Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கடைசி எட்டு நாட்கள்
----------------------------------
ஏன் இறந்தவர்களுக்கு எட்டு என்ற ஒரு சடங்கைச் செய்கின்றார்கள் என்று நான் கேட்க மறந்துவிட்டேன். அம்மாச்சியிடம் அல்லது அம்மாவிடம் தான் இப்படியான கேள்விகளைக் கேட்பது. இருவரும் போன பின், வேறு எவரிடமும் இதைக் கேட்கத் தோன்றவில்லை. ஷெஹான் கருணாதிலகவின் 'மாலி அல்மேடாவின் ஏழு நிலவுகள்' என்ற நாவல் தலைப்பையும், சுருக்கத்தையும் பார்த்த உடனேயே, எட்டுச் சடங்கிற்கான விளக்கம் கிடைத்துவிட்டது.
 
ஷெஹானிற்கு 2022ம் வருடத்திற்கான புக்கர் பரிசு கிடைத்தது. ஷெஹான் என்று ஒரு சக மனிதன் இந்தப் பூமியில் இருக்கின்றார் என்றே அதற்கு முன்னர் தெரியாது. இந்த நாவலின் உள்ளே என்ன உள்ளதென்றும் அப்பொழுது வரை தெரியாது. இந்த நாவலை ஏழு வருடங்களாக எழுதினேன் என்று ஷெஹான் சொல்லியிருக்கின்றார். மூன்று தடவைகள் எழுதியவற்றை கிழித்துப் போட்டதாகவும் சொல்லியிருக்கின்றார். அவரின் முயற்சிக்கும், முழுமைக்கும் கிடைத்த அங்கீகாரம் அவர் பெற்ற விருது.
 
பௌத்த தர்மம் ஒவ்வொரு ஆன்மாவிற்கும், அதன் உடல் இறந்த பின், இங்கே பூமியில் மிகக் கறாராக மேலதிகமாக ஏழு நாட்கள் மட்டுமே கொடுக்கின்றதாம். இது தான் நாவலின் சுருக்கம். அசத்தலான ஒரு வரிக்கதை, ஒரு வரிக்கதை என்று தமிழ் திரையுலகில் அடிக்கடி சொல்வார்கள். ஷெஹான் அதை செய்து காட்டியிருக்கின்றார்.  
 
வெகு நாட்கள் முன்பு, நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்த பின், இரண்டாம் நாள் இரவில் அவர் வாசல் கதவடியில் வந்து நின்றதாக ஒரு முறை யாரோ சொன்னது ஞாபகமிருக்கின்றது. அவர்கள் சொன்ன விதத்தில் குலை நடுங்கியது. இருக்கும் பொழுது அவ்வளவு அன்பாக இருந்த மனிதர்கள் இறந்த பின் ஆவியாக வந்து கடித்துக் கொல்லப் போகின்றார்களா என்ன, ஆனாலும் பயம் என்பது தர்க்கம் அறியாதது. எல்லோரும் உறங்கிய பின், குசினியில் ஒரே சத்தம் கேட்டது என்பதும் ஏழு நிலவுகளில் நிச்சயம் ஒரு நிலவில் ஆவது ஒவ்வொரு இழப்பு வீட்டிலும் நடக்கும் சம்பவம். கூட்டமும், அழுகையும் ஓயாமல் இருக்கும் இடத்தில் வளர்ப்புப் பூனை வேறு எப்பத்தான் சாப்பிட வருவது, அதற்குப் பசிக்காதா என்ன?
 
எட்டுச் சடங்கு என்று சொன்னாலும் அதை நாங்கள் ஐந்து அல்லது ஏழு நாட்களிலேயே செய்து முடிக்கின்றோம். ஒற்றைப் படை நாட்கள் என்னும் சம்பிரதாயத்தின் படி. ஆவியோ அல்லது ஆன்மாவோ ஆகிய நீங்கள் எட்டு ஆட்கள் இங்கே அலைய வேண்டாம், ஐந்து நாட்களிலேயே விண்ணகம் போய் விடுங்கள் என்னும் எங்களின் நல்லெண்ணம் இன்னொரு காரணம். கதையில் மாலி அல்மேடாவிற்கு அவர் இறந்து ஏழு நாட்களில் அவர் எப்படி இறந்தார் என்ற உண்மையைக் கண்டு பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம்.
 
