Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

ஆனால் விஜையின் பெயர்தான் ஜோசேப். அவரே யேசுநாதரின் தகப்பன் அல்ல.

விஜய் தான்  மீனவர்களை காப்பாற்ற தமிழகத்தில் போராடப்போகிறேன் என்று அறிவித்துள்ளார். அதற்குள் ஏன் ஜேசுநாதரையும் தகப்பனாரையும் இழுத்துக்கொண்டு வருகிறீர்கள்?

  • Replies 64
  • Views 2.4k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • நிழலி
    நிழலி

    விஜய் மட்டுமல்ல, நியாயமாக சிந்திக்க கூடிய ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பின், அவர்கள் செய்யக் கூடியது மக்களைத் திரட்டி போராட்டம் அல்ல. மீனவர்களை நோக்கி, எல்லை தாண்டிச் சென்று, அயலக மீனவர்களின் மீன்

  • ஏராளன்
    ஏராளன்

    மத்திய அரசு ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதாகவும் மத்திய அரசும் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி முறைகளை தடை செய்துள்ளதாம்! ஆனால் கடலுக்கு செல்லும் மீனவப்படகு அனுமதி முதல் பரிசோதனைகள் எல்லாம

  • goshan_che
    goshan_che

    கிரெடிபிலிட்டி காற்றில் போய்விட்டது என வேலிபாய்ந்தோடியவர்கள் யார் என்பது யாழ்களத்துக்கு வாசகருக்கு என்றும் நினைவில் இருக்கும்🤣. ஆகவே யாருக்கு, யார், யாரை இனங்காட்டுவது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமன்றி மாநில அரசு அவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் (உதவித்தொகை, வழக்கறிஞர் உதவி, உடனடி நிவாரணம்) வழங்கும் கடப்பாடும், பொறுப்பும் கொண்டுள்ளது …

குடும்பங்களுக்கு இப்போ நாளுக்கு 250 தமிழக அரசு கொடுக்கிறது. இதை 300 ஆக மாற்றியுள்ளதாக திமுக அதிகாரபூர்வ கணக்கு சொல்கிறது.

https://www.facebook.com/share/16VSFkvsyg/?mibextid=wwXIfr

வழக்கறிஞர் - இது diplomatic services வழங்குவது. மத்திய அரசு லிஸ்ட்.

3 minutes ago, satan said:

விஜய் தான்  மீனவர்களை காப்பாற்ற தமிழகத்தில் போராடப்போகிறேன் என்று அறிவித்துள்ளார். அதற்குள் ஏன் ஜேசுநாதரையும் தகப்பனாரையும் இழுத்துக்கொண்டு வருகிறீர்கள்?

இருவரின் பெயரும் ஜோசப் என்பதால்.

உங்களுக்கு ஏன் எரியுது?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதம் எல்லாம் லீவு லெட்டரா அல்லது லவ் லெட்டரா?

கடிதம் மூலம் தலையிடுங்கள் என கேளாமலே மத்திய அரசு தலையிடலாம் ஏன் என்றால் இந்திய சட்டப்படி நிலம் மட்டுமே மாநிலத்தின் ஆளுகை, Indian territorial waters எனப்படும் கடல்பகுதி முழுக்க முழுக்க மத்திய அரசின் கீழ், இதை navy, coast guard, customs போன்ற மத்திய அரசு ஏஜென்சிகள்தான் பராமரிக்கும்.

அப்படி இருந்தும், தமிழகமுதல்வர் (எந்த கட்சியாயினும்) கடிதம் மூலம் கேட்டும் மத்திய அரசு தலையிடுவது இல்லை.

இதை திமுக, அதிமுக அரசுகள் தவறாமல் செய்தே வந்தனன்வருகிறன.

இதுக்கு மேல் என்ன மோடி வீட்டு கூரையில் ஏறி நின்றா கத்த முடியும்.

கடல் (Indian territorial waters) மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது... அதைப் பராமரிப்பது இந்திய கடற்படை (Navy), கடலோர காவல் படை (Coast Guard) மற்றும் சுங்கத்துறை (Customs) என்பதும் உண்மைதான்... ஆனால் இது மாநில அரசின் பொறுப்பு இல்லை என்று சொல்ல முடியாது...

மத்திய அரசு தலையிடுகிறதா இல்லையா என்பது இரண்டாவது விடயம்... ஆனால் தமிழக அரசு, மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் குடுத்து தலையிடச் செய்யும் பொறுப்பு உடையது... கடிதம் எழுதுவது ஒரு அதிகாரப்பூர்வமான நடைமுறையாகும்... ஆனால் அது மட்டும் போதாது – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மிரட்டல் அல்லது வற்புறுத்தல் செய்யும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது...

“கடிதம் எழுத்தல்” மட்டுமே போதுமா? – “ஸ்டாலின் மோடிக்கு எழுதிய கடிதம் லீவு லெட்டரா, லவ் லெட்டரா?” என்று நீங்கள் கேள்வி எழுப்பியுள்ளீர்கள்... இது அரசியல் விமர்சனமாக இருக்கலாம்... ஆனால் கடிதம் என்பது உத்தியோகபூர்வமான முறையாகும்... அதற்கு மேலாக, மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, உடனடி நடவடிக்கை எடுக்க வற்புறுத்த வேண்டும்...

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் மட்டுமே மத்திய அரசு செயல்படும் – கடிதம் எழுதிய பிறகு மத்திய அரசு செயல்படவில்லை எனில், மாநில அரசு அதை சமூகநீதி, அரசியல் அழுத்தம், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் எதிர்கொள்ளலாம்... இது அரசியல் நோக்கமற்றது; மீனவர்களின் பாதுகாப்புக்கான சட்டப்பூர்வமான அணுகுமுறை...

அதிமுக, திமுக அரசுகள் செய்துள்ளன – ஆனால் பிரச்சினை முடிந்ததா? – நீங்கள் “திமுக, அதிமுக அரசுகள் இது வரை செய்துவந்துள்ளன” என்று கூறுகிறீர்கள்... அதில் நான் எதையும் மறுப்பதற்கில்லை... ஆனால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதால், மாநில அரசின் முயற்சிகள் பூரணமாக வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகிறது...

👉 ஆகவே, மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம்குடுத்து, கடிதம் மட்டுமல்ல, மற்றும் பல்வேறு நிலைகளில் அரசியல், சட்டம், ஊடகம் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

👉மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றால், மாநில அரசு அதை வலியுறுத்த வேண்டும் என்பது ஒரு சட்டப்பூர்வமான நியாயமான கோரிக்கை…

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கடல் (Indian territorial waters) மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது... அதைப் பராமரிப்பது இந்திய கடற்படை (Navy), கடலோர காவல் படை (Coast Guard) மற்றும் சுங்கத்துறை (Customs) என்பதும் உண்மைதான்... ஆனால் இது மாநில அரசின் பொறுப்பு இல்லை என்று சொல்ல முடியாது...

ஏன் சொல்ல முடியாது. கடலில் ஒரு துரும்பை நகர்த்தும் அதிகாரம் கூட இல்லாத மாநில அரசு எதுவும் செய்ய முடியாது.

