Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

பெரிய கண்டு பிடிப்புத்தான்.இதற்கு உங்களுக்கு நோபல் பரிசுக்கு திமுக சிபாரிசு செய்தாலும் செய்வார்கள். நாங்கள் வாத்து மடையர்களாகவே இவநுந்து விட்டுப் போகிறோம். அதனால் பெரும மேதாவிகளான உங்களுக்கு எந்த நட்டமும் வந்து விடப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான்சீமானை ஆதரிப்பது தற்போதுள்ள தலைவர்களில்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துவரும் காரணத்தினால் மட்டுமே. அதிலிருந்து அவர் விலகினால் அவரை ஆதரிப்பதை நிறுத்தி விடுவேன்.

நீங்கள் மேலே உள்ள இரண்டு வகையினரில் முதல் வகையினருக்குள் வருவீர்கள். சீமானும் அந்த வகை தான் 

  • Replies 220
  • Views 9.6k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • பகிடி
    பகிடி

    உண்மை! இது அரைகுறைகளுக்கான காலம்.  சீமானை ஆதரிக்கும் ஈழத்தமிழர் பின்வரும் வகைக்குள் வருவர்  1) ஆழ்ந்த சிந்தனைகளும், பக்குவமான பேச்சுக்களும் இவர்களிடமோ அல்லது இவர்கள் சார்ந்த குடும்ப அங்

  • விசுகு
    விசுகு

    இங்கே சூசை அண்ணாவின் பேச்சு பற்றி பேசப்படுவதால்.... அது உண்மை பொய் என்பதற்கப்பால்.... அது ஒரு அபயக்குரல். அந்த செக்கன்கள் மிகவும் குறுகியவை. அந்த அபலக்குரலை நாம் ஒரு பொறுப்பு ஒப்படைப்பாக எடு

  • பகிடி
    பகிடி

    எந்தத் தலைவரையும்/ நபரையும் அவரவர் வாழ்ந்த காலத்தில் இருந்த மற்றவர்களோடும், அப்போது நடந்த சம்பவங்களோடும், சமூக பிரச்சனைகளோடும்  சேர்த்தே அணுக வேண்டும்.  ஈவேரா என்ற நபர் சொன்ன எழுதிய விடயங்களில் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, island said:

நான. கூறியது ஜதார்ததமான பதில் தானே!  ஈழத்தமிழர் போராட்டத்தை மூன்று காலப்குதியாக  பிரித்தால், ஒவ்வொரு காலப்பகுதி இறுதியிலும் நாம் முன்பிருந்ததை விட அரசியல் ரீதியில் பின்னடைவில் இருந்தது வெளிப்படையான உண்மை.

முதலாவது,  ஆயுத போராடத்திற்கு முன்பிருந்த காலப்பகுதி. அதன் இறுதிக்காலம் ஆரம்பகாலதில் இருந்த நிலையை  விட  பின்தங்கியது.  சிங்கள இனவாத அரசியல்வாதிகளை முறியடித்து அரசியல் ரீதியில் எமது போராட்டதை பலம் பெற தக்க நிலை இருந்தும்  அதை செய்யாமல் பதவி சுகத்தை அனுபவிக்க  மக்களை உசுப்பேற்றும் வாக்கு அரசியலையே அன்று செய்து அதன் பலனாக  இறுதியில்  பின்னடைவை கண்டனர். 

அதன் பின்னர் ஆயுதப்போரளிகள் மற்றயவர்களை  முற்றாக தமது  இராணுவ பலத்தை உபயோகித்து  தடை  செய்து போராட்டத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்ததார்கள். அதன் இறுதியில் முன்னயதை விட மிக மோசமான பலவீனமான அரசியல் நிலையை அடைந்தோம். இராணுவதோல்வியை விடுங்கள். அரசியல் ரீதியில் அக்காலப்பகுதியில் ஶ்ரீலங்கா அரசிடம் படு தோல்வியடைந்தோம். ஶ்ரீலங்கா அரசின் பிரச்சாரங்களை முறியடிக்கும் வல்லமை இருந்தும் அதை செய்யாமல் அவர்களின் பிரச்சாரங்களுக்கு வலு சேர்ககும் வேலைகளையே தொடர்சசியாக செய்து வந்தார்கள்.  இறுதியில் அரசியல் ரீதியில் zero அல்ல மைனஸ் நிலையை தமிழர் அரசியல் அடைந்தது. 

அடுத்தது ஆயுத போராட்டத்திற்கு பின்னரான காலப்பகுதி இப்போதும் தாயகத்தில் சரி புலம்பெயர் நாடுகளில் சரி  தொடர்சியாக கோமாளிகளாகவே அரசியல் கட்சிகளும், புலம் பெயர் அமைப்புகளும் அரசியல் செய்கிறார்கள்.     

அதாவது ஒட்டு மொத்தமாக  கடந்த 75 வருடங்களாக தமிழர் அரசியல்  பின்னடைவை கண்டு வருவது  ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த வெள்ளிடை மலையாக இருக்கும் போது இப்படியான அபத்தமான கேள்விகளால் எந்த பலனும் இல்லை.  

இந்த பின்னடைவுகளை உங்களாலோ என்னாலோ இந்த கள உறுப்பினர்களாலோ மீட்க முடியாது. அந்தளவுக்கு பழைய அரசியல் குட்டைக்குள் ஊறிய மட்டைகளாக நாம் உள்ளோம். 