புக்கர் பரிசு ஏன் அவ்வளவு முக்கியமானது என்று தெரிந்து கொள்ள, புக்கர் பரிசை இதுவரை வென்றவர்கள், இறுதிச் சுற்றில் இருந்தவர்கள், ஆரம்பச் சுற்றில் இருந்தவர்கள் என்ற தகவல் நிரலைப் பாருங்கள். விக்கிபீடியாவில் முழுவதும் உள்ளது. உங்களுக்கு தெரிந்த தமிழ் எழுத்தாளர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள். வாயடைத்துப் போவீர்கள், ஒருவர் கூட இல்லை.  
 
அனுக் அருட்பிரகாசம் 2021ம் வருடம் இறுதிச் சுற்றில் இருந்தார். சமூக ஊடகங்களில் இவரைப் பற்றி பதிவுகள் நிறையவே வந்தன. 'வடக்கிற்கான ஒரு பாதை' என்னும் அவரின் நாவலுக்காக. அவர் இதை மூன்று வருடங்கள் எழுதினார், அத்துடன் கொலம்பியா பல்கலையில் கலாநிதிப் பட்டத்திற்கும் படித்துக் கொண்டிருந்தார். அவரின் பேட்டியும் பல இடங்களில் உள்ளது. 
 
ஷெஹானிற்கும், அனுக்கிற்கும் சில ஒற்றுமைகள் உள்ளது போலவே தெரிகின்றது. இருவரும் தினமும் எழுத வேண்டும் என்கின்றனர், தினமும் வாசிக்க வேண்டும் என்கின்றனர். அடடா, இதனால் தான் நம்மில் எவருக்கும் இந்த புக்கர் பரிசு இன்னமும் கிடைக்காமல் இருக்கின்றதோ என்று எண்ணவும் முடியவில்லை  ஏனென்றால் எனக்கு பரிச்சியமான சில தமிழ் எழுத்தாளர்கள் 24 மணி நேரமும் எழுதுகின்றனர்.
 
இஸீரு சாமர சோமவீர என்று ஒரு இளம் இலங்கை எழுத்தாளர் இருக்கின்றார். அவருடைய சில கதைகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளது. 'திருமதி. பெரேரா' என்னும் ஒரு சிறுகதையை தேடி வாசித்துப் பாருங்கள். இஸூரு என்ன சொல்லுகின்றார் என்றால் அவர் சில வேளைகளில் ஆறு மாதத்திற்கு எதுவும் எழுதுவதே இல்லையாம், எதுவுமே அவருக்குத் தோன்றாது என்கின்றார். ஒரு முக்கால் சைக்கிள், டெனிம் டவுசர், ரீசேட், காலில் செருப்பு, கன்னத்தில் மெல்லிய தாடியுடன் இருக்கும் இவரின் பேட்டியில் இருந்த இன்னொரு, மறக்க முடியாத, வசனம், 'மன்னிக்க வேண்டும். எல்லோருடனும் உரையாடுவதற்காக நான் எழுதுவது இல்லை.' 
 
பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் ஒரு அற்புதமான கேரள எழுத்தாளர். அவர் ஒரு சிந்தனையாளரும் கூட. அவர் வீட்டுப் பக்கம் வாசகர்கள் என்று யாரும் போனாலேயே, கல்லால் எறிந்து கலைத்துவிடுவார்.
 
ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிரகம்.
 
எட்டுச் சடங்கில் மிகப் பிடித்த விசயம் என்னவென்றால், எங்கள் மரபில் அது அசைவம் படைக்கும் ஒரு சடங்கு, அத்துடன் வகை வகையான அசைவங்கள், எங்களின் பழக்கத்தில் உள்ள அத்தனையும் படைப்பார்கள். எதை தொடுவது, எதை விடுவது என்று தெரியாது. இந்த ஷெஹான், அனுக், இஸூரு, பி.கே. பாலகிருஷ்ணன் போல.
 
ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.

ஓ இதுக்கு தான் 8 நாட்களாக இருந்து திட்டி அனுப்புகிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.

கோபிக்காதயுங்கோ...அப்ப அந்த அந்தியேஸ்டி , கல்வெட்டு...மைக்கில  பேசுறதெல்லாம்... வீணா கோபாலு..?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, alvayan said:

ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.

