Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்

February 24, 2025 5:27 pm

காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்பவரே தனது 79 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.

வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போராட்டத்திலும் இவர் தொடர்ச்சியாகப் பங்குபற்றியிருந்தார்.

தனது மரணத்துக்கு முன்பதாக தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய ஒரு தாயின் ஏக்கம் இன்றுடன் நிறைவேறாமல் முற்றுப் பெற்றுள்ளது.

https://oruvan.com/mari-amma-who-fought-to-find-her-missing-son-passes-away/

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா...உங்களுக்கான நீதி ஆண்டவனால் எப்பவோ வழங்கப்படும்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்

February 24, 2025 5:27 pm

காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்

வவுனியாவில் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சுழற்சி முறைப் போராட்டத்தின் 3000 ஆவது நாளான இன்று, தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வந்த மாரி அம்மா என்றழைக்கப்படும் வேலுசாமி மாரி என்பவரே தனது 79 ஆவது வயதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரின் மகனான வேலுச்சாமி சிவகுமார் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டார்.
இந்நிலையில், மாரி அம்மா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு போராட்டங்களில் முன்னின்று போராடியிருந்தார்.

வவுனியா ஏ – 9 வீதியில் சுழற்சி முறையில் இடம்பெற்று வரும் போராட்டத்திலும் இவர் தொடர்ச்சியாகப் பங்குபற்றியிருந்தார்.

தனது மரணத்துக்கு முன்பதாக தனது மகனை நேரில் பார்த்து விடுவேன் என ஏங்கிய ஒரு தாயின் ஏக்கம் இன்றுடன் நிறைவேறாமல் முற்றுப் பெற்றுள்ளது.

https://oruvan.com/mari-amma-who-fought-to-find-her-missing-son-passes-away/

ஐயகோ நெஞ்சு பொறுக்குதில்லேயே

இப்படி ஒவ்வொரு விக்கெட்டுகளாக விழுவதை பார்த்து, இப்படி ஒவ்வொரு பேட்ஸ்மானாக வெளியேறினால் ஐநா கொடியும், தேசிக்காய்ச்சின் தேசியமும் என்னாவது...?...

ஆழ்ந்த அனுதாபங்கள் மாரியம்மா... அவர்களை கொன்றுவிட்டேன் என்று கோத்தா கொக்கரித்ததை கேட்டுக்கொண்டிருந்தது உள்ளே மனம் குளிர்ந்த ஸ்டீபன் ராப் உட்பட தெருவோரம் குந்தவைக்கப்பட்ட உங்களுக்கும் , உங்களை குந்தவைத்தவர்களுக்கும் தெரியும் உங்கள் மகன் உயிரோடு இல்லை என்பது. சில நாதேரிகளின் அரசியல் பிழைப்பிற்கு கடைசிக்காலத்தில் உங்கள் உடல்வலுவையும் தாரைவார்த்து சென்றிருக்கிறீர்கள். உங்களைபோன்ற வயது முதிர்ந்தவர்களின் பிள்ளைகள் கொல்லப்படும் போது ஒழிந்திருந்து வேடிக்கை பார்த்துவிட்டு இப்போது அதை வைத்து அரசியல் செய்யும் கசபோக்கிலிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா..

இந்த அம்மாபோன்றவர்களின் பின்னால் இருக்கும் கதையை கோட்டின் அந்தப்பக்கம் இருக்கும் சோபசக்தி வகையறாக்கள் யாரும் சிறுகதையாக நாவலாக எழுதமாட்டார்கள்..

அதனால்..

கோட்டின் இந்தப்பக்கம் இருக்கும் தமிழ்நதி வகையறாக்கள் கண்டிப்பாக எழுதவேண்டும்..

எதிர்கால சந்ததிக்கு விட்டுச்செல்ல..

Edited by பாலபத்ர ஓணாண்டி

ஆழ்ந்த அனுதாபங்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டங்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளாலும் புலம்பெயர்ந்த தமிழர்களாலும் ஏறத்தாள கைவிடப்பட்ட நிலையிலும் மாரி அம்மா போன்றவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியிலும் போராட்டங்களை முன்னெடுப்பது போற்றத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.