Jump to content

சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்று பற்றி ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிறீ லங்காவின், மாண்புமிகு புதிய சனாதிபதி அவர்கள் சில காலங்களுக்கு முன்னர் பேசிய வீடியோ ஒன்றை நேற்றுப் பார்த்தேன்.

 

யாழ் பொதுநூலகம் எரிக்கப்பட்டதையும் அதை எரிக்க காரணகர்த்தாவாக இருந்த ஜே ஆர் அவர்களையும் வன்மையாக கண்டித்து அவர் பேசியிருந்தார்.

 

அதைக் கேட்டு எமது பயப் புள்ளைகள் எல்லாம் பயங்கரமாக உணர்ச்சிவசப்பட்டு ஏராளமாக ஷெயார் செய்திருந்தார்கள்.

 

யாழ் நூலகத்தை ஜே ஆர் எரித்தற்கான அவர் சொல்லும் காரணம்...

 

மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் வெல்வதற்காகத்தான் ஜே ஆர் யாழ் நூலகத்தை எரித்தாராம். 

 

இதுதான் சிங்கள முற்போக்குவாதிகள், இடதுசாரிகள், புத்திஜீவிகளின் புத்திசீவித்தனம்!

 

பிற இனங்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் அனைத்து இனவழிப்பு செயல்களையும் ஏதாவது ஒரு அற்ப காரணத்துக்குள் அடக்கி யாராவது ஒருவரது தலையில் (ஜே ஆர்/மகிந்த/கோத்தா) பழியைப் போட்டு எல்லாவற்றையும் பூசி மெழுகி மறைத்து, புதிய வடிவில் தம் பேரினவாதப் பணியைத் தொடர்வார்கள்.

 

சிங்கள மக்கள் ஏன் மாற்றத்தைக் கொண்டு வந்தார்கள் என்பதை தமிழர்களும் முஸ்லிம்களும் விளங்கினால் சரி.

 

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள், முற்போக்காகச் சிந்திக்கிறார்கள் என்பவர்களே...

 

கோத்தாவுக்கு வோட்டுப் போட்ட அதே மக்கள்தான் இவருக்கும் வோட்டுப் போட்டார்கள். வோட்டுப் போட்ட மக்களின் அபிலாசைகளை புதிய சனாதிபதி நிறைவேற்றுவாரா இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பாரா?

போங்கடா போய் புள்ளைகுட்டியை படிக்க வையுங்கடா!

(ஒரு முகநூல் பதிவு)

https://www.facebook.com/share/JCGXeJWV67oKabKb/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள், முற்போக்காகச் சிந்திக்கிறார்கள் என்பவர்களே...

இதுவொரு புதிய ஆரம்பம் என நினக்கின்றேன்.

ஆளும் புதிசு ஆட்டமும் புதிசாய் இருக்கக்கூடும்.😁

இரு பெரும் கட்சிகளின் ஏமாற்று வேலைகளை பார்த்து அழிந்து விட்டோம்.

இலங்கை அரசியலில் புதிய முகம். என்ன செய்கிறார்கள் என பார்க்கலாம்.
எதுவும் கெட்டு விடாது.
அடுத்த நான்கு வருடங்கள் காத்திருப்போம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு முழுவதும் விநோதங்கள் பல. என் இடதுசாரித் தோழர்கள், குறிப்பாக மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் (ML) கட்சித் தோழர்கள், எந்தப் பிரச்சினையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கமே நிற்பார்கள். ஆனால் ML சார்பான JVP அக்காலத்திலேயே, எனக்குத் தெரிந்த வரை, சிங்களப் பேரினவாதக் கட்சி என்றே பெயரெடுத்துள்ளது. 

        இன அழிப்புக்கு ஆட்பட்ட யூதர்கள் தாங்களும் வெறித்தனமாக இன அழிப்பில் ஈடுபடுவது வரலாற்று விநோதத்திற்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு. அதுவும் தங்களை அழிக்க முற்பட்டவர்களை அல்ல, வேறு ஒரு இனத்தை - தற்காப்பு என்ற பெயரில். அதிலும் கூட தங்களுக்குப் புகலிடம் தர ஆரம்பத்தில் பெரிய அளவில் எதிர்ப்புக் காட்டாத ஒரு இனத்தை.

