ஆகின்றன. ஒருபால் திருமணங்களையும் “திருமணம்” (marriage) என்று சட்டரீதியாகச் சொல்ல பல காரணங்கள் உள்ளன. ஆனால் திருமணத்திற்கு அடிமுடி தேடினால் லெமூரியன் காலத்தில் “திருமணம்” என்றுதான் சொல்லப்பட்டது என்றும் வாதாடலாம்!

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, kandiah Thillaivinayagalingam said:

அன்பு Justin  க்கு 

அன்பு அன்புக்கே 
அதில் குழப்பம் இல்லை 

அண்ணன் தங்கை, 
அம்மா மகன் 

இப்படி எங்கும் அன்பு அன்புக்கே 
அது உலகலாவியது 

அதனால்த்தான்

அன்பே கடவுள் என்றான் பண்டைய தமிழன் 

அதில் எவருக்குமே ஆட்சேபனை இல்லை 

ஆனால் அதற்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு ?

திருமணம் இல்லாமலே அன்பு அன்புக்கு என்று யாரும் அல்லது குறிப்பிட்ட இருவரோ அல்லது பலரோ வாழலாம்??

ஒருவரும் தடுக்கப் போவதில்லை 

அது தெரியாதா??

"சமூகம் மாறுகிறது, புதிய புரிதல்களும், இது சரி, இது தவறு என்ற புதிய தகவல்களும் கிடைக்கின்றன. சொற்களின் - குறிப்பாக மனிதர்கள் ஆதியில் உருவாக்கிய கலாச்சாரக் கட்டமைப்புகளின் அடிப்படையிலான சொற்களும் புதிய அர்த்தம் பெறுகின்றன. ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

அது முற்றிலும் சரி . அது தான் மூட நம்பிக்கைகளுக்கு வழிவிடுகிறது 

ஆனால் அதற்கும் திருமண பந்தத்தில் வாழ்வதற்கும் என்ன தொடர்பு?

திருமணம் செய்ய விரும்பாதவர்கள் தாராளமாக living  together / ஒன்றாக  இணைந்து வாழலாம் இன்றைய சமூக அம்மைப்பில்.


ஒரு தடையும் இல்லை  

"ஆனால், பழமைவாதிகள், பிற்போக்கு வாதிகள் சொற்களில் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள்."

இது தான் எனக்கு புரியவில்லை ??

சாப்பிடு என்றால் சுமேரிய காலத்தில் இருந்து சாப்பிடுதல். அடிப்படை கருத்து மாறவில்லை 

அது போலவே மற்ற சொற்களும். மாறியவை அந்த சொற்களின் அடிப்படை கருத்து அல்ல, ஆனால் அந்த அடிப்படை கருத்து மாறாமல் விரிவடைகின்றன என்று கூறலாம்.  

திருமணம் என்ற சொல் பலதாரமாக அல்லது கூட்டாக இருந்து , பின் ஒரு தாரமாக , ஒருவருக்கு ஒருவராக மாறியது. ஆனால் திருமணம் என்ற செயலில் மாற்றம் இல்லை.  

மற்றது நான் உங்கள் ஒவ்வொரு கேள்விக்கும் அல்லது ஐயப்பாடுகளுக்கும் கோடிட்டு மறுமொழி தந்து கொண்டே இருக்கிறேன் 

ஆனால், 


நீங்கள்   என்னுடைய ஒவ்வொரு கேள்விகளுக்கோ, ஐயப்பாடுகளுக்கோ நேரடியாக பதில் இல்லை. அது குப்பையில் போகிறது

ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு ஒன்றை சேர்த்துக்கொண்டு / சொல்லிக்கொண்டு போகிறீர்கள் 

சேர்ப்பதில் பிழை ஒன்றும் இல்லை, ஆனால் கேட்ட கேள்விக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, அதற்கு சான்றாக அல்லது மேலதிகமாக சொல்லலாம், அதுவே வாதத்தில் சரியானது . 

