Jump to content

யாரோடும் தேரோடும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம்.

மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன்  முரண்பட்டுக் கொண்டிருந்த  சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது.

தேர் இல்லாமல் திருவிழா ஏது? முருகன் கோவில் நிர்வாகிகள் அலசி ஆராய்ந்து ஒரு பழையகாய்யைப் போய்ப் பார்த்தார்கள். அவருடன் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. தேர் செய்வதற்கு அவர் 20,000 யூரோக்களை தூக்கிக் கொடுத்து விட்டார். தேரும் செய்தாயிற்று. திருவிழாவும் தொடங்கியாயிற்று. தேர்த்திருவிழாவுக்கு முதல்நாள், தேர் செய்ய உதவிய அன்பருக்கு நன்றி செலுத்த நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள். சாமியை விட சாமி அமரத் தேர் தந்த வள்ளல் பெரியவர் அல்லவா? அவர் இல்லாவிட்டால் சாமி வலம் வரத் தேரேது? சாமிக்கு முந்தி அவரைத் தேரில் அமர்த்தி வெள்ளோட்டம் செய்தார்கள். ஆள் கூடி அவரைத் தேரில் வைத்து இழுத்து மகிழ்ந்தார்கள்.

ac84d0e4-31b7-4dce-95a6-695a8e6b8380.jpg

திருவிழா முடிந்ததா? இப்பொழுது விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன.

“சாமி இருக்கிற தேரிலை மனுசனை வைச்சு இழுக்கலாமோ, அதுவும் சாமிக்கு முந்தி?” 

“அவங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம், தேரிலை ஏறி இருக்கிறவனுக்கு அறிவில்லையோ?”

“20,000 குடுத்து வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் இழுக்கிறதுக்கு தேரைச் செய்யிறாங்களே, இவங்களை என்ன சொல்ல?”

“இந்தக் காசை நாட்டிலை கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிற யாருக்காவது குடுத்திருக்கலாம்

“இந்தக் காசுக்கு நல்ல கார் ஒன்றை செக்கன் ஹாண்டா வாங்கி  வருசக் கணக்காக ஓடி இருக்கலாம்

“சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாம் பூசுவாங்களோ?”

“இப்பத்தான் கிட்டடியிலை வந்தவங்கள் எங்களை விட அவையளுக்கெல்லோ  நாட்டு நிலமைகள் நல்லாத் தெரியோணும்

இப்படி இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன.

5a36229a-5c88-4ead-acd9-491709028eab.jpg

 

பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்குஅட அவரேதான்..

  • Haha 7
  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kavi arunasalam said:

“சாமி இருக்கிற தேரிலை மனுசனை வைச்சு இழுக்கலாமோ, அதுவும் சாமிக்கு முந்தி?” 

“அவங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம், தேரிலை ஏறி இருக்கிறவனுக்கு அறிவில்லையோ?”

“20,000 குடுத்து வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் இழுக்கிறதுக்கு தேரைச் செய்யிறாங்களே, இவங்களை என்ன சொல்ல?”

“இந்தக் காசை நாட்டிலை கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிற யாருக்காவது குடுத்திருக்கலாம்

“இந்தக் காசுக்கு நல்ல கார் ஒன்றை செக்கன் ஹாண்டா வாங்கி  வருசக் கணக்காக ஓடி இருக்கலாம்

“சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாம் பூசுவாங்களோ?”

“இப்பத்தான் கிட்டடியிலை வந்தவங்கள் எங்களை விட அவையளுக்கெல்லோ  நாட்டு நிலமைகள் நல்லாத் தெரியோணும்

ஒவ்வொரு விசயத்திலும், நாட்டு நடப்புகளிலும் எவ்வளவு மாறுபட்ட சிந்தனைகள் எங்களுக்குள்ளே...........🤣.

ஒன்றோ இரண்டு மாதங்களின் முன், கர்நாடகாவில் என்று நினைக்கின்றேன், ஒரு தேரை இழுக்கும் போது, அது அப்படியே கவிழ்ந்து விழுந்து விட்டது. உயிர்ச்சேதங்கள் பற்றிய கணக்கு ஞாபகத்தில் இல்லை. இனிமேல் எங்கு தேர் இழுக்கப்பட்டாலும், தேரின் பின்னால் தான் இனி இடைவெளி ஒன்று விட்டு போவது என்று ஒரு முடிவை எடுத்திருந்தேன். இந்த இரண்டு பேருக்கும் அந்த விடயம் தெரியாது போல......... தேரில், அதுவும் சூலத்தோடு, ஏறி இருக்கின்றார்கள்...........😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரசோதரன் said:

தேரில், அதுவும் சூலத்தோடு, ஏறி இருக்கின்றார்கள்...........😜

சூலத்தோடு இருப்பது ஐயர். சாமியோ, ஆசாமியோ தேர் இழுக்கும் போது பக்கத்தில் ஐயர் இருக்க வேணும்.