கோபிக்காதயுங்கோ...அப்ப அந்த அந்தியேஸ்டி , கல்வெட்டு...மைக்கில  பேசுறதெல்லாம்... வீணா கோபாலு..?

🤣....

பொய்யா கோப்பாலு.... பொய்யா கோப்பாலு.... என்று எல்லாரும் கேட்கிறபடியால், உண்மையைச் சொல்லப் போகின்றேன்....... எல்லாமே பொய் தான்....🫢

இந்த தர்மத்தில் ஏழு நாட்கள் என்பார்கள், இன்னொரு தர்மத்தில் எழுநூறு நாட்கள் என்பார்கள். தர்மம் என்று ஒன்று இருக்குதா என்பதே பலத்த சந்தேகமே...

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:
எட்டுச் சடங்கில் மிகப் பிடித்த விசயம் என்னவென்றால், எங்கள் மரபில் அது அசைவம் படைக்கும் ஒரு சடங்கு, அத்துடன் வகை வகையான அசைவங்கள், எங்களின் பழக்கத்தில் உள்ள அத்தனையும் படைப்பார்கள்.

எங்கட பக்கம் இறந்தவர் சாப்பிட்ட, குடித்த அனைத்தையும் இரவில் படைப்பார்கள். சைவம் உண்டவர் என்றால் சைவ உணவுகள், அசைவம் உண்டவர் என்றால் அசைவ உணவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

பி.கே.பாலகிருஷ்ணன் என்னும் ஒரு அற்புதமான கேரள எழுத்தாளர். அவர் ஒரு சிந்தனையாளரும் கூட. அவர் வீட்டுப் பக்கம் வாசகர்கள் என்று யாரும் போனாலேயே, கல்லால் எறிந்து கலைத்துவிடுவார்.

அவர் சிந்தனை வாழ்க!

இன்னும் சம்பந்தருக்கு எட்டு வைக்கவில்லை என்பதால், தொடர்ந்து ‘வைச்சு செய்யலாம்’ என்கிறீர்கள்.

எழுத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம். உங்கள் முகம் தனியானது. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கருட புராணமும் இவைபோல பல விடயங்களையும் கூறுகின்றது.........!  👍

நல்லாயிருக்கு...... தொடர்ந்து எழுதுங்கள்........!  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

எங்கட பக்கம் இறந்தவர் சாப்பிட்ட, குடித்த அனைத்தையும் இரவில் படைப்பார்கள். சைவம் உண்டவர் என்றால் சைவ உணவுகள், அசைவம் உண்டவர் என்றால் அசைவ உணவுகள்.

👍....

நீங்கள் சொல்லியிருப்பது தான் சரி என்று நினைக்கின்றேன், ஏராளன். அவருக்கு இது விருப்பம், அது விருப்பம் என்று சொல்லி சொல்லியே செய்வார்கள். எங்களின் பக்கத்தில் 31 நாட்களுக்கு தினமும் விளக்கடியில் வைப்பதும் அவருக்கு விருப்பமான உணவு மற்றும் சிற்றுண்டிகளையே.

6 hours ago, Kavi arunasalam said:

இன்னும் சம்பந்தருக்கு எட்டு வைக்கவில்லை என்பதால், தொடர்ந்து ‘வைச்சு செய்யலாம்’ என்கிறீர்கள்.

🤣...........

வாசலில் வந்து நின்றாலும் நின்று விடுவார்.........

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:
ஒருவர் இறந்து எட்டு நாட்கள் ஆகி விட்டால், அவர் மேலே வின்ணகம் போய் விடுவார். அதற்குப் பிறகு அவரை எவ்வளவு தான் புகழ்ந்தாலும், திட்டினாலும் எந்தப் பிரயோசனமும் கிடையாது போல.

சம்பந்தரின் அந்திரட்டி மட்டும் கிழிச்சு தொங்கவிடுவம் என்று பார்க்க, நீங்கள் இப்பிடி சொல்லுறியள். 😂

எண்டாலும்… அந்திரட்டி மட்டும் கச்சேரி நடக்கும். இல்லாட்டி எங்களின் மனம் ஆறாது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சம்பந்தரின் அந்திரட்டி மட்டும் கிழிச்சு தொங்கவிடுவம் என்று பார்க்க, நீங்கள் இப்பிடி சொல்லுறியள். 😂

எண்டாலும்… அந்திரட்டி மட்டும் கச்சேரி நடக்கும். இல்லாட்டி எங்களின் மனம் ஆறாது. 🤣

🤣...........