 இனி எதிர்காலத்திலாவது அறிவு பூர்வமான அரசியலாளர்கள் பலர் உருவானால் அது நடக்கலாம்.   ஆனால், நிச்சயமாக எனக்கோ உங்களுக்கோ அது பார்ககும் பாக்கியம் கிடைக்காது என்பது கவலை தான்.  எனவே நாம் இருவரும் செய்ய வேண்டியது  enjoy the life you have till the end. 😁

உள் அரசியல் தெரியாமல் வெளி அரசியலை பார்த்து எழுதுகின்றீர்கள். :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உள் அரசியல் தெரியாமல் வெளி அரசியலை பார்த்து எழுதுகின்றீர்கள். :cool:

சிங்களம் கையில் ஏந்தி களைத்து போய் விட்டது. நீங்கள் இன்னும் அதை வாங்காமல் இருக்கும் ஆவேசம் அவருக்கு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, island said:

அப்படியானால் உங்கள் தலைவர் சீமான்

என் தலைவர் சீமான் என எங்கேயாவது எழுதியிருக்கின்றானா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, island said:

 1982 ல் பிரபா- உமா சென்னையில் கைது செய்யப்பட்டபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்க ஜே. ஆர் கேட்ட போது அதை கடுமையாக பெரியாரிஸ்டுகள் எதிர்தது போராடியது ஏன்? 

சீமான் போற்றும் பச்சை தமிழர்  மபொசி சென்னை வந்த இந்திய இராணுவத்தை வரவேற்றது ஏன்?   

ராஜீவ் கொலையின் பின்னர் பெரியார் திடல் சோதனையிடப்பட்டது  ஏன்?  பெரியாரிஸ்டான பேரறிவாளன் தனது வாழ்ககை முழுவதையும் சிறையில் கழித்தது ஏன்? 

பிரபாகரனை கொண்டு வந்து இந்தியாவில்  தண்டனை கொடுக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை ஈழத்தாய் என்று சீமான் கொண்டியது ஏன்?  

அதை அன்று சபாநயகராக இருந்து நிறைவேற்றி தீர்மானத்தில் கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பிய சீமானின் மாமனார் காளிமுத்துவை சீமான் கண்டிக்காதது ஏன்? கண்டித்தால்  வீட்டில் சோறு கிடைக்காது என்பதாலா? 

அவர்களின் உதவிகளை ஈழத்தவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை, விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த வகையில் அவர்கள் பெரியாரை மனதில் வைத்து ஈழத்தமிழருக்கு உதவிகள்,தியாகங்கள் செய்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் மனதில் இருந்தது தமிழ் என்ற உணர்வு மட்டுமே.

மீண்டுமொருமுறை எழுதுகின்றேன். நான் சீமானை ஆதரிப்பது அவரின் ஈழ அரசியலை வைத்து அல்ல.

ஜெயலலிதா புலிகளை எதிர்த்தாரே தவிர ஈழம் எனும் மண் கிடைப்பதை எதிர்க்கவில்லை.தன் அரசியலுக்காக புலிகளை எதிர்த்திருப்பார் என நான் நினைப்பதுண்டு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, கிருபன் said:

பெரியாருக்கு எதிராக புலம்புவர்களை கண்டால்… வீடியோ வெளியிட்டு சத்யராஜ் கண்டனம்!

பெரியார் தாசர் சத்தியராஜ் அவர்களும் ஈழத்தமிழர் அபிமானிதான். அதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் இல்லை. அவருக்கு கடமைப்பட்டுள்ளோம்.

ஆனால் அவர் நடிக்கும் படங்களுக்கு ஈழத்தமிழ் எனும் பிரச்சனை வருமாயின் அந்த சிந்தனையும்,ஆதரவையும் தூக்கியெறிய பின் நிற்க மாட்டார்.

கன்னடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரமாட்டான்  வெட்டுவன் புடுங்குவன் என கர்ஜித்த இவர்.....சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தை திரையிட விடமாட்டோம் என்று கன்னடர் போராட்டம் நடத்திய போது  தான் பேசியது தவறு என மன்னிப்பு கேட்டவர்தான் இந்த திராவிட தாசர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, island said:

  நீங்கள் கூறுவது   இராணுவ பலத்துடன் மட்டும்  செய்யப்பட்ட தற்காலிக    சாதனைகளை மட்டுமே . சர்வதேச அரசியலில்  பலம் பெறாமல் எதை செய்தாலும் அது இறுதியில் பொல பொல என்று உதிர்ந்துவிடும் என்பதே இன்றைய உலக ஜதார்ததம்.  மக்களுக்கு நிரந்தரமாக எந்த பலனும் இல்லை.  அதை புரிந்து கொள்ளாமல் விட்டால் அழிவுகளும் அவலங்களும் மட்டுமே எமக்கு  மிஞ்சி நிற்கும்.  அது தான் எமக்கு நடந்தது. 

இராணுவ பலம் இருந்ததினால்தான் பேச்சுவார்த்தைக்கும் வந்தார்கள். அமைதி பிரகடனங்களும் செய்தார்கள்.
அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆயுத போராளி அல்ல. அவர் ஒரு அரசியல் போராளி. விடுதலைப்புலிகள் சார்பாக அரசியல் செய்தவர். ஆயுத போராட்டமும் அரசியல் போராட்டத்தையும் சம காலத்தில் நடத்தி காட்டியவர்கள் என்றால் இந்த உலகிலேயே செய்து காட்டியவர்கள் விடுதலைப்புலிகள் அவர்களாகத்தான் இருக்க முடியும்.