அவர் வாறது போறதுக்கு எல்லாம் கணக்கிருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kavi arunasalam said:

சூலத்தோடு இருப்பது ஐயர். சாமியோ, ஆசாமியோ தேர் இழுக்கும் போது பக்கத்தில் ஐயர் இருக்க வேணும்.

அவர் வாறது போறதுக்கு எல்லாம் கணக்கிருக்கு 

தென்கலை போல.......... சாயல் எங்களையே மாதிரி..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் அடக்கி ஒடுக்கப்பட வேண்டிய விடயங்கள்.மதத்தின் பெயரால் நடத்தும் கோமாளி கூத்தாளர்களை தூக்கியெறிய வேண்டும்.

கொடுமையிலும் கொடுமை என்னெண்டால் அதில ஒண்டு வைரவர் மாலையோட காட்சி தருது.🤣

அடி செருப்பாலை....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

 

5a36229a-5c88-4ead-acd9-491709028eab.jpg

 

பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்குஅட அவரேதான்..

அட… ஆமா…. அவரேதான். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்குஅட அவரேதான்..

இறங்கின உடனே இன்னும் ஒரு 20000 யூரோக்கள் கொடுத்திருப்பாரே?

2 hours ago, ரசோதரன் said:

ஒன்றோ இரண்டு மாதங்களின் முன், கர்நாடகாவில் என்று நினைக்கின்றேன், ஒரு தேரை இழுக்கும் போது, அது அப்படியே கவிழ்ந்து விழுந்து விட்டது. உயிர்ச்சேதங்கள் பற்றிய கணக்கு ஞாபகத்தில் இல்லை. இனிமேல் எங்கு தேர் இழுக்கப்பட்டாலும், தேரின் பின்னால் தான் இனி இடைவெளி ஒன்று விட்டு போவது என்று ஒரு முடிவை எடுத்திருந்தேன். இந்த இரண்டு பேருக்கும் அந்த விடயம் தெரியாது போல......... தேரில், அதுவும் சூலத்தோடு, ஏறி இருக்கின்றார்கள்...........😜

சென்னை விமானநிலையம் 55 தடவைகள் உடைந்து விழுந்ததாக சொல்கிறார்கள்.

இப்போ நீங்க சென்னை போனால் விமான ஓடுபாதையில் ஓட்டம் பிடிப்பீர்கள் போல இருக்கே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

 

சென்னை விமானநிலையம் 55 தடவைகள் உடைந்து விழுந்ததாக சொல்கிறார்கள்.

இப்போ நீங்க சென்னை போனால் விமான ஓடுபாதையில் ஓட்டம் பிடிப்பீர்கள் போல இருக்கே.

🤣....

அந்தக் கண்ணாடிக் கூரை.... தள்ளி நின்று சில தடவைகள் பார்த்திருக்கின்றேன்..... 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளோட்டம் தேர் செய்த ஆசாரியரை வைத்துத் தானே இழுப்பது வழமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் சுயநினைவால் ஓரளவு  உலகைப் புரிந்துகொள்ள வந்ததும், இந்துமதத்தில் அதன் சுய புராண ஏமாற்றுகளில் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது ஆயினும் அவற்றில் சில கோட்பாடுகள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய உபதேசங்களைக் கொண்டிருப்பதை மறுக்கவும் முடியாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”. பெற்றோரும், சுற்றத்தாரும் கடவுள்கள் பற்றியும், ஆலயவழிபாடு பற்றியும் என்னைத் தொட்டிலில் ஆட்டும்போதே ஊட்டியவை என் அறிவில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. தவிர திருநெல்வேலி பழங்கிணற்றடி பிள்ளையார் கோவிலில் அதன் பூசை புணர்கார வழிபாடுகளை என் பெரியப்பா ஒருவர், அவர் உடம்பு இயலாமல் போகும்வரை மேற்கொண்டு வந்தார், தும்பிக்கையான்மேல் அவர் எனக்கு ஏற்படுத்திய பக்தியும், நம்பிக்கையும் இன்றுவரை ஏற்பட்ட பெரும் துன்பங்களையும் நீர்த்துபோக வைத்துள்ளது. 

