Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image_ac4be010d4.jpg

மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கரூரை சேர்ந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி அந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: மனுதாரருக்கும் அவர் மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது 2-வது திருமணத்தில் இருந்தும் வெளியேறும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

2020 டிசம்பர் மாதத்திலிருந்து கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது. அவர் ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார். மாமனார், மாமியாரும் தன்னை மதிக்கவில்லை, அதிமாக செலவு செய்கிறார். அதிக நேரம் போனிலேயே செலவிடுகிறார். வீட்டு வேலைகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை கூறி விவாகரத்து கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவில்லை. உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இல்லை. மேலும் மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியதே.

மனைவி ஆபாசப் படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தடை செய்யப்பட்ட வகையைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது.

ஆபாச படங்களுக்கு அடிமையாவது தவறு. மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்பது மனுதாரரின் மற்றொரு குற்றச்சாட்டு. ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது. ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை. சுய இன்பம் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

இதனால் மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆகிய கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது. தனியுரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. இது திருமண உறவுகளில் இருப்பவர்களுக்கு பொருந்தும். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார். அப்போது அவரது தனியுரிமையை கைகொள்கிறார். மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளது. ஒரு பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.

மனைவி மீது மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவைகள் உண்மையாக இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகள் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர்.

Tamilmirror Online || “சுய இன்பத்தில் பெண்கள் ஈடுபடுவது குற்றம் அல்ல”

  • கருத்துக்கள உறவுகள்

இரு பெண்களின் வாழ்க்கையை நாசம் பண்ணி போட்டு வழக்கு வேற…

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இரு பெண்களின் வாழ்க்கையை நாசம் பண்ணி போட்டு வழக்கு வேற…

60 களின் கடைசியிலேயே வேம்படி விடுதியில் இதுகள் நடந்தாக பேசுவார்கள்.

அண்டவெயரே போடாத அந்தக் காலத்தில் விபரங்கள் புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

60 களின் கடைசியிலேயே வேம்படி விடுதியில் இதுகள் நடந்தாக பேசுவார்கள்.

அண்டவெயரே போடாத அந்தக் காலத்தில் விபரங்கள் புரியவில்லை.

🤣 இந்திய கோவில் சிற்பங்களிலேயே இருக்கு என எங்கோ பார்த்த நினைவு.

மனிதன்/மனிசி பாசையை கண்டுபிடிக்க முதலே இதை கண்டு பிடித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, goshan_che said:

இரு பெண்களின் வாழ்க்கையை நாசம் பண்ணி போட்டு வழக்கு வேற…

இருவரும் இரண்டாம் தாரக்காரர். 🙃

இதில்..

ஆண்சிங்கம் மேல் மட்டும் கடுப்பு ஏன்? ☹️

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

இருவரும் இரண்டாம் தாரக்காரர். 🙃

இதில்..

ஆண்சிங்கம் மேல் மட்டும் கடுப்பு ஏன்? ☹️

வழக்கு போட்டது சிங்கம்தானே.

ஒண்டில் நாம் சமைத்து கொடுக்கணும் , முடியாட்டி அவங்களையாவது சமைச்சு சாப்பிட விடணும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆண்சிங்கம் மேல் மட்டும் கடுப்பு ஏன்? ☹️

2018 இருந்து 2025 வரை பிள்ளைகள் பெறவில்லை என்பதால் தான்

எனது நண்பர் ஒருவர் ஒரு வருடத்தில் இரண்டு பிள்ளைகள் பெற்று உள்ளார் அதாவது தையிலும். மார்கழியிலும். ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

வழக்கு போட்டது சிங்கம்தானே.

ஒண்டில் நாம் சமைத்து கொடுக்கணும் , முடியாட்டி அவங்களையாவது சமைச்சு சாப்பிட விடணும்.

கிஸ்றீரியா நோய் உள்ளவர்களாக இருக்கக்கூடும் என நான் நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.