Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JUL, 2024 | 06:22 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது. 

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189724

  • Replies 59
  • Views 4.2k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

  • புலவர்
    புலவர்

    எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணன

  • நிழலி
    நிழலி

    வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்? பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசிய

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ரனில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எங்கும் தாவலாம் என்ற முடிவோடோ தெரியவில்லை. அல்லது ஒருவரும் சேர்க்கவில்லையா???

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:

ரனில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எங்கும் தாவலாம் என்ற முடிவோடோ தெரியவில்லை. அல்லது ஒருவரும் சேர்க்கவில்லையா???

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂
போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை முனைப் போட்டி........... சஜித், ரணில், அநுரகுமார, சரத் பொன்சேகா, மொட்டுக் கட்சி வேட்பாளர் (தம்மிக பெரேரா?), சுதந்திரக் கட்சி விஜேயதாச, தமிழ் பொது வேட்பாளர்,................ இவ்வளவு வேட்பாளர்களும் நாட்டில் மேடை போடுவதற்கும், கூட்டம் கூடுவதற்கும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்குமே போதிய இடம் கிடைக்காது போல.........

எவருக்கும் 50% கிடைக்கா விட்டால், இரண்டாவது மூன்றாவது தேர்வு வாக்குகள் எப்படி எண்ணப்படும் என்று டெயிலி மிர்ரரில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதியுயர் கால்குலஸ் தோற்றது போங்கோ............🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂
போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

ஆக்கள் ஒண்டுக்கை ஒண்டு கண்டியளோ.இப்ப லெக்சன் சீசன். கிட்டத்தட்ட சீட்டாட்டம் மாதிரி. தெமில,கொட்டியா எண்டு சொல்லிப்பாருங்கோ. இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

எத்தனை முனைப் போட்டி........... சஜித், ரணில், அநுரகுமார, சரத் பொன்சேகா, மொட்டுக் கட்சி வேட்பாளர் (தம்மிக பெரேரா?), சுதந்திரக் கட்சி விஜேயதாச, தமிழ் பொது வேட்பாளர்,................ இவ்வளவு வேட்பாளர்களும் நாட்டில் மேடை போடுவதற்கும், கூட்டம் கூடுவதற்கும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்குமே போதிய இடம் கிடைக்காது போல.........

எவருக்கும் 50% கிடைக்கா விட்டால், இரண்டாவது மூன்றாவது தேர்வு வாக்குகள் எப்படி எண்ணப்படும் என்று டெயிலி மிர்ரரில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதியுயர் கால்குலஸ் தோற்றது போங்கோ............🤣

ஒரு தேரரும்… ஜனாதிபதி வேட்பாளாராக போட்டி போடுவதற்கு,
கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு சென்ற போதுதான் தெரிந்தது… அவர் கட்டுக்காசு பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டாராம். 😂
திங்கள்கிழமை (இன்று) கட்டுவதாக சொல்லிவிட்டு வந்து விட்டாரம்.
இன்று கட்டினாரோ தெரியவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

ஆக்கள் ஒண்டுக்கை ஒண்டு கண்டியளோ.இப்ப லெக்சன் சீசன். கிட்டத்தட்ட சீட்டாட்டம் மாதிரி. தெமில,கொட்டியா எண்டு சொல்லிப்பாருங்கோ. இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிப்பினம்.

🤣.....

இந்தப் பக்கம் இருப்பவர்கள் தட்டுகளில் இன்னமும் ஒன்றும் போடவேயில்லை...........அந்தப் பக்கத்தில் சாப்பிடவே ஆரம்பித்து விட்டார்கள்..........😜.

4 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு தேரரும்… ஜனாதிபதி வேட்பாளாராக போட்டி போடுவதற்கு,
கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு சென்ற போதுதான் தெரிந்தது… அவர் கட்டுக்காசு பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டாராம். 😂
திங்கள்கிழமை (இன்று) கட்டுவதாக சொல்லிவிட்டு வந்து விட்டாரம்.
இன்று கட்டினாரோ தெரியவில்லை. 🤣

🤣....