யேர்மனி சுற்காட் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சித்திவினாயகர் ஆலயத்தில் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் அதிகம் இருந்தும் அதற்கு எதிரானவர்கள்களின் கைகளிலேயே நிர்வாகம் இருந்ததினால் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கிது, நிர்வாகத்தைக் கையேற்று அதனைச் சீர்செய்ய முயன்ற வேளை பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, அதன் பின்னரே விடுதலைக்கு ஆதரவுதந்த சிலரின் உண்மைச் சொரூபம் வெளிவரத் தொடங்கியது. இதனால்  ஏற்மபட்ட மனவுளைச்சலில் மௌனமாக இருந்த வேளையில்தான் பிள்ளையார் தன் தம்பி  பாலமுருகன் பெயரில் ஒரு கோவிலை எங்கள் இல்லத்தின் அருகே நிறுவினார். 

அந்தக் கோவிலுக்கு நான் சென்றதும் அதன் அழகும் நிர்வாகமும் என் மனவுளைச்சலுக்கு ஒரு ஆறுதல் தந்ததை உணர்ந்ததால் தொடர்ந்து அங்கு செல்ல முடிவுசெய்து செல்கிறேன்.  தமிழையும் அதன் கோட்பாடுகளையும் அழித்துவரும் வடவர் மொழியையும் அவர்கள் மதமான இந்து சமயக் கோட்பாடுகளையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிய நிலைதான், நான் திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது. கேலிச் சித்திரம் வரைவதில் புகழ் பெற்ற என் மதிப்புக்குரிய நண்பர் கவி அவர்கள் எனக்கு சித்திரம் வரைந்து என்னைக் கோமாளியாக்காமல் இருப்பதற்கு நன்றி!!🙏🙌

 

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது.

அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ்  உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன்.  தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ஆலயங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி நடக்கும் விமர்சனங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ..........!  😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ்  உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன்.  தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் தவறாகவே செய்திருந்தாலும் என்மனம் அதனை நிறைவாகவே ஏற்றுக்கொள்ளும் கவி அவர்களே.!😌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழ் சிறி said:

அட… ஆமா…. அவரேதான். 😁

மற்றவர்கள் வெறும் மேனியுடன் நிற்கும் போது  .....எங்கள் ஐயன் மேலங்கியுடன் நிற்பதும் ஒருவித  கால காட்டாற்றின் மாற்று கொள்கையினது வெளிப்பாடே.....:cool:

5a36229a-5c88-4ead-acd9-491709028eab.jpg

On 5/7/2024 at 23:56, Kavi arunasalam said:

பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்குஅட அவரேதான்..

துரோகி காட்டிக்கொடுத்து விட்டார்....😎

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

மற்றவர்கள் வெறும் மேனியுடன் நிற்கும் போது  .....எங்கள் ஐயன் மேலங்கியுடன் நிற்பதும் ஒருவித  கால காட்டாற்றின் மாற்று கொள்கையினது வெளிப்பாடே

4 hours ago, குமாரசாமி said:

துரோகி காட்டிக்கொடுத்து விட்டார்

மாம்பழம் கிடைக்காத கவலையில் எங்கள் சாமி முருகன் அங்கியைத் துறந்தாலும் அங்குள்ளதை மற்றவருக்கு காட்டாமல் கோமணத்துடனாவது நின்றார்.😌

எங்கள் குமாரசாமியோ தனது தீவிர பக்தனென்றும் பாராமல் என் அங்கியைக் காரணம் காட்டினாலும்… எனது கோமணத்தையும் உருவி அனைவருக்கும் காட்டிக் கொடுத்துவிட்டாரே என அவரது பின்னூட்டம் எண்ண வைக்கிறது.!!🤔😳😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிசாலை ஐந்து மணிக்கு எழுந்து தூக்கக் கலக்கத்தில் எங்கள் சாமியாரைச் சாடிவிட்டேன். மன்னித்தருளுக.😔🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2024 at 09:22, Kavi arunasalam said:

அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ்  உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன்.  தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

யாரோ ஒரு யாழ் உறவு... ஆரா இருக்கும் என்று யோசித்தேன்.. அவரே வந்து கூறி விட்டார் :)
நான் பஞ் அண்ணா இன்னும் இளமையானவர் என்று தன நினைத்திருந்தேன்  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Sabesh said:

யாரோ ஒரு யாழ் உறவு... ஆரா இருக்கும் என்று யோசித்தேன்.. அவரே வந்து கூறி விட்டார் :)
நான் பஞ் அண்ணா இன்னும் இளமையானவர் என்று தன நினைத்திருந்தேன்  😉

நான் இன்னும் இளமையானவன்தான் தம்பி. என் வயது 18.

