Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விகாரைகளில் பணியில் இருந்த இராணுவத்தினர் நீக்கம்: பொதுஜன பெரமுன கட்சி கண்டனம்

December 31, 2024

 

விகாரைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை தற்போதைய அரசாங்கம் நீக்கியுள்ளது.

இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பௌத்த விகாரைகளில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த இராணுவத்தினரை அங்கிருந்து நீக்கியது தவறான நடவடிக்கையாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் விமர்சித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ‘இராணுவத்தினரை ஏன் நீக்க வேண்டும்? எவரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.ilakku.org/military-personnel-on-duty-at-temples-removed/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

பத்தரமுல்லையில் உள்ள பொதுஜன பெரமுண கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினர் நாட்டை காப்பாற்றுவதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர் ..அவ்ர்களின் தொழில் அது ..
பிக்குகள்,பிக்குனிகள் விகாரைளை நிர்மாணிப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர்....
இதில் என்ன சந்தேகம் ...காரியவம்சத்துக்கு  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இதில் என்ன சந்தேகம் ...காரியவம்சத்துக்கு

காரிய வம்சத்தின் சந்தேகம் அதுவல்ல, இப்போ, ஊழல்வாதிகளை விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். ஒவ்வொருவராக சுழி இழுக்கப்போகுது. இவர்கள் எல்லோரும் சிக்குவது உண்மை. அதற்கிடையில் எங்கே கொழுத்தினால் பத்தும் என்று ஒவ்வொன்றாக பரீட்சித்துப்பார்க்கிறார்கள். சேரவும் முடியவில்லை, தப்பவும் முடியவில்லை இன்று அரசியல்வாதிகள், அரச உத்தியோகத்தர்கள் நிலைமை. அவர்கள் தம்மை பாதுகாப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்கள், செய்கிறார்கள். முன் போல் வீதிகளில் இறங்கி கர்ச்சிக்க முடியவில்லை, அவர்கள் போட்ட முடிச்சு இன்னும் இருக்கு. எப்படியாவது இந்த அரசை கலைத்து தம்மை காப்பாற்ற வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று ஆளாளாளுக்கு கண்சிமிட்டி செய்த வேலையெல்லாம் செய்து ஏமாற்ற முடியாது. நல்லவேளை! இந்த கூத்தாடிகளை அனுர தனது ஆட்சியில் சேர்த்துக்கொள்ளவில்லை. ஒருபுறம் எதிர்க்கிறார்கள், மறுபுறம் சேர்த்துக்கொள்ள மாட்டாரா என ஏங்குகிறார்கள். அங்கு மட்டுமல்ல எங்கள் பக்கமுந்தான். அனுராவுக்கு சட்ட உதவி செய்யவே தவம் கிடக்கிறார்கள். தன் பிரச்சனையை தீர்க்க வழி தெரியவில்லை அதற்குள் அனுராவுக்கு உதவிசெய்யப்போகிறேன் என்று தவம் கிடக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

இராணுவத்தினர் நாட்டை காப்பாற்றுவதற்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளனர் ..அவ்ர்களின் தொழில் அது ..
 

ஊருக்கு போனபோது....கனடாவில் பிறந்த பெறாமக்களும் வந்தாளவை..யாழ்ப்பாணம் சுற்றிப்பார்க்க கூகிளில்தேட ..ஒரே பவுத்த விகாரைதான் வருகுது..முதலாவது மாதகல் சங்கமித்தை வந்த இடத்துக்கு போனால் ..ஆமிதான் கூட நிக்குது..பெரூகு ஒரு பிக்கு முத்தம் கூட்டுகிறார்...அடுத்து சுன்னாகம் பனங்காணிக்கை பாத்தி போட்டமாதிரி 6-7  கும்பம் இருந்தது..மரத்துக்கு கீழை ஒரு சின்ன புத்தரும் இருக்கிறார்...அங்கையும் ஆமிதான் காவல்..ஒரு புக்கு முகம்கழுவி சுவாமி கும்பிடுகிறார்..  .. இப்படிப்பார்த்தால்...யாழ்ப்பாணத்தில் 3 லட்சம் ஆமி வேணும்தானே...ஒரு நப்பாசையிலை ஒர்ரு ஆமியைகேட்டன் ஒரு செல்பி எடுப்பமோவென்று...தூக்கினானெ துவக்கை ..கிட்ட வராதை போவென்று...அதுக்குபின்னர் பெட்டையள்  நோ கூகிள் சேச்..

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

மரத்துக்கு கீழை ஒரு சின்ன புத்தரும் இருக்கிறார்...அங்கையும் ஆமிதான் காவல்.

செய்யிறதெல்லாம் அடாத்து, அபகரிப்பு. அதற்கு காவல் இராணுவம் இருக்கத்தான் வேண்டும். அவர்கள் செய்வது பயங்கரவாதம், அதை கேள்வி கேட்ப்பவர்கள் பயங்கரவாதிகள். ஆமியை வைத்து பறித்து, ஊழல் அரசியல் செய்தவர்கள் கூக்குரலிடத்தான் செய்வார்கள். அப்பாவி கிராம இளைஞர்களை பலிகொடுத்து அரசியல் செய்வது எவ்வளவு சுலபம். 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப்பகுதி விகாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு தேவைப்பட்டமா? 

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2024 at 11:18, கிருபன் said:

இராணுவத்தினர் விகாரைகளின் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் விகாரைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 

3 hours ago, RishiK said:

சிங்களப்பகுதி விகாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு தேவைப்பட்டமா? 

விகாரைகளில் இராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் அல்ல,
விகாரை கட்டும் பணிகளில் ஈடுபட்டதற்காகவே, அவர்கள் நீக்கப் பட்டதாக செய்தியில் உள்ளது.
இனி... விகாரை கட்டும் பணிகளிலும், தொய்வு ஏற்படப் போகுது. 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் பிரதேசங்களில் அடாத்தாக, இரகசியமாக விகாரைகள் கட்டுவது இராணுவம். அதை நம்ம அனுரா கண்டு பிடித்து, இராணுவத்தையும்  பிக்குகளையும் வைத்து, அரசியல் இனவாதிகள் செய்யும் காணி அபகரிப்பை கண்டு பிடித்துள்ளார். இனி இதன் சூத்திரதாரிகள், அனுமதி வழங்கியோர் வசமாக மாட்டப்படுவர். ஒன்றை தொட்டால் தலையாரி தானா வந்து மாட்டுவார். எல்லா பக்கமும் ஒரே ஆட்கள், தங்கள் ஊழலை மறைத்து திசை திருப்ப கையிலெடுத்த ஆயுதம் தமிழரை சுரண்டுவது.

2 hours ago, RishiK said:

சிங்களப்பகுதி விகாரைகளுக்கும் இராணுவப் பாதுகாப்பு தேவைப்பட்டமா? 

சிங்களப்பகுதிகளில் தனியார் காணிகளில் அடாத்தாக விகாரைகள் கட்டப்படுவதில்லை,  அதனால் அங்கு இராணுவம் தேவையில்லை. இங்கு அடாத்தாக மக்களின் காணிகளை அபகரிப்பது இராணுவம், விகாரை கட்டுவது இராணுவம், அதை சொந்தமக்களிடம் இருந்து பாதுகாப்பது இராணுவம். விகாரைக்கு ஏன் இராணுவம் தேவைப்படுகிறது? அவர்கள் இருக்க வேண்டியது இராணுவ முகாம்களில்.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.