அது புரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன் 

அல்லாவிடால்  அது விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் 

அப்படித்தான் அது இருக்கிறது 

நன்றி 

துளி/DROP:669 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 01]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2570752476333374/

துளி/DROP:670 [விதண்டா வாதம் அல்லது குதர்க்கம் / பகுதி 02]:
https://www.facebook.com/groups/978753388866632/permalink/2584280864980535/

என்னுடைய புரிதல்: நீங்கள் etymology எனும் சொற்பிறப்பியலை மிகவும் தவறாக இந்த விடயத்தில் கையாள்கிறீர்கள். வெற்றிடத்தில் ஒரு சொல் உதிப்பதில்லை. அந்த நேரம் இருந்த மானிடவியல்/வாழ்க்கை நிலைமைகளில் பெண்கள், தாய்மை என்ற சந்ததியை உருவாக்கிக் கொள்ளும் நோக்கில் தாய்மை திருமணத்திற்கு மையமாக இருந்தது. தற்போது "கனேடிய விசா" கூட திருமணத்திற்கு காரணமாக, மையமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா? இதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று வெறுத்துப் போய் இருக்கிறேன்😎.   

நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு நான் பதில் தரவில்லையென்கிறீர்கள். ஆனால், என்ன கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள்?

உதாரணமாக: "அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு?" என்று கேட்டிருக்கிறீர்கள். இது கேள்வி? இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியவில்லையென்றால் விதண்டாவாதம் பற்றி முறைப்பட உங்களுக்கு ஏதும் காரணங்கள் இருக்கின்றனவா ஐயா? Romantic love அதன் பிறகு just plain love ஆக வளர்கிற அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பென்று உங்களுக்கு நான் விளக்க வேண்டுமா😂?

எனவே, சொற்களில் மனிதர்களை, அவர்களது வாழ்க்கையை அடக்கும் "செருப்பிற்காக காலை வெட்டும்" வேலையை நீங்கள் தொடரலாம். அதை எதிர்ப்போரை விதண்டாவாதம் செய்கிறார்கள் என்றும் கூறலாம். ஆனால், வாசிப்பவர்களுக்கு எந்தப் பக்கம் ஓட்டை இருக்கிறதென்பது தெளிவாகத் தெரியும்! கவலை வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LGBTQRSTUVWXYZ வின் ஆர்ப்பாட்டம் சொல்லும் விடயம் என்னவென்றால் ...காலம்காலமாகக் கட்டிக்காக்கப்பட்ட குடும்ப அமைப்பு முறை என்பது இனியும் தேவையா? என்பதுதான். 

தேவை என்பது என்பது என் நிலைப்பாடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அன்பு Justin  க்கு

 

"கனேடிய விசா" கூட திருமணத்திற்கு காரணமாக, மையமாக இருக்கிறது என்றால் நம்புவீர்களா? 

இருக்கிறது. போலி திருமணங்கள் செய்து விசா பெறுவது யாரும் அறிந்ததே . அது ஒருவர் ஏமாற்றும் செயல்

ஆனால், அதே கனடா , இங்கு எதை, எவர் எவரை  திருமணம் என்று அங்கீகரிக்கிறது என்று தெரியுமா ?
 
உண்மையானது பொய்யானது என்பதை விட, அந்த கனடா அங்கீகரிக்கும் இருவரும்  சட்டப்படி இணைந்து இருக்கிறார்களா என்பதிலேயே கவனம் செலுத்துகிறது 

அது சரியா பிழையா என இங்கு நான் வாதாட வரவில்லை. 

சட்டத்தில் உள்ள ஓட்டையை தமக்கு சாதகமாக ஏமாற்றுகிறார்கள் என்பதே உண்மை. அது முற்றிலும் பிழையான செயலும் உதாரணமுமே

"இதைத் தான் உங்களுக்கு விளக்க முயன்று வெறுத்துப் போய் இருக்கிறேன்"

எம் வாதத்தின் தலைப்புடன் ஒத்துப் போகக்கூடியதாக இதில் எண்ணத்தை விளங்கப்படுத்த இருக்கிறது? மற்றும்  வெறுப்பதற்கு ??   