ஓணாண்டி சொல்லிற்றார் என்பதால் மாநில அரசுக்கு இந்திய அரசியலமைப்பை மீறி அதிகாரத்தை யாரும் கொடுக்க மாட்டார்கள்

4 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மத்திய அரசு தலையிடுகிறதா இல்லையா என்பது இரண்டாவது விடயம்... ஆனால் தமிழக அரசு, மீனவர்களின் பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் குடுத்து தலையிடச் செய்யும் பொறுப்பு உடையது... கடிதம் எழுதுவது ஒரு அதிகாரப்பூர்வமான நடைமுறையாகும்... ஆனால் அது மட்டும் போதாது – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மிரட்டல் அல்லது வற்புறுத்தல் செய்யும் உரிமை மாநில அரசுக்கு உள்ளது...

என்ன மோடி வீட்டுக்கு கல் எறிவோம் என்ற மிரட்டலா?

Concurrent list இல் உள்ள கல்வி ஒதுக்கீட்டை கூட தரமாட்டோம் என்கிறார்கள்.

எமது வரியைதானே கேட்கிறோம் என சொன்னால் - வரி தாறதை நிப்பாட்டினால் ஜனாதிபதி ஆட்சி என மிரட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டை விட பலமடங்கு அதிகாரம்மிக்க கஸ்மீரை எப்படி காயடித்தார்கள்.

இதுதான் இந்திய அரசியலமைப்பின் கட்டுப்பாடு.

மீறினால் அடிதான். யாராயினும்.

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தொடர்ந்து அழுத்தம் கொடுத்தால் மட்டுமே மத்திய அரசு செயல்படும் – கடிதம் எழுதிய பிறகு மத்திய அரசு செயல்படவில்லை எனில், மாநில அரசு அதை சமூகநீதி, அரசியல் அழுத்தம், நீதிமன்ற நடவடிக்கைகள் மூலமாகவும் எதிர்கொள்ளலாம்... இது அரசியல் நோக்கமற்றது; மீனவர்களின் பாதுகாப்புக்கான சட்டப்பூர்வமான அணுகுமுறை...

எப்படி அணுகுவது? கொஞ்சம் விளக்கமாக ஒரு செயல்முறையை பரிந்துரைக்கவும்.

இதை ஏன் சீமானோ வேறு ஒரு தலைவரோ செய்ய கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதிமுக, திமுக அரசுகள் செய்துள்ளன – ஆனால் பிரச்சினை முடிந்ததா? – நீங்கள் “திமுக, அதிமுக அரசுகள் இது வரை செய்துவந்துள்ளன” என்று கூறுகிறீர்கள்... அதில் நான் எதையும் மறுப்பதற்கில்லை... ஆனால் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் என்பதால், மாநில அரசின் முயற்சிகள் பூரணமாக வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகிறது...

பூரணமாக அல்ல, அறவே வெற்றி பெறவில்லை. ஏன் என்றால் டெல்லிக்கு தெரியும் பிழை தமிழக மீனவர் மீது என்பது.

கொலை செய்யவேண்டாம் என ஒரு மிரட்டல் டெல்லி ஒழுங்காக விட்டால், கொழும்பு கேட்கும். ஆனால் அதை கூட செய்ய மாட்டார்கள்.

11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆகவே, மாநில அரசு மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம்குடுத்து, கடிதம் மட்டுமல்ல, மற்றும் பல்வேறு நிலைகளில் அரசியல், சட்டம், ஊடகம் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

மீண்டும் வெறும் வார்த்தைகளின் கோர்வை மட்டுமே. என்ன செய்யலாம் என்ற பரிந்துரை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

குடும்பங்களுக்கு இப்போ நாளுக்கு 250 தமிழக அரசு கொடுக்கிறது. இதை 300 ஆக மாற்றியுள்ளதாக திமுக அதிகாரபூர்வ கணக்கு சொல்கிறது.

https://www.facebook.com/share/16VSFkvsyg/?mibextid=wwXIfr

வழக்கறிஞர் - இது diplomatic services வழங்குவது. மத்திய அரசு லிஸ்ட்.

தமிழக அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நாளுக்கு ₹250 வழங்கி வந்தது, அதை ₹300 ஆக உயர்த்தியிருப்பது சரியான தகவலாக இருக்கலாம்... ஆனால் இதை மட்டும் போதுமானதாகக் கருத முடியாது…

கைது செய்யப்படுவதால் மீனவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது…

இதை சமாளிக்க தற்காலிக உதவியுடன் (உதவித்தொகை) நீண்ட கால நிவாரண திட்டங்கள் (மீனவர் பாதுகாப்பு நிதி, வேலை வாய்ப்பின் மாறுபாடு, மீனவர்களுக்கு புதிய பயிற்சி, ஜீவனோபாய திட்டங்கள்) அரசால் செய்யப்படவேண்டும்...

வழக்கறிஞர் உதவி – மாநில அரசு செய்யக்கூடியது: நீங்கள் “diplomatic services வழங்குவது மத்திய அரசு பொறுப்பு” என்று கூறியுள்ளீர்கள். இது சரியானதும், தவறானதும் கூட…

சரியானது – கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க நாட்டின் மத்திய அரசு மட்டுமே சட்டபூர்வமாக தலையிட முடியும்…

தவறானது – உலக அளவில் உள்ள சட்ட உதவிகளை (legal assistance) வழங்குவதில் மாநில அரசுக்கும் பங்கு இருக்கிறது…

#உதாரணமாக, தமிழக அரசு சட்ட ஆலோசகர்களை நியமித்து (சட்டமன்ற அனுமதியுடன்), மீனவர்களுக்கு சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர உதவ முடியும். ..

#இந்தியாவில் உள்ள மீனவர்களின் குடும்பங்களுக்கு சட்ட ஆலோசனை, தற்காலிக நிவாரண உதவிகளை வழங்குவது மாநில அரசின் பொறுப்பு…

உதவி வழங்குவது மட்டுமல்ல, மீண்டும் இது நடக்காதவாறு பாதுகாப்பு:

தமிழக அரசு மீனவர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சர்வதேச ஒப்பந்தங்களை (International Treaties) பேசி, கடல் எல்லை பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வலியுறுத்த வேண்டும்…

இது தவிர, மீனவர்கள் பாதுகாப்புக்காக கடலோர காவல் படை (Coast Guard) மற்றும் மீன்பிடி துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்…

ஆகவே, நிதியுதவி மற்றும் வழக்கறிஞர் உதவி வழங்குவது மட்டுமல்ல, நீண்ட கால தீர்வுக்காக மத்திய அரசின் நடவடிக்கைகளை வலியுறுத்துவது, மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்வரை தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது மாநில அரசின் பொறுப்பு…

“உதவி என்பது தற்காலிகம்; பாதுகாப்பு என்பது நிரந்தரம்.”

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

👉மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றால், மாநில அரசு அதை வலியுறுத்த வேண்டும் என்பது ஒரு சட்டப்பூர்வமான நியாயமான கோரிக்கை…

இந்திய அரசியல் சட்டம் என்ற அடிமை சாசனத்தில் கடிதம் மட்டும்தான் எழுத முடியும்.

Back to ஈ வே ரா - ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவ முடியாது.

