Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள்.

அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள்.

அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள்.

ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான்.

யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும்.

ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது.

ஒவ்வெரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது.

அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம்.

முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார்.

https://thinakkural.lk/article/313974

  • கருத்துக்கள உறவுகள்

சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள் தான் நிற்கிறார். 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி இப்படி சுத்தி இங்கே வந்து நிற்கிறார்.

இது நோக்கம் போல தெரியவில்லை.

2 hours ago, RishiK said:

சுத்திச்சுத்தி சுப்பற்றை கொல்லைக்குள் தான் நிற்கிறார். 

ஏதாவது தடக்கினால் தானே அவரும் தலையை நிமிர்த்தலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன், கீதநாத் காசிலிங்கம், டக்ளஸ் இவர்கள் மூவரும் தினமும் ஒரு பரபரப்பான அறிக்கை விடுவதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது .................... 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ரசோதரன் said:

சுமந்திரன், கீதநாத் காசிலிங்கம், டக்ளஸ் இவர்கள் மூவரும் தினமும் ஒரு பரபரப்பான அறிக்கை விடுவதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது .................... 

மூன்று பெரிய கட்சிகள் ...உள்ளூரட்சி தேர்தலுக்கு..இந்தத் தவழுகை தவழ வேண்டியிருக்கு,....

  • கருத்துக்கள உறவுகள்

IMG-2972.jpg

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன

இவ்வாறான சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக இருக்கின்றது. பின் தங்கிய மாவட்டமாகிய கிளிநெச்சியில் சில சமூகவிரோதிகளின் சிபாரிசின் அடிப்படையில் 16 பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமூகவிரோதிகள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இச் சமுகவிரோதிகளை அநுர அரசு காப்பாற்ற முனைந்தால் தமிழ் மக்களின் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் ஒருசில அரசியல்வாதிகள் அநுர அதிபரான மறுநாளே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் காலில்  விழாக்குறையகச் சந்தித்தது இங்கு குறிப்பிடப்படவேண்டியது அவசியமாகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

சுமந்திரன், கீதநாத் காசிலிங்கம், டக்ளஸ் இவர்கள் மூவரும் தினமும் ஒரு பரபரப்பான அறிக்கை விடுவதாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகின்றது .................... 

இந்த வரிசையில் 

அமெரிக்காவிலிருந்தும்

எலான் மாஸ்கையும் ராமசாமியையும் சேர்க்க வேண்டுகிறேன்.

1 minute ago, வாலி said:

இவ்வாறான சந்தேகம் மக்கள் மத்தியில் வலுவாக இருக்கின்றது. பின் தங்கிய மாவட்டமாகிய கிளிநெச்சியில் சில சமூகவிரோதிகளின் சிபாரிசின் அடிப்படையில் 16 பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சமூகவிரோதிகள் மக்களுக்கு அடையாளம் காட்டப்படவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். இச் சமுகவிரோதிகளை அநுர அரசு காப்பாற்ற முனைந்தால் தமிழ் மக்களின் ஆதரவை இழக்கவேண்டியிருக்கும். தம்மைப் பாதுகாக்கும் நோக்கில் ஒருசில அரசியல்வாதிகள் அநுர அதிபரான மறுநாளே விழுந்தடித்துக்கொண்டு ஓடிப்போய் காலில்  விழாக்குறையகச் சந்தித்தது இங்கு குறிப்பிடப்படவேண்டியது அவசியமாகின்றது!

வாலி சம்பந்தமில்லாத அனுராவை கேட்பதைவிட 

ரணிலிடமே நேரடியாக கேட்கலாமே?

சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் தான் நல்ல உறவு உள்ளதே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்த வரிசையில் 

அமெரிக்காவிலிருந்தும்

எலான் மாஸ்கையும் ராமசாமியையும் சேர்க்க வேண்டுகிறேன்.

🤣............

அடுத்த மாதத்திலிருந்து எங்களின் தலைநகரில் முன்னுக்கு மடிப்புக் கலையாத, ஆனால் பின்பக்கம் தாறுமாறாகக் கிழிந்த சட்டைகளுடன் நிற்கப் போகின்றார்கள் இந்த இருவரும், இன்னும் சிலரும்.............

ஒரு நாலு வருடங்கள் இவர்களின் கண்களில் படாமல் அப்படியே மேசைக்கு கீழேயே குனிந்து இருக்கவேண்டும்...............🤣.

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.