Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தமிழர்கள் பழமை வாதிகளா??????

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரி இந்த படத்தையும் பாத்திட்டு கதையுங்க

ஈழவன், குறும் படம் நன்றாக உள்ளது.

என்ரை மனுசியும் இப்படி இருந்திட்டால்......... :unsure:

பாத்து பழகச்சொல்லி மனுசிக்கு காட்டவேணும்.... :wub:

நன்றி....

சரி இந்த படத்தையும் பாத்திட்டு கதையுங்க

மனுசி

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்பது பழைய பழமொழி. அதை போன்ற பல பழக்கவழக்கங்கள் ஏன் நடைமுறைக்கு வந்தது என்பதை அறிய முற்படுவதோ , அறிந்த வற்றை ஏற்றுக்கொள்ள முற்படுவதோ அல்லது காலத்துக்கேற்றவாறு மாற்றுவதையோ விரும்பாத ஒரு மனநிலை பழமைபேணுதலின் இருப்பாக உள்ளது. சாதியப்பிரிவுகள் மதபேதங்கள் மற்றும் ஆணாதிக்கம் பிரதேசவாதம் போன்றவற்றில் இந்த இருப்பு நிலை பாரிய கேடான விழைவுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் உள்ளது.

மக்கள் பழமை சுமந்து கொண்டு.. நவீன நிகழ்காலத்தையும் அதிநவீன எதிர்காலத்தையும் நோக்கிப் பயணிக்க வேண்டும்.. அதுதான் அவசியமே அன்றி பழமைவாதம் என்று தூக்கி எறிஞ்சிட்டுப் போக.. நாம் இன்று உதித்த இனமல்ல. ஒருவேளை புலம்பெயர்ந்துவிட்ட சில அதிபுத்திசாலிகள் தங்களை புலம்பெயர்ந்த புது இனமாக்கக் காட்ட விரும்பினம் போல. ஏலவே ஈழத்தமிழர்கள்.. கனடாத் தமிழர்.. லண்டன் தமிழர்.. நோர்வேத் தமிழர்.. சிட்னித் தமிழர்.. மலேசியத் தமிழர்.. மற்றும் ....... ........ ....... தமிழர்கள் என்று பிரிஞ்சிருப்பது அல்லது பிரிக்கப்பட்டிருப்பது.. காணாதென்று.

இவ்வாறு செல்லுமிடமெல்லாம் சுமந்து கொண்டு திரிந்து புலம்பெயர் நாடுகளில் தம்பதிகள் அதிமாக பிரிய காரணம் என்னவென்று ஒரு தலைப்பை போட்டு விவாதித்துக்கொண்டிருக்கலா

ஈழவன், குறும் படம் நன்றாக உள்ளது.

என்ரை மனுசியும் இப்படி இருந்திட்டால்......... :wub:

பாத்து பழகச்சொல்லி மனுசிக்கு காட்டவேணும்.... :blink:

நன்றி....

ஏன் குறும்படத்தில் பெண் செய்யும் வேலையை நீங்கள் செய்கின்றீர்கள் போல இருக்கு இப்படி ஆதங்கபடுகின்றீர்கள் :huh:

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்று ரீதியாக தொடர்ந்த தவறுகளில் இருந்து மீள முடியாமல் இருப்பதற்கு காரணமானவற்றை நீக்குவது வரலாற்றை அழிப்பதாகாது. இனத்தை கூறுபோட்டு நிற்கும் சாதியப்பழக்கங்களை நீக்குவதன் ஊடாக இனம் இனத்தேசியம் வலுப்பெறும் அது ஒரு புதிய வரலாற்றை படைக்க உதவும். சிங்கள பேரினவாதத்தை எதிர்க்க பலமாக இருக்கும். மத இறுக்கங்கள், பிரதேசவாத பிளவுகள் இணக்கப்பாடு காணமுடியாமைக்கு பழமைபேணுதலில் ஊறிப்போன மனதின் இருப்பு நிலை பிரதான காரணம் என்றால் அது மிகையில்லை. இந்த நிலையில் இருந்து மாற்றங்களை சந்திப்பது தான் சிங்கள அழிவில் இருந்து காப்பாற்றும் தவிர இது சிங்கள பேரின வாத இன அழிப்பு கொள்கைகளுக்கு நிகரானதாக சொல்வது பொருத்தமற்றது.