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழக அரசு கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு நாளுக்கு ₹250 வழங்கி வந்தது, அதை ₹300 ஆக உயர்த்தியிருப்பது சரியான தகவலாக இருக்கலாம்... ஆனால் இதை மட்டும் போதுமானதாகக் கருத முடியாது…

கைது செய்யப்படுவதால் மீனவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சிக்கல்கள் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்துகிறது…

இதை சமாளிக்க தற்காலிக உதவியுடன் (உதவித்தொகை) நீண்ட கால நிவாரண திட்டங்கள் (மீனவர் பாதுகாப்பு நிதி, வேலை வாய்ப்பின் மாறுபாடு, மீனவர்களுக்கு புதிய பயிற்சி, ஜீவனோபாய திட்டங்கள்) அரசால் செய்யப்படவேண்டும்...

நீங்கள் கதைப்பது அமெரிக்கன் அரசை பற்றி அல்ல. தமிழ்நாட்டு அரசு. மாதம் ஒன்றுக்கு ஒரு குடும்பம் £100 அண்ணளவாக பெறுகிறது. ஏனைய மகளீர் உதவி தொகை போன்றவற்றோடு ஒப்பிடுகையில் இது அதிகபடியனது.

3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தவறானது – உலக அளவில் உள்ள சட்ட உதவிகளை (legal assistance) வழங்குவதில் மாநில அரசுக்கும் பங்கு இருக்கிறது…

#உதாரணமாக, தமிழக அரசு சட்ட ஆலோசகர்களை நியமித்து (சட்டமன்ற அனுமதியுடன்), மீனவர்களுக்கு சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர உதவ முடியும்

இல்லை முடியாது. எந்த இந்தியாவுக்கு அப்பாலனான சட்ட நடவைக்கையையும் மத்திய அரசினூடுதான் மாநில அரசு முன்னெடுக்கலாம்.

எந்த சர்வதேச சட்டமன்றுக்கு மீனவர் போகலாம்? சொன்னால் தொடர்ந்து பதில் இடுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதவி வழங்குவது மட்டுமல்ல, மீண்டும் இது நடக்காதவாறு பாதுகாப்பு:

தமிழக அரசு மீனவர்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து, சர்வதேச ஒப்பந்தங்களை (International Treaties) பேசி, கடல் எல்லை பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வலியுறுத்த வேண்டும்…

இது தவிர, மீனவர்கள் பாதுகாப்புக்காக கடலோர காவல் படை (Coast Guard) மற்றும் மீன்பிடி துறையின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்…

ஆகவே, நிதியுதவி மற்றும் வழக்கறிஞர் உதவி வழங்குவது மட்டுமல்ல, நீண்ட கால தீர்வுக்காக மத்திய அரசின் நடவடிக்கைகளை வலியுறுத்துவது, மீனவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்வரை தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது மாநில அரசின் பொறுப்பு…

சும்மா எழுதிதள்ளலாம்…

ஆனால் கோரிக்கை வைப்பதை தவிர வேறு எதையும் செய்ய முடியாது.

ஒண்டு செய்யலாம் - போராட்டங்களை தூண்டி விட்டு, தாமே நடத்தி, கலவரம் பண்ணலாம்.

தமிழ் நாடு இன்னொரு கஸ்மீராகும்.

இங்கே பலர் விரும்புவதும் அதைத்தானே🤣.

நாங்கள் அழிஞ்சுவிச்டோம், அவங்கள் எப்படி ஜாலியா இருக்க முடியும்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

தானாக எழுதிக் கொடுக்காத ஒன்றைப் பேசப் போகின்றேன் என்று வெளிக்கிட்டு, என்ன சொல்லப் போகின்றாரோ என்று திக்திக்கென்று நெஞ்சு அடிக்குது............... சொந்தத்தில் ஒரு வசனம் கோர்வையாக வராது போல.................

இவர் வந்தவுடன் இருந்த நம்பிக்கை இப்போது போய்விட்டது என்கின்றார்கள்

இவரின் கட்சியில் சேர இருக்கும் ? காளியம்மாவும் இலங்கை சென்று மீன் கொள்ளையடித்து கொண்டுவர வேண்டும் என்ற கொள்கை கொண்டவாவாம்

6 hours ago, ஏராளன் said:

தமிழக மீன்பிடி படகு முதலாளிகள் அரசியல்வாதிகள் எனில் அவர்கள் எப்போதும் விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது வழமை தானே!

சீமான் ஸ்ராலின் விஜய் எல்லாம் மீன்பிடி படகு முதலாளிகளாக இருந்தாலும் அயல்நாடு இலங்கைக்குள் சட்டவிரோதமாக சென்று மீன் கொள்ளை அடிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

இருவரின் பெயரும் ஜோசப் என்பதால்.

😂

குல்லா போட்டு நோன்பு பிடிக்கின்ற ஜோசப்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரிக்கு பொருந்துமென்பதால்..

ஒரு அறிக்கை அல்லது போராட்டம் என்ன செய்துவிடும்....?

large.IMG_2778.jpeg

நான வெளிநாட்டுக்கு விமானம் ஏறியபோது எங்க அம்மாவின் அஞ்சி பவுன் தாலி அடகில் இருந்தது. அந்த தாலியை மூன்று மாதத்தில் மீட்டெடுத்து அம்மாவிற்கு மூன்றரை பவுனுக்கு ஒரு நகையும் வாங்கி கொடுத்திருந்தேன். அதன் பிறகு எங்கள் வளர்ச்சி என்பது நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வளர்ச்சி ஆனால் அத்தனை வளர்ச்சியிலும் வங்கி நகைக்கடன் அடகு மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது.......

எனது சிறு பிராயத்தில் அம்மாவின் நகையை மாமா அவரது தொழிலுக்காக அடகு வைக்க வாங்கிப்போவதை பார்த்திருக்கிறேன். நான் வளர்ந்தபோது எனது வீட்டு வேலைக்கு தாய்மாமா மனைவியிடம் நானே போய் நகை இருந்தா தாருங்க மாமினு கேட்டு வாங்கி வருவேன். இன்று எனது தம்பிக்கு தேவையென்றால் அவன் என மனைவியிடம் நகை வாங்கிட்டு போவான்......

அம்மா அந்த காலத்தில் இருபத்தைந்து பவுனோடு வந்ததாக சொல்லுவார்கள் அவரிடம் ஒரு அட்டியல் நெக்லஸ் இருந்தது அம்மா அதை மாமன்களின் திருமணத்தின்போது மட்டுமே அணிந்து பார்த்திருக்கிறேன் மற்ற நேரத்தில் அது வேப்பமூடு ஐஓபியில் இருக்கும் அல்லது கண்டன்விளை அலங்காரில் இருக்கும். விவசாயத்திற்கு அப்பா வெளிநாட்டு பயணம் பாட்டிக்கு மருந்துனு நகை மறிச்சி மறிச்சி வைப்பார்கள்.......

நான் இதற்கு முன்பாக வேலை செய்த தேசத்தில் வேலை இழந்த காலம் முதல் கொரனா வரை எனது கைசெயினும் கழுத்து செயினும் அடகுகடையில் தான் இருந்தது. வட்டி கட்டி வட்டி கட்டி திருப்பி திருப்பி வைப்போம்.இன்றும் எனது நகைகளில் சிலவற்று நான் அடகு வைத்திருக்கிறேன். அவசர காலங்களுக்கு நகை அடகே நமக்கு துணை என்பது போய் நமது குடும்பத்தினரின் முதலீடுகளுக்கு நகை அடகு வைக்கும் நிலைக்கு வந்ததையே நான் எனது வளர்ச்சியாக கணெக்கெடுக்கிறேன்.........