சஎழுத்துக்கு “அ” முன்னலை வகிப்பதுபோல் எண்ணுக்கு “1” முன்னலை, அதனால் 1றை முன்னுக்குப் போட்டேன்.🤪

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்றோன் ஐனநாயக முறைப்படி இரண்டு தரம் இருந்தாச்சு. இனி அவுட். ஆனால் புட்டின்...? ஆனால் ஐனநாயகம் பற்றிய கொள்ளளவு உங்களுக்கு பூச்சியம் என்று யாழ் அறியும். 
    • மக்றோன் கவிழ்ந்தது போல பிட்டினும் கவிழ்வார் என்கிறீர்கள்?  ......ம்ம்ம்ம்ம்
    • உங்களைப் பற்றி தெரியாது, இந்தியாவின் முதல் இங்லிஷ் பேசத்தெரியாத பிரதமர் இவர்! அதனால்தான் இதுவரை பத்திரிகையாளர்களை நேரில் சந்திப்பதில்லை. அவர்கள் இங்லிஷ்ல கேள்விகேட்டா இவருக்கு விளங்காது!
    • "கலப்படம்"   "தாய்ப் பால் ஒன்றைத்  தவிர தாரத்தின் உறவிலும் பிள்ளையின் அன்பிலும்  தாரக மந்திரத்திலும் மதத்தின் போதனையிலும்   தாராளமாக இன்று பலபல கலப்படம்"   "எந்த பொருளிலும் செயலிலும் கலப்படம் எங்கும் எதிலும் சுத்தம் கிடையாது   எச்சில் படும் முத்தத்திலும் கலப்படம் எழுதும் காதல் மொழியிலும் கலப்படம்"     "பெண் முட்டையுடன் விந்து இணையும்    பெரும் கலவையிலும் சிலசில கலப்படம் பெருத்து குழந்தை வயிற்றில் உருவாகி பெற்று எடுத்தால் அரவாணியென்ற கலப்படம்"     "குழந்தை சிரிப்பும் குறும்பும் தவிர குமரி தோற்றத்திலும் வனப்பிலும் கலப்படம் குடும்ப அன்பிலும் பண்பாட்டிலும் கலப்படம்  குறிஞ்சிநில முருகன் தமிழிலும் கலப்படம் "  "ஓதிடும் மந்திரத்திலும் போதகர் போதனையிலும் ஓதுவார் ஓசையிலும் ஒழுகிடும் நெறியிலும் ஓர்மனமாய் நின்று வழிபடும் அடியாரிலும் ஓகை கொண்டு இணைந்துவிட்டது கலப்படம்" "உழைத்து பெற்ற ஊதியத்திலும் கலப்படம் உண்மை தந்த உயர்விலும் கலப்படம் உணர்வுகொள் தாய் மொழியிலும் கலப்படம் உணவுப் பொருட்கள் அனைத்திலும் கலப்படம்" "கூட்டம் சேர்க்கும் அரசியலில் கலப்படம் கூர்மையான அரச அறிக்கையில் கலப்படம் கூறிடும் ஊடக செய்தியில் கலப்படம் கூசாமல் பேசிடும் வரலாற்றில் கலப்படம்" "தெரிந்து வேண்டும் என்று சேர்ப்பதும் தெரியாமல் தவறி அங்கு சேர்ப்பதும் தெளித்து பட்டும் படாமலும் சேர்ப்பதும் தெளிவாக அவை எல்லாம் கலப்படம்தான்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  ஓகை - உவகை, மகிழ்ச்சி         
    • மூன்று அரை லட்சம் இழப்பு என்பது மிகப்பெரிய தொகை. இது பெரும் கொந்தளிப்பை ரசியாவில் உருவாக்கும். உக்ரைனில் புட்டின் கால் பதிக்கிறாரோ இல்லையோ ரசியாவில்????
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.