Jump to content

வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

அவர்கள் எம்மை கேலி செய்வதில்லையே. 

இவர்கள் கேலி செய்வதற்கு காரணம் தமிழ் தேசியவாதிகளை உஷராக வைத்திருப்பதற்கு என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, putthan said:

இவர்கள் கேலி செய்வதற்கு காரணம் தமிழ் தேசியவாதிகளை உஷராக வைத்திருப்பதற்கு என நினைக்கிறேன்

தவறு 

இன்று தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசிய செயற்பாடுகளும் செயற்பாட்டாளர்களும் குறைவடைந்து அருகி வருவதற்கு தான் இவை காரணமாகின்றன. நமக்கேன் தேவையற்ற கெட்ட பெயர் என்று ஒதுங்கிய பலரை எனக்குத் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

தவறு 

இன்று தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசிய செயற்பாடுகளும் செயற்பாட்டாளர்களும் குறைவடைந்து அருகி வருவதற்கு தான் இவை காரணமாகின்றன. நமக்கேன் தேவையற்ற கெட்ட பெயர் என்று ஒதுங்கிய பலரை எனக்குத் தெரியும்.

அது உண்மைதான் ...ஆனால் தாயகத்தில் பல்கலைகழக மாணவர்களின் வீடியோ பதிவு ஒன்றைப் இன்று பார்த்தேன் நம்பிக்கை வருகின்றது 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, putthan said:

இவர்கள் கேலி செய்வதற்கு காரணம் தமிழ் தேசியவாதிகளை உஷராக வைத்திருப்பதற்கு என நினைக்கிறேன்

ரத்தன் ராரா ( Ratan Tata) என்றொரு இந்திய பெரும் செல்வந்தர் போனவாரம்  காலமானார், அவரது பொன்மொழி, "உங்களை நோக்கி யாராவது கல் வீசினால் அவற்றை ஏந்தி நினைவாலயங்கள் எழுப்புங்கள்." என்றாராம். நல்ல விமர்சனங்களை ஏற்று, ஆய்வு செய்து உங்களை திருத்திக்கொள்ளுங்கள். பொறாமையால் எழும் தப்பான, பொய்யான விமர்சனங்களை புன்முறுவலுடன் கடந்து செல்லுங்கள், அதற்காக காலத்தை வீணாக்காதீர்கள். எதிரி எமக்கு போடும் முட்டுக்கட்டை, உளவியல் ரீதியாக நம்மை பின்னடையச்செய்யும் ஒரு உத்தி இது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

தமிழர்கள் அல்லாதர்கள் பலர் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றனர்....


மனிதத்தை நேசிக்கும் எவரும் அதையே செய்ய முனைவர். ஆனால், எம்மவர்கள் சிலருக்கு அதுகூட உறுத்தலாகவல்லவா இருக்கிறது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

அது உண்மைதான் ...ஆனால் தாயகத்தில் பல்கலைகழக மாணவர்களின் வீடியோ பதிவு ஒன்றைப் இன்று பார்த்தேன் நம்பிக்கை வருகின்றது 

இங்கே பதியுங்கள். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே பதியுங்கள். பார்க்கலாம்.

நீங்கள் கேட்ட காணொளி இந்தத் திரியிலே உள்ளதா?

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரஞ்சித் said:

எங்களின் தேசியத்துக்கெதிரான கருத்துக்களை ஒரு பக்கம் எடுத்து வைத்துவிட்டு இதனைப் பார்க்கலாமே. சுமந்திரன் கூறுவதுபோல 15 ஆசனங்களை அவரது கட்சி கைப்பற்றுமாக இருந்தால் நல்லது என்பதே எனது எண்ணம். தெற்கைச் சாராத, தமிழர் தாயகத்தை தளமாகக் கொண்ட எந்தக் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை ஆசனங்களை வெல்வது தமிழரைப் பொறுத்தவர் நல்ல விடயமே. அதனால் எவர் தாயகத்தை அடிப்படையாக வைத்து தேர்தலில் போட்டியிட்டு வென்றாலும் எனது ஆதரவு அவர்களுக்கே. ஆனால், அவர்கள் தமிழ் மக்கள் தொடர்பான தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். எமது தாயகப்பகுதிகள் தொடர்பான அபிவிருத்தியில் அவர்கள் ஈடுபட வேண்டும். 
தமிழர்களின்  அரசியல் நலன் தொடர்பாக உண்மையான அக்கறையும், அதுகுறித்து செயற்படும் துணிவும் இருந்தால் சுமந்திரனுக்கு வாக்களிக்கலாம். அதைச் சுமந்திரன் உறுதிப்படுத்த வேண்டும். செய்வாரா? 

என்னைப்பொறுத்தவரை சிங்கள இனவாதிகளான மக்கள் விடுதலை முன்னணி நமது தாயகத்தில் காலூன்றுவதைக் காட்டிலும் சுமந்திரனோ அல்லது தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவான வேறு எவருமோ தேர்தலில் வெல்வது மேலானது. பொதுவேட்பாளர் விடயத்தில் நான் இதே நோக்கத்திற்காகத்தான் அவர்களை ஆதரித்தேன், எமது தாயகத்தில் அவருக்கு பெரும்பாலான வாக்குகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக. ஆனால் அந்த முயற்சியை எல்லோருமாகச் சேர்ந்து இன்று கேலிக்கூத்தாக்கி விட்டார்கள் என்பது வேறு கதை.

வாழ்த்துக்கள் சுமந்திரன், முயன்று பாருங்கள்.  

சிறப்பான ஒரு கருத்து அண்ணா

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/10/2024 at 16:19, Justin said:

தமிழ் தேசியம்" என்று நீங்கள் தலையில் தூக்கித் திரியும் "விக்கிரகம்"

ஏற்கெனவே தமிழர்களுக்கு பல விக்கிரகங்கள் அதற்கான வழிபாடுகள், விக்கிரகங்கள் அற்ற மதவழிபாடுகளும் மிகப் பெரும் சுமைகளாக உள்ளன. அது போதது என்று   தமிழ் தேசியவாதிகள்   தமிழ் தேசியம் என்ற விக்கிரகத்தையும் தமிழர்கள்  தலையில் தூக்கி கொண்டு  திரிந்து பூஜிக்க வேண்டும் என்பது வேதனையானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

தவறு 

இன்று தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் தமிழ்த் தேசிய செயற்பாடுகளும் செயற்பாட்டாளர்களும் குறைவடைந்து அருகி வருவதற்கு தான் இவை காரணமாகின்றன. நமக்கேன் தேவையற்ற கெட்ட பெயர் என்று ஒதுங்கிய பலரை எனக்குத் தெரியும்.

தமிழ்த் தேசியத்தை பழித்தும் இழித்தும் உரைப்பவன் 
1. சிங்களவானக இருக்கவேண்டும்.
2. சிங்களத்தின் கைக்கூலியாக இருக்க வேண்டும்.
3. தமிழனல்லாதவானாக இருக்க வேண்டும் 
                   இப்படியானவர்கள் குறித்து நீங்கள் நேரத்தை விரயமாக்குவதால் ஒரு பயனும் இல்லை. அவர்கள் தமது விசுவாசத்தைத் தமது எஜமானர்களுக்குக் காட்டவிட்டு நீங்கள் பயணிப்பதே பொருத்தமானது. 

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.