இந்த வங்கி கடன் மட்டும் இல்லையென்றால் நான் உட்பட்ட. பெரும்பானமையான எளிய மக்கள் வட்டி கடனில் வாழ்க்கையை தொலைத்திருப்பார்கள்...............

விவசாய நகைக்கடன் என்ற பெயரில் ஒரு வருடத்தில் திருப்பினால் குறைந்த வட்டியும் சில மாதங்களில் திருப்பினால் கூடுதல் வட்டியும் என்று இருந்ததை மாற்றி விவசாய நகைக்கடனுக்கும் வட்டியை ஏத்தி விட்டார்கள். வருடம் முடியும்போது சில ஆயிரங்களை புரட்டி நகைக்கான வட்டியை மட்டும் கட்டி அடுத்த ஒரு வருடத்திற்கான அவகாசத்தை நீட்டி மக்கள் தப்பினார்கள். தினமும் தங்க நகையின் மதிப்பு கூடுவதால் இந்த வட்டி கட்டும் பணத்தயும் மறு அடகில் பெற்று பணச்சுமையில்லாமல் தற்காலிகமா தப்பி விடுவார்கள்........

இப்படி போய்கொண்டிருந்த நகை அடகில் முழுப்பணத்தயும் கட்டி திருப்பி வைக்க வேண்டும் என்ற சூழல் வர அதயும் கைமாத்தாக பணம் வாங்கி ஒரே நாளில் மறு அடகு வைத்து சமாளித்து வந்ததிற்கு ஆப்பு வந்து விட்டது. முழுப்பணத்தயும் கட்டி நகையை எடுத்து அதே நாளில் அடகு வைக்கமுடியாத சூழல் வந்திருக்கிறது...........

இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று பலருக்கு தோன்றலாம் ஆனால் நகை கடனை திருப்பி மறு அடகு வைக்கு அவசரத்திற்கு அடகு வைத்த நகை ஏலத்தில் போகாமல் இருக்க பணம் புரட்ட மக்கள் படும் பாட்டை பார்த்தவர்களுக்கோ உணர்ந்தவர்களுக்கோத்தான் அந்த வலி தெரியும்......

அண்ணன் சீமானிடமிருந்து இதற்கான குரல் ஒலித்திருக்கிறது அவரிடம் யார் இந்த அறிக்கை விட அலோசனை சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்........

நன்றிகள் அண்ணே....

ஒரு அறிக்கை என்ன செய்துவிடும்....? முதல் குரல் பல குரல்களை உருவாக்கும். சமீபகாலங்களில் அவர் அப்படியான சூழலைத்தான் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறார்....

நன்றி- முகநூல்

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இல்லை முடியாது. எந்த இந்தியாவுக்கு அப்பாலனான சட்ட நடவைக்கையையும் மத்திய அரசினூடுதான் மாநில அரசு முன்னெடுக்கலாம்.

எந்த சர்வதேச சட்டமன்றுக்கு மீனவர் போகலாம்? சொன்னால் தொடர்ந்து பதில் இடுகிறேன்.

நான்

#உதாரணமாக, தமிழக அரசு சட்ட ஆலோசகர்களை நியமித்து (சட்டமன்ற அனுமதியுடன்), மீனவர்களுக்கு சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர உதவ முடியும்

என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்..

சர்வதேச சட்ட மன்றங்களில் (International Courts) தமிழகம் முதன்மையாக நேரடியாக வழக்கு தொடர முடியாது... ஆனால் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தி, சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடரச்செய்யும் அதிகாரத்தை பெற்றிருக்கிறது... இதற்கான ஆதாரங்கள்:

1. UNCLOS (United Nations Convention on the Law of the Sea):

# 1982 ஆம் ஆண்டு உருவான கடல் சட்டங்களுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் (UNCLOS) இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது…

# இந்தியாவின் கடல்சார் எல்லைகள் (territorial waters) மற்றும் கடற்பகுதியில் (Exclusive Economic Zone - EEZ) மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் தொடர்பாக, UNCLOS விதிமுறைகளை மீறினால், அந்த விவகாரங்களை International Tribunal for the Law of the Sea (ITLOS)-ல் எடுத்துச் செல்லலாம்…

2. சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice - ICJ):

# இங்கே வழக்கு தொடர மத்திய அரசு மட்டுமே அதிகாரம் பெற்றுள்ளது என்றாலும், மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தி, வழக்கு தொடருமாறு வலியுறுத்தலாம்…

# 2014-ல் இத்தாலி கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் ICJ-ல் விசாரணை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டலாம்…

3. மாநில அரசின் செயல்பாடு – சட்ட ஆலோசனையின் வகை:

# மத்திய அரசு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தொடரும்வரை, மாநில அரசு தனிப்பட்ட முறையில் சட்ட ஆலோசனை (Legal Counseling) வழங்கலாம்...

# கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க சர்வதேச சட்ட நிபுணர்களை (International Legal Experts) மாநில அரசு நியமிக்கலாம் – இது மாநில அரசின் பொறுப்பில் வருகிறது...

# இதற்கு உதாரணமாக, 2012-ல் இத்தாலி கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு சட்ட ஆலோசனை வழங்கியது மட்டுமல்ல, மத்திய அரசை வழக்கு தொடர வற்புறுத்தி செய்யவைத்தது என்பதும் வரலாற்று உண்மை…

பொதுவாக:

# சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடர மத்திய அரசு மட்டுமே அதிகாரம் பெற்றுள்ளது என்பது உண்மைதான்…

# ஆனால் மாநில அரசு, மத்திய அரசை வற்புறுத்தி வழக்கை தொடரச் செய்யலாம்…

# மேலும், மாநில அரசு தனியாக சட்ட ஆலோசனை, மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் சர்வதேச சட்ட நிபுணர்களை நியமித்து ஆதரவு தருவது மாநில அரசின் பொறுப்பு என்பதில் எந்த மாற்றமுமில்லை…

“சட்ட வழிமுறைகள் மத்திய அரசின் பொறுப்பு; ஆனால், சட்ட உதவி மற்றும் மீனவர்களின் நலன் மாநில அரசின் பொறுப்பு...”

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சர்வதேச சட்ட மன்றங்களில் (International Courts) தமிழகம் முதன்மையாக நேரடியாக வழக்கு தொடர முடியாது... ஆனால் மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தி, சர்வதேச நீதிமன்றங்களில் வழக்கு தொடரச்செய்யும் அதிகாரத்தை பெற்றிருக்கிறது... இதற்கான ஆதாரங்கள்:

1. UNCLOS (United Nations Convention on the Law of the Sea):

# 1982 ஆம் ஆண்டு உருவான கடல் சட்டங்களுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டில் (UNCLOS) இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது…

# இந்தியாவின் கடல்சார் எல்லைகள் (territorial waters) மற்றும் கடற்பகுதியில் (Exclusive Economic Zone - EEZ) மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள் தொடர்பாக, UNCLOS விதிமுறைகளை மீறினால், அந்த விவகாரங்களை International Tribunal for the Law of the Sea (ITLOS)-ல் எடுத்துச் செல்லலாம்…

2. சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice - ICJ):

# இங்கே வழக்கு தொடர மத்திய அரசு மட்டுமே அதிகாரம் பெற்றுள்ளது என்றாலும், மாநில அரசு மத்திய அரசை வற்புறுத்தி, வழக்கு தொடருமாறு வலியுறுத்தலாம்…

# 2014-ல் இத்தாலி கடற்படையால் இந்திய மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் ICJ-ல் விசாரணை செய்யப்பட்டதை எடுத்துக்காட்டலாம்…

இதன் முடிந்த முடிவு - நீங்களே எழுதியது போல் வழக்கு போடும் தகமை மத்திய அரசிடமே உள்ளது (state party).