யார் கண்பட்டதோ...யார் எரிச்சல் பட்டார்களோ தெரியவில்லை. எரித்து சாம்பலாக்கி விட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/1/2025 at 08:09, பகிடி said:

இவர்களுக்கு கருணாநிதி, திராவிட இயக்கம் என்றாலே ஆரம்பில் இருந்தே கசப்புத் தான். சரியான சமயம் வரும்வரை காத்து இருந்தார்கள், ஈழ யுத்தம் முடிய போரின் தோல்விக்கு திராவிட இயக்கம் மேல் பழியைப் போட்டு விட்டார்கள். போரின் பொழுது இவர்கள் பிரபாகரனுக்கு பயந்து அடக்கி வாசித்தார்கள். இவர்களுக்கு இப்பொழுதும் சீமான் மேல் எந்தக் காதலும் இல்லை, மாறாக சீமானைக் கொண்டு தமிழ் இனத்தில் எஞ்சி இருக்கும் மிச்சம் மீதியையும் இந்துத்துவாவுக்குள் அடக்கப் பிரயசைப்படுகிறார்கள் 

தமிழ் நாட்டை உங்கள் திராவிடம் தானே ஆட்சி செய்கின்றது?
ஏன் இன்னும் ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாமில் இருக்கின்றார்கள்?
வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, island said:

தான் ஈழம் சென்ற போது  தன்னிடம் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை பார்தது தான் தனக்கும் போராடும் உத்வேகம் ஏற்பட்டதாக பிரபகரன்  கூறியதாக சீமான் கூறியது ஏன்?  

பெரியாரை விட பல விடயங்களில் சாதித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். முக்கியமாக சாதி ஒழிப்பு.
பெரியார் படம் காட்டியதோடு சரி. அத்துடன் பெரியார் ஒரு அரசியல்வாதி. அது போல் சீமானும் ஒரு அரசியவாதி.எனவே சீமான் மாற்று கருத்து வைப்பதில் தவறில்லை. பெரியாரும் பெரிய கடவுள் இல்லை.

 

 

😝😜😂😃🤣🤭😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தமிழ் நாட்டை உங்கள் திராவிடம் தானே ஆட்சி செய்கின்றது?
ஏன் இன்னும் ஈழத்தமிழர்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் அகதி முகாமில் இருக்கின்றார்கள்?
வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

 

 

திராவிட ஆட்சியாளர்களுக்கு நான் இங்கு ஒன்றும் வக்காலத்து வாங்கவில்லை, ஆனால் அதற்கு மாற்று சீமான் வகையறாக்கள் இல்லை என்கிறேன். சட்டியில் இருந்து நெருப்புக்குள் விழும் நிலை அது.

சமூக பொருளாதார நிலையில் தமிழ் நாட்டு மக்களை அடுத்த கட்டம் நோக்கி உயர்த்தி விட்டதில் திராவிட கட்சிகளின் பங்களிப்பை தமிழ் நாட்டில் உள்ள 80% வீத மக்கள் மறக்கவில்லை. இன்னும் அதிகம் செய்து இருக்கலாம் என்ற குறை எனக்கும் உண்டு 

தவிர 

வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள்? தமிழ் மக்களில்  கள்ளு இறக்கி வாழும் மக்களை சொல்கிறீர்கள் என்றால் அவர்களில் நான் இல்லை, ஆனால் உங்கள் சொற்களை கவனமாய்ப் பாவியுங்கள் அது குறிப்பிட்ட அம்மக்களை காயப்படுத்தி விடும் 

Edited by பகிடி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

வடலி வளர்த்து கள்ளு குடிக்கும் காம பரம்பரைகளுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை.

இது யாரை குறித்து எழுதபட்ட வசவு?

வயது போக, போக முன்னர் உங்களிடம் இருந்து பின்னர் நீங்கள் துறந்துவிட்டதா சொல்லி கொண்ட சில கொள்கைகளும், நடைமுறைகளும் மீள தொற்றி கொள்கிறதோ?

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

ஜெயலலிதா புலிகளை எதிர்த்தாரே தவிர ஈழம் எனும் மண் கிடைப்பதை எதிர்க்கவில்லை

ஜெயலிதா புலிகளை எதிர்த்ததே ஈழம் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

பெரியாரை விட பல விடயங்களில் சாதித்து காட்டியவர் தலைவர் பிரபாகரன். முக்கியமாக சாதி ஒழிப்பு.
பெரியார் படம் காட்டியதோடு சரி. அத்துடன் பெரியார் ஒரு அரசியல்வாதி. அது போல் சீமானும் ஒரு அரசியவாதி.எனவே சீமான் மாற்று கருத்து வைப்பதில் தவறில்லை. பெரியாரும் பெரிய கடவுள் இல்லை.

பெரியாரையும் பிரபாகரனையும்  எதிர் கோணங்களில் வைப்பதே தவறு.. இருவரும் தத்தம் வழியில் தமது மக்களின் உரிமைகளுக்காக போராடினர். பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால்,  அவரே நீங்கள் கூறுவதை  எதிர்ததிருப்பார். இப்படி  நீங்கள் கூறுவதில் இருந்து  சீமானைப் போலவே நீங்களும்  விடுதலைப் புலிகளின் சாதாரண வெளியீடுகளைக்  கூட  வாசித்திருக்கவில்லை  என்பது தெளிவாகப் புலனாகிறது. அதாவது,  பிரபாகரனைக் கூட  நீங்கள் படிக்கவில்லை. உங்கள் வாசிப்பு என்பது, தம்பிகளின் வட்சப், ரியூட்டர் போஸ்ட்களும் மீம்ஸ்களும் மட்டுமே.  

பிரபாகரன் ஆயுத இராணுவ  வழியில் சாதனைகளை செய்தவர். பெரியார்  பத்திரிகை, புத்தகங்கள் மூலமாக  சமூக புரட்சியை, போராட்டங்களை செய்தவர். இருவரும் போரடியது வெவ்வேறு காலப்பகுதி. அந்த வரலாறுகளை புத்தகங்களில் படித்திருந்தால் மட்டுமே அதைப் பற்றி அறிய முடியும். பெரியார் அரசியல்வாதி அல்ல. சமூக போராளி. எந்த காலத்திலும் அதிகாரத்தை நோக்கிய நகர்வை அவர் செய்ததில்லை. ஏற்கனவே பல பதவிகளை உதறி தள்ளிவிட்டே போராட்டக் களத்துக்கு வந்தார். அவரது வாழ்நாள் முழுவதும் அதிகார பீடங்களுக்கு எதிராகவே  போராட்டங்களைச் செய்தார்.  

