Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளில் போட்டியிட்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த சுமார் 60 இற்கும் மேற்பட்டோர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்து கட்சி மட்டத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்ற நிலையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் கடந்த காலங்களில் மாகாண சபை முதலமைச்சர் பதவிகளை வகித்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் திருத்தச் சட்டவரைவு வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள நிலையில் ,சட்ட வரைவினை விடயதானத்துக்கு பொறுப்பான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் நடத்துவது அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில் குறித்த திருத்தச் சட்டமூலத்தை வெகுவிரைவாக நிறைவேற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தியதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல் குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் சட்ட சிக்கலால் தேர்தலை நடத்துவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு எதிர்வரும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் ; மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகளில் 60 இற்கும் அதிகமானோர் உத்தேச மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட கட்சி மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளூராட்சிமன்றத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு கட்சிகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

சுமந்திரனும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக வர முயற்சி செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக வர முயற்சி செய்ய வேண்டும்.

சுமந்திரனுக்கு… மக்கள் வாக்குப் போட முன்வர வேணுமே. 😂
சுமந்திரனின் பெயரையும், திருட்டு முழியையும் பார்த்தவுடனேயே மக்கள்… காலில் உள்ளதை, கழட்டி அடிக்க விரும்புகின்றார்கள். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுமந்திரனுக்கு… மக்கள் வாக்குப் போட முன்வர வேணுமே. 😂
சுமந்திரனின் பெயரையும், திருட்டு முழியையும் பார்த்தவுடனேயே மக்கள்… காலில் உள்ளதை, கழட்டி அடிக்க விரும்புகின்றார்கள். 🤣

இப்போ பாதுகாப்பும் இல்லை.கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டும்.

இருந்தாலும் அடி வாங்கினால் வாக்குகள் கூடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

இப்போ பாதுகாப்பும் இல்லை.கொஞ்சம் யோசிக்கத் தான் வேண்டும்.

இருந்தாலும் அடி வாங்கினால் வாக்குகள் கூடலாம்.

அவர் சிறியரை இந்தக்கிடங்கில் விழுதத்தத்தான் ஓடித்திரியிறார்...உதவிக்கு சிவஞானமும் சேர்ந்திருக்கு.

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சுமந்திரனும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக வர முயற்சி செய்ய வேண்டும்.

சுமந்திரன் gentleman சயந்தனைத்தான் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிப்பார். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.