ஆகவே தமிழ்நாடு அரசு மத்திய அரசை அதன் முன் உள்ள வழிமுறைகளை பாவித்து இதை நிறுத்த சொல்வதில் சட்ட வழியும் அடங்கும்.

ஆனால் இந்த சட்ட வழிமுறை எதுவும் தேவையில்லை. ஜெய்சங்கர், ஹேரத்தை கூப்பிட்டு ஒரு காட்டு காட்டினாலே கொலைகள் நின்றுவிடும்.

ஆனால் செய்யமாட்டார்கள்.

11 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மத்திய அரசு வழக்கை சர்வதேச நீதிமன்றத்தில் தொடரும்வரை, மாநில அரசு தனிப்பட்ட முறையில் சட்ட ஆலோசனை (Legal Counseling) வழங்கலாம்...

மீனர்களுக்கா? இலங்கையில் பிடிபட்ட பின் வழங்க முடியாது அது இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரம்.

அப்போ கடலுக்கு போக முன்னம், பிடிபட முதல் ஆலோசனை வழங்கலாம்? என்ன ஆலோசனை? இலங்கை எல்லைகுள் போகாதீர் எனும் ஆலோசனை.

இது சட்ட ஆலோச்னை அல்லை. அறிவுறுத்தல். இது தமிழ்நாடு மீன்வள துறை அதிகாரிகள் ரூட்டினாக செய்வதுதான்.

சட்ட ஆலோசனை வழக்கில் ஒரு party யாக இருக்கும் தகமை உள்ளோர்ருக்குத்தான். இங்கே மீனவர்களுக்கு அந்த தகமை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க சர்வதேச சட்ட நிபுணர்களை (International Legal Experts) மாநில அரசு நியமிக்கலாம் – இது மாநில அரசின் பொறுப்பில் வருகிறது...

நிச்சயமாக இல்லை. மாநில அரசு ஸ்டாலின் வீட்டு பணத்தில் நடக்கவில்லை. ஒவ்வொரு நியமனமும் பொதுபணத்கில்தான் நடக்கும்.

அந்த நியமனங்கள் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்ன்வர வேண்டும்.

ஒரு சஎவதேச பிணக்கில் சட்ட வல்லுரனை அதுவும் சர்வசேத சட்ட வல்லுரனை நியமிக்க மாநில அரசால் முடியாது.

18 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

மேலும், மாநில அரசு தனியாக சட்ட ஆலோசனை, மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் சர்வதேச சட்ட நிபுணர்களை நியமித்து ஆதரவு தருவது மாநில அரசின் பொறுப்பு என்பதில் எந்த மாற்றமுமில்லை…

மேலே சொன்ன அதே கருத்தை, வசனங்களின் ஓடரை மாற்றி போட்டு எழுதி உள்ளீர்கள்.

மீனவருக்கு பிடிபடும் வரை சட்ட ஆலோச்னை தேவையில்லை. பிடிபட்டபின் அதை கொடுப்பது ஹைகொமிசன்.

19 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சட்ட வழிமுறைகள் மத்திய அரசின் பொறுப்பு; ஆனால், சட்ட உதவி மற்றும் மீனவர்களின் நலன் மாநில அரசின் பொறுப்பு...”

அறவே இல்லை.

ஒரு சர்வதேச பிணக்கில் ஒரு மாநில அரசுக்கு எந்த சட்ட வகிபாகமும் கிடையாது.

மீனவர்கள் தமிழ் நாட்டு மண்ணில் இருக்கும் போது மட்டும் அவர்கள் நலன் மாநில அரசின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்த திரிக்கு பொருந்துமென்பதால்..

ஒரு அறிக்கை அல்லது போராட்டம் என்ன செய்துவிடும்....?

large.IMG_2778.jpeg

நான வெளிநாட்டுக்கு விமானம் ஏறியபோது எங்க அம்மாவின் அஞ்சி பவுன் தாலி அடகில் இருந்தது. அந்த தாலியை மூன்று மாதத்தில் மீட்டெடுத்து அம்மாவிற்கு மூன்றரை பவுனுக்கு ஒரு நகையும் வாங்கி கொடுத்திருந்தேன். அதன் பிறகு எங்கள் வளர்ச்சி என்பது நான் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வளர்ச்சி ஆனால் அத்தனை வளர்ச்சியிலும் வங்கி நகைக்கடன் அடகு மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது.......

எனது சிறு பிராயத்தில் அம்மாவின் நகையை மாமா அவரது தொழிலுக்காக அடகு வைக்க வாங்கிப்போவதை பார்த்திருக்கிறேன். நான் வளர்ந்தபோது எனது வீட்டு வேலைக்கு தாய்மாமா மனைவியிடம் நானே போய் நகை இருந்தா தாருங்க மாமினு கேட்டு வாங்கி வருவேன். இன்று எனது தம்பிக்கு தேவையென்றால் அவன் என மனைவியிடம் நகை வாங்கிட்டு போவான்......

அம்மா அந்த காலத்தில் இருபத்தைந்து பவுனோடு வந்ததாக சொல்லுவார்கள் அவரிடம் ஒரு அட்டியல் நெக்லஸ் இருந்தது அம்மா அதை மாமன்களின் திருமணத்தின்போது மட்டுமே அணிந்து பார்த்திருக்கிறேன் மற்ற நேரத்தில் அது வேப்பமூடு ஐஓபியில் இருக்கும் அல்லது கண்டன்விளை அலங்காரில் இருக்கும். விவசாயத்திற்கு அப்பா வெளிநாட்டு பயணம் பாட்டிக்கு மருந்துனு நகை மறிச்சி மறிச்சி வைப்பார்கள்.......

நான் இதற்கு முன்பாக வேலை செய்த தேசத்தில் வேலை இழந்த காலம் முதல் கொரனா வரை எனது கைசெயினும் கழுத்து செயினும் அடகுகடையில் தான் இருந்தது. வட்டி கட்டி வட்டி கட்டி திருப்பி திருப்பி வைப்போம்.இன்றும் எனது நகைகளில் சிலவற்று நான் அடகு வைத்திருக்கிறேன். அவசர காலங்களுக்கு நகை அடகே நமக்கு துணை என்பது போய் நமது குடும்பத்தினரின் முதலீடுகளுக்கு நகை அடகு வைக்கும் நிலைக்கு வந்ததையே நான் எனது வளர்ச்சியாக கணெக்கெடுக்கிறேன்.........

இந்த வங்கி கடன் மட்டும் இல்லையென்றால் நான் உட்பட்ட. பெரும்பானமையான எளிய மக்கள் வட்டி கடனில் வாழ்க்கையை தொலைத்திருப்பார்கள்...............