ஆயுதங்கள் இன்றி வேட்டியுடன் பிரபாகரனால் நீங்கள் கூறிய எந்த  சாதனைகளையுமே செய்திருக்க முடியாது. ஆயுதங்களுடன் அவரது இராணுவ மதி நுட்பம்,  ஒரு நேர்மையான விடுதலைப் போராளியாக  அவருக்கு பெரிதும் உதவியது. இராணுவ வழி மூலமான அவரது ஈழத்தமிழ் மக்களுக்கான  போராட்டம் பிரமிக்கத்தக்கது. ஒரு ஆயுத போராளியாக அவரது நேர்மையை எவராலும் குறைத்து மதிப்பிட முடியாது.   ஆனால் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டவுடன் அத்தனையும் பொல பொல என்று உதிர்ந்துவிட்டது. பிரபாகரனின் துப்பாக்கிக்கு பயந்து சற்று அடங்கி இருந்த  சாதி ஈழத்திலும் அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இன்றும் அதே வீரியத்துடன் உள்ளது.  ஏன் புலிகளின்  உறுப்பினர்களாக ஐரோப்பிய நாடுகளில் செயற்பட்டவர்களே தமது குடும்ப விடயத்தில் சாதி பார்ப்பதை இன்று மட்டும் அல்ல, போராட்ட காலத்திலேயே நேரில் கண்டுளேன். பல நூற்றாண்டு சமூக போராட்டங்களின் மூலம் பெரியாராலேயே  சாதியை ஒழிக்க முடியாத போது புலிகளின் துப்பாக்கிகள் அதை  ஒழிக்கும் என்று நம்புவதே முட்டாள்த்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பகிடி said:

ஜெயலிதா புலிகளை எதிர்த்ததே ஈழம் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் 

உண்மை. 2008 ல் போர் உச்சதில் இருந்த போது ஜெயலலிதா பேசினார். இந்த கருணாநிதி எப்போதெல்லாம் ஆட்சியில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் புலிகளினதும் அவர்களது ஆதரவாளர்களினதும் அட்டகாசம் தமிழ் நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது. நான் ஆட்சியில் இருந்திருந்தால் இவர்களின் கொட்டத்தை அடக்கி இருப்பேன் என்று.  அவரை தான் ஒரு சில ஆண்டுகளில் சீமான் ஈழத்தாய் என வர்ணித்து அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்தார். 

சீமான் கூறினால் பிரபாகரனையும் எதிர்ககும் மன நிலையிலேயே புலம் பெயர் சீமான் ஆதரவாளர்கள் இப்போது உள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

அவர்களின் உதவிகளை ஈழத்தவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை, விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த வகையில் அவர்கள் பெரியாரை மனதில் வைத்து ஈழத்தமிழருக்கு உதவிகள்,தியாகங்கள் செய்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் மனதில் இருந்தது தமிழ் என்ற உணர்வு மட்டுமே.

மீண்டுமொருமுறை எழுதுகின்றேன். நான் சீமானை ஆதரிப்பது அவரின் ஈழ அரசியலை வைத்து அல்ல.

ஜெயலலிதா புலிகளை எதிர்த்தாரே தவிர ஈழம் எனும் மண் கிடைப்பதை எதிர்க்கவில்லை.தன் அரசியலுக்காக புலிகளை எதிர்த்திருப்பார் என நான் நினைப்பதுண்டு.

அப்படியானால் பெரியாரிஸ்ருகளுக்கு அன்று இருந்த தமிழ் உணர்வு சீமான் போற்றும் மபொசி க்கு  இல்லாமல்  இருந்தது ஏன்? உங்கள் கருத்துப்படி அவர் இன்னும் தீவிரமாக புலிகளை ஆதரித்து இருக்க வேண்டுமல்லவா? மிக தீவிமாக புலிகளை  எதிர்தத்துடன்  இந்திய அமைதிகாக்கும் படையை வென்று வரவேற்று அவர்களை கொண்டாடினாரே!  சீமானுக்கு  அது துரோகமாக தெரியாதது ஏன்? 

சீமான் போற்றி புகழும் பச்சை தமிழர் காமராஜர் தமிழ் தேசியத்தை  முற்றாக வெறுத்து இந்திய தேசியத்தை மிக தீவிரமாக ஆதரித்தாரே! அது ஏன்? அவரை தமிழ் தேசியம்  என்று வாய் கிழிய கத்தும் சீமான் போற்றுவது ஏன்?  தமிழ் நாடு என்ற பெயரை சூட்ட உண்டாவிரதமிருந்த சங்கரலிங்கம் என்பவரை தனது ஆட்சியில் சாக விட்டதுடன் அவரது கோரிக்கையை கூட நிறைவேற்ற வில்லையே காமராஜர். அது ஏன்? 

திராவிட இயக்க தொழர்கள் ஈழப்போரளிகளை ஆதரித்து பல உதவிகள் செய்து அதற்காக பல ஆண்டுகள் சிறையில் இருந்த  தடா பொடா சட்டம் பாய்நத  காலத்தில் சீமான் எங்கு இருந்தார்? கோமாவில் இருந்தாரா? அல்லது தடா பொடா சட்டங்களுக்கு பயந்து பம்மிக்கொண்டு இருந்தாரா?  எல்லாம் முடிந்த பின் இனி புலிகள் இங்கு வர மாட்டார்கள், அவர்கள் இனி எனக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார்கள், எனவே அவர்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்யலாம் என்று புறப்பட்டவரே இந்த சீமான் என்ற நபர். 