எப்படியும் கடைசியில் ஒரு நாற்பது, ஐம்பது ஆட்களாவது போட்டியில் வந்து சேர்ந்து விடுவினம், சிறி அண்ணை. கட்டுக்காசை நல்லா கூட்டி விட்டிருக்கின்றார்கள் என்று ஒரு ஞாபகம்......... சிவாஜிலிங்கம் நிற்பது சந்தேகம் தான்......... 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂
போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

உலகத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதா. சகல அதிகாரமும்  கூடிய அதிகாரம்கள். கொண்ட ஐனதிபதி  ரணில்  தான்     இந்த தேர்தல் அந்த தேர்தல்   என்று பூச்சாண்டி   காட்டி  இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு பதவியிலிருப்பார்.  யார் தான் என்ன செய்ய முடியும்   ?? இலங்கையில் ஊடகத்துறை பலமற்றது பொய்யும். ஊழல்களும். நிறைந்தது  ஒரு பிழை விட்டால்   பகிங்கரமாக.  பிழை என்று அறிவித்து  மன்னிப்பு கேட்க மாட்டார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔,
தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣

5 minutes ago, Kandiah57 said:

உலகத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதா. சகல அதிகாரமும்  கூடிய அதிகாரம்கள். கொண்ட ஐனதிபதி  ரணில்  தான்     இந்த தேர்தல் அந்த தேர்தல்   என்று பூச்சாண்டி   காட்டி  இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு பதவியிலிருப்பார்.  யார் தான் என்ன செய்ய முடியும்   ?? இலங்கையில் ஊடகத்துறை பலமற்றது பொய்யும். ஊழல்களும். நிறைந்தது  ஒரு பிழை விட்டால்   பகிங்கரமாக.  பிழை என்று அறிவித்து  மன்னிப்பு கேட்க மாட்டார்கள் 

கட்சியில் தனி ஒரு ஆளாக நின்று,
ஜனாதிபதி ஆகிய பெருமை… உலகத்தில் எவருக்குமே கிடைக்காது.
ஶ்ரீலங்கா ஒரு விசித்திரமான நாடு. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, தமிழ் சிறி said:

மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔,
தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣

ரணிலுக்கு பக்கத்திலை யார் நிக்கவேணுமோ அவிங்க தான் நிக்கிறாங்க... 🤣
 

image-d5801ed6a8.jpg

 

😂

  • கருத்துக்கள உறவுகள்

அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே.

23 minutes ago, தமிழ் சிறி said:

மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔,
தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣

 

அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே.

அட நான் பாதிப்படம் பார்த்து ஊகித்து எழுதிவிட்டு பார்த்தால் குமாரசாமியர் முழுப்பட்ததையும் போட்டுவிட்டார்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே.

 

36 minutes ago, குமாரசாமி said:

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

குமாராசாமி அண்ணை இணைத்த முதல் படத்தில், காப்பு மட்டும்தான் தெரிந்தது புலவர். 😁

அதுதான்…. ஆரெண்டு அறிய வேணும் என்று ஆவல் வந்தது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணை இணைத்த முதல் படத்தில், காப்பு மட்டும்தான் தெரிந்தது புலவர்.

வடிவாய்ப் பாருங்கள் சிறி காப்பு மட்டுமா தெரியுது?முக்கியமான தடயம்  இருக்கு வடிவாயப்பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

வடிவாய்ப் பாருங்கள் சிறி காப்பு மட்டுமா தெரியுது?முக்கியமான தடயம்  இருக்கு வடிவாயப்பாருங்கோ.

புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:
29 JUL, 2024 | 06:22 PM
image
 

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது. 

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189724

 ரணில் மகிந்தவின் மொட்டுக்கட்சியில் இருந்து எத்தனை எம்பிக்களை இழுத்தெடுத்தாலும் ராஜபக்டீசக்களின் ஆதரவு இல்லாமல் ஒண்ணும் புடுங்க முடியாது. சிங்களவர்களைப் பொறுத்தவரையில்  மகிந்த நவீன துட்டகைமுணு.

2 minutes ago, தமிழ் சிறி said:

புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣

பார்க்கிறவரகளின் புலன் வேறு எங்கும் போகமால் திசை திருப்புவதற்காகக்தான் பெண்கள்  நகைகளை அணிகிறார்கள்  என்பது சரிதான் .

  • கருத்துக்கள உறவுகள்

பல முனைப்போட்டியில் சிங்கள வாக்குகள். 

தமிழர்கள் தனித்து ஒற்றுமையாக ஓன்று திரண்டால்....???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

எவருக்கும் 50% கிடைக்கா விட்டால், இரண்டாவது மூன்றாவது தேர்வு வாக்குகள் எப்படி எண்ணப்படும் என்று டெயிலி மிர்ரரில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதியுயர் கால்குலஸ் தோற்றது போங்கோ.....

அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.

https://www.dailymirror.lk/top-story/How-will-second-third-preferences-matter-in-case-no-candidate-gets-over-50/155-288264

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பல முனைப்போட்டியில் சிங்கள வாக்குகள். 

தமிழர்கள் தனித்து ஒற்றுமையாக ஓன்று திரண்டால்....???

எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணனியும் பொது வேட்பாளரரை ஆதரிக்க வேண்டும். இங்கே சிக்கல் என்ன டவென்றால் பொது வேட்பாளரை நிநறுத்துவதற்கு  ஒப்பந்தம் போட்டிருக்கும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்கள்13 மேல்  எதனையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளித்தூண்டல்கள் இன்றி  பொது வேட்பாளரை நிறுத்தினால் வரவேற்கலாம். சுமத்திரன் பொது வேட்பாளரைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். மாவையும் சிறிதரனும் வழமை போல் மதில மேல் பூனையாக  இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் சுகவீனம் காரணமாக நடப்பு அரசியலில் நேரடியாக இல்லை. அதனால் முன்னனி எப்போதும் போல புறக்கணிப்பு நிலைப்பாட்டில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

பல முனைப்போட்டியில் சிங்கள வாக்குகள். 

தமிழர்கள் தனித்து ஒற்றுமையாக ஓன்று திரண்டால்....???

எண்ணிக்கையில், விகிதத்தில் மிகவும் குறைந்து விட்டோம், விசுகு ஐயா. ஒன்றாக நின்றாலும் முதல் இரண்டு இடங்களிற்குள் எங்களின் வேட்பாளர் வர முடியும் என்று தோன்றவில்லை.

மலையக மக்களும், இஸ்லாமியர்களும், நாங்களும் நாடு முழுவதும் ஒன்றாகச் சேர்ந்தால்................ இதை விட பூமி வெடித்து, விண்கல் விழுந்து, இப்படி உலகமே அழிந்து விடுவதற்கு சாத்தியம் கூட..........

  • கருத்துக்கள உறவுகள்

ம‌கிந்தா கூட்ட‌த்தை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் நாட்டை விட்டு விர‌ட்டி அடிச்ச‌து ராமாவா

 

நான் சொறில‌ங்கா அர‌சிய‌லை 2009க்கு பிற‌க்கு எட்டியும் பார்த்த‌து இல்லை

 

ம‌கிந்தான்ட‌ வீட்டை எல்லாம் எரித்தார்க‌ள்.........

இப்ப‌ எப்ப‌டி இவ‌ர்க‌ளால் சொறில‌ங்காவில் ந‌ட‌மாட‌ முடியுது😁.................................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌கிந்தா கூட்ட‌த்தை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் நாட்டை விட்டு விர‌ட்டி அடிச்ச‌து ராமாவா

பையன் சார், அதுக்கு பெயர் ட்ராமா இல்லை..... அதன் பெயர் அரகலிய.

எல்லாம் ஒரு 'ஹைபர் ஆக்டிவிட்டி' தான். சின்ன பிள்ளைகள் பார்ட்டிகளில் சோடாவையும் குடித்து, இனிப்புகளையும் சாப்பிட்டு விட்டு, சுழன்று கொண்டு திரிவார்களே, அது போல. 

வெரி சிம்பிள் பையன் சார்...... அவர்களுக்கு பாணும், பருப்பும் தங்கு தடையில்லாமல் கிடைத்தால் அவர்கள் வேறு எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அப்ப அரசியல்வாதிகளும், தேரர்களும் என்னவும் செய்யலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், அதுக்கு பெயர் ட்ராமா இல்லை..... அதன் பெயர் அரகலிய.

எல்லாம் ஒரு 'ஹைபர் ஆக்டிவிட்டி' தான். சின்ன பிள்ளைகள் பார்ட்டிகளில் சோடாவையும் குடித்து, இனிப்புகளையும் சாப்பிட்டு விட்டு, சுழன்று கொண்டு திரிவார்களே, அது போல. 

வெரி சிம்பிள் பையன் சார்...... அவர்களுக்கு பாணும், பருப்பும் தங்கு தடையில்லாமல் கிடைத்தால் அவர்கள் வேறு எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அப்ப அரசியல்வாதிகளும், தேரர்களும் என்னவும் செய்யலாம்.  

சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இப்ப‌டி அரிசி ப‌ருப்புக்கு ம‌ட்டும் வாழுகிறார்க‌ள் என்று இப்ப‌ தான் தெரியுது.................அப்ப‌ நாட்டின் மீது ப‌ற்று இல்லை நாடு நாச‌மாய் போனாலும் அரிசி ப‌ருப்பு கிடைச்சா போதும்..........................சீனன் இல‌ங்கையை க‌ட்டி எழுப்புகிறான் இது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் சீனால‌ங்கா என்று பெய‌ர் கால‌ போக்கில் வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை......................