விவசாய நகைக்கடன் என்ற பெயரில் ஒரு வருடத்தில் திருப்பினால் குறைந்த வட்டியும் சில மாதங்களில் திருப்பினால் கூடுதல் வட்டியும் என்று இருந்ததை மாற்றி விவசாய நகைக்கடனுக்கும் வட்டியை ஏத்தி விட்டார்கள். வருடம் முடியும்போது சில ஆயிரங்களை புரட்டி நகைக்கான வட்டியை மட்டும் கட்டி அடுத்த ஒரு வருடத்திற்கான அவகாசத்தை நீட்டி மக்கள் தப்பினார்கள். தினமும் தங்க நகையின் மதிப்பு கூடுவதால் இந்த வட்டி கட்டும் பணத்தயும் மறு அடகில் பெற்று பணச்சுமையில்லாமல் தற்காலிகமா தப்பி விடுவார்கள்........

இப்படி போய்கொண்டிருந்த நகை அடகில் முழுப்பணத்தயும் கட்டி திருப்பி வைக்க வேண்டும் என்ற சூழல் வர அதயும் கைமாத்தாக பணம் வாங்கி ஒரே நாளில் மறு அடகு வைத்து சமாளித்து வந்ததிற்கு ஆப்பு வந்து விட்டது. முழுப்பணத்தயும் கட்டி நகையை எடுத்து அதே நாளில் அடகு வைக்கமுடியாத சூழல் வந்திருக்கிறது...........

இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்று பலருக்கு தோன்றலாம் ஆனால் நகை கடனை திருப்பி மறு அடகு வைக்கு அவசரத்திற்கு அடகு வைத்த நகை ஏலத்தில் போகாமல் இருக்க பணம் புரட்ட மக்கள் படும் பாட்டை பார்த்தவர்களுக்கோ உணர்ந்தவர்களுக்கோத்தான் அந்த வலி தெரியும்......

அண்ணன் சீமானிடமிருந்து இதற்கான குரல் ஒலித்திருக்கிறது அவரிடம் யார் இந்த அறிக்கை விட அலோசனை சொன்னார்கள் என்று தெரியவில்லை ஆனால் விரிவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்........

நன்றிகள் அண்ணே....

ஒரு அறிக்கை என்ன செய்துவிடும்....? முதல் குரல் பல குரல்களை உருவாக்கும். சமீபகாலங்களில் அவர் அப்படியான சூழலைத்தான் தமிழ்நாட்டில் உருவாக்கியிருக்கிறார்....

நன்றி- முகநூல்

அதுசரி,

நகை இருந்து அடவு வைப்பவனுக்கு ஆதரவாக பேசும் இதே வாய்தானே, மகளிர் உதவி தொகை பெறும் பெண்களை “ஆயிரம் ரூபாய்க்கு பொறந்தவர்கள்” என சொன்னதை வேடிக்கை பார்த்தது.

பரம ஏழைகளான, ஒரு மஞ்சாடி தங்கம் இல்லாத குடும்பங்களுக்கு திருமணதிட்டம், லேட்டாப் என கொடுத்த நலதிட்டங்களை தடுத்து நிறுத்துமாறு கூச்சல் இட்டது.

ஏழை பங்காளந்தான் —- நம்பிட்டோம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை. மாநில அரசு ஸ்டாலின் வீட்டு பணத்தில் நடக்கவில்லை. ஒவ்வொரு நியமனமும் பொதுபணத்கில்தான் நடக்கும்.

அந்த நியமனங்கள் மாநில அரசின் அதிகார வரம்புக்குள்ன்வர வேண்டும்.

ஒரு சஎவதேச பிணக்கில் சட்ட வல்லுரனை அதுவும் சர்வசேத சட்ட வல்லுரனை நியமிக்க மாநில அரசால் முடியாது.

மேலே சொன்ன அதே கருத்தை, வசனங்களின் ஓடரை மாற்றி போட்டு எழுதி உள்ளீர்கள்.

மீனவருக்கு பிடிபடும் வரை சட்ட ஆலோச்னை தேவையில்லை. பிடிபட்டபின் அதை கொடுப்பது ஹைகொமிசன்.

அறவே இல்லை.

ஒரு சர்வதேச பிணக்கில் ஒரு மாநில அரசுக்கு எந்த சட்ட வகிபாகமும் கிடையாது.

மீனவர்கள் தமிழ் நாட்டு மண்ணில் இருக்கும் போது மட்டும் அவர்கள் நலன் மாநில அரசின் கடமை.

சர்வதேச சட்ட வல்லுநர்களை மாநில அரசு நியமிக்க முடியாது என்பது தவறானது..

# மாநில அரசு சட்ட ஆலோசனை (Legal Advice) வழங்க, சட்ட வல்லுநர்களை நியமிக்க முடியும். இதற்கு உதாரணம்: 2012-ல் இத்தாலி கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு சட்ட ஆலோசனை வழங்கியது…

#சட்ட ஆலோசனை வழங்குவதில் மாநில அரசு பொதுமுறை மற்றும் பொது நிதியை பயன்படுத்தலாம் – இது மாநில அரசின் அதிகார வரம்பில் வருகிறது…

மீனவர்கள் பிடிபட்டபின் ஹைகொமிஷன் மட்டுமே சட்ட உதவி வழங்கும் என்பது தவறானது.. சர்வதேச சட்டம் மற்றும் வெளிநாட்டு தூதரகம் வழியாக நீதிமன்ற நடவடிக்கை மத்திய அரசின் பொறுப்பாக இருந்தாலும், மாநில அரசு தனியாக:

#அரசு நியமன வழக்கறிஞர்களை வழங்க முடியும்…

#உடனடி நிவாரணத் தொகை மற்றும் குடும்ப நலனுக்கான உதவி வழங்க முடியும்…

#தமிழக அரசு இதனைப் பலமுறை செய்துள்ளது – உதாரணம்: 2017-ல் இலங்கை கடற்படையால் பிரான்சிஸ் ஜெயராஜ் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு உடனடி நிவாரணம் வழங்கியது… தமிழக அரசு பிடிபட்ட மீனவர்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமித்து, சட்ட உதவிகளை வழங்கியது…

மீனவர்கள் Tamil Nadu மண்ணில் இருக்கும்போது மட்டும் மாநில அரசின் பொறுப்பு என்பது சட்டரீதியாக தவறானது…

#மாநில அரசு வெளிநாட்டில் பாதிக்கப்படும் மாநில குடிமக்களுக்கு ஆதரவு அளிக்க உரிமை பெற்றுள்ளது… உதாரணம்: உடனடி நிவாரணம் வழங்குதல், வழக்கறிஞர் நியமனம், சட்ட ஆலோசனை வழங்குதல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பில் வருகின்றன..