உங்கள் கூற்றுப்படி தனது அரசியலுக்காக புலிகளை எதிர்தத ஜெயலலிதாவை சீமானின் சொல்லுக்காக  கண்டும் காணாமல் விடலாம் என்று கூற வருகின்றீர்களா? அப்படியானால் உங்கள் புலிகள் ஆதரவு என்பது சீமானுக்காகவா?

 புலிகளின் அரசியல்  தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டும் என் போன்றவர்களை துரோகிகளாக முத்திரை குத்தும்  நீங்கள் தனது அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் புலிகளை வாழ்நாள் முழுவதும் எதிர்த்த, இந்தியாவில் புலிகளுக்கான தடையை வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த தனது அரசியல் ஆளுமையை முழுமையாக  பயன்படுத்திய தடா பொடா சட்டங்களை தீவிரமாக அமுல்படுத்தி பல ஈழ ஆதாரவாளர்களை சிறையில் அடைத்த,  புலிகளின் போராட்டத்திற்கு பல தடைகளை செய்த, தமிழகத்தில் வாழுத் ஈழ அகதிகளின் கல்வி வாய்பபுகளை மறுத்த  ஜெயலலிதாவுடன் soft அணுகுமுறை எடுப்பது ஏன்? 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கட்சி, "புத்திசாலிகளால் முட்டாப் பீசுகளுக்காக நடத்தப்படும் அரசியல் கட்சி" என்ற விம்பம் வலுவாக உருவாகி வருகிறது.

"யாரும் பெரியார் நூல்களைப் பதிப்பிக்கலாம்" என்ற திறந்த பதிப்புரிமை இருக்கிறதாம். ஆனால், "பெரியாரின் வெளிப்படுத்தல்களை அரசுடைமையாக்கி வெளியிட்டால் தான் அதை ஏற்போம்!" என்று உடும்பாவனம் கார்த்திக் சொல்லியிருக்கிறாராம்😂.

பிபிசி, விடுதலை பத்திரிகை மூலப் பிரதியை அப்படியே வெளியிட்ட பின்னரும், சீமானின் பொய்யை முரட்டு முட்டுக் கொடுத்து தாங்கும் வேலையைச் செய்வோர், 'தமிழ் மொழிக் காதலர்கள்" என்று நம்ப முடியவில்லை!  

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

 

 

8 hours ago, island said:

 

மிகவும் நன்றாக, கோர்வையாக, தெளிவாக தொகுத்து உங்களின் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்...............👍.

சீமான் ஒரு பிழைப்புவாதி. ஆனால் அவரை நம்பி அவர் பின்னால் நிற்கும் இந்திய மற்றும் ஈழத் தமிழர்களில் பலர் அப்படியானவர்கள் கிடையாது. அவர்கள் தமிழ்த் தேசியத்தின் மேல் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் சீமானால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

இன்னுமொரு பிரிவினர், இவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சீமானை ஒரு மாற்றுத்தரப்பாக பார்க்கின்றனர். திராவிட, சாதிய மற்றும் இந்திய தேசிய கட்சிகளுக்கு மாற்றாக இவரை நினைக்கின்றனர். ஆனால் ஒரு சாதிய கட்சியை விட குறுநலம் கொண்டவர் சீமான். அதைவிடக் கொடுமை இவர் பட்டியலின மக்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே பேசும் தேசியம். அனிதா விவகாரத்தில் இருந்து இது நடந்து கொண்டேயிருக்கின்றது. ரஞ்சித் பகிரங்கமாகவே இது தான் தேசியமா என்று மேடையில் கேட்டார்.

பெரியாரை பற்றிய சீமானின் இந்தப் பேச்சு ஒரு திருப்பமாக அமையவேண்டும்.................. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

"யாரும் பெரியார் நூல்களைப் பதிப்பிக்கலாம்" என்ற திறந்த பதிப்புரிமை இருக்கிறதாம். ஆனால், "பெரியாரின் வெளிப்படுத்தல்களை அரசுடைமையாக்கி வெளியிட்டால் தான் அதை ஏற்போம்!" என்று உடும்பாவனம் கார்த்திக் சொல்லியிருக்கிறாராம்😂.

large.IMG_8016.jpeg.a8d6d6a723de5fd2cd51

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

 

மிகவும் நன்றாக, கோர்வையாக, தெளிவாக தொகுத்து உங்களின் கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்...............👍.

சீமான் ஒரு பிழைப்புவாதி. ஆனால் அவரை நம்பி அவர் பின்னால் நிற்கும் இந்திய மற்றும் ஈழத் தமிழர்களில் பலர் அப்படியானவர்கள் கிடையாது. அவர்கள் தமிழ்த் தேசியத்தின் மேல் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள். அதனால் சீமானால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

இன்னுமொரு பிரிவினர், இவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், சீமானை ஒரு மாற்றுத்தரப்பாக பார்க்கின்றனர். திராவிட, சாதிய மற்றும் இந்திய தேசிய கட்சிகளுக்கு மாற்றாக இவரை நினைக்கின்றனர். ஆனால் ஒரு சாதிய கட்சியை விட குறுநலம் கொண்டவர் சீமான். அதைவிடக் கொடுமை இவர் பட்டியலின மக்களை ஒதுக்கி வைத்துக் கொண்டே பேசும் தேசியம். அனிதா விவகாரத்தில் இருந்து இது நடந்து கொண்டேயிருக்கின்றது. ரஞ்சித் பகிரங்கமாகவே இது தான் தேசியமா என்று மேடையில் கேட்டார்.

பெரியாரை பற்றிய சீமானின் இந்தப் பேச்சு ஒரு திருப்பமாக அமையவேண்டும்.................. 