"அன்புக்கும் திருமணத்திற்கும் என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறீர்கள். இது கேள்வி? இதற்குப் பதில் உங்களுக்குத் தெரியவில்லையென்றால்"

அன்பு மட்டும் சட்டபூர்வமான திருமணத்துக்கு காரணம்  அல்ல. அதுவும் ஒன்று என்பதே உண்மை !! 

"செருப்பிற்காக காலை வெட்டும்" வேலை எனக்குத் தெரியாது. நீங்க சொல்லித்தான் கேள்விப்படுகிறேன். நான் காலுக்கு தான் செருப்பு போடுறவன் , அளவு இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விடுவேன் , அவ்வளவு தான். சமயம், மூட நம்பிக்கைகள் எல்லாம் நான் எறிந்தவைகளில் அடங்கும் 

"வாசிப்பவர்களுக்கு எந்தப் பக்கம் ஓட்டை இருக்கிறதென்பது தெளிவாகத் தெரியும்! கவலை வேண்டாம்."

நான் கவலைப்பட ஒன்றுமே இல்லை, அப்படி ஒன்றை நான் யோசிக்கவே இல்லை. நீங்க யோசித்து சொல்லித்தான் இப்ப வாசிக்கிறேன். கவலைப்பட வேண்டாம்??