இந்திய அரசியலமைப்பின் 7-ம் அட்டவணை (Seventh Schedule) அடிப்படையில், “Law and Order” என்பது மாநில அரசின் பொறுப்பாக உள்ளது...மாநில அரசு மீனவர்களுக்கு: உடனடி நிவாரணம் ,சட்ட ஆலோசனை ,மத்திய அரசை வற்புறுத்துதல், அரசு வழக்கறிஞர்களை நியமித்தல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பு மற்றும் அரசியல் கடமையாக கருதப்படுகிறது…

சர்வதேச சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் பொறுப்பாக இருந்தாலும், சட்ட ஆலோசனை, நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்குவது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது…

அதனால் கோசான் எழுதிய அனைத்துப் பதில்களும் பொதுத்தகவல் பற்றாக்குறை மற்றும் சட்டப்பூர்வமான தவறான புரிதல் என்பதைக் காட்டுகிறது…

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சர்வதேச சட்ட வல்லுநர்களை மாநில அரசு நியமிக்க முடியாது என்பது தவறானது..

# மாநில அரசு சட்ட ஆலோசனை (Legal Advice) வழங்க, சட்ட வல்லுநர்களை நியமிக்க முடியும். இதற்கு உதாரணம்: 2012-ல் இத்தாலி கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு சட்ட ஆலோசனை வழங்கியது…

#சட்ட ஆலோசனை வழங்குவதில் மாநில அரசு பொதுமுறை மற்றும் பொது நிதியை பயன்படுத்தலாம் – இது மாநில அரசின் அதிகார வரம்பில் வருகிறது…

மீனவர்கள் பிடிபட்டபின் ஹைகொமிஷன் மட்டுமே சட்ட உதவி வழங்கும் என்பது தவறானது.. சர்வதேச சட்டம் மற்றும் வெளிநாட்டு தூதரகம் வழியாக நீதிமன்ற நடவடிக்கை மத்திய அரசின் பொறுப்பாக இருந்தாலும், மாநில அரசு தனியாக:

#அரசு நியமன வழக்கறிஞர்களை வழங்க முடியும்…

#உடனடி நிவாரணத் தொகை மற்றும் குடும்ப நலனுக்கான உதவி வழங்க முடியும்…

#தமிழக அரசு இதனைப் பலமுறை செய்துள்ளது – உதாரணம்: 2017-ல் இலங்கை கடற்படையால் பிரான்சிஸ் ஜெயராஜ் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு உடனடி நிவாரணம் வழங்கியது… தமிழக அரசு பிடிபட்ட மீனவர்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமித்து, சட்ட உதவிகளை வழங்கியது…

மீனவர்கள் Tamil Nadu மண்ணில் இருக்கும்போது மட்டும் மாநில அரசின் பொறுப்பு என்பது சட்டரீதியாக தவறானது…

#மாநில அரசு வெளிநாட்டில் பாதிக்கப்படும் மாநில குடிமக்களுக்கு ஆதரவு அளிக்க உரிமை பெற்றுள்ளது… உதாரணம்: உடனடி நிவாரணம் வழங்குதல், வழக்கறிஞர் நியமனம், சட்ட ஆலோசனை வழங்குதல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பில் வருகின்றன..

இந்திய அரசியலமைப்பின் 7-ம் அட்டவணை (Seventh Schedule) அடிப்படையில், “Law and Order” என்பது மாநில அரசின் பொறுப்பாக உள்ளது...மாநில அரசு மீனவர்களுக்கு: உடனடி நிவாரணம் ,சட்ட ஆலோசனை ,மத்திய அரசை வற்புறுத்துதல், அரசு வழக்கறிஞர்களை நியமித்தல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பு மற்றும் அரசியல் கடமையாக கருதப்படுகிறது…

சர்வதேச சட்டம் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் பொறுப்பாக இருந்தாலும், சட்ட ஆலோசனை, நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்குவது மாநில அரசின் அதிகார வரம்புக்குள் வருகிறது…

அதனால் கோசான் எழுதிய அனைத்துப் பதில்களும் பொதுத்தகவல் பற்றாக்குறை மற்றும் சட்டப்பூர்வமான தவறான புரிதல் என்பதைக் காட்டுகிறது…

ஓணாண்டியார், திரும்பவும் நான் சீமான் வியாதியில் பேசுகிறேன் என்று சொல்ல மாட்டீர்களென நினைக்கிறேன்☺️. கீழே இருப்பது தான் இந்திய அரசியலமைப்பின் ஆட்சியதிகாரப் பகிர்வை பட்டியலிட்டிருக்கும் 7 வது அட்டவணை. இதில் எங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாநில அரசின் மீனவர்கள் மீதான அதிகாரம் வருகிறதெனக் காட்டுங்கள்?

https://www.mea.gov.in/images/pdf1/S7.pdf

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

மாநில அரசு சட்ட ஆலோசனை (Legal Advice) வழங்க, சட்ட வல்லுநர்களை நியமிக்க முடியும். இதற்கு உதாரணம்: 2012-ல் இத்தாலி கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு சட்ட ஆலோசனை வழங்கியது…

சட்ட ஆலோசனை தமிழ் நாட்டில் அல்லது இந்திய மண்ணில் இருந்த கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது என நினைக்கிறேன். வழக்கும் நடந்தது இந்தியாவில் பின் இத்தாலிக்கி மாறியது என நினைவு.

இதை மாநில அரசு நிதியில் அணுகலாம் என்பது வெளிப்படை.

இங்கே சட்ட ஆலோசனை தேவை இலங்கையில் கைதாகி உள்ள மீனவர்க்கு. அதை தா நா அரசு செய்ய முடியாது.

கொல்லப்பட்டவர்களின் குடும்பத்துக்கு சட்ட ஆலோசனை எண்டால் அதற்கு முன் இந்திய மண்ணில் கொலையாளிகள் மீது வழக்கு நடக்க வேண்டும். அதற்கு கொலையாளிகளை கைது செய்து இந்தியா கொண்டு வரவேண்டும். கொலையாளிகள் இருப்பது இலங்கையில்.

ஆகவே சும்மா சட்ட ஆலோசனை எண்டு சொல்லிவிட்டு போய் விடலாம்.

ஆனால் யாருக்கு கொடுப்பது? கொடுக்கும் தேவையே இல்லாத போது?

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அரசு நியமன வழக்கறிஞர்களை வழங்க முடியும்…

#உடனடி நிவாரணத் தொகை மற்றும் குடும்ப நலனுக்கான உதவி வழங்க முடியும்…

#தமிழக அரசு இதனைப் பலமுறை செய்துள்ளது – உதாரணம்: 2017-ல் இலங்கை கடற்படையால் பிரான்சிஸ் ஜெயராஜ் கொல்லப்பட்டபோது, தமிழக அரசு உடனடி நிவாரணம் வழங்கியது… தமிழக அரசு பிடிபட்ட மீனவர்களுக்கு அரசு வழக்கறிஞர்களை நியமித்து, சட்ட உதவிகளை வழங்கியது…

இதற்கு கொஞ்சம் ஆதாரத்தை தர முடியுமா?

யூடீயூப் வீட்யோக்கள் வேண்டாம்.

நிவாரணத்துக்கு அல்ல.

அதை இப்போதும் கொல்லப்பட்டால் வழங்கிறார்கள் என நினைக்கொறேன்.

