Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்றில் வேம்பு - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்றில்வேம்பு

வ.ஐ.ச.ஜெயபாலன்

நினைவுள்புதைந்த வேப்பம் வித்து

திறக்கும்இணைய ஓவியத் தளமாய்

நெஞ்சுள்பசும் குடை விரிக்க

காலத்தைமீட்டு வாழ்ந்தேன்.

முலை அமுது உண்டேன்.

நிழலில்தவள்ந்து

மண் விழையாடினேன்.

என் அயல் சிறுமி

`குஞ்சாமணியை`

எங்கேதொலைத்தாள்

என்று வியந்தேன்.

பாட்டிகதைகளில் முடிகள் புனைந்தேன்.

கோவிற்பொங்கலில்

நீறு பூத்த தணற் பாவைகளாய்

வெளியேநின்ற சிறுவரை எனது

பால்யநண்பர்கள் சீண்ட வெகுண்டு

அதிர்ந்தமனசை

'அது அது அவர் அவர்

ஊழ்வினைப்பயன் ' என

தேற்றியபாட்டியை நம்ப மறுத்தேன்.

எங்கள்வீட்டில் சமைக்கிற பெண்ணுடன்

அம்மணமாக மாமா இருந்ததை

கண்டதன்பரிசாய் `சாக்கிளேட்` தின்றேன்.

ஆண்குறிவிறைக்க நோயென அஞ்சி

விம்மிஅழுதேன்.

என் அயலாள் மிரள

முதன் முதலாக

விசத்தேன் குளவிக் கூடாய்த் திரண்ட

இள முலை உண்டேன்.

மனதுள் கிழைகள் நெரியும்

வேம்பின் வேருள் என் காலப் புதையல்.

நினைப்புத்தானேஇளமையும் முதுமையும்.

சூரியப்பந்தை ஏந்த உயரும்

முன்றில்வேம்பினைச் சுற்றி

வயது உடைய

வட்டப்பாதையில் முன் செல்கிறது

என் காவிய வாழ்வு.

நான் வேண்டுவது

காதலும்கவிதையுமாக

சோடிகூடியும்

கண்ணீரும்புலம்பலுமாக

தனித்தும்

குயில்கள்பாடிப் பாடி வளர்த்த

எனது வேப்ப மரத்தின் நீழலே.

நான் ஆசைப்படுவது

விடுதலைஅடைந்த தோழியரோடு

குறுகியஇரவுகளிலும்

விடுதலைக்கெழுந்த தோழர்களோடு

நீண்டஇரவுகளிலும்

துணையாய்இருந்த என் வேம்பின் கீழே

பொறுமையாய்நிலா பூக்கள் தைத்த

கரும் கம்பளமே.

நான் வேண்டுவது

புத்தன்தேவனான போதி மரமல்ல

அன்னையின்முலை அமுதம் உண்டும்

தோழியர்அமுத முலையினை உண்டும்

நான் மனிதனான

வேப்ப மரமே.

சூரியப்பந்தை ஏந்த உயரும்

முன்றில்வேம்பினைச் சுற்றி

வயது உடைய

வட்டப்பாதையில் முன் செல்கிறது

என் காவிய வாழ்வு.

வித்தியாசமான ஒரு கவிதை ஆனாலும் இளமையின் ஏக்கத்தை பிரதிபலித்து நிற்கும் ஒரு கவிதையாக பார்கிறேன்!!அதில் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.....வாழ்த்துகள்!! :o

நினைவுள்புதைந்த வேப்பம் வித்து

திறக்கும்இணைய ஓவியத் தளமாய்

நெஞ்சுள்பசும் குடை விரிக்க

காலத்தைமீட்டு வாழ்ந்தேன்

இந்த வரிகள் விளங்கேல்ல.

விசத்தேன் குளவிக் கூடாய்த் திரண்ட ?? இந்த வரியும் விளங்கேல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நினைவுள்புதைந்த வேப்பம் வித்து

திறக்கும்இணைய ஓவியத் தளமாய்

நெஞ்சுள்பசும் குடை விரிக்க

காலத்தைமீட்டு வாழ்ந்தேன்

இந்த வரிகள் விளங்கேல்ல.

விசத்தேன் குளவிக் கூடாய்த் திரண்ட ?? இந்த வரியும் விளங்கேல்ல.