நன்றி   

Edited by kandiah Thillaivinayagalingam
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
    • பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT 27 செப்டெம்பர் 2024, 06:35 GMT புதுப்பிக்கப்பட்டது 9 மணி நேரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில், 2018ஆம் ஆண்டு வெளியான ‘96’ திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவில் ஈர்த்தது. அப்படத்தை இயக்கிய பிரேம் குமாரின் இரண்டாவது படமான மெய்யழகன் இன்று (வெள்ளி, செப்டம்பர் 27) வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், தேவதர்ஷிணி, இளவரசு, ஸ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே ஆகியோர் நடித்திருக்கின்றனர். 96 படத்துக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2D எண்டர்டெய்ன்மெண்ட் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. கார்த்தி-அரவிந்த்சாமி இருவரும் ஒன்றாகத் தோன்றும் இப்படத்தின் ஸ்டில்கள், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகியதில் இருந்தே ரசிகர்களிடையே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி கூட்டணி. இந்நிலையில், இப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? மெய்யழகன் படத்தின் கதை என்ன? '96' திரைப்படம் போன்றே இந்தப் படமும் 1996-ஆம் ஆண்டு துவங்குகிறது. அருள்மொழி வர்மன் (அரவிந்த்சாமி) ஒரு குடும்பப் பிரச்னையால் தஞ்சாவூரில் தனது சொந்த ஊரையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறுகிறார். அவருக்கு உறவினர்களுடன் முற்றிலும் தொடர்பற்றுப்போகிறது. இந்த நிலையில், சுமார் 20 ஆண்டுகள் கழித்து, தனக்குப் பிரியமான உறவுப்பெண்ணான புவனாவின் (சுவாதி கொண்டே) திருமணத்துக்காக, மீண்டும் தனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை அரவிந்த்சாமிக்கு ஏற்படுகிறது. பல மனக்குழப்பங்களைக் கடந்து சொந்த ஊருக்குச் செல்லும் அரவிந்த்சாமி, அங்கு அவர் பாசமாக இருக்கும் ஒரே உறவினர் ராஜ்கிரணைச் சந்திக்கிறார். அங்குதான், அரவிந்த்சாமியை ‘அத்தான்’ என்றழைத்தபடி, அவரை உபசரிக்கும் கார்த்தி அறிமுகமாகிறார். இருவரிடையே ஒரு மெல்லிய பாசம் உண்டாகி, அது ஆழமாகிறது. இருவரும் ஒன்றாகச் சுற்றித்திரிந்து, பல விஷயங்களைப் பற்றிப்பேசுகிறார்கள். அதன்பின் அரவிந்த்சாமியின் உணர்வுகள் அவரிடம் என்ன சொல்லின? இதுதான் இப்படத்தின் கதை.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT ‘உணர்வுகளே படத்தின் அடித்தளம்’ இப்படத்திற்கு விமர்சனம் எழுதியுள்ள ஊடகங்கள், மனிதர்களிடையே, உறவுகளிடையே உள்ள உணர்வுகள் தான் படத்தின் அடித்தளம் என்று குறிப்பிடுகின்றன. தினமணி இணையதளம், தனது விமர்சனத்தில், இயக்குநர் பிரேம் குமார், ‘உறவுகளின் நீட்சியை அழகியல் தன்மையுடன் காட்சிப்படுத்தியிருப்பதாகக்’ கூறுகிறது. “பிறந்து, பால்யத்தை எதிர்கொண்ட ஊரின் திசைகளை பல ஆண்டுகள் கழித்துத் தேடும் ஒருவனின் நினைவாக உறவுகளின் மேன்மையை அழகாகக் கையாண்டிருக்கிறார்,” என்றும் கூறியிருக்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், தனது விமர்சனத்தில், இப்படம் அதீத நாடகத்தனமாக முடிந்துவிடும் அபாயம் இருந்தபோதிலும், அப்படிச் செய்யாமல், மெல்லிய சோகம்-இதயத்தை வருடும் காட்சிகள் ஆகியவற்றுக்கு இடையே பயணிப்பதாகச் சொல்கிறது. “படத்தின் சில காட்சிகளில், நமது கண்களில் நீர் துளிர்க்கிறது. குறிப்பாக அரவிந்தசாமியும், சுவாதி கொண்டேவும் பேசிக்கொள்ளும் காட்சிகள். அதேபோல் உறவினர்கள் பேசிக்கொள்ளும் சிறிய காட்சிகள் கூட சிறப்பாகவே அமைந்திருக்கின்றன,” என்கிறது இந்த விமர்சனம்.   