Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்ரான் - பாண்டியன் படையணியின் பாதுகாப்பை இழந்த நிலையில் பிரபாகரன்

Featured Replies

அண்மையில் விசுவமடு பகுதியில் அமைந்திருந்த புலிகள் இயக்கத்தின் பிரபல அணியாகிய இம்ரான் - பாண்டியன் படையணியினரின் தலைமை முகாம் விமானப் படையினரின் தீவிர தாக்குதலுக்குள்ளாகி அழிக்கப்பட்டது. இந்த இம்ரான் - பாண்டியன் படையணியே புலிகள் இயக்கத் தலைவருக்குப் பாதுகாப்பு வழங்கி வரும் முக்கிய படையணியாகும். இம்ரான் - பாண்டியன் படையணி உருவாக்கப்பட்டது பற்றியும் அதன் தலைவர்களாகச் செயற்பட்ட இம்ரான் மற்றும் பாண்டியன் எனப்படும் முன்னணிப் புலிகள் இயக்கத் தலைவர்கள் பற்றியும் பல்வேறு அரிதான தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இம்ரானும் பாண்டியனும் சிறு வயதிலிருந்தே `மாம்பழ நண்பர்கள்' என்று கூறக்கூடிய வகையில் மிகவும் நெருக்கமாகப் பழகி வந்த நண்பர்களாவர். இவர்கள் இருவருமே யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரதேசத்திலுள்ள பிரம்படி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்த இந்த இருவருமே ஒரே பாடசாலைக்கு ஒன்றாகவே புறப்பட்டுச் சென்று ஒன்றாகப் படித்து விளையாடிய மிக நெருக்கமான பாடசாலை நண்பர்கள்.இளைஞர் பருவத்தை எய்திய இவர்கள் இருவரும் ஒன்றாகவே புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார்கள். அந்தக் கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கப் பொறுப்பாளராக கேணல் கிட்டு செயற்பட்டு வந்தார். அது புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டமாகும். யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுன்னாகம் கிராமத்திலிருந்த பொலிஸ் நிலையம் மீது இம்ரான் தலைமையிலான குழுவினர் நடத்திய தாக்குதலின்போது இம்ரான் காலில் படுகாயம் ஏற்பட்டது. இதற்குச் சிகிச்சை பெறுவதற்காக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இம்ரானின் தலைமை இல்லாததால் ஏற்பட்ட குறைபாட்டை நிரப்பியவர் அவருடைய நண்பராகிய பாண்டியன் ஆகும். இவ்வாறு இம்ரானைப் போலவே தாக்குதல்களில்திறமையான உறுப்பினராக பாண்டியன் இருந்தார்.

1983 ஆம் ஆண்டில் பிரபாகரனுக்குத் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு திறமையான படையணி தேவைப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் பிரபாகரனுக்கு தமிழ்நாட்டிலிருந்து பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. எனினும், பிரபாகரன் தனிப்பட்ட பாதுகாப்புக்காக இம்ரானைத் தெரிந்தெடுத்து நியமித்திருந்தார். பின்னர் இம்ரான் சிகிச்சைக்காக தமிழ்நாடு சென்ற பின் பிரபாகரன் தனது பாதுகாப்புப் படையணியின் தலைவராக இம்ரானின் நெருங்கிய நண்பனாகிய பாண்டியனையே தெரிந்தெடுத்தார். பிரபாகரன் பாதுகாப்புக்கான படையணியினரை இம்ரானும் பாண்டியனுமே தேர்ந்தெடுத்து படையணியில் சேர்த்து வந்தனர். அந்த அளவுக்கு பிரபாகரனுக்கு மிக விசுவாசமுள்ள பாதுகாப்பாளர்களாக இம்ரானும் பாண்டியனும் இருந்து வந்தனர்.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய கால கட்டத்தில் புலிகள் இயக்கம் பெரும் பின்னடைவுக்குள்ளானது. அப்போது யாழ்ப்பாணத்தின் புலிகள் படையணித் தலைவராக பாண்டியன் இருந்தார். இந்திய இராணுவத்தினரால் பாண்டியன் இருந்த இடம் சுற்றிவளைக்கப்பட்டபோது கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு பாண்டியன் உயிரிழந்தார். பாண்டியன் இறந்த பின்னர் யாழ்ப்பாணத்தின் புலிகள் படைத்தலைவராக இம்ரான் நியமிக்கப்பட்டார். இவரும் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் கட்டைக்காடு பிரதேசத்திலிருந்து இந்திய இராணுவத்தினரின் முகாம் மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்த பிரபாகரன் திட்டமிட்டார்.இந்தத் தாக்குதலில் இம்ரான்,பாண்டியனால் தெரிந்தெடுத்து நியமிக்கப்பட்டிருந்த தனது பாதுகாப்பு படையணியினரையும் பிரபாகரன் அனுப்பினார். இந்தப் படையணிக்கு பிரபாகரன் இம்ரான் - பாண்டியன் படையணி என்று பெயரிட்டார்.இந்தப்படையணியின