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, வீரப் பையன்26 said:

சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இப்ப‌டி அரிசி ப‌ருப்புக்கு ம‌ட்டும் வாழுகிறார்க‌ள் என்று இப்ப‌ தான் தெரியுது.................அப்ப‌ நாட்டின் மீது ப‌ற்று இல்லை நாடு நாச‌மாய் போனாலும் அரிசி ப‌ருப்பு கிடைச்சா போதும்..........................சீனன் இல‌ங்கையை க‌ட்டி எழுப்புகிறான் இது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் சீனால‌ங்கா என்று பெய‌ர் கால‌ போக்கில் வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை......................

அங்கு நான் படித்த காலம். ஐந்து வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். காலையில் பாணும், பருப்பும். அதில் பருப்பு இருக்காது, தட்டில் நீரோடும். இரவிலும் இதுவே இருக்கும். மத்தியானம் சோறு. ஜெயில் சாப்பாடே பல மடங்கு திறம் என்பது போல இருக்கும்.

ஆனால் அவர்கள் எந்த குறையும் சொல்வதில்லை. மிக ஒழுங்காக சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள். தமிழர்களில் வசதி உள்ளோர், பலரிடம் வசதி இருந்தது, வெளியே போய் நகரத்தில் சாப்பிட்டுக் கொள்வார்கள். வெளியே போக முடியாதோரில் சிலர் குமட்டிக் கொண்டே கிடப்பார்கள்.

ஒரு தடவை அங்கிருக்கும் சில தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்த விடுதி உணவுச்சாலையில் கதைத்து, கொஞ்சம் நல்ல சாப்பாடு, கொஞ்சம் அதிகமான விலையில் தயாரிக்கச் சொன்னார்கள். சில நாட்கள் இது போனது.

திடீரென்று ஒரு நாள் அன்றைய அநுரகுமார திசாநாயாக்காவின் ஆட்கள் உணவுச்சாலைக்குள் புகுந்து எல்லாவறையும் நிற்பாட்டி விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே பாண், ஒரே பருப்பு, அதே சோறு, ஒரு புல்லுச் சுண்டல்,............ என்று சொல்லிவிட்டனர். அவர்களை மீறமுடியாது.

இதே அநுரகுமார இன்று அதிபர் பதவிக்கு வந்தால், நாடு முழுவதும் பாலும் தேனும் ஓடுகின்றது என்று சொல்வது போல பாணும் பருப்பும் ஓடும் போல............  

  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

அங்கு நான் படித்த காலம். ஐந்து வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். காலையில் பாணும், பருப்பும். அதில் பருப்பு இருக்காது, தட்டில் நீரோடும். இரவிலும் இதுவே இருக்கும். மத்தியானம் சோறு. ஜெயில் சாப்பாடே பல மடங்கு திறம் என்பது போல இருக்கும்.

ஆனால் அவர்கள் எந்த குறையும் சொல்வதில்லை. மிக ஒழுங்காக சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள். தமிழர்களில் வசதி உள்ளோர், பலரிடம் வசதி இருந்தது, வெளியே போய் நகரத்தில் சாப்பிட்டுக் கொள்வார்கள். வெளியே போக முடியாதோரில் சிலர் குமட்டிக் கொண்டே கிடப்பார்கள்.

ஒரு தடவை அங்கிருக்கும் சில தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்த விடுதி உணவுச்சாலையில் கதைத்து, கொஞ்சம் நல்ல சாப்பாடு, கொஞ்சம் அதிகமான விலையில் தயாரிக்கச் சொன்னார்கள். சில நாட்கள் இது போனது.

திடீரென்று ஒரு நாள் அன்றைய அநுரகுமார திசாநாயாக்காவின் ஆட்கள் உணவுச்சாலைக்குள் புகுந்து எல்லாவறையும் நிற்பாட்டி விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே பாண், ஒரே பருப்பு, அதே சோறு, ஒரு புல்லுச் சுண்டல்,............ என்று சொல்லிவிட்டனர். அவர்களை மீறமுடியாது.

இதே அநுரகுமார இன்று அதிபர் பதவிக்கு வந்தால், நாடு முழுவதும் பாலும் தேனும் ஓடுகின்றது என்று சொல்வது போல பாணும் பருப்பும் ஓடும் போல............  

  

அவர்களின் பாணில். பல வகைகளுண்டு ....எனது அப்பா  நன்றாக சிங்களம் கதைப்பார். அவரகளுடன்.   பேக்கரியில். வேலை செய்தவர். நாங்கள் சின்ன வயதிலிருக்கும்போது ....சங்கிலி. பாண்...       இப்படி நல்ல சுவையான  பலவகையிலும் கொண்டு வருவார்கள்’’     பாண்.  நல்ல உணவு தான் 🤣🤣🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.