பலரின் மனநிலைகள் எனக்கும் விளங்குது சிறி அண்ணை, ஆனாலும் ஏதோ 'சரி... விடுங்கப்பா......' என்று சொல்ல வேண்டும் போலவும் இருக்கின்றது. இதுவரை எழுதிய பதினொரு குறுங்கதைகளில் இரண்டு அவரை நினைத்து எழுதியது........ இலேசில் விட்டுப் போக மாட்டார் போல.......  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஏராளன் said:

எங்கட பக்கம் இறந்தவர் சாப்பிட்ட, குடித்த அனைத்தையும் இரவில் படைப்பார்கள். சைவம் உண்டவர் என்றால் சைவ உணவுகள், அசைவம் உண்டவர் என்றால் அசைவ உணவுகள்.

எங்கள் ஊரிலும் இதே பழக்கம் தான்.

இறந்தவரின் பெயரில் வந்தவன் போனவன் எல்லாம் மதுபோதையில் மிதப்பார்கள்.

6 hours ago, Kavi arunasalam said:

இன்னும் சம்பந்தருக்கு எட்டு வைக்கவில்லை என்பதால், தொடர்ந்து ‘வைச்சு செய்யலாம்’ என்கிறீர்கள்.

ஐயாவை அவ்வளவு லேசில் விட்டு வைப்பார்களா?

அந்தியேட்டி ஆண்டுத் திவசம் என்று வருடாவருடம் கொண்டாட இருக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

🤣...........

பலரின் மனநிலைகள் எனக்கும் விளங்குது சிறி அண்ணை, ஆனாலும் ஏதோ 'சரி... விடுங்கப்பா......' என்று சொல்ல வேண்டும் போலவும் இருக்கின்றது. இதுவரை எழுதிய பதினொரு குறுங்கதைகளில் இரண்டு அவரை நினைத்து எழுதியது........ இலேசில் விட்டுப் போக மாட்டார் போல.......  

எனக்கும் இந்தக் கதையை வாசிக்கும் போது, சம்பந்தரின் நினைவுதான் வந்து போனது. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஐயாவை அவ்வளவு லேசில் விட்டு வைப்பார்களா?

அந்தியேட்டி ஆண்டுத் திவசம் என்று வருடாவருடம் கொண்டாட இருக்கிறோம்.

🤣........

எங்களிடம் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்குதே........ இதில் பலருக்கு போகிற வயதும் வந்து கொண்டிருக்கின்றது............ 

5 hours ago, தமிழ் சிறி said:

எனக்கும் இந்தக் கதையை வாசிக்கும் போது, சம்பந்தரின் நினைவுதான் வந்து போனது. 😂

🤣.........

எங்களின் கவிஞர், கார்ட்டூனிஸ்ட்  @Kavi arunasalam ஒரு கார்ட்டூன் போட்டிருந்தார் நேற்று. அதைப் பார்த்த பின் தான் இதை எழுதும் எண்ணம் வந்தது..............

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

நீங்கள் சொல்லியிருப்பது தான் சரி என்று நினைக்கின்றேன், ஏராளன். அவருக்கு இது விருப்பம், அது விருப்பம் என்று சொல்லி சொல்லியே செய்வார்கள்.

அதுதானே பார்த்தன், ஒருநாளும் வராத சொர்ணமக்கா அண்டைக்கு கனகரின்ரை எட்டுக்கு  வந்து,  எட்டுப் படையலுக்குப் பக்கத்திலை கன நேரமாக ஏன் இருந்தவ எண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

அதுதானே பார்த்தன், ஒருநாளும் வராத சொர்ணமக்கா அண்டைக்கு கனகரின்ரை எட்டுக்கு  வந்து,  எட்டுப் படையலுக்குப் பக்கத்திலை கன நேரமாக ஏன் இருந்தவ எண்டு.

🤣.....

அந்த மனுசன் கடைசி மட்டும் மறைத்து வைத்திருந்த ஒரு விசயத்தை சொர்ணமக்கா எட்டன்றாவது எல்லோருக்கும் தெரியட்டும் என்று நினைத்து செய்திருக்கின்றார்.........😜

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.