பட மூலாதாரம்,X/2D ENTERTAINMENT கார்த்தி, அரவிந்த்சாமியின் நடிப்பு எப்படி? இப்படத்திலுள்ள நடிகர்களின் நடிப்பைப் பற்றிப் பேசும் ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதள விமர்சனம், அனைத்து நடிகர்களின் நடிப்பும் ‘முதல் தரம்’ என்கிறது. “படம் மொத்தத்தையும் அரவிந்த்சாமியும் கார்த்தியுமே தாங்குகிறார்கள். இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தனது கடந்த காலத்திலிருந்து விலகிவர முடியாத ஒருவனது தவிப்பை அரவிந்த்சாமி அற்புதமாகச் வெளிப்படுத்தியிருக்கிறார்,” என்கிறது இந்த விமர்சனம். அதேபோல் கார்த்தியின் நடிப்பைப் பற்றிப் பேசும் தினமணி விமர்சனம், “காட்சிக்கு காட்சி கள்ளமில்லாத ஆன்மாவாக [கார்த்தி] பேசும் வசனங்களும் உடல்மொழியும் ரசிக்க வைக்கின்றன,” என்கிறது. மேலும், “இப்படத்திற்காக கார்த்திக்கு விருதுகள் கிடைக்க வேண்டும். ரசிகர்களுக்கு, ‘விருந்து கொடுக்கும்’ வணிக குட்டிக்கரணங்களை அடிக்காமல் முழுமையாகத் தன்னை கதைக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்,” என்கிறது. இந்த இருவர் மட்டுமல்ல, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் ஒருசில காட்சிகளிலேயே தோன்றினாலும், அவர்கள் தங்கள் கதாபாத்திரங்களை நினைவில் நிற்கும்படிச் செய்திருக்கிறார்கள், என்கிறது ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம். கருணாகரன், இளவரசு, ரேச்சல் ரெபெக்கா, ஸ்ரீதிவ்யா ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக இந்த விமர்சனம் கூறுகிறது. படத்தின் மிகப்பெரிய குறை இவையனைத்தும் இருந்தும், கிட்டத்தட்ட அனைத்து விமர்சனங்களும் படத்தின் மிகப்பெரிய குறை என்று ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. அது, இப்படத்தின் நீளம். சுமார் 3 மணிநேரம் (177 நிமிடங்கள்) ஓடும் இப்படம் ஆங்காங்கே ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கிறது, படத்தின் நீளத்தை 20-30 நிமிடங்கள் குறைத்திருக்கலாம், என்கின்றன விமர்சனங்கள். இந்தக் குறையைப் பிரதானமாகச் சுட்டியிருக்கும் ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளம், “உறவுகளையும், உணர்வுகளையும் சொல்ல நினைத்த படம் தான். ஆனால், சொல்லிக் கொண்டே இருந்தால் எப்படி?” என்று கேட்கிறது. ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம் இப்படத்தை ‘மிக நீளமானது’ என்று குறிப்பிட்டு, சில பகுதிகள் படத்தை மிக நீளமாக்குகின்றன, என்கிறது. அதேபோல், படம் பெரும்பாலும் வசனங்களாலேயே நகர்கிறது என்பதும் ஒரு குறை என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் விமர்சனம். “3 மணி நேரத்திற்கு 3 நிமிடம் மட்டுமே குறைவு என்கிற கால அளவில் படம் ஓடுகிறது. படம் ஆரம்பிக்கும் போது பேச ஆரம்பிப்பவர்கள், முடியும் வரை பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள்,” என்று இந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.   பட மூலாதாரம்,YOUTUBE/THINK MUSIC INDIA சொல்ல வந்ததை விட்டுவிட்டு… படத்தின் மற்றொரு குறை, மனித உறவுகளைப் பற்றிச் சொல்ல வந்ததை விட்டுவிட்டு, சம்பதமில்லாமல், அரசியல், சமூக, வரலாற்று விஷயங்களைப் பேசுவது என்கின்றன சில விமர்சனங்கள். ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில இணையதளம், “காளைமாடு தோன்றும் ஒரு காட்சி, வரலாறு, போர்கள் ஆகியவற்றைப் பற்றி கார்த்தி பேசும் வசனங்கள் மிக நீளமாகத் தோன்றுகின்றன,” என்கிறது. ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தமிழ் இணையதளத்தின் விமர்சனம், ‘திடீரென ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு, ஈழத்தமிழர் படுகொலை’ என கதைக்குச் சம்மந்தமே இல்லாத விஷயங்களைப் பற்றிப் படம் பேசுகிறது என்கிறது. இன்னொரு அன்பே சிவம்? இப்படத்தில், அரவிந்த்சாமி-கார்த்தி இருவருக்கிடையே உருவாகும் புரிதலும் பிணைப்பும், ‘அன்பே சிவம்’ படத்தின் கமல்ஹாசன்-மாதவனை நினைவுறுத்துவதாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில இணையதளம் தெரிவிக்கிறது. ஆனால், ‘அன்பே சிவம்’ படம் இரண்டு வேறுபட்ட நபர்கள் ஒருவருக்கொருவரில் தோழமையைக் கண்டடைவது பற்றிய படம். மெய்யழகனோ, ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பது மிகவும் எளிமையான விஷயம் என்று கூறுகிறது, என்கிறது இந்த விமர்சனம். கிராமத்தில் இருந்து நகரத்துக்குக் குடிபெயரும் அனைவருக்கும் மனதில் இருக்கும் ஒரு வீடற்ற உணர்வினை அரவிந்த்சாமி வெளிப்படுத்துகிறார் என்கிறது இந்த விமர்சனம். https://www.bbc.com/tamil/articles/cwyv6q7yg2eo
    • நல்ல ஒரு காணொளி. இணைப்பிற்கு நன்றி சுவியர். 👍
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.