Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், 20 வயது செவிலியர் வேலை செய்துவந்தார். இந்த நிலையில், ஆகஸ்ட் 17-ம் தேதி இரவு 7 மணிக்கு பணிக்குச் சென்றிருக்கிறார் அந்தப் பெண் செவிலியர். அன்று இரவு, மருத்துவமனையின் மற்றொரு செவிலியர் மெஹ்னாஸ், டாக்டர் ஷாநவாஸ் என்பவரை அவரது அறையில் சந்திக்கும்படி, அந்தச் செவிலியரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்தச் செவியிலியர் மறுத்ததால், மெஹ்னாஸ், வார்டு பாய் ஜுனைத் ஆகியோர், மருத்துவமனையின் மேல் தளத்தில் உள்ள அறைக்கு வலுக்கட்டாயமாக அந்தச் செவிலியரை இழுத்துச் சென்று அடைத்து வெளியிலிருந்து பூட்டியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, டாக்டர் ஷாநவாஸ் அந்த அறைக்குள் நுழைந்து, உள்பக்கமாகப் பூட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் கூறினால் கொலை செய்வதாக மிரட்டியதாகவும், குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக செவிலியரின் தந்தை மொரதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக பாரதிய நியாய் சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவுசெய்த காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் கைதுசெய்தது.

இந்த சம்பவம் குறித்து மொராதாபாத் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) சந்தீப் குமார் மீனா கூறுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரிக்க ஒரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்தப் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில், சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

செவிலியரின் தந்தை, உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம், ``என் மகள் பட்டப்படிப்பு தொடர்ந்து வருகிறார். கடந்த பத்து மாதங்களாக உள்ளூர் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தார். ஆனால் மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்.

மரணதண்டனை வேதனையெல்லாம் தண்டனை முடிந்ததும் மறைந்துவிடும். நலமடித்து வாழ்நாள் முழுவதும் அதை எண்னி ஏங்கி அலைய விடவேண்டும்.😩🥴

 

  • கருத்துக்கள உறவுகள்

பாலியல் வன்புணர்வுக்கு... பெயர் பெற்ற நாடு இந்தியா.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
32 minutes ago, Paanch said:

மரணதண்டனை வேதனையெல்லாம் தண்டனை முடிந்ததும் மறைந்துவிடும். நலமடித்து வாழ்நாள் முழுவதும் அதை எண்னி ஏங்கி அலைய விடவேண்டும்.😩🥴

 

15 minutes ago, தமிழ் சிறி said:

பாலியல் வன்புணர்வுக்கு... பெயர் பெற்ற நாடு இந்தியா.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு இந்தியா.

இந்திய கதைகளிலும்,திரைப்படங்களிலும்,கோவில் சிற்பங்களிலும் ஒரே பாலியல் சம்பவங்கள் தானே.
மண்வாசனை வீசாமலா இருக்கும்? 🤣


சம்பந்தப்பட்ட நாலுபேருக்கு புடிச்சு நறுக்கி விட மிச்ச சொச்சம் தானாய் திருந்தும் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இந்திய கதைகளிலும்,திரைப்படங்களிலும்,கோவில் சிற்பங்களிலும் ஒரே பாலியல் சம்பவங்கள் தானே.
மண்வாசனை வீசாமலா இருக்கும்? 🤣


சம்பந்தப்பட்ட நாலுபேருக்கு புடிச்சு நறுக்கி விட மிச்ச சொச்சம் தானாய் திருந்தும் :cool:

கடந்த பத்து நாட்களில்... மருத்துவத்துறை சம்பந்தப் இடத்தில் நடந்த 
மூன்றாவது பாலியல் வன்கொடுமை இது. வெளியில் தெரியாமல் எத்தனையோ...

இலங்கையும் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றில் இந்தியாவைப் போன்றே மாறி வருகின்றது.

முக்கியமாக வடக்கு ( முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம்) மெல்ல மெல்ல தெற்கைப் போன்றே ஆகி வருகின்றது.

பெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை என்பது எம் சமூகத்தில் systematic ஆக ஏற்றுக் கொள்ளப்பட்ட மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இந்த நிலை மாறுவதற்கு சமூக மட்டத்தில் சிந்தனை முறை மாறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

இலங்கையும் பாலியல் வன்கொடுமை மற்றும் சிறார் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றில் இந்தியாவைப் போன்றே மாறி வருகின்றது.

முக்கியமாக வடக்கு ( முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம்) மெல்ல மெல்ல தெற்கைப் போன்றே ஆகி வருகின்றது.

பெண்கள் மற்றும் சிறுவர் மீதான பாலியல் வன்முறை என்பது எம் சமூகத்தில் systematic ஆக ஏற்றுக் கொள்ளப்பட்ட மறைமுகமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இந்த நிலை மாறுவதற்கு சமூக மட்டத்தில் சிந்தனை முறை மாறவேண்டும்.

உண்மை. அண்மைய செய்திகளில் இதனை அதிகம் அவதானிக்க முடிகின்றது.
பெரும்பாலானவை சிறிய தந்தை போன்ற நம்பிக்கையான உறவினர்களால் நடத்தப் பட்டுள்ளமை அருவருக்கத்தக்கதும் கொடுமையானதுமான செயல். 
அதுகும் கூட்டுப் பாலியல் வன்கொடுமையையும் மாதக் கணக்கில் செய்கின்றார்கள். 😡

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, தமிழ் சிறி said:

கடந்த பத்து நாட்களில்... மருத்துவத்துறை சம்பந்தப் இடத்தில் நடந்த 
மூன்றாவது பாலியல் வன்கொடுமை இது. வெளியில் தெரியாமல் எத்தனையோ...

நூற்றுக்கு தொண்ணூறு வீதமான பாலியல் கொடுமைகள் வெளியே வர சந்தர்ப்பங்கள் இல்லை என நினைக்கின்றேன்.
அரசியல் என ஒன்று இருந்தாலும் தனிமனித ஆதிக்கங்கள் நிறைந்த நாடு இந்தியா. சட்டங்கள் பாயாத பல பிரதேசங்கள் உண்டு.
அதை விட.... சென்ற தினங்களில் மலையாள திரையுலகில் நடைபெறும் பாலியல் அடக்குமுறைகள் சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
வாசித்தீர்களா? கொடுமை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.