சாதியம் காத்தல் என்பதுக்கும் பழமை மிகு இனத்துவ விழுமியங்களை பண்பாட்டுக் கோலங்களை கலாசார வடிவங்களை.. வரலாற்று நிகழ்வுகளை காத்தல் என்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை உணர்ந்துதான் இங்கு கருத்தெழுதுகிறீர்களா என்பதை முதலில் தெளிவு படுத்திக் கொள்ளுங்கள். சாதியம் என்பது யாழ்ப்பாணத்தானுக்கு சொந்தமானதும் அல்ல.

தமிழர்கள் மத்தியில் எங்கில்லை பிரிவினைகள்..??! கருணாவும் டக்கிளசும்.. பிரிந்ததும் சாதியாலா..??! ஏன் நீங்கள் கனடாத் தமிழன்.. அவுஸ்திரேலியன் தமிழன் என்று அகதித் தமிழனை மறைக்க முனைகிறீங்களே.. இவையெல்லாம் என்ன புதுமைவாதத்தின்.. திரட்சிகளா..???! அதற்கும் யாழ்ப்பாணத்தானின் பழமைவாதம் தான் காரணமா..??!

தமிழன் தன்னைத் தமிழனா அடையாளப்படுத்த வெட்கப்படுவதன் வெளிப்பாடுகள் தான் இவை. தமிழ் மொழியைக் கற்பதைக் கூட தகுதிக் குறைவாக எண்ணும் தமிழர்கள்... யாழ்ப்பாணத்தானை.. பழமைவாதி என்று சொல்லிக் கொண்டிருப்பதன் மூலம் என்ன புதுமையை சமைத்தீர்கள் சொல்லுங்கள் பார்க்கலாம்..??!

யாழ்ப்பாணத்தானின் பழமை பேணலும்.. வாதமும் தான் தமிழினத்துக்கு ஒரு நாடு ஈழத்தில் இருக்குது என்பதையாவது சொல்ல முனைந்தது. அதன் பின்னணியில் எழுந்ததுதான் தமிழீழ விடுதலைப் போராட்டமே. இன்றும் தமிழர்களைப் பிளவுபடுத்த பிரதேசவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் சக்திகளுக்கு தீனி போடவும்.. சிங்களப் பேரினவாதிகளின் இன அழிப்புக்கு ஒத்துழைப்பதும் தான்.. இந்த "யாழ்ப்பாணத்தான்" "பழமைவாதி" என்ற இந்தக் கருத்துருவாக்கத்துக்கான நோக்கமோ என்று சந்தேகிக்கச் செய்கிறது.

ஏன் ஈழத்தமிழன் ஒரு பழமைவாதி என்று போட்டிருக்கலாம் தலைப்பை. கிழக்கு மக்கள் பழமை பேணவில்லையா..??! அங்கு சாதியில்லையா..??! கொழும்பு வாழ் தமிழர்களிடம் வர்க்க பேதமில்லையா..??! மலையகத்தமிழர்களிடம் வர்க்க பேதம் இல்லையா..??! ஏன் தமிழகத்தில் இல்லையா..??! இருந்தும் வர்க்க பேத அடிப்படையில் யாழ்ப்பாணத்தான் என்ற விளிப்பும்.. பழமைவாதம் பேசுவதும் அப்படி தமிழீழத் தமிழர்கள் வேறு பிரித்து இனங்காட்டப்படுவதற்கும் உள்ள தேவை என்ன...??! நோக்கம் என்ன..???! :blink::huh:

எல்லாவற்றுக்கும் மேலாக சிங்களம் எத்தனை அழிவுகளை செய்தாலும் அதை பொருட்படுத்தாது புலிகளை எதிர்க்கும் ஈழத்தமிழர்களும் இருக்கின்றார்கள். இவர்களிடமுன் பழமை; பேண்வாதத்தில் ஊறிய கருத்து நிலை இல்லை என்பதற்கில்லை. இவ்வாறு குறிப்பிட்டுள்ளேன் என்பதையும் கவனிக்கவும்
.

இனம் இனத்தினது தேசிய வாதம் என்பது மதத்தால் சாதியால் வர்க்கத்தால்பிரதேச வாதத்தால் பிளவுபட்டு வலுவிளந்து காட்சி தருவதும் அதை வலுவாக்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு அனுசரிப்பும் ஒத்துளைப்பும் என்பதை ஒருங்கிணைந்து கொடுக்க முடியாதவர்களாக ஈழத்தமிழ் சமூதாயம் உள்ளதென்றால் அதற்கு காரணங்கள் பழமைபேணும் மனநிலையின் இறுக்கம் பிரதான காரணம் என்ற உண்மை எமக்கு எப்போதும் உறைக்கப்போவதில்லை.

