Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்?

Oruvan

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க தேர்வானதைத் தொடந்து நாடாளுமன்ற விரைவில் கலைக்கப்படும்.

விருப்பு வாக்குகளின் இறுதி முடிவுகளின் பின்னர் உரையாற்றிய அனுரகுமார நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என சரியாக கூறாத நிலையில் விரைவில் கலைக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இதற்கமைய, நாடு விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு செல்லும் என்பது உறுதியாகிறது.

தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினரான பிமல் ரத்நாயக்கவும் விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

தேர்தல் கண்காணிப்பாளர்களின் கூற்றுப்படி, ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்க தனது முந்தைய அறிக்கைகளைப் பின்பற்றி இந்த வாரம் நாடாளுமன்றத்தைக் கலைத்தால், தேர்தலுக்கான காலக்கெடு நவம்பர் இறுதியில் இடம்பெறும்.

முன்னாள் தேர்தல் கண்காணிப்பாளர் ரஜித்ன் கீர்த்தி தென்னகோன் கருத்துப்படி, சட்ட கட்டமைப்பின் கீழ் எதிர்பார்க்கப்படும் காலக்கெடு பின்வருவனவற்றை பரிந்துரைக்கிறது:

01. நாடாளுமன்றம் கலைப்பு - செப்டம்பர் 25, 2024

02. நியமனக் காலக்கெடு - 2024 ஒக்டோபர் 04, அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள், நியமனங்களுக்கு ஏழு நாள் கால அவகாசம் இருக்கும்.

03. தேர்தல் திகதி தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு - 2024 ஒக்டோபர் 07ஆம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.

04. தேர்தல் நாள் - கலைக்கப்பட்ட 52 முதல் 66 நாட்களுக்குள் தேர்தல் நடத்துவதற்கான சட்டப்பூர்வ தேவையின்படி, நவம்பர் 22 மற்றும் நவம்பர் 30 ஆம் திகதிகளுக்குள் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறலாம்.

 

https://oruvan.com/sri-lanka/2024/09/23/sri-lanka-parliamentary-election-at-the-end-of-november

Edited by கிருபன்

  • கிருபன் changed the title to நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும்? நவம்பர் மாத இறுதிக்குள் தேர்தல்?
  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்?

Published By: RAJEEBAN   23 SEP, 2024 | 01:08 PM

image
 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் வெற்றி உரையின் போது அனுரகுமாரதிசநாயக்க நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோடிட்டுக்காட்டியுள்ள போதிலும் எப்போது தேர்தல் இடம்பெறும் என்பதை அவர் குறிப்பிடவில்லை.

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படலாம் என பிமல்ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அனுரகுமாரதிசநாயக்க தனது முன்னைய அறிவிப்புகளிற்கு ஏற்ப நாடாளுமன்றத்தை இந்த வாரம் கலைத்தால் நவம்பர் இறுதியில் தேர்தல் நடைபெறலாம் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் கலைப்பு,தேர்தல் குறித்த அறிவிப்பு 25ம் திகதி வெளியாகலாம் என தேர்தல் கண்காணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுகாலம்,ஒக்டோபர் 4ம் திகதிக்குள் -அறிவிப்பு வெளியாகி பத்து நாட்களிற்குள்- வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஏழு நாட்கள்

தேர்தல் திகதி  உத்தியோகபூர்வ அறிவிப்பு -ஒக்டோபர் ஏழாம் திகதிக்குள் வெளியாகலாம்.

தேர்தல் வாக்களிப்பு திகதி -நவம்பர் 22 லிருந்து 30ற்க்குள் - நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 52 முதல் 66 நாட்களிற்குள் தேர்தலை நடத்தவேண்டும்.

https://www.virakesari.lk/article/194603

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன.

ஐந்து வருடத்தை முடிக்கவில்லை என்றால் பென்சன் இல்லையாமே?

நிறைய புதிய முகங்கள் உறுப்பினராகினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐந்து வருடத்தை முடிக்கவில்லை என்றால் பென்சன் இல்லையாமே?

நிறைய புதிய முகங்கள் உறுப்பினராகினார்கள்.

எல்லோரையும் சொல்ல முடியாது என்றாலும்,
பலருக்கு...  வேறு, பணம் கொழிக்கும் வருமானங்களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

எல்லோரையும் சொல்ல முடியாது என்றாலும்,
பலருக்கு...  வேறு, பணம் கொழிக்கும் வருமானங்களும் உண்டு.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல் என்பது பல கோடிகளைக் கொட்டி தொடங்கும் வியாபாரம்.