இலங்கையில் தமிழக அரசு வக்கீல் மீனவருக்க்காக ஆஜராகிய ஆதாரம் கேட்கிறேன்.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

மீனவர்கள் Tamil Nadu மண்ணில் இருக்கும்போது மட்டும் மாநில அரசின் பொறுப்பு என்பது சட்டரீதியாக தவறானது…

#மாநில அரசு வெளிநாட்டில் பாதிக்கப்படும் மாநில குடிமக்களுக்கு ஆதரவு அளிக்க உரிமை பெற்றுள்ளது… உதாரணம்: உடனடி நிவாரணம் வழங்குதல், வழக்கறிஞர் நியமனம், சட்ட ஆலோசனை வழங்குதல் ஆகியவை மாநில அரசின் பொறுப்பில் வருகின்றன..

இதற்கும் ஆதாரம் பிளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்திய அரசியலமைப்பின் 7-ம் அட்டவணை (Seventh Schedule) அடிப்படையில், “Law and Order” என்பது மாநில அரசின் பொறுப்பாக உள்ளது...

இது தமிழ் நாட்டின் நில எல்லைக்குள் சட்டம் ஒழுங்கை காப்பாறும் அதிகாரம்.

மீனவரை இலங்கை நேவி, இலங்கை கடலில் வைத்து துன்புறுத்துவது -தமிழ் நாட்டின் law and order issue அல்ல.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதனால் கோசான் எழுதிய அனைத்துப் பதில்களும் பொதுத்தகவல் பற்றாக்குறை மற்றும் சட்டப்பூர்வமான தவறான புரிதல் என்பதைக் காட்டுகிறது…

நீங்கள் எழுதியவற்றுக்கு ஆதாரம் கேட்டுள்ளேன்.

அதன் பின் பார்க்கலாம் யாருக்கு தவறான புரிதல் என.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

வெளிநாட்டில் தடைப்பட்டுள்ள மாநில மக்களின் சட்ட நிதியை (legal fees) கட்ட மாநில அரசு ஒத்துகொள்ளலாம். ஆனால் இலங்கையில் பிடிபடும் அனைவரும் ஹைகொமிசன் ஏற்பாடு செய்யும் சட்ட ஆலோசனையை ஏலவே பெறுகிறார்கள்.

அத்தோடு -

இந்த விடயத்தை கையாள என ஏலவே ஹைகொமிசன்னூடாக நடக்கும்

JWC பொறிமுறை உள்ளது.

https://www.hcicolombo.gov.in/section/press-releases/6th-meeting-of-the-joint-working-group-on-fisheries/

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே

ஓணாண்டியே ஒத்து கொண்ட விடயம்

  1. தனது அதிகார வரம்புக்குள் உள்ள போது சட்ட ஆலோசனையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது (இத்தாலி வழக்கு).

  2. கைதானவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கபடுகிறது

  3. கொலையானால் இழப்பீடு வழங்கபடுகிறது

மேலே நான் தந்த இணைப்பின் படி

  1. இரு நாட்டு மத்திய அரசுகளும் இந்த பிராசனையை JWC பொறிமுறைமூலம் கையாள்கிறன.

இங்கே ஓணாண்டி மிக அடிப்படையான பிரச்சனையை விட்டு விட்டார்.

தமிழக மீனவர் பிரச்சனை என்ன?

அவர்களுக்கு கிடைக்கும் சட்ட ஆலோசனையா? இல்லை. நிவாரணமா ? இல்லை. இவை எல்லாம் கிளை பிரச்சினைகள்.

அவர்களின் பிரச்சனை

  1. இலங்கை படைகள் கைதுசெய்வது

  2. இலங்கை படைகள் துன்புறுத்துவது

இதை நிறுத்துமாறு இலங்கை படைக்கு ஓடர் போடும் அதிகாரம் இலங்கை அரசுக்கு மட்டுமே உண்டு.

அந்த ஓடரை போடுமாறு இலங்கை அரசை நெருக்கும் உரிமை இந்திய மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

இருவரின் பெயரும் ஜோசப் என்பதால்.

உங்களுக்கு ஏன் எரியுது?

விஜய் ஜோசவ்வின் வளர்ப்பு மகனுமல்ல, ஜேசுநாதருமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

விஜய் ஜோசவ்வின் வளர்ப்பு மகனுமல்ல, ஜேசுநாதருமல்ல.

நானும் அப்படி எழுதவில்லை.

சரி உங்களுக்கு விளங்கவில்லை எனில் நான் சொன்னதை நீட்டி எழுதுகிறேன்.

  1. யேசுநாதர் நியாத்தின்படி நடப்பவர்

  2. அவரின் தந்தையாகிய ஜோசேப்பும் அப்படி பட்ட ஒரு நியாய வழி நடக்கும் மனிதர்.

  3. அவரின் பெயரில் ஜோசேப் என இருந்தாலும் இவர்கள் இருவரையும் போல நியாயத்தின் வழி நடப்பவர் அல்ல விஜை. அவர் ஒரு சாமான்ய சுயநலத்தின் வழி நடக்கும் அரசியல்வாதி.

  4. ஆகவே ஜோசப், ஜேசுநாதர் போல் விஜை நடப்பார் என எதிர்பார்க்க கூடாது.

இதுதான் நான் கூறியது.

உங்கள் minority complex தொட்டதுக்கெல்லாம் trigger ஆனால் அதுக்கு நான் பொறுப்பல்ல🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

உங்கள் minority complex தொட்டதுக்கெல்லாம் trigger ஆனால் அதுக்கு நான் பொறுப்பல்ல🤣.

இது வேற பிரச்சினை. "சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல்" பிரச்சினையென்றால் இங்கே சிறுபான்மை மதங்களை நேரடியாகவே தாக்கிய திரிகளில் அல்லவா அவர் முன்னின்று எழுதியிருக்க வேண்டும்😂?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது வேற பிரச்சினை. "சிறுபான்மைத் தாழ்வுச் சிக்கல்" பிரச்சினையென்றால் இங்கே சிறுபான்மை மதங்களை நேரடியாகவே தாக்கிய திரிகளில் அல்லவா அவர் முன்னின்று எழுதியிருக்க வேண்டும்😂?

சாத்ஸ் பாவம்,

ஒரு மதமாற்ற திரியில் கருத்து சொல்லப்போய் அடி எண்டா அடி, இம்மை மறுமை இல்லாத அடி.

உதவிக்கு யாரும் இல்லாதபடியால் நாந்தான் இறங்கி, box ஐ உடைத்து ஆளை மீட்டு கொண்டு வந்தது.

அன்று முதல் சாத்ஸ் நிஜ மதவாதிகள் வந்தால் - மெல்ல நழுவி விடுவார். சில சமயம் முட்டும் கொடுத்துள்ளார்.

ஆனால் என்னை போல மருந்துக்கும் மதவாதம் இல்லாத யாரும் “யேசுநாதர்” எண்டு எழுதினாலே சிலுவையுத்தத்துக்கு கிளம்பிய ரிச்சர்ட் மன்னன் போல் கிளம்பி விடுவார்🤣.

இளகிய இரும்பை கண்டால் கொல்லன் பவுண்டரி சிக்சர் எண்டு அடிப்பானாம் 🤣.

தீர்ப்பு நாளில், உன் கண் முன்னே நடந்த எனது மதத்தின் நிந்தனையை எதிர்த்து எதுவும் நீ செய்யவில்லையே என ஆண்டவர் கேட்டால்…

உங்களை யேசுநாதர் என எழுதிய கோஷானை போட்டு பிளந்தேன் ஆண்டவரே என சொல்லி தப்பிக்கும் எண்ணம் போல் உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.