தலைப்பு யாழ்பாணதமிழர்கள் பழமைவாதிகளா என்பதாகும்

பழமை பேண்வாதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை. அவ்வாறானவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். ஆனால் ஒட்டு மொத்த யாழ்பாண தமிழர்களையும் பழமைபேண் வாதிகள் என்பதில் அடக்க முடியாது.

இவ்வாறுதான் நான் முதலில் பதிந்த கருத்து ஆரம்பிக்கின்றதுதவிர யாழ்பாணம் பற்றிய நூலில் இருந்து ஒரு அறிமுக குறிப்பை தலைப்புக்கு ஏற்ற வகையில் இணைத்திருந்தேன்.எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எல்லை மீறி கருத்தெழுதவும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

.

தலைப்பு யாழ்பாணதமிழர்கள் பழமைவாதிகளா என்பதாகும்

இவ்வாறுதான் நான் முதலில் பதிந்த கருத்து ஆரம்பிக்கின்றதுதவிர யாழ்பாணம் பற்றிய நூலில் இருந்து ஒரு அறிமுக குறிப்பை தலைப்புக்கு ஏற்ற வகையில் இணைத்திருந்தேன்.எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எல்லை மீறி கருத்தெழுதவும் இல்லை.

தலைப்பில் யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பது தான் உள்ளது. யாழ்ப்பாணத் தமிழர்கள் என்பது மட்டும் ஏன் முக்கியப்படனும். ஈழத்தமிழரில் ஒரு பகுதியினர் தீவிர பழமைவாதிகளா என்று போட்டிருக்கலாம் தானே..????????!

தலைப்பு யாழ்ப்பாணத்தமிழர் என்பதைத்தான் இன்னமும் சுட்டிக்கொண்டு நிற்கிறது. அதற்கு உள்ள.. எல்லா யாழ்ப்பாணத் தமிழரும் அல்ல.. என்ற கருத்தை சாதுவாக முன் வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அதை நிராகரித்தே விட்டு எனது பதிலை அளித்தேன். பிரதேச அடிப்படையில் தமிழ் மக்களை பிரிப்பதை நான் ஏற்கவில்லை. பிரதேச அடிப்படையில் மக்கள் பிரிக்கப்பட காலனித்துவமே காரணமாக அமைந்தது. அதற்கும் தமிழர்களின் பாரம்பரியத்துக்கும் பழமைக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால் முன் வையுங்கள் ஆதாரங்களோடு.

ஒன்றில் தலைப்பை மாற்றுங்கள்.. அல்லது இந்த தலைப்பு பிரதேசவாத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதை ஏற்கிறதா இல்லையா என்பதை தெளிவுறச் சொல்லிவிட்டு.. உங்கள் கருத்தை முன்வையுங்கள்.. இன்றேல்.. இது சிங்களப் பேரினவாதிகளோடு இணைந்து பிரதேசவாதத்தை தூண்டிவிட்டு ஈழத்தமிழர்களை பிளவுபடுத்தி பலவீனப்படுத்தும் நோக்கினது என்பதாகத்தான் கொள்ளப்படும்.

காரணம் பழமைவாதம் என்பது ஒரு பிரதேசத்துக்குள் மட்டும் பொதிந்துகிடக்கல்ல. உலகம் பூராவும் இருக்கு. ஈழத்தில் பல மட்டங்களிலும் இருக்கு. சிங்களவர் மத்தியிலும் இருக்கு. அப்படி இருக்க.. யாழ்ப்பாணத் தமிழன் என்பது மட்டும் ஏன் முன்னுக்கு வருகுது..???! அதன் நோக்கம் என்ன.. தேவையென்ன..??! ஏனையவை புறக்கணிக்கப்பட காரணம் என்ன..??! :huh::blink:

Edited by nedukkalapoovan

சரி ஈழ தமிழர் எல்லாம் உங்கட பழமைவாதத்தை விட வேணும்...! அதாலை உந்த இனப்பிரச்சினையை கூட தீர்க்க முடியும் எண்டால் பாத்து கொள்ளுங்கோவன்...

முதலிலை கல்தோண்றி மண்தோண்ற முன் தோண்றிய தமிழ் எண்டு தமிழை தூக்கி பிடிக்கிறதை நிப்பாட்டிபோட்டு சிங்களம் படியுங்கோ பிள்ளையளுக்கு படிப்பீயுங்கோ...! அடுத்ததாக சேலை யை கம்பாயமாக கட்ட பழகுங்கோ... கலாச்சாரம் எண்ட வகையிலை கண்டிய நடனம் பழகவேணும்....