இதில் தோற்வர்களே கிடையாது.

இது இப்போது மேற்கு நாடுகளுக்கும் பரவிவிட்டது.

அமெரிக்க காங்கிரசில் இருப்போர் பலர் முதியோர்கள்.

எத்தனையோ தடவைகள் பதவிக்கு வந்தும் இளையோருக்கு இடம் கொடுக்காமல் வசதி வாய்ப்புகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல் என்பது பல கோடிகளைக் கொட்டி தொடங்கும் வியாபாரம்.

இதில் தோற்வர்களே கிடையாது.

இது இப்போது மேற்கு நாடுகளுக்கும் பரவிவிட்டது.

அமெரிக்க காங்கிரசில் இருப்போர் பலர் முதியோர்கள்.

எத்தனையோ தடவைகள் பதவிக்கு வந்தும் இளையோருக்கு இடம் கொடுக்காமல் வசதி வாய்ப்புகளுக்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பைடன் அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகாமல் எவ்வளவு அடம் பிடித்துக் கொண்டிருந்தார். தனக்கு  கடவுள் வந்து சொன்னால் தான்... விலகுவேன் என்று ஒரு போடு போட்டாரே.

நேற்று ரணில்.... ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறும் போது... தளர்ந்த நடையுடன், சோகம் அப்பிய முகத்துடன் வெளியேறிய  காட்சியும்... பதவி சுகத்தை துறப்பது கடினமானது என உணர்த்தியது.

நம்ம... சம்பந்தர் ஐயாவை, சுமந்திரன் ஓய்வெடுக்கச் சொன்ன போது, மக்கள் தெரிவு செய்து வந்த தன்னை... யாரும் அப்புறப் படுத்த முடியாது என்று... கட்டையில் போகும் மட்டும் அதில் ஒட்டிக் கொண்டு இருந்ததையும் கண்டோமே. 

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு உட்டபட நாடு முழுவதும் JVP தனக்குரிய அபேட்சகர்களை நிறுத்தப்போவதாக ஒரு அபிப்பிராயம் நிலவுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும் எனவும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் எமது சகோதர ஊடகமான டெய்லி மிரர் பிரத்தியேகமாக அறிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்தன நேற்று இராஜினாமா செய்ததையடுத்து, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று அவர் உட்பட நான்கு அமைச்சர்களைக் கொண்ட இடைக்கால அமைச்சரவையை நியமிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) மூத்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

டெய்லி மிரர் பிரத்தியேகமாக பெற்ற பட்டியலின்படி, ஜனாதிபதி திஸாநாயக்க சுற்றுலா, பாதுகாப்பு, நிதி, நீதி, கைத்தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதவிகளை வைத்திருப்பார், அதே நேரத்தில் பிரதமர் வெளியுறவு, கல்வி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக இருப்பார்.

NPP பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதுடன், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி ஆகியோர் தலா பல அமைச்சுகளுடன் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

கொழும்பு தேர்தல் தொகுதியில் அனுரகுமார திஸாநாயக்கவினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு நிபுன ஆராச்சி நேற்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பரில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்த பிறகு, எப்போது வேட்புமனுக்கள் கோரப்படும் என்ற திகதியை அவர் நிர்ணயிப்பார் என்றும் NPP முகாம் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திகதிக்கு பிறகு, வேட்புமனுக்களை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு 10 முதல் 17 நாட்கள் கால அவகாசம் வழங்கும்.

ஜனாதிபதி திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்த பின்னர், எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் எப்போது கூடும் என்ற திகதியையும் அவர் அறிவிப்பார்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நேற்றுக் காலை பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, முப்படைத் தளபதிகளையும் அதன் பின்னர் தனது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று ஆசிர்வாதம் பெற்று தனது வயதான தாயாரை தரிசனம் செய்வதற்காக தம்புத்தேகம நோக்கி பயணித்தார்.

இன்று இரவு அவர் பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் NPP பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக டெய்லி மிரர் அறிகிறது.

டிசம்பரில் நடைபெறவுள்ள தேர்தலில் NPP வெற்றி பெற்றால், தனது வாக்காளர்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற்று அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே அதிக ஆதரவைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என்று டெய்லி மிரர் அறிகிறது.

 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இன்று-இரவு-பாராளுமன்றம்-கலைக்கப்படும்/175-344354

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.