இனவாதிகளுக்கு தீனிபோடும் இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட கட்டுரைகள் எழுதப்பட்டாலும் ஏதோ ஒரு வகையில் பயனுடையவையாகவும் உள்ளன. இதன் மூலம் தெரிந்தோ தெரியாமலோ சிங்களவர்கள் நமது போராளிகளின் வீர வரலாறுகளை ஓரளவேனும் அறிந்து கொள்கின்றனர்.

:lol::lol::lol::lol::lol::icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

:icon_mrgreen::lol::lol:

ஈழவன்.. உங்களுக்கு வேற வேலையே இல்லையா..?

:lol::lol::lol:

  • தொடங்கியவர்

இவை குண்டு போடுவீனமாம் அது இம்ரான் பாண்டியன் தலமையகத்தில விழுமாம் அப்படி விழுந்ததால இம்ரான் பாண்டியன் படையணி முழுவதுமே அழிந்துடுமாம் அதால தலைவருக்கு பாதுகாப்பு இல்லையாம் என்னங்கடா நினைகிறியள் புலிகளை பற்றி அதுவும் சாள்ஸுக்கு வாந்தாக்குதலால காயமாம் சாள்ஸ் பள்ளி நாட்களில் கூட ஒருவருடன் சாதாரணமாக சைகிளில் வந்து செல்கிறவர்.

இவங்களின் பகிடியை கேட்டு சிரிச்சு அதை உங்களுக்கும் பார்கவேண்டும் என இங்கு இணைத்தேன் இந்த நகைசுவைகளை மொழிபெயர்த்து பிரசுரிக்கும் தினக்குரல் அன்பர்களுக்கு நன்றி.

அதுவும் சாள்ஸுக்கு வாந்தாக்குதலால காயமாம் சாள்ஸ் பள்ளி நாட்களில் கூட ஒருவருடன் சாதாரணமாக சைகிளில் வந்து செல்கிறவர்.

இவர் யாழ் சென்ஜொன் பொஸ்கோவிற்கு கறுப்புக் கண்ணாடி வாகனத்தில் பாதுகாப்பாகவே சென்று வந்தார், அத்துடன் பாடசாலை முடியும்வரை இருவர் வாசலில் காவல் நிற்பார்கள். அதிபரை சந்திக்க செல்லும் வெளிநபர்களை சிலவேளைகளில் அவர்கள் விசாரணையும் செய்வார்கள்.

தெரிவிப்பது நான், தீர்மாணிப்பது நீங்கள்!

  • தொடங்கியவர்

நான் அவருடன் படித்தேன் சாணக்கியன் ஒரு இளைஞருடன் சைக்கிளிலே செல்வார் அவருக்கு புலநாய்வுதுறையினரின் பாதுகாப்பு இருந்திருக்கலாம் ஆனால் வெளிப்படையான எந்த பாதுகாப்பும் அவருக்கு இருக்கவில்லை பொஸ்கோவிலும் சரி செஞோன்ஸிலும் சரி இரு பள்ளியிலும் ஒரே வகுப்பில் கல்விகற்றோம்

ஏற்றுக்கொள்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனய்யா என்னுடைய கருத்தை எடுத்துவிட்டீர்கள்? வர வர இங்க நான் எழுதினாலே தேசதுரோகம் மாதிரி வந்திட்டு...

ஈழவன் சொல்கிற மாதிரி , அவர் சென். ஜோன்சில் படிக்கும் போது சாதாரணமாகத்தான் போய் வாறவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.