முக்கியமாக இந்து கோயில்களையும் பள்ளிவாசல்களையும் இடிச்சு போட்டு பண்சலை கட்டுங்கோ... புத்த மதத்துக்கு மாறுங்கோ...

உலக கால ஒழுங்கிலை மாற்றம் என்பது வர வேண்டும்தானே...

இப்படியே எல்லாரும் உங்கடை பழமையையும் அதை பேணுறதையும் விட்டீங்கள் எண்டால் இலங்கை எண்ட நாட்டுக்கை தமிழர் எல்லாம் சிங்களவனாகி ஒரே இனமாக வாழலாம்...! பிரச்சினையும் இலகுவாய் தீர்ந்து விடும்....

மாறுகிறது எண்டு முடிவு எடுத்தாப்பிறகு கொஞ்சமாக மாறினால் என்ன ஒரேயடியாக மாறினால் என்ன எல்லாம் ஒண்றுதான்....!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தார் பழமைவாதிகளா என்று கேட்பது கூட ஒரு பிரதேசவாதம் தான்.

யாழ்ப்பாணத்தார் பழமைவாதிகளா என்று கேட்பது கூட ஒரு பிரதேசவாதம் தான்.

பிரதேச வாதத்தை தப்பாக சொல்லாதீங்கள்... அதுகூட நல்லதுதான்...! தன் வீட்டில்((குடும்பத்தில்) அன்பு இல்லாத ஒருவர், தனது ஊரை நேசிப்பது என்பது நடவாத காரியம்... ( அப்படி நேசிப்பதாக சொல்வது வெறும் நடிப்பு) தனது குடும்பம் பின்னர் ஊர் பிறகு பிரதேசம், அதன் பிறகுதான் அவன் தேசியவாதி நாட்டு பற்றாளன் எல்லாம்...!

ஆனால் இந்த பிரதேச வாதத்தில் இல்லை பிரதேசத்தை நேசிப்பவன் தனது பிரதேசம் எல்லா பிரதேசத்திலும் முதன்மையானதாக இருக்க வேண்டும் எண்று சொன்னால் அது பிரதேச வாதம்... ஆனால் எனது பிரதேசம் மட்டும்தான் ((நண்றாக) இருக்க வேண்டும் என்பது தான் பிழையானது... கருணா சொன்ன பிரதேசவாதம் என்பது உண்மையில் பிரதேசவாதம் கிடையாது...! அது அடக்கு முறை, சீரளிப்பு

பிரதேச வாதம் என்பதுக்கும் மேலை இன்னும் ஒண்று மிக கேவலமானதாக இருக்கிறது... அது பழமையை எதிர்க்கிறோம் என்னும் கலாச்சார சீரளிவுக்கு இட்டு செல்வது...! அதை புதுமை விரும்பிகள் எண்டும் சொல்ல முடியும்....

இப்ப ஈழத்தில்(யாழ்ப்பானத்தில்) சிங்களவன் செய்ய விரும்புவதை இந்த புதுமை விரும்பிகள் ஊக்குவிப்பார்கள், ஊக்குவிக்கிறார்கள்... யாழ்ப்பாணம் என்பது ஈழத்தின் கலாச்சார நகரமாம்... இங்கு கலாச்சாரதை சீரளிச்சு இளையோரை தறிகெட வைத்தால் , தனித்துவம் இளந்து போராட்ட குணம் மாறி, எச்சில் இலைக்காய் கையேந்துற நிலைக்கு தள்ளி விடலாம் எண்று சிங்களவன் நினைக்கிறான்...! அதுக்கு ஆதரவு கொடுப்ப்பதுதான் இந்த புதுமைபுகுத்தல்....!

Edited by தயா

சோறு சாப்பிடுவேன் என்பது பழமையானது. சோறுதான் சாப்பிடுவேன் என்பது பழமைவாதம். சோறு வேண்டாம் பீட்ஸ்ஸா வேண்டும் என்பது புதுமை.

யாழ்ப்பாணத்தாருக்கு எது வேணும் எண்டதை முடிவு எடுத்து கொள்ளுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணீயம்.தலித்தீயம்.பெரியார

அதுதானே.. கனநாளைக்கு பேந்து சாத்திரியார் எனக்கு ஏத்தமாதிரி கருத்து எழுதியிருக்காரு.. :unsure: மூடநம்பிக்கைக்கும் பழமைவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும்வரைக்கும் யாழ்ப்பாணத்தானும் குழப்புவான்.. அதுவும் நல்லதுதானே?! :rolleyes:

  • தொடங்கியவர்

*************

Edited by harikalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.