வ‌ண‌க்க‌ம் குருநாதா

ச‌ரி உங்க‌ளின் பார்வையில் அடுத்த‌வ‌ர்க‌ள் பார்வையில் சீமான் த‌வறான‌ ந‌ப‌ர் போல் தெரிகிறார் 

த‌மிழ் நாட்டில் நேர்மையான‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர் யாரை த‌ன்னும் விர‌ல் நீட்டி உங்க‌ளால் காட்ட‌ முடியுமா இவ‌ர் ந‌ல்ல‌ அர‌சிய‌ல் வாதி என்று😉....................

 

திமுக்காவின் க‌ட‌சி புக‌ழ் இட‌ம் பெரியார்..............பெரியார் ஆர‌ம்ப‌ கால‌த்தில் திமுக்கா கார‌ங்க‌ளை ந‌ம்ப‌ வேண்டாம் இவ‌ர்க‌ள் திருட‌ர்க‌ள் என‌ சொன்னாரா இல்லையா

 

பெரியார் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் முன்னுக்கு பின் முர‌ன‌கா செய‌ல் ப‌ட்டு இருக்கிறார்

ஈழ‌த்தில் நாங்க‌ள் பெரியாரால் தான் ப‌டிச்சோமா அல்ல‌து எங்க‌ளுக்கு பெரியார் வ‌ழி காட்டியா இருந்தாரா

பெரும்பாலான‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு திராவிட‌ம் என்றால் என்ன‌ என்றே தெரியாது.................சீமான் பிழைப்பு வாதி என்றால் எப்ப‌வோ அவ‌ருக்கான‌ க‌த‌வு திற‌ந்து தான் இருந்த‌து ஆனால் அவ‌ர் அதுக்கை போக‌ வில்லை

 

அவ‌ர் அவ‌ர் க‌ற்ப‌னையில் சீமானை ப‌ற்றி ப‌ல‌தை சொல்லுவினம் அது உண்மை ஆகி விடாது.............

 

ச‌ரி பெரியாருக்கு முத‌ல் த‌மிழ் நாட்டில் யாரும் ப‌டிக்க‌ வில்லையா ப‌ல‌ மொழிக‌ளில் பேசும் திற‌மை கொண்ட‌வ‌ர்க‌ள் இல்லையா..............பலர் இருந்த‌வை பெரியார் என்ர‌ போலி மாயை காட்டி இன்னும் எத்தனை வ‌ருட‌ம் ஊழ‌ல் செய்து த‌மிழ் நாட்டை சுடுகாடாக்க‌ போகின‌ம் இந்த‌ திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம்

 

அன்மையில் கூட‌ பாலிய‌ல் குற்ற‌ச்சாட்டு திமுக்கா க‌ட்சி கார‌ர்க‌ள் மேல் எழுந்து அது பேசு பொருள் ஆக்க‌ப் ப‌ட்ட‌து

இதா பெரியார் பெண்ணிய விடுத‌லைக்கு போராடி பெரியாரை பின் ப‌ற்றி வ‌ந்த‌வ‌ர்க‌ள் செய்யும் செய‌ல்

 

சீமான் எதிர்ப்ப‌து முன்னேர்க‌ள் ப‌ல‌ரின் வ‌ர‌லாறுக‌ளை மூடி மறைத்து பெரியார் என்ர‌ வின்பத்தை தூக்கி பிடிப்பத‌னால்....................

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

என் தலைவர் சீமான் என எங்கேயாவது எழுதியிருக்கின்றானா?

நானும் எங்கும் எழுதிய‌து கிடையாது தாத்தா......................எங்க‌ளுக்கு ஒரே ஒரு த‌லைவ‌ர் பிர‌பாக‌ரன் ம‌ட்டுமே🙏🥰👍.......................

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் குருநாதா

ச‌ரி உங்க‌ளின் பார்வையில் அடுத்த‌வ‌ர்க‌ள் பார்வையில் சீமான் த‌வறான‌ ந‌ப‌ர் போல் தெரிகிறார் 

த‌மிழ் நாட்டில் நேர்மையான‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர் யாரை த‌ன்னும் விர‌ல் நீட்டி உங்க‌ளால் காட்ட‌ முடியுமா இவ‌ர் ந‌ல்ல‌ அர‌சிய‌ல் வாதி என்று😉....................

 

திமுக்காவின் க‌ட‌சி புக‌ழ் இட‌ம் பெரியார்..............பெரியார் ஆர‌ம்ப‌ கால‌த்தில் திமுக்கா கார‌ங்க‌ளை ந‌ம்ப‌ வேண்டாம் இவ‌ர்க‌ள் திருட‌ர்க‌ள் என‌ சொன்னாரா இல்லையா

 

பெரியார் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் முன்னுக்கு பின் முர‌ன‌கா செய‌ல் ப‌ட்டு இருக்கிறார்

ஈழ‌த்தில் நாங்க‌ள் பெரியாரால் தான் ப‌டிச்சோமா அல்ல‌து எங்க‌ளுக்கு பெரியார் வ‌ழி காட்டியா இருந்தாரா

பெரும்பாலான‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு திராவிட‌ம் என்றால் என்ன‌ என்றே தெரியாது.................சீமான் பிழைப்பு வாதி என்றால் எப்ப‌வோ அவ‌ருக்கான‌ க‌த‌வு திற‌ந்து தான் இருந்த‌து ஆனால் அவ‌ர் அதுக்கை போக‌ வில்லை

 

அவ‌ர் அவ‌ர் க‌ற்ப‌னையில் சீமானை ப‌ற்றி ப‌ல‌தை சொல்லுவினம் அது உண்மை ஆகி விடாது.............