  • Like 2
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மை. ஆனால் மக்களிடம் இருந்த தேசியத்தின் மீதான பற்று இனஅழிப்புக்குத் துணைபோன ஈனர்களையெல்லாம் தேசியத் தலைவர் சொன்னார் என்பதற்காக ஏற்றுக்கொண்டார்கள். ஆனால்,(2024) கடந்த தேர்தல் எல்லாத் தமிழ் அரசியல்வாதிகளையும், அவர்களது அரசியல் சடுகுடு ஆட்டங்கள் அம்மணமாக்கிவிட்டுள்ளது. தமிழ்த்தேசியத்தை நாடாளுமன்றத்திலிருந்து ஐ.நா வரை எப்படிப் குளிதோண்டிப் புதைப்பார்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி நிரூபித்துவிட்டார்கள். இனி மக்கள் கiளையெடுப்பார்கள் என்பதேசூழலாக மாறிவருகிறது.  நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
    • 4 மாதத்தில் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளது. அதாவது 1  கிழமைக்கு 10 புதிய மதுபான அனுமதி பத்திரங்கள்   வழங்கப்  பட்டுள்ளது. மாத்திரமே வழங்கப் பட்டதாக  மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி சப்பைக் கட்டு கட்டுகின்றார்.  இவர்களுக்கு குறுகிய காலத்தில் 172  அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவது அதிகமாக தெரியவில்லையா? அதனை யார், யார்.... பெயரில் வழங்கப் பட்டது என்ற தகவலையும் மதுவரித் திணைக்கள ஆணையர் வெளிக் கொணர வேண்டும்.  எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மதுபான அனுமதி பத்திரங்களை வாங்கி விட்டு  உத்தமன் மாதிரி...  வெள்ளை வேட்டியும், கோட்டு சூட்டும் போட்டுக் கொண்டு  ஊருக்குள் நடமாடுகிறார்கள். 
    • உங்களுக்கு அந்தச் சிரமத்தை வைக்காட்டார் என்றே நம்புகின்றேன்.  நட்பரர்ந்த நன்றியுடன் நொச்சி
    • இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. https://tamil.adaderana.lk/news.php?nid=193711
    • 29 SEP, 2024 | 10:03 AM தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணையுமாறு தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதுடன் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்குக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பிலும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.    தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று சனிக்கிழமை (28) வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.      அதன் பின்னர், நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரனால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.   தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,     விசேடமாக ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னரான விடயங்கள் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று கலந்துரையாடப்பட்டது.    அந்த வகையில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி எடுத்த மூன்று தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டவர்களிடம் விளக்கம் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டது.    அத்துடன் ப.அரியநேத்திரனை கட்சியில் இருந்து விலக்குமாறு பலமான கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் சில விடயங்கள் தொடர்பாக அவரிடம் விளக்கத்தினை கேட்டுவிட்டு தீர்மானங்களை எடுப்பதாக முடிவெடுக்கப்பட்டது.    அத்துடன் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக நாங்கள் இன்று விசேடமான அறிவிப்பு ஒன்றை மனம் உவந்து விடுக்கின்றோம்.   தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கின்ற, விசேடமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்து வெவ்வேறு காலகட்டங்களில் விலகிச்சென்ற கட்சிகளை மீண்டும் எங்களுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கவேண்டும் என்று வினயமாக ஒரு அறிவிப்பு விடுக்கின்றோம்.    சவால் மிக்க ஒரு சூழலில் இந்த தேர்தல் இருப்பதனால் இணங்கிவந்து  இந்த தேர்தலுக்கு முகங்கொடுக்குமாறு இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்.   அந்த வகையில் தமிழரசுக் கட்சியின் பெயரிலும் அதன் சின்னத்திலும் தான் நாங்கள் கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட்டிருந்தோம். அவ்வாறே இந்த தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றொம்.    அந்த அழைப்பை ஏற்று வந்தால் மிக விரைவாக நாங்கள் பேச்சுவார்த்தை மூலம் வேட்பாளர்களை நிறுத்தும் விடயங்களை இணைந்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்போம். அடுத்துவரும் ஒருசில நாட்களில் அவர்களின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.   அவ்வாறு இணங்கி வராவிட்டால் தமிழரசுக் கட்சி தனித்தும் போட்டியிடும். அத்துடன் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் விசேட கரிசனை ஒன்று வெளிப்படுத்தப்பட்டது.    ஒரு உறுப்பினரே அங்கு தெரிவுசெய்யப்படும் சூழ்நிலை இருப்பதால் அந்த விடயங்களை அந்ததந்த மாவட்டக் கிளைகளோடு பேசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரலாம் என தீர்மானித்திருக்கின்றோம்.    அத்துடன் இந்த தேர்தலில் வடகிழக்குக்கு வெளியே தலைநகர் உட்பட தமிழர்கள் வாழ்கின்ற ஏனைய சில மாவட்டங்களிலும் போட்டியிடுவது தொடர்பாகவும் பரிசீலனை செய்வதாக எமது மத்திய குழு தீர்மானித்துள்ளது   தமிழ் பொதுக் கட்டமைப்பிடம் இருந்து இதுவரை எந்தவித அழைப்புகளும் வரவில்லை. நாங்கள் பிரதானமான தமிழ்க் கட்சி.    இதுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக வேறு பல கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டபோதும் எமது சின்னத்திலும் பெயரிலுமே தேர்தலில் போட்டியிட்டோம். அந்த வகையில் பிரதான கட்சி என்ற வகையிலேயே இந்த அழைப்பை விடுக்கின்றோம்.  வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பாக சரியான அணுகலை நாங்கள் மேற்கொள்வோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. மக்களிடத்தில் பாரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது.  தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கு பிறகு பல்வேறு  எண்ணப்பாடுகள் கூடியிருக்கின்றது.    அது நல்ல விடயம். எனவே இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள், படித்தவர்கள், பெண்கள் என்று அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையிலேயே வேட்பாளர் தெரிவு இடம்பெறும்.    அதனை ஆராய்வதற்காக நியமனக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருக்கின்றது. அந்த குழு இறுதி முடிவுகளை எடுக்கும். மாவட்ட ரீதியாக கலந்தாலோசித்து அந்த முடிவுகளை எடுப்போம்  என்றார்.   https://www.virakesari.lk/article/195022
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.