Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு(Prabhakaran) பலமாக இருந்த கருணாவை உடைத்ததற்கு ரணில்(ranil) தான் காரணம் என்பதை அறிந்த பிரபாகரன் 2005 ஜனாதிபதி தேர்தலில் ரணிலை தோற்கடிக்க தேர்தல் புறக்கணிப்புக்கு முடிவு செய்தார் என தென்னிலங்கை கட்டுரையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளமை வருமாறு,

2002ஆம் ஆண்டு கருணாவை பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பியது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு. கருணா தாய்லாந்துக்கு(thailand) சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தச் சென்ற போது இரண்டு பேரை வைத்து அவரை சிக்க வைத்தார் ரணில்.

கருணாவை பிரித்த ரணில்

ஒருவர் அப்போதைய கட்டுநாயக்க விமான நிலையத்தின் பணிப்பாளராக இருந்த காமினி அபேரத்ன(Gamini Abeyratne), மற்றவர் ரணிலின் அரசாங்கத்தில் அரச அமைச்சராக இருந்த அலி சாஹிர் மௌலானா(Ali Zahir Moulana).

கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல் | Night Club For Karuna Liquor Licenses For Tna

அலி சாஹிர் மௌலானா கருணாவின் அண்டை வீட்டார், அண்மையில் அவர் கருணாவின் வேண்டுகோளுக்கு இணங்க, கருணாவின் பிள்ளைகளை கொழும்பில் உள்ள பாடசாலைகளில் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்ததாக தெரிவித்திருந்தார். சமாதானப் பேச்சுவார்த்தையின் போது பிரபாகரனுக்கும் கருணாவிற்கும் இடையில் அதிகரித்து வரும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து அப்போது பிரதமராக இருந்த ரணிலிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

தாய்லாந்து இரவு விடுதிகளில் கருணா 

சமாதானப் பேச்சுக்காக நாட்டை விட்டு வெளியேறிய கருணாவை காமினி அபேரத்ன, தாய்லாந்தில் உள்ள இரவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்றதுடன் இருவரும் நண்பர்களாகினர். பின்னர் தாய்லாந்து சென்று கருணாவை இரவு விடுதிகளுக்கு அழைத்துச் சென்று இரவு வெகுநேரம் வரை விருந்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல் | Night Club For Karuna Liquor Licenses For Tna

கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் இடையிலான மோதல் பகிரங்கமானபோது, கருணா கிழக்கிலிருந்து கொழும்புக்கு அலி சாஹிர் மௌலானாவின் வாகனத்தில் தப்பிச் சென்றார். இவை அனைத்தும் பிரபாகரனுக்கு தெரியும்.

சர்வதேச அழுத்தங்களை பொருட்படுத்தாமல், தனது நெருங்கிய கூட்டாளியை உடைத்ததற்கு பழிவாங்கும் வகையில் ரணிலை தோற்கடிக்க முடிவு செய்தார்.

ரணிலை ஜனாதிபதியாக்க ராஜபக்சாக்கள் விரும்பியது ஏன்..!

கருணாவையும் பிரபாகரனையும் பிரித்து புலிகளை அழித்தவர் ரணில் என்பது ராஜபக்சாக்களுக்கு தெரியும். இதனால் தான் ரணிலை ஜனாதிபதியாக்க அவர்கள் விரும்பியதற்கு ஒரு காரணம், அவர் ‘அரகலய’வைப் பிளந்து அழித்துவிடுவார் என்று அவர்கள் நம்பியதே ஆகும்.

கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல் | Night Club For Karuna Liquor Licenses For Tna

ரணில் இதை நிறைவேற்றினார். மேலும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கு எதிராகத் திரும்பும் என்ற அச்சத்தினால், மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகளை உருவாக்கினார் ரணில்.

கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்திய ரணில்

சிறிதரன்(Sritharan) உட்பட பல தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களுக்கு மதுபானசாலை அனுமதி வழங்கியதும் தெரியவந்துள்ளது. மதுபான உரிமம் பெற்ற இந்த கூட்டமைப்பு மற்றும் தமிழரசு கட்சி தலைவர்கள், தற்போது கூட்டமைப்பு வாக்குகள் ரணிலின் போட்டியாளரான சஜித்துக்கு(sajith) செல்வதை தடுக்க சுயேச்சை வேட்பாளரை ஆதரிக்கின்றனர்.

கருணாவின் தாய்லாந்து பயணமும் கூட்டமைப்பு எம்.பிக்களுக்கு மதுபானசாலை அனுமதியும் : தென்னிலங்கையிலிருந்து வெளிவரும் பகீர் தகவல் | Night Club For Karuna Liquor Licenses For Tna

கருணாவை ரணில் பிரித்தது அவருக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தியது. இல்லையேல் 2005ல் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார்.