 

ச‌ரி பெரியாருக்கு முத‌ல் த‌மிழ் நாட்டில் யாரும் ப‌டிக்க‌ வில்லையா ப‌ல‌ மொழிக‌ளில் பேசும் திற‌மை கொண்ட‌வ‌ர்க‌ள் இல்லையா..............பலர் இருந்த‌வை பெரியார் என்ர‌ போலி மாயை காட்டி இன்னும் எத்தனை வ‌ருட‌ம் ஊழ‌ல் செய்து த‌மிழ் நாட்டை சுடுகாடாக்க‌ போகின‌ம் இந்த‌ திருட‌ர்க‌ள் முன்னேற்ற‌ க‌ழ‌க‌ம்

 

அன்மையில் கூட‌ பாலிய‌ல் குற்ற‌ச்சாட்டு திமுக்கா க‌ட்சி கார‌ர்க‌ள் மேல் எழுந்து அது பேசு பொருள் ஆக்க‌ப் ப‌ட்ட‌து

இதா பெரியார் பெண்ணிய விடுத‌லைக்கு போராடி பெரியாரை பின் ப‌ற்றி வ‌ந்த‌வ‌ர்க‌ள் செய்யும் செய‌ல்

 

சீமான் எதிர்ப்ப‌து முன்னேர்க‌ள் ப‌ல‌ரின் வ‌ர‌லாறுக‌ளை மூடி மறைத்து பெரியார் என்ர‌ வின்பத்தை தூக்கி பிடிப்பத‌னால்....................

நலமா பையன் சார்........ பல நாட்களாக உங்களைக் காணவில்லை. அடிக்கடி நினைப்பில் வருவீர்கள்..........

அங்கே நேர்மையான அரசியல்வாதிகள் என்றால் நல்லகண்ணு ஐயா, வெங்கடேசன், ரவிக்குமார் மற்றும் இன்னும் சில இடதுசாரிகளையும் சொல்லலாம். பிரபல அரசியல்வாதிகளில் தொல். திருமா, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், பரவாயில்லை என்றே தோன்றுகின்றது....................... ஆனால் கடுமையான நேர்மை என்பது வெறுங்கையால் முழம் போடுவது போல அரசியலில்...............

கடந்த ஒரு வருடத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, நாதக இந்த நான்கு கட்சியைச் சேர்ந்தவர்களின் மீதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

திராவிடக் கட்சிகளுக்காக நானும், பலரும் பெரியாரை ஆதரிக்கவில்லை. நீங்கள் சொல்வது சரியே........ இவர்களில் எவரும் பெரியாரின் வழியில் நிற்பவர்கள் என்று நானும் நினைக்கவில்லை. திராவிட கட்சிகளுக்கு வாக்குகள் போடும் மக்களும் பெரியாருக்காக போடுவதேயில்லை. 

சமூக நீதி என்பது ஒரு கோட்பாடும், வாழ்க்கை முறையும். பெரியாரின் வழியே தான் அது எங்கும் பரவியது. தமிழ் மீண்டும் பாரதியின் மூலம் உயிர் பெற்றது போல................... பெரியாரையும், பாரதியையும் தெரியாது............ ஆனால், அவர்கள் நட்ட மரங்களின் கீழ் தான் நாங்கள் இருக்கின்றோம்.......... 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

2009ம் ஆண்டு ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ திமுக்கா மீதான‌ கோவ‌ம் ஈழ‌ தமிழ‌ர்க‌ள் மனங்க‌ளில் இப்பவும் இருக்கு

த‌லைவ‌ரை ந‌ம்ப வைச்சு ச‌தி வேலை செய்தவ‌ர்கள் தான் இந்த‌ பெரியாரிஸ் கோமாளிக‌ள்....................இவ‌ங்க‌ளை ந‌ம்பினால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி...................................

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

நலமா பையன் சார்........ பல நாட்களாக உங்களைக் காணவில்லை. அடிக்கடி நினைப்பில் வருவீர்கள்..........

அங்கே நேர்மையான அரசியல்வாதிகள் என்றால் நல்லகண்ணு ஐயா, வெங்கடேசன், ரவிக்குமார் மற்றும் இன்னும் சில இடதுசாரிகளையும் சொல்லலாம். பிரபல அரசியல்வாதிகளில் தொல். திருமா, மற்றவர்களுடன் ஒப்பிடுகையில், பரவாயில்லை என்றே தோன்றுகின்றது....................... ஆனால் கடுமையான நேர்மை என்பது வெறுங்கையால் முழம் போடுவது போல அரசியலில்...............

கடந்த ஒரு வருடத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளில் திமுக, அதிமுக, பாஜக, நாதக இந்த நான்கு கட்சியைச் சேர்ந்தவர்களின் மீதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

திராவிடக் கட்சிகளுக்காக நானும், பலரும் பெரியாரை ஆதரிக்கவில்லை. நீங்கள் சொல்வது சரியே........ இவர்களில் எவரும் பெரியாரின் வழியில் நிற்பவர்கள் என்று நானும் நினைக்கவில்லை. திராவிட கட்சிகளுக்கு வாக்குகள் போடும் மக்களும் பெரியாருக்காக போடுவதேயில்லை. 

சமூக நீதி என்பது ஒரு கோட்பாடும், வாழ்க்கை முறையும். பெரியாரின் வழியே தான் அது எங்கும் பரவியது. தமிழ் மீண்டும் பாரதியின் மூலம் உயிர் பெற்றது போல................... பெரியாரையும், பாரதியையும் தெரியாது............ ஆனால், அவர்கள் நட்ட மரங்களின் கீழ் தான் நாங்கள் இருக்கின்றோம்.......... 

 

 

இருக்கிறேன் குருநாதா

உங்க‌ளையும் அதிக‌ம் நினைத்து இருக்கிறேன் ந‌ன்றி🙏🥰👍..............