ஜமுனாவுக்கும் சினேகிதிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நினைவுகளில் மீண்டும் மீண்டும் வாழ்கிற வல்லமைதானே கலைஞருக்கு அவசியயமான புத்துயிர்ப்பையும் மாறா இளமையையும் தருகிறது. ஒரு கவிதையில் நினைவை மீட்கிறபோது வெறுனவே நினைவின் இனிப்பை அல்லது கசப்பை மட்டுமே மீட்பதில்லையே. கவிதையில் இளமையின் இனிப்புகளோடு மட்டும் மீட்கவில்லை. வெளியில் இழிவு படுத்தப் பட்டு முழைவிடும் போர்க்குணத்தோடு கொதித்து நிற்கிற தலித் இளைஞர்கள், அது கண்ட அதிற்ச்சியும் கோபமும், பாட்டியின் நியாயப் படுத்தல், அதனை ஒப்பாமை பின்னர் போராளிகளோடு நீழும் இரவு என இளமையைக் காலத்தோடும் கனவுகளோடும் அல்லவா மீட்கிறோம். உங்கள் கவிதைகள் சிலதில் காதலின் இனிப்பை இயற்கையோடும் காலத்தோடும் அதன் கனவுகளோடும் மீட்க முயன்று பாருங்கள் ஜமுனா.

சினேகிதி, வண்ண கிராபிக் ஜாலங்கள் உள்ள இணைய பக்கம் ஒன்று கணனியில் திறபடுகிறது போல முற்றத்து வேம்பு மனசுள் விரிந்தது என்றும் கொள்ளலாம் அல்லவா. "மற்றது விசத்தேன் குழவுக் கூடாய் திரண்ட" புரிய வில்லை என்றீர்கள். உண்மையில் புரிய வில்லையா அல்லது பெண்ணிய கோபத்தோடு அதட்டுகிறீர்களா என்பது புரியவில்லை. பெண்ணியக் கோபம் என்றால் கூறாமல் சரணாகதி அடைந்து விடுகிறேன். மற்றும்படிக்கு இதெல்லாம் கவிதையில் சொல்லிப் புரிகிற வரிகள்ளல்லத்தானே.

Edited by poet

பெண்ணியமா? விசத்தேன் என்ற சொல் நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை அதனால் அந்தவரி விளங்கவில்லை.

Edited by Snegethy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணியமா? விசத்தேன் என்ற சொல் நான் இதுவரைக் கேள்விப்பட்டதில்லை அதனால் அந்தவரி விளங்கவில்லை.

அங்க உருவகங்களை பெண்ணிய வாதிகள் ஒப்புவதில்லை. அதனால்தான் சொன்னேன். பெண்ணியவாதிகளின் கருத்துக்கு என்னிடம் மறுப்பில்லை. விசத்தேன் ஒரு உருவகம்தான் இன்பமும் உயிர்கொல்லியும் சேர்ந்த காரணி.

Edited by poet

ஜமுனாவுக்கும் சினேகிதிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நினைவுகளில் மீண்டும் மீண்டும் வாழ்கிற வல்லமைதானே கலைஞருக்கு அவசியயமான புத்துயிர்ப்பையும் மாறா இளமையையும் தருகிறது. ஒரு கவிதையில் நினைவை மீட்கிறபோது வெறுனவே நினைவின் இனிப்பை அல்லது கசப்பை மட்டுமே மீட்பதில்லையே. கவிதையில் இளமையின் இனிப்புகளோடு மட்டும் மீட்கவில்லை. வெளியில் இழிவு படுத்தப் பட்டு முழைவிடும் போர்க்குணத்தோடு கொதித்து நிற்கிற தலித் இளைஞர்கள், அது கண்ட அதிற்ச்சியும் கோபமும், பாட்டியின் நியாயப் படுத்தல், அதனை ஒப்பாமை பின்னர் போராளிகளோடு நீழும் இரவு என இளமையைக் காலத்தோடும் கனவுகளோடும் அல்லவா மீட்கிறோம். உங்கள் கவிதைகள் சிலதில் காதலின் இனிப்பை இயற்கையோடும் காலத்தோடும் அதன் கனவுகளோடும் மீட்க முயன்று பாருங்கள் ஜமுனா.

நன்றி அண்ணா உங்களின் விளகதிற்கு இனி வரும் காலங்களில் என் கவிதைகளிளும் இயன்றளவு நீங்கள் கூறியவற்றை உள்ளடக்க பார்கிறேன்!! :lol:

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா உங்களின் விளகதிற்கு இனி வரும் காலங்களில் என் கவிதைகளிளும் இயன்றளவு நீங்கள் கூறியவற்றை உள்ளடக்க பார்கிறேன்!! :rolleyes:

நன்றி ஜமுனா, எப்பொழுதும் உங்களுக்குச் செங்கம்பள வரவேற்ப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.