இந்த தவறை சரிசெய்வதற்கான ரணிலின் அண்மைக்கால நடவடிக்கைகளும் பிழையானவை. மதுபான அனுமதிப்பத்திரங்கள் மூலம் தமிழ் வாக்குகளைப் பெற முடியுமா என்பது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தெரியவரும். 

https://ibctamil.com/article/night-club-for-karuna-liquor-licenses-for-tna-1726035309#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

IBC க்கு ஏன் இந்த வேண்டாத வேலை. 

முரளீதரனை ஏன் இப்போது இங்கே சிண்டு முடிகிறது? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

IBC க்கு ஏன் இந்த வேண்டாத வேலை. 

முரளீதரனை ஏன் இப்போது இங்கே சிண்டு முடிகிறது? 

இந்த செய்தி இப்போது வெளியிட்டது   எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது       அவர்களுக்கு  எப்போது ?என்ன?   தெரியும்   அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எவரும் சொல்லி கொடுக்க தேவையில்லை     ரணில் எப்படி தமிழர்கள் பிரச்சனையை. தீர்ப்பார். என்பதை   அறிய  முயலுங்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு... ரணில் மதுபானசாலை அனுமதியுடன் பணமும் கொடுத்த விவகாரம் கடந்த மூன்று கிழமையாக இணையங்களில் பேசப்பட்டு வந்தவைதான்.

ந்த வகையில்...

சாணக்கியனுக்கு... கல்லடியில் ஒரு மதுபானசாலை அனுமதியும்,

சுமந்திரனுக்கு.... மூன்று மதுபானசாலை அனுமதியும்,  அதில் ஒன்று வல்வெட்டித்துறையிலும் உள்ளதாம்.

ஸ்ரீதரனுக்கும்... கிளிநொச்சியில்ரு மதுபானசாலை அனுமதியும்,

அங்கஜனுக்கும் மதுபானசாலை அனுமதியும் கிடைத்ததுள்ளதாம்.

அங்கஜனின் தந்தை இராமநாதன், ஏற்கெனவே சாராய வியாபாரிதானாம்.

 

அது மட்டுமல்லாது.... சாணக்கியனுக்கு 60 கோடி ரூபாயும்,

சுமந்திரனுக்கு 55 கோடி ரூபாயும், ரணில் கொடுத்ததாக பலரும் பேசிக்கொள்கின்றார்கள்.

சாணக்கியனுக்கு கிடைத்த 60 கோடியை பற்றி... தமிழரசுட்சியின் அவைத்தலைவர் சிவஞானமும் அறிந்து உள்ளார். சிவஞானம் அறிந்த... அதனை பற்றிய செய்தியை சில வாரங்களுக்கு முன் யாழ். களத்தில் இருந்தே நான் வாசித்து அறிந்து கொண்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு 55 கோடி ரூபாயும், ரணில்

100 கோடி   55 கோடி   இல்லை   கணக்கை சரியாக பாருங்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

100 கோடி   55 கோடி   இல்லை   கணக்கை சரியாக பாருங்கள் 😂

சாணக்கியனை விட சுமந்திரனுக்கு ஏன் காசு குறைய கிடைத்தது என யோசித்தேன்.

100 கோடி என்று நீங்கள் சொன்னால், ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

சாணக்கியன் இன்னும்... சுமந்திரனிடம் கற்க நிறைய உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

சாணக்கியனை விட சுமந்திரனுக்கு ஏன் காசு குறைய கிடைத்தது என யோசித்தேன்.

100 கோடி என்று நீங்கள் சொன்னால், ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

சாணக்கியன் இன்னும்... சுமந்திரனிடம் கற்க நிறைய உள்ளது

செய்தியில் பார்த்தேன்  சஜித் க்கு ஆதரவு என்று   முடிவு எடுத்த இரண்டாவது நாள்   இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

செய்தியில் பார்த்தேன்  சஜித் க்கு ஆதரவு என்று   முடிவு எடுத்த இரண்டாவது நாள்   இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது 

தகவலுக்கு நன்றி, கந்தையாண்ணை.

அப்ப... ரணிலின் கண்ணசைவின் படி, சுமந்திரன் தன்னிச்சையாக, தமிழரசுட்சியின் மத்திய குழுவையும் மீறி... சஜித்தை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

வருகின்ற  15´ம் திகதி மக்களுக்கு இன்னும் ஒரு பொய்யும் பிரட்டும் சொல்லப் போகின்றார்கள்.

மக்கள் அவ்வளவு முட்டாள்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் போலுள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மக்கள் அவ்வளவு முட்டாள்கள் என்று இவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் போலுள்ளது.

நினைப்புத்தான் பிழைப்பைக் கெடுக்கும் என்றொரு பழமொழி உள்ளது, பார்்க்கலாம்.🧐

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.