ஜ‌யா நல்லகண்ணு நீங்க‌ள் சொன்ன‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளில் ந‌ல்ல‌வ‌ர் நேர்மையாள‌ர் ஒழுக்க‌மான‌வ‌ர் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை ஆனால் அவ‌ர் வ‌ய‌தாகி ஒதிங்கிப் போய் இருக்கிறார் இந்திய‌ சுத‌ந்திர‌த்துக்காக‌ போராடி சிறை சென்ற‌ ம‌னித‌ர்

 

திருமாள‌வ‌ன் அப்ப‌ ஒன்றும் இப்ப‌ ஒன்றும் பேசும் அர‌சிய‌ல் வாதி...............அவ‌ரின் ம‌து ஒழிப்பு நாடாக‌த்தை நீங்க‌ளும் பார்த்து இருப்பிங்க‌ள்.........................ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது திமுக்காவை போட்டு தாக்குவார்..................திமுக்கா கூட‌ உட‌ன் ப‌டிக்கை ஏற்ப‌ட்ட‌தும் பெரியார் புகழில் இருந்து க‌ருணாநிதி புகழ் வ‌ரை பாடுவார்.........................

ஒரு கால‌த்தில் திருமாள‌வ‌னை ஆத‌ரித்த‌ ந‌ப‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன் பின்னைய‌ கால‌ங்க‌ளில் அவ‌ரின் செய‌ல் பாடுக‌ள் பிடிக்காம‌ அவ‌ர் சொல்வ‌தை பேசுவ‌தை கேட்ப‌தை நிறுத்தி விட்டேன்.................. தமிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ கால‌ங்களில் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கும் த‌லைவ‌ருக்கு ஆத‌ர‌வாய் இருந்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளை நான் சிறிதும் ம‌திப்பது கிடையாது எல்லாம் பிழைப்பு வாதிகள்

 

திருமாள‌வ‌ன் , வைக்கோ ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் , வேல் முருகன் , தொட்டு இன்னும் சில‌ பெரியாரிஸ் அமைப்பின் த‌லைவ‌ர்க‌ள் வ‌ரை 

வைக்கோ ராகுல் காந்திய‌ க‌ட்டி அனைச்ச‌தை பார்க்க‌ 2013க‌ளில் வைக்கோ பேசின‌து எல்லாம் வெறும் வேச‌மானு யோசிக்க‌ தோனுது😁.........................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

அவர்களின் உதவிகளை ஈழத்தவர்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொள்கை, விருப்பு வெறுப்புகள் இருக்கும். அந்த வகையில் அவர்கள் பெரியாரை மனதில் வைத்து ஈழத்தமிழருக்கு உதவிகள்,தியாகங்கள் செய்திருக்க மாட்டார்கள்.
அவர்கள் மனதில் இருந்தது தமிழ் என்ற உணர்வு மட்டுமே.

மீண்டுமொருமுறை எழுதுகின்றேன். நான் சீமானை ஆதரிப்பது அவரின் ஈழ அரசியலை வைத்து அல்ல.

ஜெயலலிதா புலிகளை எதிர்த்தாரே தவிர ஈழம் எனும் மண் கிடைப்பதை எதிர்க்கவில்லை.தன் அரசியலுக்காக புலிகளை எதிர்த்திருப்பார் என நான் நினைப்பதுண்டு.

ஜெயலலிதா புலிக‌ளை வெளிப்ப‌டையா எதிர்த்தா................

க‌ருணாநிதி போல் ஆத‌ரிப்ப‌து போல் ஆத‌ரிச்சு 2009ம் ஆண்டு எம் போராட்ட‌த்துக்கு வாய்க் அரிசி போட்டு எல்லாத்தையும் முடித்து வைத்தார் க‌ருணாநிதி.....................2013 கூடா ந‌ட்பு கேடா முடியும் என்று காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் 2016 மீண்டும் காங்கிரஸ் கூட‌ கூட்ட‌னி இது தான் க‌ருணாநிதி செய்து காட்டிய‌ கேடு கெட்ட‌ அர‌சிய‌ல்................க‌ருணாநிதிய‌ மிஞ்சிய‌வ‌ர் தான் வைக்கோ

ப‌சியோடு கூட‌ வாழ‌ப் ப‌ழ‌க‌னும் வைக்கோ போல் வாழ‌க் கூடாது👍..........................

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரசோதரன் said:

சமூக நீதி என்பது ஒரு கோட்பாடும், வாழ்க்கை முறையும். பெரியாரின் வழியே தான் அது எங்கும் பரவியது. தமிழ் மீண்டும் பாரதியின் மூலம் உயிர் பெற்றது போல................... பெரியாரையும், பாரதியையும் தெரியாது............ ஆனால், அவர்கள் நட்ட மரங்களின் கீழ் தான் நாங்கள் இருக்கின்றோம்.......... 

 

 

சரியாகச் சொன்னீர்கள்👍.

இலங்கையில் இருந்து பல்வேறு விசாக்கள் வழியாக அமெரிக்கா வந்து (சிலர் அசைலம் மூலம் கூட வந்து, மாமன் மச்சானையெல்லாம் கூப்பிட்டு, பல்கிப் பெருகியிருக்கின்றனர்) பிரஜையான எம்மவர் பலர், ட்ரம்பிற்கு வாக்குப் போட்டிருக்கின்றனர். காரணம் குடியேறிகளைப் பிடிக்காது என்கின்றனர். "கமலா கறுப்பினம்" என்பதால் பிடிக்காதாம் என்றும் சிலர் சொல்கின்றனர். "1960 களில் MLK Jr. உயிரைக் கொடுத்துப் பெற்றுத் தந்த சிவில் உரிமைகள் சுவறியதால் தான் நீங்களே இன்று பாதுகாப்பாக அமெரிக்காவில் இருக்கிறீர்கள்!" என்று சுட்டிக் காட்டினால் இல்லையென்று மறுக்கும் அளவுக்கு "அறிவிழந்த, வாசிப்புமற்ற" வெற்று மண்டைகளாக விழிக்கின்றனர்😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.